Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்கள் கிளர்ந்தெழுவார்கள்: நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கும்! மல்வத்து பீடம் எச்சரிக்கை

Featured Replies

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கத் தவறினால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என்று சிறிலங்காவின் சிங்கள பௌத்த தலைமை பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சில பொலிஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பாதுகாத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள மல்வது பீடத்தின் துணை மகாநாயக்கர் திம்புல்கும்பரே விமலதம்ம தேரர், இந்த நிலமைகள் தொடர்ந்தால் சிங்கள மக்கள் கிளர்தெழுந்து சட்டத்தை கையில் எடுப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கோட்டேகொட நேற்றைய தினம் மாலை கண்டிக்கு விஜயம்செய்திருந்தார்.

இதன்போது சிங்கள பௌத்த மக்களின் மிக முக்கிய வணக்கஸ்தலமான கண்டி சிறி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பாதுகாப்பு செயலாளர் பின்னர் அஸ்கிரி – மற்றும் மல்வது பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட மல்வத்து பீட துணை மகாநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது சில பொலிஸ் அதிகாரிகள் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளுக்கு உதவுவதாக குற்றம்சாட்டிய மல்வது பீட துணை மகாநாயக்கர், சில அரசியல்வாதிகளும் குற்றவாளிகளை காப்பாற்றி வருவதாக சாடினார்.

“இன்னமும் பாரதூரமான நிலைமை காணப்படுகின்றது. சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளே இதற்குக் காரணம். அவர்கள் சிலரிடம் சில சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, சிலருக்கு சில தகவல்களை வழங்குகின்றனர்.

அந்த நிலைமையால்தான், தேடுதல் நடவடிக்கைகளின்போது மீன் வெட்டும் கத்தியைக் கூட கைப்பற்ற முடியாது போயுள்ளது. எமது அதிகாரிகளிடம் காணப்படும் சில குறைபாடுகளே அவை, அதிகாரிகள் மாத்திரமல்ல, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களும் அவ்வாறுதான் செயற்படுகின்றனர். குற்றவளிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன.

அதனால் இந்த விடயங்களில் சிந்தித்து செயற்பட வேண்டும். இந்த சிங்களவர்கள் இதனைத் தொடர்ந்து பொறுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள். அவ்வாறு அவர்கள் கிளர்ந்தெழும் பட்சத்தில், ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்தே, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டி ஏற்படும். அவ்வாறான ஒரு விடயம் நடந்துவிடக்கூடாது என நான் பிரார்த்திக்கின்றேன்.

சிங்கள பாதாள உலக்குழுக்களிடம் பல ஆயுதங்கள் காணப்படுவதாகவும், அது தொடர்பில் ஆராய்வதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் மல்வது பீட துணை மாகாநாயக்கர் விமலதம்ம தேரர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

“சிங்கள பாதாள உலகக்குழுக்களிடம் பல ஆயுதங்கள் காணப்படுகின்றன. அது தொடர்பில் ஆராய்வதும் இல்லை. தேடிப்பார்த்து கண்டுபிடிப்பதும் இல்லை. மதுஷ் போன்றவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களும் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக வெளியாகும் செய்திகள், சிலரை தோலுரித்துக் காட்டும். அது தொடர்பில் பல தகவல்கள் வெளியாகும் என நினைக்கின்றேன்.

இவைத் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் நீங்கள் அவதானம் செலுத்த வேண்டும். முஸ்லிம்கள் பள்ளிகளை அமைக்கின்றனர், அமைப்புகளை தோற்றுவிக்கின்றனர். எனினும் அவர்கள் எம்மை, வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகளை அமைப்பதற்கோ, புராதன இடங்கள் தொடர்பில் ஆராயவோ இடமளிக்கமாட்டார்கள்.

