Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது’

image_9a540752dd.jpg“இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது. அவர்கள் இலங்கைக்கு திரும்பி தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்” என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் அவர் இன்று (24) செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

“நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக வெற்றிப்பெற்றால் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தோம். 
ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி காலத்தில் யாருக்கும் தெரிவிக்காமல் நள்ளிரவில் அவசர சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அது தான் ஜனநாயகப் படுகொலை.

 அதை செய்யாமல் வெளிப்படையாக தெரிவித்து நாடாளுமன்றத்தில் விவாதம் செய்து அந்த விவாதத்தில் அனைத்துக்கட்சிகளை பேச அனுமதித்து சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இப்போது குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது சரியல்ல. 

குடியுரிமை சட்டம் குறித்து பொய்யான தகவல்களை தெரிவித்து மக்களை போராட்டத்துக்கு எதிர்கட்சிகள் தூண்டுகின்றன.

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக சட்டத்தில் எதும் சொல்லப்படவில்லை என்கின்றனர். 

இலங்கை தமிழர்களை பொருத்தவரை குடியுரிமை கேட்டால் வழங்கலாம். ஆனால் அவர்கள் குடியுரிமை கேட்கக்கூடாது. இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு திரும்பி தங்கள் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.

இலங்கை தமிழர்கள் தலைவர்கள் பலர் என்னை சந்தித்துள்ளனர். அவர்கள் யாரும் தங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்கவில்லை. 

இலங்கைக்கு திரும்பி செல்ல தயாராக உள்ளோம். இலங்கை செல்வதற்கு விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தால் போதும் என்றே அவர்கள் கேட்கின்றனர். இது தொடர்பாக பிரதமரிடம் பேசியுள்ளேன்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் பேரணி நடத்தியுள்ளது. இதனால் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்காளத்துக்கு மம்தா அழைத்துள்ளார். இந்த அளவுக்கு தான் மு.க.ஸ்டாலின் புகழ் பெற முடியும்.

அடுத்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி வைதிருப்பதால் இப்போது இருக்கும் எம்எல்ஏக்களை விட குறைந்த எம்எல்ஏக்களேயே திமுக பெறும்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை கட்சியினர் ஆதரிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்காக உண்மையில் பாடுபடுவோரை தேர்வு செய்ய வேண்டும்.

ஜார்கண்ட் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறவில்லை. இருப்பினும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜகவின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது” என்றார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙக-தமழரகள-இநதய-கடயரம-கடகககடத/175-242915

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலுள்ள மலையகத்தமிழர் இலங்கைக் குடியுரிமை கேட்கக் கூலாது . அவர்கள் தமிழகம் திரும்ப வேண்டும்.

"இலங்கை தமிழர்கள் தலைவர்கள் பலர் என்னை சந்தித்துள்ளனர். அவர்கள் யாரும் தங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்கவில்லை. "

இந்த இல கணேசன் காது வைத்தியரை முதலில் காணவேண்டும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இலங்கையிலுள்ள மலையகத்தமிழர் இலங்கைக் குடியுரிமை கேட்கக் கூலாது . அவர்கள் தமிழகம் திரும்ப வேண்டும்.

அந்த பிஜேபி  படிப்பறிவில்லா கூட்டம் தான் அப்படி சொல்லுது எண்டால் நாங்களும் அவர்களை போல் கூவனுமாய்யா ?

முதலில் மலையகத்தமிழர் என்ற பதமே ஒழிக்கப்படணும்  அவர்களும் தமிழர்களே புலம்பெயர்தலில் இங்கு வந்து இருபது  வருடம் இருந்தவர்களே திரும்பி ஊர் போய்  வாழமுடியாது என்று ஒப்பாரி வைக்கையில் அவர்களை இப்படி நோகடிப்பது  எந்த வகையிலும் நியாயமில்லை.சொந்த மொழியில் இலங்கை தேசிய கீதம் கூட பாடமுடியாத கூட்டம் ஆகி போனதன்  காரணம் ஒவ்வொரு பிரதேச மைய  வாதங்களினால் என்பதை நேரே கண்டு அனுபவித்தும் திருந்த  முடியா உலகில் இருக்கிறம் .  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

இலங்கையிலுள்ள மலையகத்தமிழர் இலங்கைக் குடியுரிமை கேட்கக் கூலாது . அவர்கள் தமிழகம் திரும்ப வேண்டும்.

அப்படிப்போடுங்க அரிவாளை கப்பித்தான்!

முதலில் நாயக்கர், முதலியார், கோனார் இத்யாதி சாதிகள் தமிழர் இல்லை, அவர்கள் தமிழ்நாட்டை ஆள முடியாது.

பிறகு, மட்டக்களப்பு தமிழர்கள் தமெக்கென ஒரு தலைமைமையை தேடினால் அது பிரதேசவாதம், ஆனால் யாழ் தலைமகள் மட்டகளப்பு தலைவர்களுக்கு செய்ததை சொன்னால் - அது எல்லாவற்றையும் யாழ்மைவாதம் எனும் பொதுமைப்படுத்தல்.

இப்போ, மலையக தமிழர் எல்லாம் இலங்கையில் இருந்து அகன்று இந்தியாவில் குடியுரிமை கோர வேண்டும்.

நாளைக்கு - தீவுபகுதி மக்கள் எல்லாம், யாழ் நகரில் குடியேறி ஒரே ஆட்சி அதிகாரம் பண்ணுகினம். அவர்களை தீவகத்துக்கு அனுப்ப வேண்டும் 😂.

நாளை மறுநாள் - டெம்பில் ரோட்டில் இருப்பவர்கள், பிரவுண் ரோட்டில் இருப்பவர்களை அடக்கி ஆளுகிறார்கள்😂😂😂.

நீங்கள் இந்த வழியால்தான் போகிறீர்கள் என இரெண்டு நாட்களுக்கு முன்பே அனுமானித்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் இதை நிறுவுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை.

பிகு: நல்லவேளையாக, ரணசிங்க பிரேமதாச என்ற ஒரு சிங்களவன் 1988 இல் இலங்கையில் வாழ்ந்த எல்லா மலையக தமிழருக்கும் இலங்கை பிரஜா உரிமையை வழங்கி விட்டதால், வெளிநாட்டில் வந்து அந்த நாட்டு பிரஜா உரிமையை யாசித்து பெற்ற எந்த யாழ்பாணத் தமிழனிடமும், தமது பிரஜா உரிமையை யாசிக்கும் நிலையில் இப்போ மலையக மக்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பட்டும்  இன்னும் இப்படியான கருத்துக்களை காவிக்கொண்டு திரிகிற கூட்டம் இருக்கிறதை பார்க்கும்போது எமக்கு எதிரி வெளியில் இல்லை உள்ளுக்குள்தான் என்பது நிரூபணமாகின்றது .

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அந்த பிஜேபி  படிப்பறிவில்லா கூட்டம் தான் அப்படி சொல்லுது எண்டால் நாங்களும் அவர்களை போல் கூவனுமாய்யா ?

