Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

lotus-tower-720x450.jpg

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு!

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும்  தாமரைக் கோபுரம் திறந்துவைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) மாலை இந்த கோபுரத்தை திறந்து வைக்கவுள்ளார்.

356 மீற்றர் உயரமான இந்த கோபுரம் 12 பில்லியன் ரூபாய் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் 80 வீதமான நிதி சீன அரசாங்கத்தின் நன்கொடையாகும்.

இந்த கோபுரத்தின் நிர்மாணப்பணிக்கான அனைத்து ஆலோசனை சேவைகளையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் வழங்கி இருந்தனர்.

நட்சத்திர விடுதி, ஹோட்டல்கள், கேட்போர் கூடம், மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் இந்தத் தாமரைக் கோபுரத்தில் காணப்படுகின்றன.

அதேநேரம், இந்த கோபுரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரி ஒலிபரப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு 3ஆம் மற்றும் 4ஆம் மாடிகள் நிகழ்வுகள் மற்றும் விழா மண்டபங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தாமரைக் கோபுரத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையை வௌியிட இலங்கை தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

45 ரூபாய் பெறுமதியான முத்திரை, நினைவுப் பத்திரம் மற்றும் கடித உறை ஆகியன இன்றைய தினம் வௌியிடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தெற்காசியாவின்-மிக-உயர்ந/

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

அதேநேரம், இந்த கோபுரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரி ஒலிபரப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு 3ஆம் மற்றும் 4ஆம் மாடிகள் நிகழ்வுகள் மற்றும் விழா மண்டபங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

எந்த மாடியில் இந்தியாவுக்கு எதிராக உளவு பார்க்கிற வேலை செய்யப்போயினம் என்று சொல்லவேயில்லை

image_ab7726b220.jpg

23 hours ago, putthan said:

எந்த மாடியில் இந்தியாவுக்கு எதிராக உளவு பார்க்கிற வேலை செய்யப்போயினம் என்று சொல்லவேயில்லை

அதுக்கென்டு குறிப்பிட்ட இடம் இல்லை. மொத்தமாவே அதுக்கு தான்!
சிங்களவனிடை காசை வாங்கி சேவகம் செய்ற இந்தியன்பாடு கஷ்டம் தான்.

 

தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகத்தை எரித்ததும் இந்த சாதனையில் அடங்கும் !

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: வானமà¯, வà¯à®à¯ மறà¯à®±à¯à®®à¯ வà¯à®³à®¿à®ªà¯à®ªà¯à®±à®®à¯

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky and outdoor

உந்த உயர்ந்த கோபுரம் கட்டுறதிலையும் மகிந்த இரண்டு பில்லியன் ரூபாவை சுட்டுட்டார் எண்டு பரவலாக் கதை.  சிங்கன் ஆட்சியில இருக்கிறபொழுது தொடங்கப்பட்ட இந்த கோபுரம் அமைக்கும் பணியில், சீனாவின் பெயர் முகவை இல்லாத ஒரு தனியார் நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபாவை கோபுரத்தைக் கட்டுவித்த நிறுவனம் கொடுத்ததாம். மகிந்தவின் ஆசீருடன் நடைபெற்ற இந்த பணக் கைமாற்றில் , பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு சீனர் தலைமறைவாகிவிட்டார் என்று மகிந்த கைய்யை விரித்துவிட்டார் போலக் கிடக்கு.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் ஊழல் என்ற பெருச்சாளி மக்களின் வாழ்வாதார வளர்ச்சிற்கு தடையாக உள்ளது.

இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் இவ்வாறான ஊழல்களை குறைக்கும் வழிகள் உள்ளன. உதாரணத்திற்கு, இவ்வாறான வரவு செலவுகளை, எல்லாவற்றையும் அல்ல பெரிய செலவுகளை,  பகிரங்கமாக இணைய தளங்களில் அறிவிக்கலாம்.