எனினும் தெற்கில் பாருங்கள் 20 குடும்பங்கள் இருந்தால் பள்ளிவாசல் ஒன்றை அமைத்துவிடுகின்றார்கள். நாம் அதனை தடுக்கவில்லை. இவ்வாறான நிலைமையே காணப்படுகின்றது”.

https://www.ibctamil.com/srilanka/80/119855?ref=home-imp-parsely

  • தொடங்கியவர்
5 hours ago, போல் said:

சிங்களவர்கள் இதனைத் தொடர்ந்து பொறுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள். அவ்வாறு அவர்கள் கிளர்ந்தெழும் பட்சத்தில், ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்தே, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டி ஏற்படும்.

இவரது இந்தக் கூற்றே சிங்கள-பௌத்தர்களை அவர்கள் காலம் காலமாக செய்துவந்த சூறையாடல் வன்முறையில் இறங்கத் தூண்டியுள்ளதாக கருதப்படுகிறது!

  • தொடங்கியவர்

பற்றி எரியும் தென்னிலங்கை! சூறையாடப்படும் முஸ்லிம் உடமைகள்!! நேரடி வீடியோக்கள்!!

தென் இலங்கையில், குறிப்பாக குருணாகல் பிரதேசத்தில் முஸ்லிம்களின் உடமைகள், கடைகள் சிங்கள இளைஞர்களால் சூறையாடப்பட்டுக்கொண்டிருப்பதான காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கத் தவறினால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என்று சிறிலங்காவின் சிங்கள பௌத்த தலைமை பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் எச்சரிக்கை விடுத்து 24 மணி நேரத்திற்குள் இந்த வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeghttps://www.ibctamil.com/srilanka/80/119870?ref=home-imp-parsely

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

 

 

 

https://www.ibctamil.com/srilanka/80/119870?ref=home-imp-parsely

 
  • தொடங்கியவர்
6 hours ago, போல் said:

மல்வது பீடத்தின் துணை மகாநாயக்கர் திம்புல்கும்பரே விமலதம்ம தேரர், இந்த நிலமைகள் தொடர்ந்தால் சிங்கள மக்கள் கிளர்தெழுந்து சட்டத்தை கையில் எடுப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார். 

சட்டத்தை கையில் எடுத்தால் கடுமையான நடவடிக்கை!

சட்டத்தை எவரும் கையில் எடுத்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர் சி.பி.விக்ரமரட்ண, அதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையினை கருத்திற்கொண்டு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே இன, மத மோதல்களை ஏற்படுத்தாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

யாராவது தொடர்ந்தும் குழப்பைத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு பிணை வழங்க முடியாத வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அது மாத்திரமன்றி தேவை ஏற்படின் 10 வருடங்கள் அவர்களை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்

30 வருட யுத்தத்தை நிறைவு செய்த பொலிஸ் உள்ளிட்ட படையினாரால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பது ஒரு சிறிய விடயம்.

ஆகவே எவரும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது, அவ்வாறு மீறி சட்டத்தை கையில் எடுத்தால் அவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

http://www.virakesari.lk/article/55877

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பக்கத்தால மல்வத்த சிக்னல் கொடுக்க. அங்கால மகிந்த மாத்தையா இன்னொரு கறுப்பு ஜூலை ஆக்காதேங்கோ எண்ட, 

ரெண்டு பேரும் அடியுங்கோடா, அடியுங்கோடா எண்டெல்லே சொல்லுமாப்போல கிடக்கு.

இதுக்க இந்த ரஞ்சித் ஆண்டகை தன்ர சொல்லுக்கும் மதிப்பிருக்கெண்ட நினைப்பில அடியாதேங்கோ எண்டுறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயடியாக அடிக்காமல் ஆங்காங்கே பெரிய தாக்குதல்களை செய்கிறார்கள். சொத்துக்களை நாசமாக்கல், மதத்தலங்களை அழித்தல் என்பவற்றில் ஈடுபடுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது, 70 களின் பிற்பகுதியில் தமிழ் இளைஞர்களை தூண்டியது போல், முஸ்லிம் இளைஞர்களை ஆயுத வழிக்கு போகவைக்க பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இதுக்க இந்த ரஞ்சித் ஆண்டகை தன்ர சொல்லுக்கும் மதிப்பிருக்கெண்ட நினைப்பில அடியாதேங்கோ எண்டுறார்