முதலில் மலையகத்தமிழர் என்ற பதமே ஒழிக்கப்படணும்  அவர்களும் தமிழர்களே புலம்பெயர்தலில் இங்கு வந்து இருபது  வருடம் இருந்தவர்களே திரும்பி ஊர் போய்  வாழமுடியாது என்று ஒப்பாரி வைக்கையில் அவர்களை இப்படி நோகடிப்பது  எந்த வகையிலும் நியாயமில்லை.சொந்த மொழியில் இலங்கை தேசிய கீதம் கூட பாடமுடியாத கூட்டம் ஆகி போனதன்  காரணம் ஒவ்வொரு பிரதேச மைய  வாதங்களினால் என்பதை நேரே கண்டு அனுபவித்தும் திருந்த  முடியா உலகில் இருக்கிறம் .  

எங்கேயையா இருந்து கிளம்பி வாறீங்க இவ்வளவு வேகமா.

நானும் ஏதோ தாளத்திற்கு வசதியா இருக்குமேயென்று ஒரு புளோவில போட்டதற்கு இந்தக் குத்தா ?

சத்தியமா தாங்கேலாது அழுதுதுடுவேன்.

30 minutes ago, goshan_che said:

அப்படிப்போடுங்க அரிவாளை கப்பித்தான்!

முதலில் நாயக்கர், முதலியார், கோனார் இத்யாதி சாதிகள் தமிழர் இல்லை, அவர்கள் தமிழ்நாட்டை ஆள முடியாது.

பிறகு, மட்டக்களப்பு தமிழர்கள் தமெக்கென ஒரு தலைமைமையை தேடினால் அது பிரதேசவாதம், ஆனால் யாழ் தலைமகள் மட்டகளப்பு தலைவர்களுக்கு செய்ததை சொன்னால் - அது எல்லாவற்றையும் யாழ்மைவாதம் எனும் பொதுமைப்படுத்தல்.

இப்போ, மலையக தமிழர் எல்லாம் இலங்கையில் இருந்து அகன்று இந்தியாவில் குடியுரிமை கோர வேண்டும்.

நாளைக்கு - தீவுபகுதி மக்கள் எல்லாம், யாழ் நகரில் குடியேறி ஒரே ஆட்சி அதிகாரம் பண்ணுகினம். அவர்களை தீவகத்துக்கு அனுப்ப வேண்டும் 😂.

நாளை மறுநாள் - டெம்பில் ரோட்டில் இருப்பவர்கள், பிரவுண் ரோட்டில் இருப்பவர்களை அடக்கி ஆளுகிறார்கள்😂😂😂.

நீங்கள் இந்த வழியால்தான் போகிறீர்கள் என இரெண்டு நாட்களுக்கு முன்பே அனுமானித்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் இதை நிறுவுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை.

பிகு: நல்லவேளையாக, ரணசிங்க பிரேமதாச என்ற ஒரு சிங்களவன் 1988 இல் இலங்கையில் வாழ்ந்த எல்லா மலையக தமிழருக்கும் இலங்கை பிரஜா உரிமையை வழங்கி விட்டதால், வெளிநாட்டில் வந்து அந்த நாட்டு பிரஜா உரிமையை யாசித்து பெற்ற எந்த யாழ்பாணத் தமிழனிடமும், தமது பிரஜா உரிமையை யாசிக்கும் நிலையில் இப்போ மலையக மக்கள் இல்லை.

ஐயா உங்களுக்கும் சேர்த்துதான் கீழே எழுதியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எங்கேயையா இருந்து கிளம்பி வாறீங்க இவ்வளவு வேகமா.

நானும் ஏதோ தாளத்திற்கு வசதியா இருக்குமேயென்று ஒரு புளோவில போட்டதற்கு இந்தக் குத்தா ?

சத்தியமா தாங்கேலாது அழுதுதுடுவேன்.

ஐயா உங்களுக்கும் சேர்த்துதான் கீழே எழுதியுள்ளேன்.

சரி விடுங்கோ.

இது யாழ்களம் - புளோவில சொன்னாலும் பிழையா சொல்லப்படாது 😂

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

சரி விடுங்கோ.

இது யாழ்களம் - புளோவில சொன்னாலும் பிழையா சொல்லப்படாது 😂

உண்மைதான் சே,

கொஞ்சமேனும் முன் யோசனையோ பொறுப்போ இல்லாமல் எழுதிவிட்டேன்.

தவறு என்னுடையது. வருந்துகிறேன்.

நிற்க.

தமிழகத்திலுள்ள அகதிகளின் எதிர்காலம் நிச்சயம் அற்ற நிலையில் அவ்ர்கள் தாயகம் திரும்புவதுதான் சாலச்சிறந்ததாக நான் எண்ணுகிறேன்.  அவர்களை ஏற்க இலங்கை விரும்பாது என்பதுடண் இந்திய அரசும் அவர்களை ஒரு துருப்புச்சீட்டாக பாவிக்க விரும்பும்.

மலையகத் தமிழரை வடக்கு கிழக்கில் குடியேற்றம் செய்தலும் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் முகாமில் வாழும் அல்லது முகாமுக்கு வெளியில் வாழும் ஈழத்தமிழர்கள் நிலை மிக மோசமானது அதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள் அங்கு அவர்களை அழைக்கும் சொல் சிலோன் காரங்கள் கொஞ்சம் கோபமாக அழைத்தால் சிலோன் அகதி, இன்னும் கோபமாக அழைத்தால் எடே சிலோஙாரத் தேவடியாப்பயலே இப்படித்தான் அதைவிட தம்ழ்நாட்டின் காவல்துறையும் கியூபிரிவும் அவர்களை நடத்தும் விதம் அருவருக்கத்தக்கது அதுவும் அவர்கள் வதியும் பகுதியில் முக்கிய அரசியல் தலைவர்கள் வந்தால் ஒரு வாரத்துக்கு நிம்மதியாக வீட்டில் இருக்கமுடியாது எப்போது காவல்துறையின் வரத்து இருந்துகொண்டே இருக்கும்பதிவேடுகள் எல்லாம் பலதடவை சரிபார்க்கப்படும் அப்பிரதேசத்தில் ஏதவ்வது குற்றச்செயல்கள் நடந்தால் முதலில் சந்தேகப்படுவது எம்மில்தான் அதுவும் போலீஸ் ஸ்டேசன் வா என்பார்கள் ஏன் எதுக்கு எங்கூடக் கூறமாட்டார்கள்.

அகதிமுகாமில் சரியான கழிவறை வசதி இருக்காது அதிகாலையில் பெண்பிள்ளைகள் வெளியிடங்களில் பற்றைக்காடுகளையோ திறந்தவெளிமைதானங்களையோ அதற்காகப் பயன்படுத்த வேண்டும்  இரண்டுவருடத்துக்கு முன்பு அப்படி அதிகாலையில் வெளியில் சென்ற ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குப் பின் கொலைசெய்த சம்பவமும் நடந்தது. அது ஒரு உள்ளுர் ரவுடியால் செய்யாப்பட்டது.