மற்றும், மின்வலை பண பரிவர்த்தனைகளை செய்து அதன் மூலம் யாருக்கு யாரால் எப்பொழுது பணம் செலுத்தப்பட்டது என அறியத்தரலாம்.

ஆனால், இவர்கள் செய்வதெல்லாம் சட்ட விரோத செயல்பாட்டார்கள் செய்வது போன்று உள்ளது. 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் ஊழல் என்ற பெருச்சாளி மக்களின் வாழ்வாதார வளர்ச்சிற்கு தடையாக உள்ளது.

இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் இவ்வாறான ஊழல்களை குறைக்கும் வழிகள் உள்ளன. உதாரணத்திற்கு, இவ்வாறான வரவு செலவுகளை, எல்லாவற்றையும் அல்ல பெரிய செலவுகளை,  பகிரங்கமாக இணைய தளங்களில் அறிவிக்கலாம்.

மற்றும், மின்வலை பண பரிவர்த்தனைகளை செய்து அதன் மூலம் யாருக்கு யாரால் எப்பொழுது பணம் செலுத்தப்பட்டது என அறியத்தரலாம்.

ஆனால், இவர்கள் செய்வதெல்லாம் சட்ட விரோத செயல்பாட்டார்கள் செய்வது போன்று உள்ளது. 

அரசியல்வாதிகள்... வெளிப்படையாக இருப்பார்கள் என்று.. நாம், எதிர்பார்க்கவே... கூடாது.
அவர்களை... மீண்டும் தெரிந்து எடுக்கும், நாங்கள் தான்... குற்றவாளிகள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

அரசியல்வாதிகள்... வெளிப்படையாக இருப்பார்கள் என்று.. நாம், எதிர்பார்க்கவே... கூடாது.
அவர்களை... மீண்டும் தெரிந்து எடுக்கும், நாங்கள் தான்... குற்றவாளிகள்.

ஏன் எங்க‌ட‌ த‌மிழ் நாட்டில் ம‌ட்டும் பெரியா யோக்கிய‌ர்க‌ள் தானே , எல்லாம் ப‌க்கா பிராடுக‌ள் த‌மிழ்சிறி அண்ணா , ஊழ‌ல் செய்து சிறைக்கு சென்று பிற‌க்கு வெளியில் வ‌ந்து , இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் தூத்துக் குடியில்  க‌னிமொழி போட்டியிட்டு வெல்ல‌ வில்லையா / 

இந்தியா சிறில‌ங்கா அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌லுக்கு பெய‌ர் போன‌வை , 

த‌மிழீழ‌ம் எங்க‌ளுக்கு கிடைச்சு இருக்க‌னும் டென்மார்க்கு அடுத்த‌ இட‌த்தில்  இருந்து இருக்கும் ஊழ‌ல் இல்லா நாட்டு ப‌ட்டிய‌லில் 👏🤞

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

ஏன் எங்க‌ட‌ த‌மிழ் நாட்டில் ம‌ட்டும் பெரியா யோக்கிய‌ர்க‌ள் தானே , எல்லாம் ப‌க்கா பிராடுக‌ள் த‌மிழ்சிறி அண்ணா , ஊழ‌ல் செய்து சிறைக்கு சென்று பிற‌க்கு வெளியில் வ‌ந்து , இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் தூத்துக் குடியில்  க‌னிமொழி போட்டியிட்டு வெல்ல‌ வில்லையா / 

இந்தியா சிறில‌ங்கா அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌லுக்கு பெய‌ர் போன‌வை , 

த‌மிழீழ‌ம் எங்க‌ளுக்கு கிடைச்சு இருக்க‌னும் டென்மார்க்கு அடுத்த‌ இட‌த்தில்  இருந்து இருக்கும் ஊழ‌ல் இல்லா நாட்டு ப‌ட்டிய‌லில் 👏🤞

பையன்... தமிழக  தேர்தல்களில்... வெல்வது யார்? என்று முடிவு எடுப்பது...
பல கோடிக் கணக்கான பணமும்,  மூக்குத்திகளும்,  சாராயமும்... போன்றவை தான்..
வெற்றி பெறுபவரை,  தீர்மானிக்கின்றன.

