Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

74 வயதில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி

Featured Replies

74  வயதான எர்ராமட்டி மங்கம்மா என்ற வயோதிப பெண் அறுவை  சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் ஒன்று இந்தியாவின் ஆந்திராவில்  குண்டூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நெலபார்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  எர்ராமட்டி மங்கம்மா (வயது 74) அவரின் கணவர் எர்ராமட்டி ராஜா ராவ் (வயது 80). இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லத காரணத்தால் சமூகத்தில் பெரும் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. இதனால் எப்படியாவது ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற அவர்களின் கனவை நனவாக்க முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி கண்டுள்ளனர். 

பொதுவாக ஒரு பெண்ணின் கருத்தரித்தல் காலம் அவரின் (45-50 வயதில் ) மெனோபாஸ் காலம் முடிவடைவதுடன் நின்றுவிடும். ஆனால் இயற்கைக்கு சவால்விடும் வகையில் குண்டூரில் உள்ள அஹல்யா வைத்தியசாலையின் உதியுடன் இன் விட்ரோ கருத்தரித்தல் (உதவி இனப்பெருக்க) தொழில் நுட்பத்தின்  ஊடாக இந்த பெண்மணி கருதரித்து இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு (2018)  நவம்பர் மாதம் இதற்கான சிகிச்சைகளை முன்னெடுத்த இந்த தம்பதியினருக்கு இம் மாதம் குழந்தை பிறந்துள்ளது.  இதன் மூலம் எர்ராமட்டி மங்கம்மா   74 வயதில் குழந்தை பெற்றெடுத்த உலகின் மிக வயதான பெண்மணி என்ற புகழுக்கு சொந்தகார் ஆகின்றார். 

இது குறித்து சிகிச்சை மேற்கொண்ட  வைத்தியர் கூறியதாவது:-

இந்த பெண்மணிக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள்  இல்லை மற்றும் மரபணு முறை மிகவும் நல்லதாக இருந்தது. இருதயநோய் வைத்தியர்கள், நுரையீரல் நிபுணர்கள் மற்றும் பிற சிறப்பு வைத்தியர்கள் சம்பந்தப்பட்ட ஒரு முழுமையான பரிசோதனைக்கு பின்னர் நாங்கள் அவர் குழந்தை பெற முடியும் என முடிவு செய்தோம். அவர் மாதவிடாய் நிறுத்த நிலையை அடைந்தார். ஆனால் ஐவிஎஃப் மூலம்  ஒரு மாதத்திற்குள் அதனையும்  திரும்பப் பெற்றோம், என்று  கூறினார்.

இதற்கு முன் பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள தல்ஜீந்தர் கவுர், 2017ஆம்  ஆண்டில், தனது 72ஆவது வயதில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/64173

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப முடியாத, செய்தி என்றாலும்... 
மருத்துவ துறையில்... அதிசயிக்க தக்க நிகழ்வுகளும் ( MEDICAL MIRACLES)  நடப்பதுண்டு.
தாத்தா, பாட்டிக்கு வாழ்த்துக்கள்.

இந்த வயதில்.... நீங்கள், பிள்ளைக்கு பாலூட்டி வளர்த்து...
பாடசாலைக்கு கூட்டிச் செல்லும், கஸ்ரங்களை நினைக்க.. கஸ்ரமாக உள்ளது.
அதற்காகத் தன்னும், உங்கள் இருவருக்கும்... ஆண்டவன்  நீண்ட  ஆயுளை தரவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழுறவுகள் சிலரை, வயதைப் பார்த்து நக்கலாகக்கூட தாத்தா பாட்டி என்று இங்கு அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆமா, சொல்லிப்புட்டன். 🕺💃

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Paanch said:

யாழுறவுகள் சிலரை, வயதைப் பார்த்து நக்கலாகக்கூட தாத்தா பாட்டி என்று இங்கு அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆமா, சொல்லிப்புட்டன். 🕺💃

சங்கம் ஒன்று அமைக்கத் தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

சங்கம் ஒன்று அமைக்கத் தான் இருக்கு.

சங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப்படும்......உங்களின் சங்கத்தில் இணைய எத்தனை வயது முடிந்திருக்க வேண்டும்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

சங்கம் ஒன்று அமைக்கத் தான் இருக்கு.

