Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஷரியா பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க வேண்டும் - மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை  முழுமையாக அரசுமடையாக்குவற்கான  நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்தில் எதிர்தரப்பினர் முழுமையான  ஆதரவு  வழங்குவோம் என்று  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

IMG_6917.JPG

களனி ரஜமஹா இன்று விகாரையில் வெசாக் தின   வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலினால் தேசிய  வெசாக் பண்டிகையினை  கொண்டாடாமல் இருக்க முடியாது. அனைவரும்  தைரியமாக செயற்பட வேண்டும்.   நிலைமைகளை வெற்றிக் கொள்ள வேண்டும்.   பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு   அனுப்பி வைக்க வேண்டும். தேசிய  பாதுகாப்பை  உறுதிப்படுத்த  அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

IMG_6727.JPG

http://www.virakesari.lk/article/56274

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பல்கலைக்கழகத்தை வர்த்தமானியில் போட்டு தான் தடை செய்ய வேண்டுமாம்..அது கஷ்டம் என்று நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ரதி said:

இந்த பல்கலைக்கழகத்தை வர்த்தமானியில் போட்டு தான் தடை செய்ய வேண்டுமாம்..அது கஷ்டம் என்று நினைக்கிறேன் 

நான் எப்போதே சொல்லி வைத்தேன்.

பாத்திமாவும், பரக்கத்துலவும் அரபி கற்க ஹிஸ்புல்லாவினால், சவூதி பணத்தில் அமைக்கப்படட இந்த பல்கலைக் கழகம் அரசுடைமையாகி பொடிமெனிக்காவும் புஞ்சிபண்டாவும் பௌத்தம் படிப்பார்கள் என்று சொன்னேன்.

அதுவே நடக்கும்.  

இதனை செய்யாதுவிடில் இவ்வாறே பல அமைப்பார்கள் என அரசு, முக்கியமாக சிங்களவர்கள் கருதுவர். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அரசுமடை அல்ல அரசுடமை  (அரசு உடமை )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

இந்த பல்கலைக்கழகத்தை வர்த்தமானியில் போட்டு தான் தடை செய்ய வேண்டுமாம்..அது கஷ்டம் என்று நினைக்கிறேன் 

தங்கச்சி! ஊர் தகவலின் படி எல்லாம் காலம் கடந்துவிட்டதாம். முஸ்லீம்களின் முன்னேற்றம் சகல படிகளையும் தாண்டி மேலே சென்றுவிட்டதாம்.அவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாதாம். சிறு சிறு கலவரங்களை தவிர.....எல்லாவற்றுக்கும் காரணம் அந்த நான்கு தமிழ் அரசியல்வாதிகளாம்......

10 வருடங்களுக்கு முன்னர் சூட்டோடு சூடாக நிறைய சந்தர்ப்பங்கள் வந்தும் அதை கவனத்தில் எடுக்காததின் விளைவுதான் இதெல்லாம். இப்போது தமிழர் பிரச்சனையை விட முஸ்லீம் பிரச்சனை பெரிய கோடாக அமைந்து விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இந்த பல்கலைக்கழகத்தை வர்த்தமானியில் போட்டு தான் தடை செய்ய வேண்டுமாம்..அது கஷ்டம் என்று நினைக்கிறேன் 

இல்லை..நம்ம ஞானதாரர் வந்தால் ..உடன் பறிபடும்....மைத்திரியே ஜெயிலுக்குப்போய் சுகம் விசாரிக்கிற அளவுக்கு நிலமை....இனி புல்லாவும் ,சாத்துவும் அலியும் சிங்களவருக்குத் தேவையில்லை...என்பதே

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலத்தில் இலங்கையில் முஸ்லிம்களை அரசியல் பலமுள்ள ஒரு சமுதாயமாக கட்டியெழுப்பி அவர்களின் பெரும்பான்மையை இரண்டாவது அல்லது முடிந்தால் முதலாவது இடத்திற்கே கொண்டுபோய்  நாட்டின் அதிகார பலத்தை கத்தியின்றி இரத்தமின்றி கைப்பற்றுவதே முஸ்லிம் தலைவர்களின் நோக்கம். இதற்கு தேவையானது  முஸ்லிம் சனத்தொகை அதிகரிப்பு மற்றும் போதிய குடிசன பரம்பல். இதற்கான ஆதரவும் நிதியுதவியும் அவர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தாராளமாக கிடைக்கிறது.

முஸ்லிம் குடும்பங்களின் சிங்களவர்களிலும் பார்க்க அதிக குழந்தைகள் பிறப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இது தவிர முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது இனத்தவரை நாடுமுழுவதிலும் குடியேற்றுவதில் முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக பல தமிழர் நிலங்கள் பறிபோயிருக்கின்றன அத்துடன் சில இடங்களில் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன.

சிங்கள அரசு நாட்டின் பெரும்பான்மையின மக்களை இலங்கையின் பல பாகங்களிலும் தமிழர் வெளியேறிய நிலங்களிலும் புதிய குடியேற்றத்திட்டங்களிலும் கொண்டுசென்று குடியேற்றியதுடன் நின்றுவிட முஸ்லிம் இனத்தவர்களோ ஒரு நீண்ட நாள் தொலைநோக்குத் திட்டத்துடன் மேற்சொன்ன இருவிடயங்களையும் சேர்த்து  ஒரே வேளையில் செய்துகொண்டிருக்கிறார்கள். முடிவில் தமிழினம்தான் அழிவின் வழிம்பிற்கு தள்ளப்படும் அபாயத்தை சந்திக்கும்.

இலங்கையில் தமிழரின் சனத்தொகை உள்நாட்டுப் போரின்பின் கணிசமான அளவிற்கு குறைந்துவிட்டது. ஒரு தொகை தமிழர் போரில் கொல்லப்பட்டதுடன் நாட்டைவிட்டு வெளியேறியது இன்னொரு தொகை.  இதே கண்ணோட்டத்துடன் தமிழரின் அரசியல் பலத்தை தக்கவைக்கும் மாற்றுத்திட்டம் எதுவும் எமது தமிழ் அரசியல் தலைவர்களால் இதுவரை முன்வைக்கப்படவுமில்லை அப்படி செய்வதற்கு அவர்கள் அலட்டிக்கொள்ளவுமில்லை. 

22 hours ago, பிழம்பு said:

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை  முழுமையாக அரசுமடையாக்குவற்கான  நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்தில் எதிர்தரப்பினர் முழுமையான  ஆதரவு  வழங்குவோம் என்று  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷ கும்பல் கொள்ளையடித்த சொத்துக்களும் பறிக்கப்படும் காலம் வரும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.