எங்கு போனாலும் அவர்களைச் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது அதிகாரம் மட்டுமல்ல அனைவருமே. சிறீமா சாஸ்திரி உடன்படிக்கையில் மலையகப்பகுதியிலிருந்து இந்தியாவுக்கு உள்வாங்கப்பட்டவர்களை குடியேற்றிய பகுதி கலட்டித்தறைகள் அப்பகுதியில் அவ்வேளையில் எதுவித பயிர்ச்செய்கையும் செய்ய முடியாத மண்ணாக இருந்த பகுதி அவர்களது குடியேற்றத்துக்குப் பின் அவ்விடம் பொதுவாக சிலோன் குடியிருப்பு எனத்தான் அழக்கப்படுகிறது காலப்போக்கில் அவ்விடங்களை அவர்கள் தமது முயற்சியால் விளைநிலங்களாகவும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படும் நிலங்களாகவும் மாற்றிய பின்பு அவ்விடத்தின் உள்ளூர் அரசியவாதிகளால் அச்சுறுத்தப்பட்டு பிடுங்கப்பட்டது பல குடிமனைகள்.

நாம் ஐரோப்பிய நாடுகளில் எப்படி இரண்டாந்தரப்பிரசைகளாக நிறத்திலும் வேறுபாடுகளை உடையவர்களாக வெள்ளையினத்தவர் எம்மை வரா விருந்தாளிகளாகப் பார்த்தாலும் சரி இருந்துவிட்டுப்போகட்டும் இவர்களும் இல்லாதுவிட்டால் அடிமட்ட வேலைகளை யார் கவனிப்பது என்பதற்காக எம்மைச் சகித்துக்கொண்டு போகின்றமையால் நாம் இங்கு கெளரவமான பிரசைகளாகவும் யோக்கியவாஙளாகவும் இனம்காட்டிக்கொண்டு வாழ்வதால் இவ்வாழ்வு இங்கு எமக்குச் சிறப்பானது என எண்ணுவதுபோன்ற ஒரு மாயையத்தானும் அவர்கள் உணரமுடியாது 

படிக்கலாம் படித்தாலும் படித்தபடிப்புக்கு வேலை கிடைக்காது. அங்கு படித்தவர்கள் இலங்கைக்குப்போய் வேலைவாய்ப்பைப் பெறலாம் காரணம் ஒப்பீட்டளவில் இந்தியாவில் படித்த எம்மவர்கள் மொழிப்புலமையிலும் கல்வித்தகுதியிலும் ஓரளவுக்கேனும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் இதேபோல் சென்னையில் படித்த எனது தூரத்து உறவுமுறயான இருபெண்கள் மாத ஒரு இலடத்தை அண்மித்ததான சம்பளத்தில் வேலைசெய்கிறார்கள் அதுவும் கிட்டடியில்தான் நாடு திரும்பியிருந்தார்கள். ஆனால் அகதிமுகாமில் வசிக்கும் எம்மவர்களுக்கு மேற்கூறியவர்கள் பெற்ற கல்விக்கிணையான கல்வியைப் பெற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம் இல்லை இருந்தாலும் அவர்களுக்கான கல்வி அறிவுக்கு எமது தமிழ் அரசியல்வாதிகள் முயற்சித்தால் வேலைபெற்றுத்தராலாம்.

மேலைத்தேச நாடுகளது சொகுசு வாழ்க்கையை நாம் அனுபவித்துக்கொண்டு அவர்களுக்குக் குடியுரிமை கொடு கொடுக்காதே அல்லது கொடுக்கக்கூடாது என வாதாட நான் வரவில்லை ஆனால் உண்மையான அகதிக்கான முகத்துடன் அவலவாழ்வு வாழும் அம்மக்கலுக்கான ஏதேனும் ஒரு நல்லது நடந்தாலும் அது எனக்கு மகிழ்சியே.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

உண்மைதான் சே,

கொஞ்சமேனும் முன் யோசனையோ பொறுப்போ இல்லாமல் எழுதிவிட்டேன்.

தவறு என்னுடையது. வருந்துகிறேன்.

நிற்க.

தமிழகத்திலுள்ள அகதிகளின் எதிர்காலம் நிச்சயம் அற்ற நிலையில் அவ்ர்கள் தாயகம் திரும்புவதுதான் சாலச்சிறந்ததாக நான் எண்ணுகிறேன்.  அவர்களை ஏற்க இலங்கை விரும்பாது என்பதுடண் இந்திய அரசும் அவர்களை ஒரு துருப்புச்சீட்டாக பாவிக்க விரும்பும்.

மலையகத் தமிழரை வடக்கு கிழக்கில் குடியேற்றம் செய்தலும் நன்று.

கப்பிதன்... உங்கள் மேலுள்ள மதிப்பு, அதிகரித்துள்ளது.  :)

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

உண்மைதான் சே,

கொஞ்சமேனும் முன் யோசனையோ பொறுப்போ இல்லாமல் எழுதிவிட்டேன்.

தவறு என்னுடையது. வருந்துகிறேன்.

நிற்க.

தமிழகத்திலுள்ள அகதிகளின் எதிர்காலம் நிச்சயம் அற்ற நிலையில் அவ்ர்கள் தாயகம் திரும்புவதுதான் சாலச்சிறந்ததாக நான் எண்ணுகிறேன்.  அவர்களை ஏற்க இலங்கை விரும்பாது என்பதுடண் இந்திய அரசும் அவர்களை ஒரு துருப்புச்சீட்டாக பாவிக்க விரும்பும்.

மலையகத் தமிழரை வடக்கு கிழக்கில் குடியேற்றம் செய்தலும் நன்று.

என்னைக்கேட்டால் இலங்கையில் இருந்த அடிதட்ட மக்களே, உயிர் ஒன்று மட்டுமே அவர்களிடம் இருந்த பெறுமதியான பொருள், இந்தியாவுக்கு படகு மூலம் சென்று, தொடர்ந்தும் அங்கே அகதி முகாமில் தங்கியவர்கள்.

கொஞ்சம் வசதியானவர்கள் விமானம் மூலம் வேறு நாடுகளுக்கு போனார்கள், இந்தியா போனவர்களும், அங்கே தங்கவில்லை. குறிப்பாக அகதிகள் முகாமில்.

இந்த மக்கள் இலங்கை திரும்ப தயங்குவது நியாயமானதே. ஏனென்றால் 30-20 வருடமாக இந்தியாவில் அரைக்கஞ்சிக்காவது உத்தரவாதம் இருக்கும் ஒரு வாழ்கையை கட்டி எழுப்பி விட்டார்கள். பிள்ளைகள் பலதும் பிறந்ததே அங்கேதான் - அதை அப்படியே போட்டுவிட்டு இலங்கை திரும்பினால் பிச்சைதான் எடுக்க வேண்டும்.

வெளிநாடுகளில் 20 வருடங்கள் சட்டபூர்வமற்று வாழ்பவருக்கு கூட, 20 வருடத்தின் பின் நிரந்தர வாழிட உரிமை தருவார்கள். காரணம் 20 வருடங்கள் ஒரு நாட்டில் வாழ்ந்தால் - பின்னர் இடம் மாறுவது கடினம். குறிப்பாக குடும்பஸ்தர்களுக்கு.