அப்படி, எக்கச் சக்கமான... பணம் போட்டு, தெரிவு செய்யப் பட்ட  அரசியல்வாதி,
தான்...  செலவழித்த பணத்தைப் போல், பல மடங்கு... திரும்ப பெற மட்டுமே... யோசிப்பார்.

இப்போ... பதவியில், இருக்கும்  ஒரு, அரசியல்வாதியை ஆவது, 
மக்கள் சேவைக்கு.. வந்து, அதனை  செய்து காட்டியவர்கள், இல்லை என்றே... சொல்லலாம்.

இந்தக்  "கிலிசு"  கேட்டுக்குள்ளை....  மாவையின் மகனும், அரசியலில் குதித்து,
மக்களுக்கு... சேவை செய்ய, ஆசைப் படுகின்றாராம். 🤣

ஹம்ம்ம்... எல்லாரும், குடும்பமாக... எங்களுக்கு அரசியல் சேவை செய்ய வந்தால், 
நாங்கள்... திக்கு, முக்காடி... திணறிப் போவோம்...  பையா....... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

பையன்... தமிழக  தேர்தல்களில்... வெல்வது யார்? என்று முடிவு எடுப்பது...
பல கோடிக் கணக்கான பணமும்,  மூக்குத்திகளும்,  சாராயமும்... போன்றவை தான்..
வெற்றி பெறுபவரை,  தீர்மானிக்கின்றன.

அப்படி, எக்கச் சக்கமான... பணம் போட்டு, தெரிவு செய்யப் பட்ட  அரசியல்வாதி,
தான்...  செலவழித்த பணத்தைப் போல், பல மடங்கு... திரும்ப பெற மட்டுமே... யோசிப்பார்.

இப்போ... பதவியில், இருக்கும்  ஒரு, அரசியல்வாதியை ஆவது, 
மக்கள் சேவைக்கு.. வந்து, அதனை  செய்து காட்டியவர்கள், இல்லை என்றே... சொல்லலாம்.

இந்தக்  "கிலிசு"  கேட்டுக்குள்ளை....  மாவையின் மகனும், அரசியலில் குதித்து,
மக்களுக்கு... சேவை செய்ய, ஆசைப் படுகின்றாராம். 🤣

ஹம்ம்ம்... எல்லாரும், குடும்பமாக... எங்களுக்கு அரசியல் சேவை செய்ய வந்தால், 
நாங்கள்... திக்கு, முக்காடி... திணறிப் போவோம்...  பையா....... :grin:

உண்மை தான் , மக்க‌ளை அந்த‌ நிலைக்கு திராவிட‌ம் வைச்சு இருந்த‌து , 
இப்ப‌ இருக்குர‌ இளைய‌த‌ல‌ முறை பிள்ளைக‌ளை காசு குடுத்து ஏமாத்தி திராவிட‌த்தால் ஓட்டு வாங்க‌ முடியாது , 
பெரியார் ம‌ற்றும் அறிய‌ர் அண்ணாவை தங்க‌ளின் சுய‌ அர‌சிய‌லுக்காக‌ அவ‌ர்க‌ளின் பெய‌ரை ப‌ய‌ன் ப‌டுத்தின‌ம் /

இந்தியா ம‌ற்றும் சொறில‌ங்கா இந்த‌ இர‌ண்டு நாடும் ஒரு போதும் சிறு முன்னோற்ற‌ம் கூட‌ அடைய‌ மாட்டின‌ம் , 

ஜ‌ரோப்பா நாடுக‌ளில் அர‌சிய‌ல் வாதிகள் ஊழ‌ல் செய்தா சிறைக்குள் பிடிச்சு போட்டுட்டு அவ‌ர்க‌ளின் சொத்தை எல்லாம் அர‌சாங்க‌ உட‌மை ஆக்கி விட்டு அவ‌ர்க‌ள் வாழ் நாளில் மீண்டும்  அர‌சிய‌லில் ஈடுப‌ட‌ முடியாத‌ மாதிரி செய்து போடுவின‌ம் , 

