Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு இளைஞருடன் இரு பெண்கள் தப்பியோட்டம், இளம் பெண் கடத்தல் முயற்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு இளைஞருடன் இரு பெண்கள் தப்பியோட்டம், இளம் பெண் கடத்தல் முயற்சி!

_20550_1561179390_6471ADCF-7A7E-479E-8A03-A39190E1A215.jpeg

அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் உடுவில் கிழக்கு கிராம அலுவலகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் பாலியல் தொழில் புரியும் விடுதியொன்று இயங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முற்பகல் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் தென்னிலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நால்வர், இளம் பெண் ஒருவரைக் கடத்த முற்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அந்த இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸார், ஒருவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் 2 பெண்கள் உட்பட மூவர் தப்பிச்சென்றுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

உடுவில் கிழக்கு (184) கிராம அலுவலர் அலுவலகம் இயங்கும் வீட்டில் கடந்த ஒரு மாத காலமாக அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் பெயர்ப்பலகையுடன் அலுவலகம் ஒன்று இயங்கிவந்துள்ளது.

இதன்போது நுகேகொட மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உட்பட 2 இளம் பெண்கள் தங்கியிருந்துள்ளனர்.அத்துடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களும் அங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கையை ஆராய்ந்த உடுவில் கிழக்கு பெண் கிராம அலுவலகர் அங்கிருந்தவர்களிடம் நிறுவனம் தொடர்பான பதிவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்,இது தொடர்பில் நுகேகொடையைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராஜா துவாரகன், உடுவில் பிரதேச செயலர், உடுவில் கிழக்கு கிராம அலுவலகர், பொதுமக்கள் என பலர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் குழுமியுள்ளதுடன், இது தொடர்பில் அந்த வீட்டின் உரிமையாளர் உட்பட அனைவரையும் கைது செய்யவேண்டுமெனவும் சுன்னாகம் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

http://www.battinaatham.net/description.php?art=20550

  • கருத்துக்கள உறவுகள்

அலை பேசி மூலம் வலை வீசியுள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு இளைஞருடன் இரு பெண்கள் தப்பியோட்டம், இளம் பெண் கடத்தல் முயற்சி!

தலைப்பு???

கிருபன் ஐயாவா  இணைத்தது?????

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

மட்டக்களப்பு இளைஞருடன் இரு பெண்கள் தப்பியோட்டம், இளம் பெண் கடத்தல் முயற்சி!

தலைப்பு???

கிருபன் ஐயாவா  இணைத்தது?????

இது அவருடைய தப்பில்லை, அந்த இணையத்தின் தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

நானும், என்னடா விசயம் மட்டக்கிளப்பிள எண்டு வந்து, யாழ்ப்பாண வளைவை பார்த்து முழுசி,  உடுவில் மட்டகிளப்பிலும் இருக்கோ எண்டு நெளிஞசு பார்த்தால், சுன்னாகம் வந்தோன்ன, முழிப்பு வந்துடுத்து...

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, MEERA said:

இது அவருடைய தப்பில்லை, அந்த இணையத்தின் தப்பு

உண்மைதான்  சகோ...

ஆனால்  எமது  இனத்தை  பிரிக்க  நினைக்கும் 

இது போன்ற சதிகாரர்  வலைகள் சார்ந்து

  நாம் அவதானமாக  இருக்கவேண்டிய மிக  முக்கிய தருணமிது.

