Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்துக்கு மற்றொரு ரயில்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
யாழ்ப்பாணத்துக்கு மற்றொரு ரயில்!
[Thursday 2019-08-01 07:00]
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று முதல்  புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 4081 என்ற இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50 ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மாலை 6.31 ற்கு சென்றடையும். இதேபோன்று 4087 இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் மாலை 7.15ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்றடையும்.

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று முதல் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 4081 என்ற இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50 ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மாலை 6.31 ற்கு சென்றடையும். இதேபோன்று 4087 இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் மாலை 7.15ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்றடையும்.

  

இன்று முதல் தலைமன்னார் ரயில் நிலையம் வரையில் செல்லும் 4087 என்ற இலக்க தபால் ரயில் பிற்பகுதியில் பயணிகளின் வசதிகருதி 3 ரயில் பெட்டிகள் பயணிகளுக்காக இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பெட்டிகள் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் அகற்றப்பட்டு 4453 இலக்க ரயிலாக நள்ளிரவு 12.50 ற்கு அநுராதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து தலைமன்னார் ரயில் நிலையம் வரையில் பயணிக்கும்.

நாளை மன்னார் ரயில் நிலையத்தில் இரவு 7.00 மணிக்கு புறப்படும் 5844 இலக்க ரயில் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை செல்லும். 4088 இலக்க இரவு தபால் ரயிலுடன் ஒன்றிணைக்கப்படும்.

4082 என்ற இலக்க ரயில் நாளாந்தம் யாழ். ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.25 ற்கு புறப்பட்டு மாலை 4.00 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.

https://www.seithy.com/breifNews.php?newsID=229021&category=TamilNews&language=tamil

ஏற்கனவே அதிக உயிர் இழப்புக்களை இந்தப்பாதையில் உள்ளதும் அதை நிவர்த்தி செய்ய பல பாதுகாப்பு தடவைகள் அமைக்கப்படவுள்ள உள்ளதாக செய்திகள் வந்தன.

அவற்றை முதலில் அமைத்த பின்னர் இந்த சேவையை ஆரம்பித்தால் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

ஏற்கனவே அதிக உயிர் இழப்புக்களை இந்தப்பாதையில் உள்ளதும் அதை நிவர்த்தி செய்ய பல பாதுகாப்பு தடவைகள் அமைக்கப்படவுள்ள உள்ளதாக செய்திகள் வந்தன.

அவற்றை முதலில் அமைத்த பின்னர் இந்த சேவையை ஆரம்பித்தால் நன்று.

கொழும்பு யாழுக்கு அதிக ரயில்கள் விடப் பட வேண்டும் என நினைக்கிறேன். ரயில் கடவையில் விதிகளை மீறியோரால் இறப்புகள் நடப்பது உண்மையே. ஆனால் யாழுக்கும் கொழும்புக்கும் இடையில் ஓடும் தனியார் வான்கள் coffins on wheels ஆக மாறி விட்டிருக்கின்றன. போன வாரமும் மதவாச்சியில் பாரிய விபத்தும் மரணங்களும். வெளிநாட்டிலிருந்து செல்வோர் ரயிலைப் பயன்படுத்தினால் உயிராபத்துக் குறைவு!

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Justin said:

கொழும்பு யாழுக்கு அதிக ரயில்கள் விடப் பட வேண்டும் என நினைக்கிறேன். ரயில் கடவையில் விதிகளை மீறியோரால் இறப்புகள் நடப்பது உண்மையே. ஆனால் யாழுக்கும் கொழும்புக்கும் இடையில் ஓடும் தனியார் வான்கள் coffins on wheels ஆக மாறி விட்டிருக்கின்றன. போன வாரமும் மதவாச்சியில் பாரிய விபத்தும் மரணங்களும். வெளிநாட்டிலிருந்து செல்வோர் ரயிலைப் பயன்படுத்தினால் உயிராபத்துக் குறைவு!

இப்படியும் நடக்கிறதுதான் 
ஆனால் சாதாரண போக்குவரத்து பாதையை குறுக்கிட்டுதான் 
ரயில் ரோட்டும் பல இடங்களில் போகிறது .. ஒன்றில் இவற்றை குறைக்க வேண்டும் 
இல்லையேல் ஏதாவது பாதுகாப்பு கடவைகளை நிறுவவேண்டும் 
பாதுகாப்பு கடவைகளை நிறுவினால் ரயில் இன்னும் வேகமாக செல்லமுடியும்.
பயண  நேரத்தையும் குறைக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

இப்படியும் நடக்கிறதுதான் 
ஆனால் சாதாரண போக்குவரத்து பாதையை குறுக்கிட்டுதான் 
ரயில் ரோட்டும் பல இடங்களில் போகிறது .. ஒன்றில் இவற்றை குறைக்க வேண்டும் 
இல்லையேல் ஏதாவது பாதுகாப்பு கடவைகளை நிறுவவேண்டும் 
பாதுகாப்பு கடவைகளை நிறுவினால் ரயில் இன்னும் வேகமாக செல்லமுடியும்.
பயண  நேரத்தையும் குறைக்கலாம் 

ரயில் வேகமாக செல்ல 100 ஆண்டுகளான பாதை தாங்காது, அடுத்த 2 ஆண்டுகளில் மாகோ - வவுனியா புகையிரதப்பாதை திருத்தப்படுவதாக செய்திகள் கூறுகின்றது.
ஓமந்தை காங்கேசன்துறை இந்தியா போட்ட புதிய பாதை 100-110 வரை வேகமாக போகமுடியும்.
அதனால தான் எங்கட பக்கம் விபத்துகள் கூடவோ தெரியல.

பாதுகாப்பற்ற ரயில்கடவை+வேகம்=விபத்து.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டங்கள் சாலை விதிகளை இலங்கயில் உள்ள எவனும் மதிப்பதில்லை ஜனாதிபதி கூட சிவப்பு விளக்கு எரியும் போது செல்வார் கேட்டால் பாதுகாப்பு அப்படியிருக்க சாதாரண பொதுமகன் கடவைகளில் சிவப்பு எதற்கு எரிகிறது பச்சை எதற்கு எரிகிறது என்று இன்னும் தெளிவாக அவர்களுக்கு விளக்கம் தெரியாது  மற்றது எல்லாவற்றிலும் அவதியும் வேகமும் இருக்க விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.