இந்தியாவில் எல்லாம் த‌ல‌ கீழா , 
இந்திய‌னாய் வாழுவ‌தில் பெருமை என்று சொல்லும் முட்டாள்க‌ள் இந்தியாவில் இருக்கும் வ‌ர‌ , இந்திய‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் ஆத்தில் அடை ம‌ழை தான் 😉😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பையன்... தமிழக  தேர்தல்களில்... வெல்வது யார்? என்று முடிவு எடுப்பது...
பல கோடிக் கணக்கான பணமும்,  மூக்குத்திகளும்,  சாராயமும்... போன்றவை தான்..
வெற்றி பெறுபவரை,  தீர்மானிக்கின்றன.

அப்படி, எக்கச் சக்கமான... பணம் போட்டு, தெரிவு செய்யப் பட்ட  அரசியல்வாதி,
தான்...  செலவழித்த பணத்தைப் போல், பல மடங்கு... திரும்ப பெற மட்டுமே... யோசிப்பார்.

இப்போ... பதவியில், இருக்கும்  ஒரு, அரசியல்வாதியை ஆவது, 
மக்கள் சேவைக்கு.. வந்து, அதனை  செய்து காட்டியவர்கள், இல்லை என்றே... சொல்லலாம்.

இந்தக்  "கிலிசு"  கேட்டுக்குள்ளை....  மாவையின் மகனும், அரசியலில் குதித்து,
மக்களுக்கு... சேவை செய்ய, ஆசைப் படுகின்றாராம். 🤣

ஹம்ம்ம்... எல்லாரும், குடும்பமாக... எங்களுக்கு அரசியல் சேவை செய்ய வந்தால், 
நாங்கள்... திக்கு, முக்காடி... திணறிப் போவோம்...  பையா....... :grin:

த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ப‌ணி மிக‌வும் க‌ஸ்ர‌ம் த‌மிழ் சிறி அண்ணா , கூலிக்கு திராவிட‌ கொடியை பிடிக்கும் முட்டாள்க‌ள் , 
ஜாதி வெறிய‌ர்க‌ள் , இவ‌ர்க‌ளை எல்லாம் தாண்டி தேர்த‌ல் ப‌ணி செய்ய‌னும் என்றால் துனிவு இருக்க‌னும் , தேர்த‌ல் நேர‌ம் குடி போதையில் தேவை இல்லாம‌ ச‌ண்டைக்கு வ‌ருவாங்க‌ள் , 

அண்ண‌ன் சீமானின் துனிவை பார்த்து அவ‌ரின் த‌ம்பிக‌ள் அதே துனிவோடு ஒவ்வொரு தொகுதியிலும் த‌ங்க‌ளின் ப‌ணியை ச‌ரியாய் செய்வார்க‌ள் , 
போன‌ தேர்த‌லில் திருட்டு திராவிட‌ கும்ம‌ல‌ சேர்ந்த‌ ஒருத‌ருக்கு போட்டு கும்பி இருப்போம் , பின் விலைவுக‌ளை நினைத்து அந்த‌ இட‌த்தில் பொறுமையை க‌டை பிடித்தோம் , அவ‌ள‌வ‌த்துக்கு அந்த‌ கிழ‌டு எங்க‌ளை குடி போதையில் நின்ற‌ ப‌டியே க‌டுப்பு ஏத்தின‌வ‌ன் கெட்ட‌ வார்த்தைக‌ளால் 😉😁 /

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பையன்26 said:

உண்மை தான் , மக்க‌ளை அந்த‌ நிலைக்கு திராவிட‌ம் வைச்சு இருந்த‌து , 
இப்ப‌ இருக்குர‌ இளைய‌த‌ல‌ முறை பிள்ளைக‌ளை காசு குடுத்து ஏமாத்தி திராவிட‌த்தால் ஓட்டு வாங்க‌ முடியாது , 
பெரியார் ம‌ற்றும் அறிய‌ர் அண்ணாவை தங்க‌ளின் சுய‌ அர‌சிய‌லுக்காக‌ அவ‌ர்க‌ளின் பெய‌ரை ப‌ய‌ன் ப‌டுத்தின‌ம் /

