Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரும்பான்மை பலமிருந்தால் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவேன் - ரணில்

Featured Replies

புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம். ஏனைய இனங்கள் அனுபவிக்கும் சகலவிதமான அரசியல் உரித்துக்களையும் பெற்று, 
 
தமிழர்கள் சுயமரியாதையுடனும் சுயகௌரவத்துடனும் வாழ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. புதிய அரசியலமைப்பின் மூலம் அந்த நிலைமையை உருவாக்குவோம் எனத் தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
 
யாழ் குருநகரில் மீன்பிடி துறைமுகத்திற்கான அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். 
 
இந்த நிகழ்வில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாட்டை கட்சித் தலைவராக அறிவிக்கும்படி கோரியிருந்தார். 
 
இதற்கு பதிலளித்தபோதே, மேற்படி கருத்தை தெரிவித்தார். தமிழர்கள் சுய மரியாதையுடனும், சுய கௌரவத்துடனும் வாழ வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. புதிய அரசியலமைப்பின் மூலம் அதனை ஏற்படுத்தலாம்.
 
ஆனால், அதனை ஏற்படுத்துவதில் எமக்குள்ள ஒரேயொரு பிரச்சினை,  பாராளு மன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாதது தான். அதை ஏற்படுத்தினால், உடனடி யாக புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தலாம் என்றார்.                 
 
  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை விசயத்திலையே கம்மி நீட்டுற ஆள்..இப்ப பெரும்பான்மை கேட்குது...

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பாராளு மன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாதது தான். அதை ஏற்படுத்தினால், உடனடி யாக புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தலாம் என்றார்.            

ஆறு கடக்கும் வரை தான் அண்ணன், தம்பி என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். உங்களை எத்தனை விடையங்களில் தமிழர்கள் பார்த்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

13 hours ago, ampanai said:

ஆனால், அதனை ஏற்படுத்துவதில் எமக்குள்ள ஒரேயொரு பிரச்சினை,  பாராளு மன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாதது தான். அதை ஏற்படுத்தினால், உடனடி யாக புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தலாம் என்றார்.                 

ரணில் ஓர் ஏமாற்றுப் பேர்வழி என்பதை மீண்டுமொருமுறை பகிரங்கமாக சொல்லியுள்ளார்.

சூடு சொரணையற்ற தமிழரசுக் கட்சியும், சுமந்திரனும் கிடைக்கும் அற்பசொற்ப சலுகைகளுக்காக ரணில் என்ற ஏமாற்றுப் பேர்வழியின் காலடியில் இருந்து சேவகம் செய்து வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் ரணிலின் விருப்பம் அறுதி பெரும்பான்மை இல்லாமல் வெல்ல வேண்டும் என்பதே.

அத்துடன், ரணில் கோத்தாவுடன் மறைமுகமான பேரத்தையும் வைத்துள்ளார்.

ஏனெனில், கோத்தா வந்தால் ஹிந்தியாவுடன் மிகவும் முரண்பாடான நிலை உருவாகும்.

BJP இணைப் பிரச்சனைக்கான, தீர்வின் தன்மையை கோடி கட்டி விட்டது. அது மட்டுமல்லாமல், ராஜபக்சவிற்கு ஓர் அறிவுரை கடிதமாக கூட எழுதியுள்ளது.

BJP காஷ்மீர் 370 இ நீக்கி, பிரித்தது, வரலாற்றின் அடிப்படையிலேயே.

ராஜபக்ஸவிடற்கான கடிதத்திலும், பிஜேபி இந்த விளக்கம், இலங்கை தீவில் முதலில் இருந்தது சைவ சமயத்தவர்கள் என்றும், அவர்களின் ஒரு பகுதியே பௌத்தத்திற்கு மாறியுள்ளார்கள் என்றும், அதனால் சைவ சைவ இந்துக்கள் இலங்கை தீவில் ஆளும் உரிமை கொண்டவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டியே.

BJP மதத்தின் அடிப்படியிலேயே கொள்கைகளை வெளிப்படுத்தி இருந்தாலும், இலங்கை தீவை பொறுத்தவரை சைவ சமயத்தவர் தமிழர் , சிங்களவர்கள், சிங்கள பௌத்தர்கள். கொள்கையின் யதார்த்தம், தமிழர்களே முழு இலங்கை தீவீற்கும் உரித்துடையவர்கள், இப்போதைய நிலையில் தமிழர்களின்  பகுதியை தமிழர்களே ஆட்சி செய்ய வேண்டும் என்பது.     

இந்த கடிதம் பற்றி வெளிப்படையாக ஊடகங்களில் வந்திருந்தாலும், சிங்களம் அதன் வழமையான, கீழ்த்தரமான  கிந்தியாயவை நக்கல்கலடித்தலும், எள்ளி நகையாடுதலும் சிங்களத்தின் முணுமுணுப்பிலும் இல்லை.

நான் அறிந்த வரையில், மலையாளிகள், பிரமணிகள், மற்றும் துவேசம் உள்ள கிந்தியர்கள்,இலங்கை தீவில் (ஹி)இந்தியாவின் முதன்மையை வீட்டுக் கொடுக்க வேண்டும் என்று மோடியை அறிவுறித்தியதாகவும், அதை மோடியும் BJP யும் நிராகரித்து விட்டதாகவும்.

இது முதலில் நான் நம்பவில்லை. ஆயினும், வெளிப்படையான கடிதம் BJP இந்த கொள்கைகள் வேறு திசையை நோக்கி இருப்பதாகவே காட்டுகிறது.

சிவ் சங்கர் மேனன் சொல்லியது, ஈழத்தமிழர்கள் இலங்கை தீவின் பூர்விக இனத்தவர்கள் இல்லை என்று.