மேற்குலகுக்கு புலம்பெயர்ந்து - அந்தத் நாட்டு குடிகளாயும் ஆகிவிட்ட பலர் - இந்தியாவில் வாழும் இலங்கை தமிழரை திருப்பி அனுப்பியே தீர வேண்டும் என்று எந்த மனநிலையில் எழுதுகிறார்கள் என்பதே விளங்கவில்லை.

அதாவது, இவர்களோ பிள்ளைகளோ நாடு திரும்ப மாட்டார்கள், ஆனால் தமிழகம் போனவர்கள் நாடு திரும்பி இலங்கையில் தமிழர் எண்ணிகையை உயர்த்த வேண்டுமாம்.

தமது பிள்ளைகளை வெளிநாட்டில் யூனிக்கு அனுப்பி விட்டு, ஊரான் பிள்ளைகளை போர்முனைக்கு அனுப்பிய அதே சுயநலத்தின் இன்னொரு வடிவமே இதுவும்.

 

58 minutes ago, Elugnajiru said:

தமிழகத்தில் முகாமில் வாழும் அல்லது முகாமுக்கு வெளியில் வாழும் ஈழத்தமிழர்கள் நிலை மிக மோசமானது அதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள் அங்கு அவர்களை அழைக்கும் சொல் சிலோன் காரங்கள் கொஞ்சம் கோபமாக அழைத்தால் சிலோன் அகதி, இன்னும் கோபமாக அழைத்தால் எடே சிலோஙாரத் தேவடியாப்பயலே இப்படித்தான் அதைவிட தம்ழ்நாட்டின் காவல்துறையும் கியூபிரிவும் அவர்களை நடத்தும் விதம் அருவருக்கத்தக்கது அதுவும் அவர்கள் வதியும் பகுதியில் முக்கிய அரசியல் தலைவர்கள் வந்தால் ஒரு வாரத்துக்கு நிம்மதியாக வீட்டில் இருக்கமுடியாது எப்போது காவல்துறையின் வரத்து இருந்துகொண்டே இருக்கும்பதிவேடுகள் எல்லாம் பலதடவை சரிபார்க்கப்படும் அப்பிரதேசத்தில் ஏதவ்வது குற்றச்செயல்கள் நடந்தால் முதலில் சந்தேகப்படுவது எம்மில்தான் அதுவும் போலீஸ் ஸ்டேசன் வா என்பார்கள் ஏன் எதுக்கு எங்கூடக் கூறமாட்டார்கள்.

அகதிமுகாமில் சரியான கழிவறை வசதி இருக்காது அதிகாலையில் பெண்பிள்ளைகள் வெளியிடங்களில் பற்றைக்காடுகளையோ திறந்தவெளிமைதானங்களையோ அதற்காகப் பயன்படுத்த வேண்டும்  இரண்டுவருடத்துக்கு முன்பு அப்படி அதிகாலையில் வெளியில் சென்ற ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குப் பின் கொலைசெய்த சம்பவமும் நடந்தது. அது ஒரு உள்ளுர் ரவுடியால் செய்யாப்பட்டது.

எங்கு போனாலும் அவர்களைச் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது அதிகாரம் மட்டுமல்ல அனைவருமே. சிறீமா சாஸ்திரி உடன்படிக்கையில் மலையகப்பகுதியிலிருந்து இந்தியாவுக்கு உள்வாங்கப்பட்டவர்களை குடியேற்றிய பகுதி கலட்டித்தறைகள் அப்பகுதியில் அவ்வேளையில் எதுவித பயிர்ச்செய்கையும் செய்ய முடியாத மண்ணாக இருந்த பகுதி அவர்களது குடியேற்றத்துக்குப் பின் அவ்விடம் பொதுவாக சிலோன் குடியிருப்பு எனத்தான் அழக்கப்படுகிறது காலப்போக்கில் அவ்விடங்களை அவர்கள் தமது முயற்சியால் விளைநிலங்களாகவும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படும் நிலங்களாகவும் மாற்றிய பின்பு அவ்விடத்தின் உள்ளூர் அரசியவாதிகளால் அச்சுறுத்தப்பட்டு பிடுங்கப்பட்டது பல குடிமனைகள்.

நாம் ஐரோப்பிய நாடுகளில் எப்படி இரண்டாந்தரப்பிரசைகளாக நிறத்திலும் வேறுபாடுகளை உடையவர்களாக வெள்ளையினத்தவர் எம்மை வரா விருந்தாளிகளாகப் பார்த்தாலும் சரி இருந்துவிட்டுப்போகட்டும் இவர்களும் இல்லாதுவிட்டால் அடிமட்ட வேலைகளை யார் கவனிப்பது என்பதற்காக எம்மைச் சகித்துக்கொண்டு போகின்றமையால் நாம் இங்கு கெளரவமான பிரசைகளாகவும் யோக்கியவாஙளாகவும் இனம்காட்டிக்கொண்டு வாழ்வதால் இவ்வாழ்வு இங்கு எமக்குச் சிறப்பானது என எண்ணுவதுபோன்ற ஒரு மாயையத்தானும் அவர்கள் உணரமுடியாது 

படிக்கலாம் படித்தாலும் படித்தபடிப்புக்கு வேலை கிடைக்காது. அங்கு படித்தவர்கள் இலங்கைக்குப்போய் வேலைவாய்ப்பைப் பெறலாம் காரணம் ஒப்பீட்டளவில் இந்தியாவில் படித்த எம்மவர்கள் மொழிப்புலமையிலும் கல்வித்தகுதியிலும் ஓரளவுக்கேனும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் இதேபோல் சென்னையில் படித்த எனது தூரத்து உறவுமுறயான இருபெண்கள் மாத ஒரு இலடத்தை அண்மித்ததான சம்பளத்தில் வேலைசெய்கிறார்கள் அதுவும் கிட்டடியில்தான் நாடு திரும்பியிருந்தார்கள். ஆனால் அகதிமுகாமில் வசிக்கும் எம்மவர்களுக்கு மேற்கூறியவர்கள் பெற்ற கல்விக்கிணையான கல்வியைப் பெற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம் இல்லை இருந்தாலும் அவர்களுக்கான கல்வி அறிவுக்கு எமது தமிழ் அரசியல்வாதிகள் முயற்சித்தால் வேலைபெற்றுத்தராலாம்.

மேலைத்தேச நாடுகளது சொகுசு வாழ்க்கையை நாம் அனுபவித்துக்கொண்டு அவர்களுக்குக் குடியுரிமை கொடு கொடுக்காதே அல்லது கொடுக்கக்கூடாது என வாதாட நான் வரவில்லை ஆனால் உண்மையான அகதிக்கான முகத்துடன் அவலவாழ்வு வாழும் அம்மக்கலுக்கான ஏதேனும் ஒரு நல்லது நடந்தாலும் அது எனக்கு மகிழ்சியே.

இந்திய குடியுரிமை கிடைத்தால் - இந்த அவலங்கள் கொஞ்சம் குறையலாம். மேற்படிப்பு தொடர வசதிகள் கிட்டலாம்.

