Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவிடம் 1 பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிடம் 1 பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா

chinese-dragon-300x200.jpgமத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை நிறைவேற்றுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு 1 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா முன்வந்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கடவத்த தொடக்கம் மீரிகம வரையான, பகுதியை அமைக்கவே,  சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியே (எக்சிம் வங்கி) இந்தக் கடனுதவியை வழங்கவுள்ளது.

இந்த திட்டத்துக்கு 1.1 பில்லியன் டொலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், 85 வீதத்தை, சீனாவிடம் கடனாகப் பெறவும், 15 வீதத்தை, உள்நாட்டு வங்கிகளிடம் அரசாங்கம் திரட்டவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாவது கட்டமாக, 37.09 கி.மீ தூரமுள்ள பகுதியை  அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/06/23/news/38676

திரு மோடி வந்து மீண்டும் டெல்லி போய் யோகா தியானம் முடிக்க முன்னர் இந்த கடன் வேண்டப்பட்டுள்ளது. மாலைதீவு போன்று இலங்கை முழுமையாக இந்தியாவின் பிடியில் இல்லை. ஒரு காரணம் வேண்டப்பட்ட கடனின் தொகை. மீண்டும் கடன் வேண்டி,  வேண்டிய கடனின் வட்டியை அடைக்கும் பரிபாத நிலை தொடரும். 

9 hours ago, ampanai said:

திரு மோடி வந்து மீண்டும் டெல்லி போய் யோகா தியானம் முடிக்க முன்னர் இந்த கடன் வேண்டப்பட்டுள்ளது. மாலைதீவு போன்று இலங்கை முழுமையாக இந்தியாவின் பிடியில் இல்லை. ஒரு காரணம் வேண்டப்பட்ட கடனின் தொகை. மீண்டும் கடன் வேண்டி,  வேண்டிய கடனின் வட்டியை அடைக்கும் பரிபாத நிலை தொடரும். 

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தை 4 கட்டங்களாக பிரித்துள்ளனர்.

1. கடவத்த - மீரிகம

2. மீரிகம - குருநாகல்

3. பொதுஹெர - கலகெதர

4. குருநாகல் - தம்புள்ளை

இதில் முதல் கட்டதிற்கு சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் 2015 இலிருந்து பேச்சுவார்த்தை நடந்தும் சீனா கடன் வழங்க தாமதமானதால் தள்ளிச்சென்றது. பின் கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் தெரிவித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்ப முடிவாகி விட்டது போல். இது ஒன்றும் மோடி வந்து போன பின் நடப்பது அல்ல.

இரண்டாம் கட்டத்தை உள்நாட்டு வங்கிகளின் உதவிகளுடன் இலங்கை செயற்படுத்துகிறது.

மூன்றாம் கட்டத்திற்கு ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடந்து அதில் ஒரு நிலை எட்டப்படாமல் இழுபறியுடன் செல்வதால் அதையும் உள்நாட்டு வங்கிகளின் உதவியுடன் செயற்படுத்தினால் என்ன என்று யோசிக்கினம். ஆனாலும் ஐப்பானுடனான பேச்சுவார்த்தை தொடர்கிறது.

நான்காம் கட்டத்திற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியா விரும்பினால் தட்டிப்பறிக்கலாம். 😀

Edited by Lara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, nunavilan said:

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை நிறைவேற்றுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு 1 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா முன்வந்துள்ளது.

கடன் வாங்காமல் சிங்களச்சிறிலங்கா செய்த ஒரு காரியத்தையாவது ஆரெண்டாலும்  சொல்லித் தொலையுங்கப்பா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கடன் வாங்காமல் சிங்களச்சிறிலங்கா செய்த ஒரு காரியத்தையாவது ஆரெண்டாலும்  சொல்லித் தொலையுங்கப்பா? 🤣

அமெரிக்காவும் சீனாவிடம் எக்கச்சக்கமாக கடன் வாங்கித்தான் ஓடுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, Jude said:

அமெரிக்காவும் சீனாவிடம் எக்கச்சக்கமாக கடன் வாங்கித்தான் ஓடுகிறது.