அண்ணை அந்தாள் ஒரு காமெடி பீசு ......அவரை கத்தோலிக்கர்களே கவனத்தில் எடுப்பதில்லை ,சிங்கள காடையர்கள் கவனத்திலெடுப்பார்களா என்ன 

இந்த தாக்குதல் சம்பவங்களை நடத்தியதில் பிரிதுரு ஹெல உறுமய என்ற கட்சிக்கு பெரும்பங்கு இருக்கிறதா கதையடிப்படுகிறது!

  • தொடங்கியவர்

சிங்கள-பௌத்த வன்முறையாளர்களை பிணையெடுக்கும் தயாசிறி ஜயசேகர? அருகில் சதிகார நாமல் குமார!

625.0.560.320.160.600.053.800.700.160.90

 

 

1 hour ago, Rajesh said:

இந்த தாக்குதல் சம்பவங்களை நடத்தியதில் பிரிதுரு ஹெல உறுமய என்ற கட்சிக்கு பெரும்பங்கு இருக்கிறதா கதையடிப்படுகிறது!

625.0.560.320.160.600.053.800.700.160.90

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இப்படி ஒரு பக்கத்தால மல்வத்த சிக்னல் கொடுக்க. அங்கால மகிந்த மாத்தையா இன்னொரு கறுப்பு ஜூலை ஆக்காதேங்கோ எண்ட, 

ரெண்டு பேரும் அடியுங்கோடா, அடியுங்கோடா எண்டெல்லே சொல்லுமாப்போல கிடக்கு.

இதுக்க இந்த ரஞ்சித் ஆண்டகை தன்ர சொல்லுக்கும் மதிப்பிருக்கெண்ட நினைப்பில அடியாதேங்கோ எண்டுறார்.

அதேதான்..... இவர்கள் இப்படி சொல்லாவிட்டால், சிங்களவர் உற்சாகம் குறைந்து தாக்குதலை நிறுத்திவிடுவார்கள் என்பதால்,  அடியாதையுங்கோ... அடியாதையுங்கோ... சொல்லி உற்சாகப் படுத்துகிறார்கள்.  :grin:

6 hours ago, goshan_che said:

இதுக்க இந்த ரஞ்சித் ஆண்டகை தன்ர சொல்லுக்கும் மதிப்பிருக்கெண்ட நினைப்பில அடியாதேங்கோ எண்டுறார்.

இரண்டு நாளைக்கு முதல் தான் சொன்னவர் "பௌத்தர்களின் வழிகாட்டுதலிலேயே சிறுபான்மையினர் வாழவேண்டும்" என்று. இப்ப பௌத்தர்கள் வழிகாட்டினம். என்னவாம் பிரச்சனை இவருக்கு. இன்னும் சிறிது காலத்தில பௌத்தர்கள் இவருக்கு வழிகாட்டிவினம். 

  • கருத்துக்கள உறவுகள்

//சிங்களவர்கள் கிளர்ந்தெழுவார்கள்: நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கும்! மல்வத்து பீடம் எச்சரிக்கை//

வந்தேறி வடுக கூட்டம் எப்பிடி கோர்த்து விடுது!!? 🤔

  • தொடங்கியவர்
10 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த வன்முறையாளர்களை பிணையெடுக்கும் தயாசிறி ஜயசேகர? அருகில் சதிகார நாமல் குமார!

தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் விடுதலை! முக்கிய நா.ம உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை-ரணில்!

ஸ்ரீலங்காவில் கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினமான 21ஆம் திகதி நடைபெற்ற கொடூர தொடர் தற்கொலை தாக்குதலையடுத்து தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைத செய்யப்பட்டவர்களில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறித்த நபர்கள் விடுதலை செய்யப்பட்டதுடன் சம்பந்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு அறித்துள்ளார் என அரச வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

https://www.ibctamil.com/srilanka/80/119905

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.