  • கருத்துக்கள உறவுகள்

விகிதாசார தேர்தல் முறையில் 2/3 பெரும்பான்மையை ஒரு கட்சி பெறமுடியாது, தொகுதிவாரி தேர்தல் நடந்தால் 2/3 சாத்தியமாகும். 
மகிந்த ஜனாதிபதியாய் இருக்கும்போது கட்சித்தாவல் நிறைய நடந்ததே.

6 hours ago, Kadancha said:

நான் அறிந்த வரையில், மலையாளிகள், பிரமணிகள், மற்றும் துவேசம் உள்ள கிந்தியர்கள்,இலங்கை தீவில் (ஹி)இந்தியாவின் முதன்மையை வீட்டுக் கொடுக்க வேண்டும் என்று மோடியை அறிவுறித்தியதாகவும், அதை மோடியும் BJP யும் நிராகரித்து விட்டதாகவும்.

நடைமுறைல பாத்தா பிஜேபி சமஸ்கிரத திணிப்பிலும், ஹிந்தி திணிப்பிலும் தான் மும்மரமா இருக்கு.
பிஜேபி அதே நேரம் தமிழ்நாட்டு தமிழரின்டை கல்வில நீட் தேர்வு போல பலதை புகுத்தி கைவைக்குது.
இந்த லட்சணத்தில வட இந்தியரை நம்ப சொல்றீங்க!
அவ்வளவு தான். ஒரேடியா அழிவுதான் மிஞ்சும்.

 

  • தொடங்கியவர்
6 hours ago, Kadancha said:

மொத்தத்தில் ரணிலின் விருப்பம் அறுதி பெரும்பான்மை இல்லாமல் வெல்ல வேண்டும் என்பதே.

அத்துடன், ரணில் கோத்தாவுடன் மறைமுகமான பேரத்தையும் வைத்துள்ளார்.

ஏனெனில், கோத்தா வந்தால் ஹிந்தியாவுடன் மிகவும் முரண்பாடான நிலை உருவாகும்.

கோத்தா, இறுதிவரை சனாதிபதி வேட்ப்பாளராக இருந்தால், தமிழர்களில் பலரும் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். காரணம், அவர் தமிழினத்தை அழித்தமையே. 

தமிழ் மக்களை கோத்தாவிற்கு வாக்களிக்க எந்த தமிழ் கட்சியும் பகிரங்கமாக மக்களை கேட்க பயப்படும். 

ஆனால், மக்களுக்கு கோத்தா உட்பட எல்லா வேட்ப்பாளர்களையும் ஒரே மேடையில் வைத்து கேள்விகளை ஒரு அமைப்பு நடத்த வேண்டும். அதன் மூலம், மக்களையே கேள்விகள் கேட்கவும் அவர்களே யாருக்கு வாக்களிப்பது என்ற விளக்கத்தையும் தர உதவும். 

அதில், இலங்கையின் சீன, இந்திய மற்றும் அமெரிக்க நிலைப்பாடுகளும் அடங்கி இருக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ampanai said:

கோத்தா, இறுதிவரை சனாதிபதி வேட்ப்பாளராக இருந்தால், தமிழர்களில் பலரும் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். காரணம், அவர் தமிழினத்தை அழித்தமையே. 

தமிழர்களை அழித்ததில் சிங்களக்கட்சிகள் எதுவாக இருந்தாலும் இருகோடுகள் தான்.

இப்போ கோத்தா கொஞ்சம் பெரிய கோடாக தெரிகிறார்.இதனால் சிறிய கோட்டை யாருமே கவனிக்காமல் பெரிய கோட்டைப் பற்றியே கதைக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

தமிழின படுகொலை நடந்த உண்மையை எந்த சிங்கள தலைவரும் ஏற்கமாட்டார்கள். ஏற்கவும் விடமாட்டார்கள். 

காணாமல் போனவர்கள், அநேரகமாக படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள்.  அவர்கள் பற்றிய எந்த நீதியையும் தமிழர் தரப்பில் பெற்றுத்தரும் நிலையில் யாரும் இல்லை. 

அடுத்த தலைமுறை வாழ நாம் என்ன நிலைமையை இன்று எடுக்கவேண்டும் என்பதே தமினத்தின் முன்னால் உள்ள கேள்விகள். அதில் இந்த சனாதிபதி தேர்தலும் ஒன்று.  

சிங்களம் பிரிந்து நிற்கின்றது, எந்த ஒரு வேட்ப்பாளரும் சிங்கள மக்கள் உதவியுடன் மட்டும் ஜனாதிபதியாக வர முடியாது. இந்த சந்தர்ப்பத்தை எவ்வாறு தமிழ் சமூகம் பயன்படுத்தலாம்? 

ஒவ்வொரு வேட்ப்பாளரையும் ஆதரிப்பதில் உள்ள நன்மை தீமைகள் எமது வருங்காலம் சம்பத்தப்படு ஆராயப்படல் வேண்டும்  

  • தொடங்கியவர்

'பெரும்பான்மையை வழங்கினால் ஆயிரம் மடங்கு அபிவிருத்தி'

 

பெரும்பான்மை பலத்துடன் அடுத்த அரசாங்கத்தை அமைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், கடந்த 4 வருடங்களில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகளை போல ஆயிரம் மடங்கு அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

குருநாகல் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் கடந்த அரசாங்கங்களை விட அதிகளவான அபிவிருத்தி நடவடிக்கைகளை தமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பெரும்பான்மையை-வழங்கினால்-ஆயிரம்-மடங்கு-அபிவிருத்தி/175-236898

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.