Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என்பது இந்தியாவிற்கு முன்னரே தெரிந்திருந்தது- இந்திய ஊடகம்

Featured Replies

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக அவதானிக்கவுள்ளது என  ஸ்டேட்ஸ்மன் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையை பின்பற்றும் என தெரிவித்துள்ள இந்திய ஊடகம்  இந்தியாவின் மூலோபாய நலன்களிற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் விதத்தில் சீனாவின் கடற்கலங்கள் எதனையும் கோத்தபாய ராஜபக்ச தனது நாட்டிற்குள்அனுமதிக்கமாட்டார் என புதுடில்லி நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியாகயிருந்தவேளை மூத்த ராஜபக்ச சீனாவின் நீர்மூழ்கிகளை இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதித்தமை குறித்து இந்தியா கடும் சீற்றமடைந்தது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலை தொடர்ந்து இலங்கை ஆட்சி மாற்றத்தை நோக்கி நகர்கின்றது ராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வரக்கூடும் என்பது குறித்து புதுடில்லி கடந்த சில மாதங்களாக உறுதியாக நம்பதொடங்கியது என ஸ்டேட்ஸ்மன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக தாங்கள் ராஜபக்சவிற்கு எதிரானவர்கள் என்ற கருத்தினை அகற்றுவதற்கு புதுடில்லி முயன்று வந்தது எனவும் ஸ்டேட்ஸ்மன் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே மகிந்த ராஜபக்ச கடந்த செப்டம்பரில் இந்தியா விஜயம் மேற்கொண்டவேளை  நரேந்திரமோடி அவரை சந்தித்தார் எனவும் இந்திய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/69226

  • கருத்துக்கள உறவுகள்

சீ  சீ இந்தப்பழம் புளிக்கும் கதைதான் இந்தியாவின் நிலை.  

  • தொடங்கியவர்

India to keep a watch on Sri Lanka’s behaviour after Gotabaya Rajapaksa’s win

India will adopt a ”wait and watch” approach on Sri Lanka following the victory of Gotabaya Rajapaksa in the presidential election even as it is hopeful that the new dispensation will not allow any foreign military asset (read China) in the island nation which could have implications for New Delhi’s strategic interests.

Prime Minister Narendra Modi was among the first foreign leaders who congratulated Gotabaya, a former Defence Secretary and the younger brother of controversial former President Mahinda Rajapaksa, on his electoral victory. In a congratulatory message, Modi said: ”Congratulations Gotabaya Rajapaksa on your victory… I look forward to working closely with you for deepening the close and fraternal ties between our two countries and citizens, and for peace, prosperity as well as security in our region.” Modi also later telephoned the younger Rajapaksa and congratulated him.

In response, Gotabaya tweeted: “I thank Prime Minister Narendra Modi and the people of India for your warm wishes. Our two nations are bound by history and common beliefs and I look forward to strengthening our friendship and meeting you in the near future.”

The elder Rajapaksa, when he was the President, had greatly upset India when he allowed Chinese submarines to dock in Sri Lanka twice without informing India. The matter was raised at the highest level twice in 2014.

Though the Rajapaksas are seen as pro-China, officials in New Delhi believe the new Lankan leadership will not make any such strategic move that could impact India-Lanka ties.

New Delhi was quite certain for the past few months that Sri Lanka was moving towards a political transformation and the Rajapaksas could return to power in the wake of the gruesome Easter Sunday terror attacks in April. Therefore, it had been assiduously trying to dispel the notion that it was hostile to the Rajapaksas. These efforts led to Modi hosting Mahinda in September last year and meeting him during his visit to the island nation in June.

https://www.thestatesman.com/india/india-keep-watch-sri-lankas-behaviour-gotabaya-rajapaksas-win-1502823720.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ampanai said:

ஜனாதிபதியாகயிருந்தவேளை மூத்த ராஜபக்ச சீனாவின் நீர்மூழ்கிகளை இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதித்தமை குறித்து இந்தியா கடும் சீற்றமடைந்தது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

சிங்களம் என்ன செய்தாலும் கிந்தியாவால் சீற்றம் மட்டும்தான் கொள்ள முடியும் அங்காலை ஒரு தும்பைக்கூட அசைக்கேலாது.
ஆனால் தமிழர் எண்டால் சீற்றம் மட்டுமில்லை அழிக்கவும் முடியும்.

  • தொடங்கியவர்

கூட்டமைப்பு ஏன் இன்னும் (பலாலி ஊடாகவும் செல்லலாம்) செல்லவில்லை? 