கடன்களுக்குள் பல வகை.
அரிசி பருப்பு முதல் ......காலுக்கு போடும் செருப்பு வரைக்கும் கடன் வாங்குவதற்கு சிறிலங்கா மாலைதீவு அல்லவே? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் எதோ ஒரு கால கட்டத்தில் கடன் வாங்குவது உண்டு அவர்கள் எல்லாம் மீள் அழிப்பு தகுதியுடன் ஆனால் சிங்கள சொறிலங்கா வின் கடன் வட்டி கட்டவே கடன் வாங்கவேண்டிய நிலையில் உள்ளனர் இதை அவர்களின் ஆட்களே செய்தியாளர் சந்திப்பில் போட்டுடைத்தனர் .

அமெரிக்காவும் சைனாவும் வரிசையில் சொரிலன்காவும்  உலக அறிவு அவ்வளவுதான் .

"மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை நிறைவேற்றுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு 1 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா முன்வந்துள்ளது".

இதுவரை போட்ட பெருதெருக்களால் பொருளாதாரம் வளர்ந்தா? இல்லை சில அரசியல் வாதிகளின் வங்கி கணக்கு பருமானதா? நாட்டின் கடன் தான் குறைந்ததா? 
  
ஒரு ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி இல்லாத நாட்டில் ஏன் இப்படி பெருந்தெருக்களை 
போடுக்கிறார்கள்? எல்லாம் ஒரு  'சோ'க்காட்டல் தான்.  

அண்மையில் சர்வதேச அமைப்பான 'மூடி' இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை குறைத்து இருந்தது. 2009க்கு பின்னர் 8-9 வீதமாக வளர்ந்த பொருளாதாரம் இப்பொழுது 3-3.5 வீதம். 

சீனாவை தவிர வேறு எந்த நாடும் கடன் தரும் நிலை இருக்கின்றதா ? என்ற கேள்வியும் உள்ளது. அத்துடன், சீன அரசு கடனை தர முடியாது போனால் எதையாவது ஒன்றை தனக்கு எழுதி வேண்டியும் விடும். 

On 6/23/2019 at 11:55 PM, ampanai said:

ஒரு ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி இல்லாத நாட்டில் ஏன் இப்படி பெருந்தெருக்களை போடுக்கிறார்கள்? எல்லாம் ஒரு  'சோ'க்காட்டல் தான்.  

இலங்கையை சிங்கப்பூர் போலாக்க முயல்கிறார்கள். 😂

ஐக்கிய அமெரிக்க, பிரித்தானியா நாடுகளில் இருந்து இரண்டு அமெரிக்க மில்லியன்கள் கடனாக பெறும் இலங்கை !

Sri Lanka is to receive a sum of US 2 billion from UK and USA, Prime Minister Ranil Wickremesinghe said today.

Mr. Wickremesinghe said this at the opening of the new lubricant blending plant in Muthurajawala which is a joint venture between Hyrax Oil Malaysia and Ceylon Petroleum Corporation (CPC).

http://www.dailymirror.lk/top_story/SL-getting-USD-2-billion-from-UK--US:-PM/155-169944

  • கருத்துக்கள உறவுகள்
On 6/23/2019 at 10:55 PM, ampanai said:

ஒரு ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி இல்லாத நாட்டில் ஏன் இப்படி பெருந்தெருக்களை 
போடுக்கிறார்கள்? எல்லாம் ஒரு  'சோ'க்காட்டல் தான்.  

கடன் கட்டமுடியாவிட்டால் பொதுமக்களிடம் அந்த பாதையை உபயோகபடுத்துவதுக்கு பணம் அறவிடலாம்  இந்த திட்டத்தை கொண்டு வந்த அரசியல்வாதியின் வெளிநாட்டுகனக்கில் கொமிசன் பணம் சேர்ந்து விடும் .