நாடு திரும்புவதா, இல்லையா என்ற முடிவை அந்த மக்களிடமே விட்டு விடுவதே நல்லது.

தமது தனிபட்ட நலன்களை முன்னிறுத்தி, இலங்கையராக இலங்கை திரும்புவதா அல்லது, இந்தியராகி அங்கேயா தங்குவதா என அவர்கள் ஒவ்வொருவரும் தீர்மானிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கப்பிதன்... உங்கள் மேலுள்ள மதிப்பு, அதிகரித்துள்ளது.  :)

நன்றி சிறியர். எனது இயங்கு தளத்தில் சுட்டிகள் இயங்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, மேற்குநாடுகள் என்று புலம்பெயர்ந்தவர்கள் அந்நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ வசதிகள் செய்யப்படவேண்டும். மீண்டும் தாயகம் திரும்புவது என்பது ஒவ்வொருவரினதும் சுயமான முடிவாக இருக்கவேண்டும்.

தமிழகத்தில் அகதி என்ற பெயருடன் மிகவும் கடினமான வாழ்க்கை நடாத்துபவர்கள் குடியுரிமை பெற்றால் நல்ல நிலைக்கு வரமுடியும். அதனை மோடி அரசு வேண்டுமென்றே தடுத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

நன்றி சிறியர். எனது இயங்கு தளத்தில் சுட்டிகள் இயங்கவில்லை.

கபிதன்...  எனது முதல் பதிவில், உங்கள் பெயரை தவறாக உச் சரித்து விட்டேன், மன்னிக்கவும்.  😮

உங்களது சுட்டிகள்... இயங்கவில்லை என்றால்...
விடுமுறை நாளில்.. மோகன் அண்ணா,  வீட்டில்..  சும்மாதான் இருப்பார். :grin:
அவருக்கு, கீழ் உள்ள இணைப்பில் தெரியப்  படுத்துங்கள்.
அவர், அதனை... உடனே... சரி செய்து விடுவார். :)

டிஸ்கி: சுட்டிகள் இல்லாத பதிவுகள்... வேஸ்ட் ஐயா.... 😊

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

இந்திய குடியுரிமை கிடைத்தால் - இந்த அவலங்கள் கொஞ்சம் குறையலாம். மேற்படிப்பு தொடர வசதிகள் கிட்டலாம்.

நாடு திரும்புவதா, இல்லையா என்ற முடிவை அந்த மக்களிடமே விட்டு விடுவதே நல்லது.

தமது தனிபட்ட நலன்களை முன்னிறுத்தி, இலங்கையராக இலங்கை திரும்புவதா அல்லது, இந்தியராகி அங்கேயா தங்குவதா என அவர்கள் ஒவ்வொருவரும் தீர்மானிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

முகாம்களுக்கு வெளியில் இருந்தவர்கள் 90 வீதத்துக்கு மேல் நாடு திரும்பி விட்டார்கள் முகாம்களில்  வாழும் மக்களின் வாழ்க்கை நாய்படாபாடு உலகத்திலே அகதி  எனும் பெயரில் பெரும் கொடுமையை அனுபவிப்பவர்களாக உள்ளனர் முக்கியமாய் இந்த Q  போலீஸ் படையின் கொடுமை இலங்கை இராணுவம் மேல் என்று சொல்ல தோன்றும் அதனால்த்தான் வெளியில் இருப்பவர்கள் அவர்கள் மீண்டும் இலங்கை செல்வது நல்லது என்று சொல்கிறார்கள் போல் உள்ளது அவர்களின் வாழ்ககையை குறும்படமாக எடுத்தால் கனடா போன்ற நாடுகள் விசா கொடுக்குமளவுக்கு கொடுமைகள் நடக்கின்றன ஒருவாறு அவர்கள் திரும்புவது  முடிவெடித்தாலும் ரெட் சீல்  அது இது என்று பலருக்கும் லஞ்சம் கொடுக்கணும் .

அன்றாடம் கூலி வேலை செய்து காசை கண்ணால் பார்ப்பவர்களிடம் லஞ்சம் கொடுப்பதுக்கு  பணமும் இல்லை திரும்பி தாயகம் வந்தால் எப்படி வாழ்க்கையை மீண்டும் தொடங்குவது போன்ற சந்தேகங்கள் .

மொத்தத்தில் அவர்கள் வாழ்வது அறிவிக்கப்படாத சிறைக்கூடங்களில் .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

முகாம்களுக்கு வெளியில் இருந்தவர்கள் 90 வீதத்துக்கு மேல் நாடு திரும்பி விட்டார்கள் முகாம்களில்  வாழும் மக்களின் வாழ்க்கை நாய்படாபாடு உலகத்திலே அகதி  எனும் பெயரில் பெரும் கொடுமையை அனுபவிப்பவர்களாக உள்ளனர் முக்கியமாய் இந்த Q  போலீஸ் படையின் கொடுமை இலங்கை இராணுவம் மேல் என்று சொல்ல தோன்றும் அதனால்த்தான் வெளியில் இருப்பவர்கள் அவர்கள் மீண்டும் இலங்கை செல்வது நல்லது என்று சொல்கிறார்கள் போல் உள்ளது அவர்களின் வாழ்ககையை குறும்படமாக எடுத்தால் கனடா போன்ற நாடுகள் விசா கொடுக்குமளவுக்கு கொடுமைகள் நடக்கின்றன ஒருவாறு அவர்கள் திரும்புவது  முடிவெடித்தாலும் ரெட் சீல்  அது இது என்று பலருக்கும் லஞ்சம் கொடுக்கணும் .

Q Branch பொலிசார் அகதி முகாம்களை ஒரு திறந்த வெளி விபசார விடுதியாகவே அங்குள்ள சூழலை மாற்றி வைத்துள்ளதாக எனது நண்பர் கூறி கோபப்படுவார்  . அவர் அங்குள்ளோருடன் தொடர்ச்சியான தொடர்பிலுள்ளவர்.

38 minutes ago, கிருபன் said:

இந்தியா, மேற்குநாடுகள் என்று புலம்பெயர்ந்தவர்கள் அந்நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ வசதிகள் செய்யப்படவேண்டும். மீண்டும் தாயகம் திரும்புவது என்பது ஒவ்வொருவரினதும் சுயமான முடிவாக இருக்கவேண்டும்.

தமிழகத்தில் அகதி என்ற பெயருடன் மிகவும் கடினமான வாழ்க்கை நடாத்துபவர்கள் குடியுரிமை பெற்றால் நல்ல நிலைக்கு வரமுடியும். அதனை மோடி அரசு வேண்டுமென்றே தடுத்துள்ளது.

இந்திய அரசின் கொள்கை முடிவு. 

இலங்கைத் தமிழர்களை வட இந்தியர்கள் இராவணனின் வம்சமாகவே பார்க்கப் படுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

Q Branch பொலிசார் அகதி முகாம்களை ஒரு திறந்த வெளி விபசார விடுதியாகவே அங்குள்ள சூழலை மாற்றி வைத்துள்ளதாக எனது நண்பர் கூறி கோபப்படுவார்  . அவர் அங்குள்ளோருடன் தொடர்ச்சியான தொடர்பிலுள்ளவர்.