ஈழப்பிரியன் அண்ணா... அந்த  சங்கத்தில்,
இளைஞ்ஜர்  அணி பிரிவில், எனக்கு ஒரு பதவி தந்தால்....
நானும், "டக்கென்று"  உங்கள் சங்கத்தில், இணைய விருப்பமாக உள்ளேன். :)

ஆமா... உங்கள் தலைவர், செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் எல்லாம் யாரப்பு  :grin:
அதையும்... மொதல்லேயே... அறிய விரும்புகின்றேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

சங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப்படும்......உங்களின் சங்கத்தில் இணைய எத்தனை வயது முடிந்திருக்க வேண்டும்......!   😂

Iஐயா தலைவரே நீங்க தானே.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

சங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப்படும்......உங்களின் சங்கத்தில் இணைய எத்தனை வயது முடிந்திருக்க வேண்டும்......!   😂

சுவி அண்ணா....  எர்ராமட்டி ராஜா ராவ், 80 வயதில் தான்... பிள்ளை பெற்றவர்.
ஃ ஆகவே...  சங்கத்தில் சேர, உங்களுக்கு... 70 வயது  தாண்டியிருந்தாலும்... ஓகே. 
70 வயதுக்கு... கீழ் பட்டவர்கள் எல்லாம்.. இளைஞ்ஞரணியில் மட்டுமே... சேர்த்துக் கொள்ளப்  படுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

Iஐயா தலைவரே நீங்க தானே.

உஸ்.....நமக்குள்ளே இருக்கட்டும்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

Iஐயா தலைவரே நீங்க தானே.

பாஞ்ச்...  கோவித்துக் கொண்டு, புது கட்சி ஆரம்பிக்கப் போறார்.  🤩

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்...  கோவித்துக் கொண்டு, புது கட்சி ஆரம்பிக்கப் போறார்.  🤩

நீங்களும் இன்னும் கொஞ்ச காலத்தில் எமது சங்கத்தில் சேரப் போறீங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

சுவி அண்ணா....  எர்ராமட்டி ராஜா ராவ், 80 வயதில் தான்... பிள்ளை பெற்றவர்.
ஃ ஆகவே...  சங்கத்தில் சேர, உங்களுக்கு... 70 வயது  தாண்டியிருந்தாலும்... ஓகே. 
70 வயதுக்கு... கீழ் பட்டவர்கள் எல்லாம்.. இளைஞ்ஞரணியில் மட்டுமே... சேர்த்துக் கொள்ளப்  படுவார்கள்.

உங்களின் இந்தக் கருத்து எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.பாஞ்ச கோவிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.பண்ணீர்  எடப்பாடி போல டபுள் பாடியாய்  சேர்ந்திருக்கலாம்.....!  👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நீங்களும் இன்னும் கொஞ்ச காலத்தில் எமது சங்கத்தில் சேரப் போறீங்கோ.

ஹ்கும்.... பாடையில்...  போகும் மட்டும், நான் தான் இளைஞ்ஜரணி தலைவர். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல கிணத்தில தண்ணி ஊற்றெடுக்கிதா எண்டு பாருங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நந்தன் said:

முதல்ல கிணத்தில தண்ணி ஊற்றெடுக்கிதா எண்டு பாருங்கோ

இவருக்கு சித்து விளையாட்டுக்கள் பெரிசாய் தெரியாது எண்டதை போட்டு உடைச்சிட்டார் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இவருக்கு சித்து விளையாட்டுக்கள் பெரிசாய் தெரியாது எண்டதை போட்டு உடைச்சிட்டார் 🤣

இதுல அப்படி என்ன சித்து விளையாட்டு இருக்கு  கொஞ்சம் விளக்குங்கள் சாமியார்😁

  • தொடங்கியவர்

பேரன், பேத்திகளைக் காணும் வயதில், மங்காயம்மா குழந்தை பெற்றெடுத்திருப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. மருத்துவர்கள், பெண்களை 45 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்திவருகிறோம்.

74 வயது மங்காயம்மாவுக்கு குழந்தைகள் பிறந்திருப்பது மருத்துவ உலகில் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டாலும், இது நல்ல முன்னுதாரணமல்ல என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறது. `ஐ.வி.எஃப்' எனப்படும் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மூலம் பல்வேறு சாதனைகளைச் செய்துவரும் மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜிடம் இது பற்றி கருத்துக் கேட்டோம்.

இந்நிலையில், 74 வயதில் ஒருவர் குழந்தை பெறுகிறார் என்றால் அவரது உடல்நிலை, ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும், அவர்களை வளர்த்தெடுப்பதற்கும் தயாராக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகச் சாதாரணமாக ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் பாதிப்புகள் உள்ள சூழலில் அவைகுறித்தெல்லாம் யோசிக்க வேண்டும்.

குழந்தை பெற்றெடுத்தால், அவர்களை வளர்த்து ஆளாக்கும் அளவுக்கு அவர்களிடம் ஆரோக்கியமும் பொருளாதாரமும் இருக்கின்றனவா என்பதையும் சிந்திக்க வேண்டும். இவற்றையெல்லாம் பரிசீலிப்பது, பிறக்கும் குழந்தைகளின் நலனுக்கு அவசியமானது. வயதில் மூத்தவர்களுக்கு குழந்தை பிறந்திருப்பது மருத்துவ முன்னேற்றம் என்றாலும் இது ஆரோக்கியமானதல்ல.'' என்றார் டாக்டர்.

https://www.vikatan.com/health/women/is-it-healthy-for-erramatti-mangayamma-who-gave-birth-to-twins-in-74-years

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.