Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி கூட்டாக தேர்தலை சந்திக்க முயற்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் கூட்டாக களமிறங்க பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முன் முயற்சியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசே மேற்கொண்டுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய, சிறுபான்மையினங்களின் முக்கிய கட்சிகள் கூட்டணியாக செயற்பட கலந்துரையாடல்கள் நடந்து வருகிறது.

தற்போதைய நிலையில், முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன இது குறித்து பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வீட்டு சின்னத்திலும், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் மரச்சின்னத்திலும் போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கு கிழக்கிற்கு வெளில்- குறிப்பாக கொழும்பில்- கூட்டாக களமிங்குவது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன் பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆர்வம் காட்டி வருகிறது.

கடந்த 19ம் திகதி நடந்த முஸ்லிம் காங்கிரசின் அரசியல் உயிர்பீட கூட்டம் நடந்தபோது, சிறுபான்மை கட்சிகளின் கூட்டமைப்பு குறித்து கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் இந்த கூட்டணி யோசனையை முன்வைத்துள்ளார். இதற்கு, ரவூப் ஹக்கீம் சாதகமாக பதிலளித்துடன், பேச்சு முயற்சிகளை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.pagetamil.com/91836/

அப்போ ரிசார்ட் பதீயுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாருடன் கூட்டு  சேரும்? எல்லாருமே அவரை கை விட்டிடீர்களா? இருந்தாலும் இந்த கூட்டு இலகுவாக இருக்காது.  அமைப்பாறையில் ஹாரிஸ் உடன் சிக்கல் உருவாகும்.  இருந்தாலும் சிங்கள அரசை கட்டுக்குள் கொண்டுவர இப்படியான ஒன்று கடடயம் தேவைப்படும். ஒரு சந்தேகம், சோனிகள் தொப்பி பிரட்டி விடடால்? 

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற முயற்சி ஒன்றும் இலங்கை அரசியலில் புதிதல்ல. முன்பும்  பலமுறை தமிழ் தரப்பிலிருந்து கூட்டு  அரசியலுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் காலங்காலமாக சிங்கள அரசுகளின் தொடர் அரவணைப்பில் குதூகலித்திருந்த முஸ்லிம்கள் எமது வேண்டுகோள் எதையும் காதில் போட்டுக்கொண்டதாக சரித்திரம் இல்லை. இன்று நிலைமை வேறு. தமது இருப்பையும் அரசியல் பலத்தையும் தக்கவைக்கும் ஒரு மூலோபாயம் அத்தியாவசியம் என்று ஆனபோது முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களுடன் கூட்டு சேர முன்வருவது தமிழர்களுக்கு எந்தளவு சாதகமானது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சிறுபான்மை மக்கள் ஒன்று சேர்ந்து அரசியல் செய்யும் பட்சத்தில் பெரும்பான்மை இன மக்கள் இன்னும் அதிகமாகவே ஒன்றிணைந்து தமது அரசியல் பலத்தையும், இனவாதத்தையும் நிலைநிறுத்தவே முயற்சிப்பார்கள். அதுபோக சிறுபான்மை மக்களின் அரசியல்  கூட்டுறவில் சரியான வழிநடத்தல், புரிந்துணர்வு, அரசியல் திட்டம் என்பவற்றுடன் இஷ்திரமான  அரசியல் ஒப்பந்தம் ஒன்றும் பங்காளிகளுக்கிடையே இல்லாதுபோனால் கூட்டுறவுக்கு பதிலாக இனங்களுக்கிடையே மேலும் விரிசல் வருவதும் சாத்தியம்.

தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள்ளாகவே கூட்டு அரசியல் செய்ய விருப்பம் கொண்டவை  அல்ல. கட்சியின் அங்கத்தவர்கள் தமது கருத்து பேதங்களை பேசி தீர்ப்பதற்கு பதிலாக தமக்கென சொந்தமாக புதிய கட்சிகளை உருவாக்கி கொண்டதையும் இங்கே குறிப்பிடவேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்ற முட்டாள் தனமான செயற்பாடு தமிழ் தலைவர்களிடையே  பாரிய அரசியல் ரீதியான பிரிவினைகளையும் போட்டியையும் நானா நீயா என்ற இழுபறியான நிலையையும் தோற்றுவித்தது.

 

Edited by vanangaamudi

18 hours ago, vanangaamudi said:

காலங்காலமாக சிங்கள அரசுகளின் தொடர் அரவணைப்பில் குதூகலித்திருந்த முஸ்லிம்கள் எமது வேண்டுகோள் எதையும் காதில் போட்டுக்கொண்டதாக சரித்திரம் இல்லை. இன்று நிலைமை வேறு. தமது இருப்பையும் அரசியல் பலத்தையும் தக்கவைக்கும் ஒரு மூலோபாயம் அத்தியாவசியம் என்று ஆனபோது முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களுடன் கூட்டு சேர முன்வருவது

இது போன்ற ஆபத்தான வேலைகளை மட்டுமே தமிழரசுக் கட்சி செய்து வருகிறது.

சிங்கள பேரினவாதிகளுடன் கூட்டுவைச்சு தமிழின அழிப்பு தொடர்வதை உறுதி செய்த தமிழரசுக் கட்சி இப்ப முஸ்லீம் மதவெறியர்களுடன் சேர்ந்து தமிழின அழிப்பு தொடர்வதை உறுதி செய்ய முயல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த செருப்படி வாங்கப்போகுது கூட்டமைப்பு 

  • கருத்துக்கள உறவுகள்

ஆர், 

இவன்களோடயே, 

கூட்டணியே, 

ஐயே.......

வேண்டாமே.!!!!!!!!!!!!!.

 

Edited by Maharajah
மேலதிக இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  முயற்சி

தொப்பி  மட்டும்  கவனம்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.