இந்தியா ம‌ற்றும் சொறில‌ங்கா இந்த‌ இர‌ண்டு நாடும் ஒரு போதும் சிறு முன்னோற்ற‌ம் கூட‌ அடைய‌ மாட்டின‌ம் , 

ஜ‌ரோப்பா நாடுக‌ளில் அர‌சிய‌ல் வாதிகள் ஊழ‌ல் செய்தா சிறைக்குள் பிடிச்சு போட்டுட்டு அவ‌ர்க‌ளின் சொத்தை எல்லாம் அர‌சாங்க‌ உட‌மை ஆக்கி விட்டு அவ‌ர்க‌ள் வாழ் நாளில் மீண்டும்  அர‌சிய‌லில் ஈடுப‌ட‌ முடியாத‌ மாதிரி செய்து போடுவின‌ம் , 

இந்தியாவில் எல்லாம் த‌ல‌ கீழா , 
இந்திய‌னாய் வாழுவ‌தில் பெருமை என்று சொல்லும் முட்டாள்க‌ள் இந்தியாவில் இருக்கும் வ‌ர‌ , இந்திய‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் ஆத்தில் அடை ம‌ழை தான் 😉😁

பையன்.....  ப. சிதம்பரம்  திகார் ஜெயிலில் இருக்கிறார்.
அவர், இந்தியாவின், காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் நிதி அமைச்சர்.
அவருக்கு... இலங்கைத் தமிழரை மட்டுமல்ல, தமிழகத்து தமிழரையும் பிடிக்காது.
பயணம்  போகும் போது, காரின்.. பூட்டிய   கறுப்புக் கண்ணாடிக்குள் இருந்து கொண்டு,
மக்களை பார்த்து, ரசித்த ஆளாம்.

இவர், முதல் நாள் திகார் ஜெயிலுக்கு போன போது...
இவருக்கு, ஒதுக்கப் பட்ட,    மறியலில்...    படுக்க தலையணையும், 
வெளியில் வந்து இருக்கும் விறாந்தையில்.... கதிரையும் இருந்ததாம்.

இரண்டு மூன்று நாளில்.... அந்தக்  கதிரையையும்,  தலையணையையும்  அகற்றி விட்டதால்,தனக்கு... இடுப்பு வலி வந்திருக்கு என்று,  கண் கலங்கியும்,  கலங்காமலும், சொல்கிறாராம்.

இவர்,  இன்னும் தாங்குவார்... போல இருக்கு.
அதுக்காக.... இவரை, ஆயுள் முழுக்க மறியலில் வைத்திருந்தாலும்,
தமிழ்நாட்டிலோ, தமிழ் ஈழத்திலோ... ஒருவருமே... கவலைப் பட மாட்டார்கள்.

பதவியில்... இருக்கும் போது... சேர்த்த, கொழுப்பை, கரைக்க வேண்டிய நேரம் இது.
எல்லா... அரசியல்வாதிகளுக்கும்  பொருந்தும்.

Edited by தமிழ் சிறி

ஆசிய கண்டம் முழுவதுமாக சீனாவின் அரசியல், இராணுவ  முக்கியமாக பொருளாதார தாக்கங்கள் பெருகி வருகின்றன. அதன் ஒரு சின்னமே இந்த கோபுரம். 

கேள்வி இங்கே என்னவென்றால், தமிழீழத்தை ஆயுதப்போராட்டம் மூலமாக மலர அனுமதிக்காத மேற்குலம் தொடர்ந்தும் சீன வளர்ச்சியை இலங்கையில் அனுமதிக்க போகின்றதா? 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வளர்ச்சியடைகிறது  ஈழம் வளர்ச்சியடையாது புடுங்கி தின்னும் அரசியல் வாதிகள் இருக்கும் வரைக்கும் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.