இங்கே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களா? இல்லை, கூப்பிட்டால் மேலும் நிலமை சிக்கலுக்கு உள்ளாகிவிடும் என டெல்லி நம்புகின்றாதா? 

  • தொடங்கியவர்

கே. புதிய ஜனாதிபதியை இந்தியா இனி எப்படி அணுகும்?

ப. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர் பிரச்சனை என்பது ஒரு வியூக ரீதியான பிரச்சனை. உண்மையிலேயே அந்தப் பிரச்சனையில் ஏதும் அவர்கள் செய்யவில்லை. ராஜீவ் காந்தி முன்வைத்த 13வது திருத்தச் சட்டத்தைத் தவிர, தில்லியிலிருந்து தமிழர்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கையில் இருந்த ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது தமிழர் மீதான அக்கறையில் அல்ல. அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தத்தான்.

தற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு. அவருக்கு பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட, இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்தபோதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும் நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் புதிய ராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.

https://www.bbc.com/tamil/india-50473017

  • தொடங்கியவர்

கே. ராஜபக்ஷக்களைப் பொருத்தவரை அவர்கள் சீனாவுக்கு நெருக்கமானவர்கள் என்ற பிம்பம் இருக்கிறது. இனி என்ன ஆகும்?

ப. நான் ஒரு அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கப் போகிறேன் என்கிறார் கோட்டாபய. அதாவது இந்தியாவுடனோ, சீனாவுடனோ நெருக்கமாக இருக்கப் போவதில்லை என்றிருக்கிறார். ஆனால், மஹிந்தவைப் பொறுத்தவரை இந்தியா எங்கள் சகோதரன். ஆனால், சீனாவுடன் வர்த்தக உறவுகளை வைத்திருக்கிறோம் என்பார். ஆகவே மஹிந்தவின் நிலைப்பாட்டிலிருந்து கோட்டாபயவின் நிலைப்பாடு மாறுபடுகிறது.

தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்பாக, சீனாவின் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. எந்த நாட்டிலும் தேர்தல் சமயத்தில் கூட்டு ராணுவப் பயிற்சி நடக்காது. ஆனால், தேர்தல் சமயத்தில் சீனக் கப்பல் அங்கு வந்திருப்பது ஒரு சமிக்ஞையாகத்தான், அதாவது சீனா எந்த நேரத்திலும் வரவேற்கப்படுகிறது என்பதன் சமிக்ஞையாகத்தான் அது பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/india-50473017

54 minutes ago, ampanai said:

கூட்டமைப்பு ஏன் இன்னும் (பலாலி ஊடாகவும் செல்லலாம்) செல்லவில்லை? 

இங்கே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களா? இல்லை, கூப்பிட்டால் மேலும் நிலமை சிக்கலுக்கு உள்ளாகிவிடும் என டெல்லி நம்புகின்றாதா? 

மோடி எப்பவோ கூப்பிட்டவராமே?
6 மாதம் ஆச்சு. இன்னும் போகலையா?

1 hour ago, ampanai said:

தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்பாக, சீனாவின் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

EJhCmtjUwAAK-iY?format=jpg&name=small

3 hours ago, ampanai said:

உயிர்த்த ஞாயிறுதாக்குதலை தொடர்ந்து இலங்கை ஆட்சி மாற்றத்தை நோக்கி நகர்கின்றது ராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வரக்கூடும் என்பது குறித்து புதுடில்லி கடந்த சில மாதங்களாக உறுதியாக நம்பதொடங்கியது என ஸ்டேட்ஸ்மன் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் முன்பே தெரியும் என்பது எனக்கு முன்பே தெரியும். 😀😀

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Lara said:

EJhCmtjUwAAK-iY?format=jpg&name=small

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் முன்பே தெரியும் என்பது எனக்கு முன்பே தெரியும். 😀😀

hqdefault.jpg

தோழர், சிரிப்பே வரல..☺️

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Lara said:

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் முன்பே தெரியும் என்பது எனக்கு முன்பே தெரியும். 😀😀

வரதராஜபெருமாளை தூசிதட்டி அனுப்பும் போதே தெரிந்தது.

3 hours ago, ஈழப்பிரியன் said:

வரதராஜபெருமாளை தூசிதட்டி அனுப்பும் போதே தெரிந்தது.

வரதராஜபெருமாளை ஜனாதிபதி மாளிகை தெரு வாசலிலே இருக்கிற காவலரணில ஒரு கைல ஈட்டியையும் இன்னொரு கைல இந்திய தேசியக் கொடியையும் கொடுத்து நிப்பாட்டி வைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.