தெரியும் முழுக்க எழுதினால் இங்கு கொள்ளுபாடு தொடங்கிடும் அங்குள்ள பெரியவர்களுடன் இதைப்பற்றி கதைத்த போது  மேலதிக பணத்துக்கு ஆசைப்பட்டு அவ்வாறு நடப்பதாக கூறப்பட்டுள்ளது .

முக்கியமாய் தமிழ்நாட்டு யாழ் ஊடகங்கள் தான் அவர்களின் கொடுமைகளை வெளிகொண்டுவரனும் தமிழ்நாட்டு ஊடகங்கள் பெரும்பாலானவை வடவர்களின் கைகைகளுக்கு  போய்  நீண்டகாலமாகி விட்டுது அவர்களுக்கு பிக்பொஸ்  போன்ற நிகழ்ச்சிகள்தான் முக்கியம் .

  • கருத்துக்கள உறவுகள்

கப்பித்தான்,

1. நீங்கள், கப்பித்தான்? கற்பித்தான் ? கற்பிதன் - இதில் ஏதையா?😂

2. நீங்களும் பெருமாளும் சொன்ன விடயங்களை நானும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் லண்டனில் கூட தமிழர் சிலர் இப்படி தொழில் முனைவோர் உளர். அதே போல தமிழ்நாட்டு அகதி முகாமிலும் அத்தனை துன்பங்களையும் சகித்து வாழ்வோரும் உளர். ஆனால் இத்தனை துன்பங்களின் பின்னும் பலர் நாடு திரும்ப விரும்பவில்லை என்பதும் உண்மையே. இது எதை காட்டுகிறது?

3. இதற்கான தீர்வு - அகதி முகாம்களை மூடி, இந்தியாவில் தங்க விரும்புவோர்க்கு இந்திய குடியுரிமையும், எனையோர்க்கு இலங்கை திரும்புவதை இலகுவாக்குவதுமேயாகும்.

4. இரண்டையும் பிஜேபி செய்யாது- ஏனென்றால் நாம் தான் இந்து, சைவர், சிவபூமி, திருமூலர், ஆறுமுகநாவலர், மண்ணாங்கட்டி என்று குத்தி முறிவது, வட இந்தியரை பொறுத்தவரை பிராமணன் அல்லாத தமிழன் எல்லாரும் சூத்திரந்தான். உங்களுக்கும் முஸ்லீமுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தெரியும் முழுக்க எழுதினால் இங்கு கொள்ளுபாடு தொடங்கிடும் அங்குள்ள பெரியவர்களுடன் இதைப்பற்றி கதைத்த போது  மேலதிக பணத்துக்கு ஆசைப்பட்டு அவ்வாறு நடப்பதாக கூறப்பட்டுள்ளது .

முக்கியமாய் தமிழ்நாட்டு யாழ் ஊடகங்கள் தான் அவர்களின் கொடுமைகளை வெளிகொண்டுவரனும் தமிழ்நாட்டு ஊடகங்கள் பெரும்பாலானவை வடவர்களின் கைகைகளுக்கு  போய்  நீண்டகாலமாகி விட்டுது அவர்களுக்கு பிக்பொஸ்  போன்ற நிகழ்ச்சிகள்தான் முக்கியம் .

பண ஆசை அல்ல, பணத்தேவை.

தெளிவாகவே திட்டமிட்டு அப்படியொரு சூழலை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

உஒரு  Q Branch அதிகாரியை கொலை செய்யும் அளவிற்கு அகதிகளின் துன்பம் அளவிட முடியாமல் உள்ளது.

உண்மையில்  இவர்களுடன் ஒப்பிடும்போது இலங்கைப் படைகள் ஒன்றுமேயில்லை.

இதன் பின்ணணியில்தான் படகுகளில் சட்ட விரோதமாக இலங்கை திரும்புபவர்களை நோக்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கியூ பிரிவு போலீஸ் என்பது தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் நக்சல்பாரி தீவிரவாதிகளைக் கண்காணிக்க, ஒடுக்க என அமைக்கப்பட்டது, அவர்களுக்கான பயிற்சிகள் துப்பறியும் முறைமைகள் வழக்கத்தைவிட வித்தியாசமானவை நக்சல்களுக்க ஆரம்பிக்கபட்ட துறை இலங்கைத்தமிழர்களுக்ககச் செயற்படுகின்றது என்பதே ஆபத்தான விடையம், 

தவிர
இந்திய விரும்பினால் இலங்கை அகதிகளை ஐ நா சபையின் அகதிகள் பிரச்சனைகளைக் கையாளும் துறையிடம் கையளிக்கமுடியும் இப்படித்தான் தாய்லாந்தில் ஐ நா ஒரு அகதிகள் முகாமைப் பராமரிக்கிறது அதன் செயற்பாடு எதுவெனில் அகதிகளை உள்வாங்க விரும்பும் ஏனைய மேற்குலக நாடுகளிடம் தாங்கள் வைத்துப் பராமரிக்கும் நபர்களது விபரங்களைச் சமர்ப்பிக்கும் அதில் அந்தந்த நாடுகள் யாரை விரும்புகிறார்களோ அவர்களைத் தங்கள் செலவிலேயே தங்கள் நாடுகளுக்குள் உள்வாங்கும், அதன்பின்பு குறிப்பிட்ட காலத்துக்கு அவர்களுக்கான சமூகக்கொடுப்பனவுகளில் சிறப்பு ஆந்தஸ்துக் கொடுக்கப்பட்டு அவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கான கல்வித்தகமைகளை ஏற்படுத்திகொடுத்து சமூகத்துடன் இணைத்துக்கொள்ளும்.

நான் வாழும் பின்லாந்து நாடு வருடம்தோறும் பத்துக்கு மேற்பட்ட தமிழ் உறவுகளை தாய்லாந்திலிருந்து கூட்டிவருகிறார்கள்.

இதேபோல் இந்தியாவும் எம்மால் தனியாக இலங்கைத்தமிழர்களை ஐ நாவிடம் ஒப்படைத்தால் அனேகர் கொஞ்சமாவது கெளரவமாக வாழத்தலைப்படலாம்.

ஆனால் தமிழர் விரோத இந்தியா எம்மை எப்போதுமே அடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது.

இந்தியா இந்த விடையத்தில் மட்டுமல்ல அனைத்து விடையங்களிலும் இதேபோலவே நடந்துகொள்கிறது.

