Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலம்-பா .உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிலம்


எமக்கோ குந்தி 
இருக்க ஒரு முழ 
நிலம் கூட இல்லை 
எமக்கு முன்னும் பின்னும் 
அருகிலும் பக்கத்திலும் 
புத்தரின் வேர்கள் 
முளைத்து விட்டன 
இப்போது எல்லாம் 
சப்பாத்து கால்களின் 
சத்தங்கள் தான் 
நிலம் முழுக்க 
நிரம்பிக் கிடக்கின்றன 
உதைபடும் நிலங்கள் 
மௌனமாக அழுதுகொண்டு 
இருப்பதை 
யார் தான் அறிவர் .

  • கருத்துக்கள உறவுகள்

நிஜத்தின் வேதனை கவிதையில் தெரிகின்றது உதயகுமார்.....!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

நிஜத்தின் வேதனை கவிதையில் தெரிகின்றது உதயகுமார்.....!   👍

மிகவும் நன்றிகள் Suvy.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2019 at 9:37 AM, uthayakumar said:

உதைபடும் நிலங்கள் 
மௌனமாக அழுதுகொண்டு 
இருப்பதை 
யார் தான் அறிவர் .

இந்த வரிகள் 'தண்ணீரிலே மீனழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார்' பாடலை நினைவூட்டுகிறது. 

தமிழனே அழுகிறான். அவன் நிலத்தின் அழுகையை யாருமே அறியவில்லை.

உங்களிடம் உதயமான கவிதை அருமை உதயகுமார் அவர்களே!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Paanch said:

இந்த வரிகள் 'தண்ணீரிலே மீனழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார்' பாடலை நினைவூட்டுகிறது. 

தமிழனே அழுகிறான். அவன் நிலத்தின் அழுகையை யாருமே அறியவில்லை.

உங்களிடம் உதயமான கவிதை அருமை உதயகுமார் அவர்களே!!

அழகான பாடலையும் அதன் அர்த்தத்தத்தையும் நினைவூட்டி மேலும் 
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றிகள் paanch.

புத்தரின் பெயரில் முளைத்திருக்கும் இவ்வேர்கள் எம்மக்களை விலக்க முற்படுகின்றன. வேதனையைச் சுமந்து நிற்கும் தமிழீழமே என்றும் தளராதே. 

நன்றிகள் உதயகுமார்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/30/2019 at 6:56 PM, அருள்மொழிவர்மன் said:

புத்தரின் பெயரில் முளைத்திருக்கும் இவ்வேர்கள் எம்மக்களை விலக்க முற்படுகின்றன. வேதனையைச் சுமந்து நிற்கும் தமிழீழமே என்றும் தளராதே. 

நன்றிகள் உதயகுமார்...

மிகவும் நன்றிகள் அருள்மொழிவர்மன் .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உதயன். நான் எழுதியிருப்பின் புத்தர் என்பதை அரசு / அரசு மரம் என்று எழுதியிருப்பேன். நல்ல கவிதை, பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, poet said:

வாழ்த்துக்கள் உதயன். நான் எழுதியிருப்பின் புத்தர் என்பதை அரசு / அரசு மரம் என்று எழுதியிருப்பேன். நல்ல கவிதை, பாராட்டுக்கள்.

பெரும் புலவரே உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி .
எல்லாமே எங்கள் ஈழ புலவன் உங்களிடம் இருந்து கற்றது தான் .
நன்றிகள்.எப்போது நோர்வே வரம் எண்ணம் .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உதயகுமார். டிசம்பர் அப்படி நேரில் சந்திப்போம்

On 9/28/2019 at 5:37 PM, uthayakumar said:

...
சப்பாத்து கால்களின் 
சத்தங்கள் தான் 
நிலம் முழுக்க 
நிரம்பிக் கிடக்கின்றன 
...

தேர்ந்தெடுத்த வரிகள்...

கவிஞனுக்கு வரிகளே வரம் என்ப...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, இரும்பொறை said:

தேர்ந்தெடுத்த வரிகள்...

கவிஞனுக்கு வரிகளே வரம் என்ப...

தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றிகள் இரும்பொறை .

  • 2 weeks later...
On 9/28/2019 at 1:07 PM, uthayakumar said:

எமக்கு முன்னும் பின்னும் 
அருகிலும் பக்கத்திலும் 
புத்தரின் வேர்கள் 
முளைத்து விட்டன 

அருமையான வரிகள்!
களைகள் முடிவில்லாம பெருகிக்கொண்டே போகுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Gowin said:

அருமையான வரிகள்!
களைகள் முடிவில்லாம பெருகிக்கொண்டே போகுது.

உங்கள் அழகிய கருத்துக்கு நன்றிகள் Gowin.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.