  • கருத்துக்கள உறவுகள்
உடுவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயற்சி!- பாலியல் விடுதி இயங்கியமை அம்பலம்.
[Friday 2019-06-21 16:00]
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை சிலர் கடத்த முயற்சித்துள்ளனர்.  அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து,அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் பெயரில் அப்பகுதியில் பாலியல் விடுதி ஒன்று இயங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை சிலர் கடத்த முயற்சித்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து,அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் பெயரில் அப்பகுதியில் பாலியல் விடுதி ஒன்று இயங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடுவில் கிழக்கு (184) கிராம அலுவலர் அலுவலகம் இயங்கும் வீட்டில் கடந்த ஒரு மாத காலமாக டயலொக் என்ற நிறுவனத்தின் பெயர்ப்பலகையுடன் அலுவலகமொன்று இயங்கி வந்துள்ளது. குறித்த அலுவலகத்தில் நுகேகொட மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மற்றும் 2 இளம் பெண்களும் தங்கியிருந்துள்ளனர். மேலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களும் அங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் நடவடிக்கையை ஆராய்ந்த உடுவில் கிழக்கு பெண் கிராம அலுவலகர், அங்கிருந்தவர்களிடம் நிறுவனம் தொடர்பான பதிவைக் கேட்டதுடன் தனது பிரிவில் இயங்குவதாயின் பதிவு செய்வது கட்டாயமெனவும் கிராம அலுவலகர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தம்மை டயலொக் நிறுவனத்தின் அலுவலகர்கள் எனக் குறிப்பிட்ட சந்தேகநபர்கள், பொலிஸாருக்கு தமது நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது என்றும் கிராம அலுவலகருக்கு தெரிவித்துள்ளனர். இதனால் இவ்விடயம் உடுவில் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு தன்னால் கொண்டு செல்லப்பட்டதாக உடுவில் கிழக்கு கிராம அலுவலகர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை உடுவில் அம்பலவாணர் வீதியில் பயணித்த இளம் பெண் ஒருவரை 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் இணைந்து வழிமறித்துக் கடத்த முற்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த அந்த இளம் பெண், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது பொலிஸாரின் வருகையை அறிந்ததும் சந்தேகநபர்கள் நால்வரும் அங்கிருந்து தப்பித்துள்ளனர். எனினும் நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராஜா துவாரகன், உடுவில் பிரதேச செயலாளர், உடுவில் கிழக்கு கிராம அலுவலகர், பொதுமக்கள் என பலரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கூடியதுடன் விபச்சார விடுதி தொடர்பில் அந்த வீட்டின் உரிமையாளர் உட்பட அனைவரையும் கைது செய்யவேண்டும் என்றும் அவர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.seithy.com/breifNews.php?newsID=226467&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்காரர் சீசன் தொடங்கிவிட்டது அதுதான் அவர்கள் தாகம் தீர்க்க தண்ணீர்ப்பந்தலை கொஞ்சம் விரிவுபடுத்தப்பார்த்திருக்கினம். என்ன கொடுக்கவேண்டியதைக் கொடுத்துச் சரிக்கட்ட மறந்திட்டினம் அதாவது முதலில் கொடுத்தது போதாது என நினைக்கிறன். 

எல்லாம் ஒழுங்கு செய்வினம் அங்க போறதா பிளான் பண்ணியவர்கள் பதறாதையுங்கோ ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம் எல்ல ஒழுங்குகளும் கவனித்தாயிற்று நீங்கள் வாறதுதான் பாக்கி. 

பாழ்ப்பாணம் உங்களை ஆவலுடன் வரவேற்கிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

உண்மைதான்  சகோ...

ஆனால்  எமது  இனத்தை  பிரிக்க  நினைக்கும் 

இது போன்ற சதிகாரர்  வலைகள் சார்ந்து

  நாம் அவதானமாக  இருக்கவேண்டிய மிக  முக்கிய தருணமிது.

முக்கிய தருணம் எல்லாம் வந்து போய்விட்டது விசுகு ஐயா!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

முக்கிய தருணம் எல்லாம் வந்து போய்விட்டது விசுகு ஐயா!

தூர  பயணத்தில்

எல்லா இடத்திலும்  முக்கிய  தருணம் வரும்  ஐயா

இன்று  கிழக்கில்  நடப்பவைகளை  நீங்கள்  கவனிக்கவில்லை  என்று  நான்  சொல்லமாட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

நுகேகொடவில் இருந்து யாழ்ப்பாணம் வரை தமது வளையமைப்பு சேவையை விஸ்தரித்து உள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்

இது பிரித்தாளும் உத்தி எனும் விசுகுவின் பயத்தில் அர்த்தமில்லை. பட்டிநாதம் இணையதளத்தை நடத்துபவர் ஒரு அறியப்பட்ட, மட்டகளப்பை சேர்ந்த ஊடகவியலாளர். 

அசிரத்தையாக தலைபிட்டுள்ளார்கள்.

பிகு: “முக்கிய தருணம்” ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கு வரும் 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.