ஆதலால் 

தமிழர் விரோததேசமாம் இந்தியாவை அனைத்து விடையங்களிலிருந்தும் புறந்தள்ளுவோம்

இந்திய அமைதிப்படையை அனுப்பு தமிழர் பிரதேசத்தில் கொலைத்தாண்டவன் நடாத்திய தமிழர் விரோத தேசம் இந்தியா, இப்போது யாழ்குடாநாடை தமது துணைத்தூதரகத்தை நிறுவி இன்னுமொரு ஆக்கிரமிப்பை எதுவித தடமும் இல்லாது செய்துவருகிறது. அதன் ஒரு சின்ன உதாரணமாக இவ்வாரம் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் புத்தாண்டுப் பரிசு வழங்கியது கவனிக்கத்தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Elugnajiru said:

தமிழகத்தில் முகாமில் வாழும் அல்லது முகாமுக்கு வெளியில் வாழும் ஈழத்தமிழர்கள் நிலை மிக மோசமானது அதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள் அங்கு அவர்களை அழைக்கும் சொல் சிலோன் காரங்கள் கொஞ்சம் கோபமாக அழைத்தால் சிலோன் அகதி, இன்னும் கோபமாக அழைத்தால் எடே சிலோஙாரத் தேவடியாப்பயலே இப்படித்தான் அதைவிட தம்ழ்நாட்டின் காவல்துறையும் கியூபிரிவும் அவர்களை நடத்தும் விதம் அருவருக்கத்தக்கது அதுவும் அவர்கள் வதியும் பகுதியில் முக்கிய அரசியல் தலைவர்கள் வந்தால் ஒரு வாரத்துக்கு நிம்மதியாக வீட்டில் இருக்கமுடியாது எப்போது காவல்துறையின் வரத்து இருந்துகொண்டே இருக்கும்பதிவேடுகள் எல்லாம் பலதடவை சரிபார்க்கப்படும் அப்பிரதேசத்தில் ஏதவ்வது குற்றச்செயல்கள் நடந்தால் முதலில் சந்தேகப்படுவது எம்மில்தான் அதுவும் போலீஸ் ஸ்டேசன் வா என்பார்கள் ஏன் எதுக்கு எங்கூடக் கூறமாட்டார்கள்.

அகதிமுகாமில் சரியான கழிவறை வசதி இருக்காது அதிகாலையில் பெண்பிள்ளைகள் வெளியிடங்களில் பற்றைக்காடுகளையோ திறந்தவெளிமைதானங்களையோ அதற்காகப் பயன்படுத்த வேண்டும்  இரண்டுவருடத்துக்கு முன்பு அப்படி அதிகாலையில் வெளியில் சென்ற ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குப் பின் கொலைசெய்த சம்பவமும் நடந்தது. அது ஒரு உள்ளுர் ரவுடியால் செய்யாப்பட்டது.

எங்கு போனாலும் அவர்களைச் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது அதிகாரம் மட்டுமல்ல அனைவருமே. சிறீமா சாஸ்திரி உடன்படிக்கையில் மலையகப்பகுதியிலிருந்து இந்தியாவுக்கு உள்வாங்கப்பட்டவர்களை குடியேற்றிய பகுதி கலட்டித்தறைகள் அப்பகுதியில் அவ்வேளையில் எதுவித பயிர்ச்செய்கையும் செய்ய முடியாத மண்ணாக இருந்த பகுதி அவர்களது குடியேற்றத்துக்குப் பின் அவ்விடம் பொதுவாக சிலோன் குடியிருப்பு எனத்தான் அழக்கப்படுகிறது காலப்போக்கில் அவ்விடங்களை அவர்கள் தமது முயற்சியால் விளைநிலங்களாகவும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படும் நிலங்களாகவும் மாற்றிய பின்பு அவ்விடத்தின் உள்ளூர் அரசியவாதிகளால் அச்சுறுத்தப்பட்டு பிடுங்கப்பட்டது பல குடிமனைகள்.

நாம் ஐரோப்பிய நாடுகளில் எப்படி இரண்டாந்தரப்பிரசைகளாக நிறத்திலும் வேறுபாடுகளை உடையவர்களாக வெள்ளையினத்தவர் எம்மை வரா விருந்தாளிகளாகப் பார்த்தாலும் சரி இருந்துவிட்டுப்போகட்டும் இவர்களும் இல்லாதுவிட்டால் அடிமட்ட வேலைகளை யார் கவனிப்பது என்பதற்காக எம்மைச் சகித்துக்கொண்டு போகின்றமையால் நாம் இங்கு கெளரவமான பிரசைகளாகவும் யோக்கியவாஙளாகவும் இனம்காட்டிக்கொண்டு வாழ்வதால் இவ்வாழ்வு இங்கு எமக்குச் சிறப்பானது என எண்ணுவதுபோன்ற ஒரு மாயையத்தானும் அவர்கள் உணரமுடியாது 

படிக்கலாம் படித்தாலும் படித்தபடிப்புக்கு வேலை கிடைக்காது. அங்கு படித்தவர்கள் இலங்கைக்குப்போய் வேலைவாய்ப்பைப் பெறலாம் காரணம் ஒப்பீட்டளவில் இந்தியாவில் படித்த எம்மவர்கள் மொழிப்புலமையிலும் கல்வித்தகுதியிலும் ஓரளவுக்கேனும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் இதேபோல் சென்னையில் படித்த எனது தூரத்து உறவுமுறயான இருபெண்கள் மாத ஒரு இலடத்தை அண்மித்ததான சம்பளத்தில் வேலைசெய்கிறார்கள் அதுவும் கிட்டடியில்தான் நாடு திரும்பியிருந்தார்கள். ஆனால் அகதிமுகாமில் வசிக்கும் எம்மவர்களுக்கு மேற்கூறியவர்கள் பெற்ற கல்விக்கிணையான கல்வியைப் பெற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம் இல்லை இருந்தாலும் அவர்களுக்கான கல்வி அறிவுக்கு எமது தமிழ் அரசியல்வாதிகள் முயற்சித்தால் வேலைபெற்றுத்தராலாம்.

 

இத்தனை கொடுமைகள் அனுபவித்தபின்பும்,

போர் ஓய்ந்த பின்னும் .........பெரும்பாலான 

ஈழ அகதிகள் இலங்கை திரும்ப விரும்பாதது ஏன் ஐயா?

 

ஒருவேளை ..

சிங்களவன் தமிழன்...

யாழ்ப்பாணத்தான்...மட்டக்கிளப்பான்,,,

தோட்டக்காட்டான்...

 

போன்ற தமிழக கியூ பிரிவு போலீஸ் இலங்கையின் வடகிழக்கிலும் இருப்பதினாலா?

நீங்கள் சொன்னதுபோலவே ஐரோப்பாவில் உள்ளதுபோல் தமிழகத்தில் ஈழ அகதிகளுக்கு வசதிகளும் மனித உரிமைகளும் இல்லை

இத்தனை கொடுமை நடந்த பின்னும் எம் தாயகம் திரும்ப  அவர்கள் வெறுக்கும் காரணம்  அவர்கள் மேலயா ..

அதியுச்ச உரிமைகளை ஏற்கனவே வாழ்ந்து முடித்துவிட்ட எம் நாட்டின் மீதா ஐயா?

