Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’காவல்காரனாக மீண்டும் எச்சரிக்கிறேன்’

Featured Replies

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நாட்டில் ஆங்காங்கே சில இனவாதிகளால் எமது சிறுபான்மை சமூகத்தின் இளைஞர்கள், பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

இனவாதத்துக்குத் துணைப்போகும் அனைவருக்கும் எமது எச்சரிக்கை என்றும் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது; ஆனால் வெற்றியின் போதையில் அவர்களின் எல்லையைக் கடந்து செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக, கோட்டபாய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்படும் வெற்றிக்கொண்டாட்டங்களில், சிறுபான்மை மக்கள் வதைக்கப்படுவதாகவும் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு, பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்த அவர், தங்களது பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்றும், தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவது உரிமையாக இருந்தாலும், அதில் மற்ற இனத்தைப் பழிவாங்குவது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகும் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு, தனது சமூகத்துக்குத் தேவையற்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற இனவாதத் தாக்குதல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் இனவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற பிரதேச பொலிஸ் நிலைய உயர்அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ச்சியாக இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால், 077-4004994 எனும் தன்னுடைய அலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துத் தெரியப்படுத்துமாறும் தன்னுடைய தொப்புள்கொடி உறவுகளுக்கு அமைச்சராகவோ தலைவனாகவோ அன்றி, காவல்காரனாக நிற்பது, தன்னுடை கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/மலையகம்/கவலகரனக-மணடம-எசசரககறன/76-241225

 

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிவரை அமைச்சர் பெயரை சொல்லலையே?!

  • கருத்துக்கள உறவுகள்

077-4004994  இதற்கு அழைத்து பாருங்கள் ???😀

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி அடைந்த கட்ச்சியை சேர்ந்த குழுவினரால் தாக்குதல் நடத்தப் பட்டதால் அந்த வெற்றி கேள்விக்கும், சந்தேகத்துக்கும் உரியது. அதனாலே மது போதையில் ஏற்பட்ட குழு மோதல் என கதையை மாற்றி விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

077-4004994  இதற்கு அழைத்து பாருங்கள் ???😀

வில்லங்கத்தை விலைக்கு வாங்கவா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

கடைசிவரை அமைச்சர் பெயரை சொல்லலையே?!

நானும் முழுக்க தேடிப்  பார்த்தேன், சொன்ன அமைச்சரின் பெயரை காணவில்லை.
ஆறுமுகம் தொண்டமானாக.. இருக்குமோ  என்று நினைத்தாலும், 
அவருக்கு இவ்வளவு  துணிவு... துப்பரவாக இல்லை.

 

16 hours ago, ஏராளன் said:

கடைசிவரை அமைச்சர் பெயரை சொல்லலையே?!

 

4 hours ago, தமிழ் சிறி said:

நானும் முழுக்க தேடிப்  பார்த்தேன், சொன்ன அமைச்சரின் பெயரை காணவில்லை.
ஆறுமுகம் தொண்டமானாக.. இருக்குமோ  என்று நினைத்தாலும், 
அவருக்கு இவ்வளவு  துணிவு... துப்பரவாக இல்லை.

“பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்” என்றுள்ளது. எனவே வடிவேல் சுரேஷ்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

கடைசிவரை அமைச்சர் பெயரை சொல்லலையே?!

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களுக்கு வர்த்தமானி மூலம் அமைச்சரவை அந்தஸ்த்து உள்ள அமைச்சருக்கு நிகரான அதிகாரங்கள் வர்த்தமானி மூலம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 15.03.2019 அன்று வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் எல்கடுவ பெருந்தோட்ட கம்பளி¸ சிலாபம் பெருந்தோட்ட கம்பனி¸ கல்ஓயா சீனி தொழிற்சாலை¸ பெருந்தோட்ட முகாமைத்தவ கண்கானிப்பு பிரிவு¸ பெருந்தோட்ட உட்கட்மைப்புகளை உள்ளடக்கிய கண்கானிப்பு பிரிவின் “ளுவுயுசு Pசுழுதுநுஊவு” ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்களின் நேரடி சிபார்க்கும் மேற்பார்வைக்கும் கீழ் இந்த வர்த்தமாணி வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக மலையத்ததை பிரதிநிதித்தவப்படுத்தும் ஒருவருக்கு பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டு இவ்வாறு வர்த்தமானி மூலம் வழங்கப்பட்டமை இதுவே முதற் தடவையகும்.

மேற்படி இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களினதும் நிறைவேற்று அதிகாரிகளினதும் உடனான சந்திப்பு ஒன்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.

இச் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் இராஜாங்க அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதன் போது எதிர்காலத்தில் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துறையாடப்பட்டன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.