55 minutes ago, பெருமாள் said:

கடன் கட்டமுடியாவிட்டால் பொதுமக்களிடம் அந்த பாதையை உபயோகபடுத்துவதுக்கு பணம் அறவிடலாம்  இந்த திட்டத்தை கொண்டு வந்த அரசியல்வாதியின் வெளிநாட்டுகனக்கில் கொமிசன் பணம் சேர்ந்து விடும் .

 

2 hours ago, Lara said:

இலங்கையை சிங்கப்பூர் போலாக்க முயல்கிறார்கள். 😂

 

பிணை விற்பனை ஊடாக 2 பில்லியன் டொலர்களை நிதியாக திரட்டிய இலங்கை

5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கான பிணை விற்பனை ஊடாக இலங்கை 2 பில்லியன் டொலர்களை நிதியாக திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இடம்பெறும் இரண்டாவது பிணை விற்பனை இதுவாகும்.

500 மில்லியன் பெறுமதியான 5 ஆண்டு பிணைகள் 6.35 சதவீத அடிப்படையிலும், 1.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான 10 ஆண்டு பிணைகள் 7.55 சதவீத அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

http://www.hirunews.lk/tamil/business/219079/பிணை-விற்பனை-ஊடாக-2-பில்லியன்-டொலர்களை-நிதியாக-திரட்டிய-இலங்கை

இது தான் பொதுவாக நாடுகள் அபிவிருத்திக்கு பணம் சேர்க்கும் முறை. இங்கே, அதிக வட்டி தரப்படுகின்றது,.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ampanai said:

500 மில்லியன் பெறுமதியான 5 ஆண்டு பிணைகள் 6.35 சதவீத அடிப்படையிலும், 1.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான 10 ஆண்டு பிணைகள் 7.55 சதவீத அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உண்மையில் இந்த திட்டத்துக்கு தான் கடன் வாங்குகிறார்களா என்பது கேள்வி குறியே கடவத்தை க்கும் மீறிகமவுக்கும் உள்ள வாகன பயண நேரம் 90களில் 100 நிமிட க்குகளுக்குள் முடிந்துவிடும் இப்போ இன்னும் 60அல்லது 70 நிமிட நேரமே இருக்கும் என்று நினைக்கிறன் இந்த அளவுள்ள சிறிய தூர இடைவெளிக்கு ஏன் 1 பில்லியன் டொலர் சிலவளிப்பு ? அல்லது மீரிகம எனும் வேறு இடங்கள் இருக்கின்றனவா  தெரியலை . (90 களில் ஜேவிபி அது இது என்று தர மற்ற வீதிகளின் பயணம் நேரம் எடுக்கும்  இப்போ அப்படியல்ல என்று கூற கேள்வி )

Edited by பெருமாள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிட்டு தான் கடன் வேண்டுதல் புத்திசாலித்தனம், அப்படி பார்க்கையில் நாட்டின் பொருளாதாரம் 4% க்கும் குறைவாகவே வளர்கின்றது.

இவர்கள், ஒன்றில் அதைவிட வேகமாக வளரும் என்ற நம்பிக்கையில் அதிக வட்டிக்கு கடன் எடுக்கிறார்கள் இல்லை நீங்கள் கூறியது போல...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிட்டு தான் கடன் வேண்டுதல் புத்திசாலித்தனம், அப்படி பார்க்கையில் நாட்டின் பொருளாதாரம் 4% க்கும் குறைவாகவே வளர்கின்றது.

இவர்கள், ஒன்றில் அதைவிட வேகமாக வளரும் என்ற நம்பிக்கையில் அதிக வட்டிக்கு கடன் எடுக்கிறார்கள் இல்லை நீங்கள் கூறியது போல...

சிலோனில் அபிவிருத்தியை விட இனவாதம் ம்தான் முக்கியம் பாஸ் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.