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பருத்தித்துறையில் இரண்டு கிராமங்களுக்கு இடையில் சண்டை நடந்தது என அறிந்திருப்பீர்கள். இதவிட மாவிட்டபுரம் தேர் எரிப்பு தென்மராட்சியில் பாடசாலை சென்ற சிறுவர்களது புத்தகங்களைப் பறித்து தெருவில் போட்டு எரித்தது, பாரிய இடமெயர்வின்போது மட்டுவிலில் வயல் காணியில் தண்ணீர் அள்ளியதற்காக அக்கிணற்றுக்குள் பொலிடோல் ஊற்றியது ஆகியவை அனைத்தும் இவை தொடர்புபட்டதே கொழும்பில் அடுக்கு மாடிக்குடியிருப்புகளி தற்போது குடியேறியுள்ள யா குடாநாட்டு மக்கள் போர் முடிந்து  இவ்வளவு காலமும் திரும்பவும் குடாநாடு செல்லாதற்கு அடிப்படைக்கரணமும் ஒன்றுதான். 

காலம் காலமாக நடக்கும் சாதிச்சுரண்டல்கள்தான் அவர்களை இப்போதும் தள்ளி வைத்திருக்கு நூற்றுக்கு நூறு விக்தம் அதி கரணமில்லை என்றாலும் அதுவும்தான். தவிர மேலை நாடுகளில் நாம் விரும்பினாலும் எமது பிள்ளைகளுக்காக நாட்டுக்குத் திரும்பிப்போக முடியாது சிரமப்படுகிறோமே  அதுபோல் அவர்களுக்கும் காரணம் இருக்கும் நாடு திரும்பி புதுவாழ்கைய ஆரம்பீகும்போது ஏற்படும் இன்னல்களைப்பற்றிய பயம் ஒரு காரணம். என்ன்றோ ஒரு நாள் நல்லகாலம் வரும் கடனை பட்டாவது ஒரு பிள்ளையாவது வெளிநாட்டுக்கு அனுப்பிப்போட்டு நாடு திரும்புவம் என இருப்பது காரணம்

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2019 at 5:25 PM, Kapithan said:

இலங்கையிலுள்ள மலையகத்தமிழர் இலங்கைக் குடியுரிமை கேட்கக் கூலாது . அவர்கள் தமிழகம் திரும்ப வேண்டும்.

 

On 12/25/2019 at 12:16 AM, goshan_che said:

அப்படிப்போடுங்க அரிவாளை கப்பித்தான்!

முதலில் நாயக்கர், முதலியார், கோனார் இத்யாதி சாதிகள் தமிழர் இல்லை, அவர்கள் தமிழ்நாட்டை ஆள முடியாது.

பிறகு, மட்டக்களப்பு தமிழர்கள் தமெக்கென ஒரு தலைமைமையை தேடினால் அது பிரதேசவாதம், ஆனால் யாழ் தலைமகள் மட்டகளப்பு தலைவர்களுக்கு செய்ததை சொன்னால் - அது எல்லாவற்றையும் யாழ்மைவாதம் எனும் பொதுமைப்படுத்தல்.

இப்போ, மலையக தமிழர் எல்லாம் இலங்கையில் இருந்து அகன்று இந்தியாவில் குடியுரிமை கோர வேண்டும்.

நாளைக்கு - தீவுபகுதி மக்கள் எல்லாம், யாழ் நகரில் குடியேறி ஒரே ஆட்சி அதிகாரம் பண்ணுகினம். அவர்களை தீவகத்துக்கு அனுப்ப வேண்டும் 😂.

நாளை மறுநாள் - டெம்பில் ரோட்டில் இருப்பவர்கள், பிரவுண் ரோட்டில் இருப்பவர்களை அடக்கி ஆளுகிறார்கள்😂😂😂.

நீங்கள் இந்த வழியால்தான் போகிறீர்கள் என இரெண்டு நாட்களுக்கு முன்பே அனுமானித்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் இதை நிறுவுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை.

பிகு: நல்லவேளையாக, ரணசிங்க பிரேமதாச என்ற ஒரு சிங்களவன் 1988 இல் இலங்கையில் வாழ்ந்த எல்லா மலையக தமிழருக்கும் இலங்கை பிரஜா உரிமையை வழங்கி விட்டதால், வெளிநாட்டில் வந்து அந்த நாட்டு பிரஜா உரிமையை யாசித்து பெற்ற எந்த யாழ்பாணத் தமிழனிடமும், தமது பிரஜா உரிமையை யாசிக்கும் நிலையில் இப்போ மலையக மக்கள் இல்லை.

கபிதன் கூறிய கருத்துக்கு நானே போட்டு குத்துவம் என்று இருந்தன்

நீங்கள்  முந்திட்டீங்க மீண்டும் சிக்கினால் அந்த மூத்திர சந்துக்கு இழுத்து வரவும் 🤣🙂🤣

போர் முடிந்து இத்தனை வருடங்கள் வராமல் இருப்பவர்கள் பிள்ளைகள் அங்குள்ள பாடசாலைகளில் படித்து முடித்தவர்கள் அவர்களின் தகமைக்கு இங்கு வேலையென்பது கிடைப்பது சந்தேகம் கொஞ்ச பேர் வீடுகள் வாங்கியுள்ளார்கள் அதையெல்லம் விட்டு வருவதென்பது சந்தேகம் 

குறிப்பு : அவர்களின் வீடியோ பதிவேற்றங்கள் பஆர்க்கையில் முற்றுமுழுதாக இந்திய தமிழர்களின் பேச்சுகளில் இணைந்து விட்டார்கள் விரும்பினால் வரலாம் இல்லாவிட்டால் அங்கே வாழ்வதே சிறந்தது 

உயிர் போன ,உயிர் போகப்போகிறதே என உணர்ந்த தருணத்தை நினைத்தவர்கள் மீள் திரும்ப வாய்ப்பில்லை 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

கபிதன் கூறிய கருத்துக்கு நானே போட்டு குத்துவம் என்று இருந்தன்

நீங்கள்  முந்திட்டீங்க மீண்டும் சிக்கினால் அந்த மூத்திர சந்துக்கு இழுத்து வரவும் 🤣🙂🤣

போர் முடிந்து இத்தனை வருடங்கள் வராமல் இருப்பவர்கள் பிள்ளைகள் அங்குள்ள பாடசாலைகளில் படித்து முடித்தவர்கள் அவர்களின் தகமைக்கு இங்கு வேலையென்பது கிடைப்பது சந்தேகம் கொஞ்ச பேர் வீடுகள் வாங்கியுள்ளார்கள் அதையெல்லம் விட்டு வருவதென்பது சந்தேகம் 

குறிப்பு : அவர்களின் வீடியோ பதிவேற்றங்கள் பஆர்க்கையில் முற்றுமுழுதாக இந்திய தமிழர்களின் பேச்சுகளில் இணைந்து விட்டார்கள் விரும்பினால் வரலாம் இல்லாவிட்டால் அங்கே வாழ்வதே சிறந்தது 

உயிர் போன ,உயிர் போகப்போகிறதே என உணர்ந்த தருணத்தை நினைத்தவர்கள் மீள் திரும்ப வாய்ப்பில்லை 

 

 

என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள நான்  என்றுமே விரும்பியதில்லை. விரும்பப்போவதுமில்லை.

ஏமாற்றத்திற்கு மன்னிக்கவும்.

வணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.