Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலர்களின் ஓய்வுகூடமாக மாறும் ‘மந்திரிமனை’

Featured Replies

யாழ்ப்பாணம் - சங்கிலியன் மந்திரிமனை எவ்வித பராமரிப்பும் கண்காணிப்புமின்றி, காதலர்களின் ஓய்வுகூடமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

image_c3e71fb21f.jpg 

இரண்டாம் சங்கிலியன், யாழ்ப்பாணத்தின் அடையாளமாக வராலாற்று பதிவுகள் கூறுகின்ற நிலையில், அதற்கான அடையாளச் சின்னங்களாக யாழ்ப்பாணம் - முத்திரைச் சந்தியில் சங்கிலியன் சிலை, அதன் அருகில் யமுனா ஏரி, சங்கிலியன் தோப்பு, மந்திரிமனை என்பன காணப்படுகின்றன. 

இதில், மந்திரிமனை தவிர்த்த ஏனைய சின்னங்கள் தொல்பொருள் திணைக்களத்தாலும் யாழ்ப்பாணம் மாநகர சபையாலும் அடையாளப்படுத்தப்பட்டு, பெயர்ப் பலகை நிறுவப்பட்டுள்ளன. 

இந்நிலையில், மந்திரிமனை எந்தவோர் அடையாளப்படுத்தலும் பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது. 

ஏற்கெனவே, தொல்பொருள் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று நிறுவப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்பெயர்ப் பலகை வர்ணப்பூச்சால் பூசப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. 

தற்போது பராமரிப்பின்றி காணப்படும் மந்திரிமனைக்குள், காதலர்கள் ஒன்று கூடுவதும் தமது பெயர்களைச் சுவர்களில் கிறுக்குவதுமாகக் காணப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/காதலர்களின்-ஓய்வுகூடமாக-மாறும்-மந்திரிமனை/71-243594

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு முக்கியம் அமைச்சரே (தமிழரே)

கண்ணெதிரே நடந்த இன அழிப்பை மறந்தோம். கண்ணெதிரே இறந்த போராளிகளை மறந்தோம். கண்ணெதிரே நிற்கும் வலுவிழந்த போராளிகளை மறந்தோம். முன்னால் நிற்கும் சிதைந்த குடும்பங்களை மறந்தோம். 

சங்கிலியன் மட்டும் நினைவில் நிற்குமா என்ன ?

எமது  சாதியை மறக்கோம். சமயத்தை மறக்கோம். பிரதேசத்தை மறக்கோம். 

ஆனால் நாமெல்லாம் தமிழர். 

ஈழத் தமிழர்.

 

  • தொடங்கியவர்
4 hours ago, ampanai said:

இதில், மந்திரிமனை தவிர்த்த ஏனைய சின்னங்கள் தொல்பொருள் திணைக்களத்தாலும் யாழ்ப்பாணம் மாநகர சபையாலும் அடையாளப்படுத்தப்பட்டு, பெயர்ப் பலகை நிறுவப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் மாநகர சபை இந்த இடங்களை ஏன் ஒரு சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடமாக மாற்றக்கக்கூடாது?

வருமானமும் வரும் இடத்தையும் பாதுகாக்கலாம் ஒரு சிலருக்கு முழு நேர வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ampanai said:

யாழ்ப்பாணம் மாநகர சபை இந்த இடங்களை ஏன் ஒரு சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடமாக மாற்றக்கக்கூடாது?

வருமானமும் வரும் இடத்தையும் பாதுகாக்கலாம் ஒரு சிலருக்கு முழு நேர வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

இம் மந்திரி மனை யாழ் மாநகராட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமா ?

1 hour ago, Kapithan said:

இம் மந்திரி மனை யாழ் மாநகராட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமா ?

ஆம். யாழ்மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசமே. 

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற பொது விடயங்களை அதுபற்றிய முழு விபரம் தெரிந்தவர்கள் வடமாகாணத்தின் புதிய ஆளுநர் திருமதி பிரின்ஸ் சரோஜினி மன்மதராஜா சார்ள்ஸ் அவர்களிடம் விண்ணப்பமாக எழுதி அனுப்பிவிடலாம். அவரின் நேரடி அல்லது அலுவலக தொடர்புகளுக்கு மின்னஞ்சல், தொலைபேசி, தொலைநகல் இலக்கங்கள்  பின்வருமாறு: 

Tel: +94-21-2219375
Fax: +94-21-2219374
Email: hgnp.op@gmail.com

அலுவலகம்:
Postal Address:
Old Park, Kandy Road,Chundukuli, Jaffna.
Telephone:
+94-21-2220660, 
+94-21-2219375
Fax No. :
+94-21-2220661
e-mail:
npcgovernor@gmail.com

  • கருத்துக்கள உறவுகள்

போன தடவை போன போது தொல்பொருள் திணைக்கள போர்ட் இருந்தது. ஆனாலும் தெற்கில் இருந்து வரும் லொறி ரைவர்கள் படுத்துறங்கும் சத்திரம் போல் பாவித்தனர். சுவரெங்கிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெயர் கிறுக்கல்கள்.

 நான் கேட்டபோது  மாநகரசபை, திணைக்கள காணிகளில் தலையிட முடியாது என்றனர்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்

கொழும்பில் ஒரு மாநகர சபை நிர்வாகத்தில் ( காதலர்களுக்கு ) ஒரு பூங்கா உள்ளது (http://www.colombo.mc.gov.lk/parks.php) .  யாழில், ஒரு ( விக்கிரமாதித்தன் ?) பூங்காவை மாநகரசபை அமைத்தால் அவர்களும் அங்கே சென்றுவிடுவார்கள்.   

இல்லை, இங்கே இரகசிய வீடியோ கமரா இருக்கின்றது என நாலு பேருக்கு சொல்லிவிட்டால் ... 

காதலர்கள் ஏன் இந்த பாழடைந்த கடடடத்தினுள் போக வேண்டும். படத்தை பார்க்க பயமாக இருக்குது. 

இது தொல் பொருள் திணைக்களத்துக்கு சொந்தமாக இருந்தால் யாரும் எதுவும் செய்யமுடியாது. இது ஒரு புராதன கட்டிடமாக இருப்பதால் இது தொல் பொருட்கள் திணைக்களத்துக்கு சொந்தமாக இருக்க வேண்டும்.

ஏதும் செய்வதாக இருந்தால் அவர்களின் அனுமதியை பெறவேண்டும். இல்லவிடடால் மண்டாவளை அவர்கள் கை வைத்தவனை தொலைத்துவிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு வளர்ந்த நாடுகள் உட்பட தாஜ்மகால் வரை பார்த்த உண்மையில் சொன்னால்.. காதலர்களுக்கான இடங்கள் மிகவும் சுத்தமானதாக.. ரசிக்கத்தக்கதாக.. சீரமைக்கப்பட்டதாகவே உள்ளன.

அதேன் எங்கடை ஆக்கள் மட்டும் ஊரில்.. காதலர்களை பாழடைந்த மண்டபத்துக்குள்.. குச்சொழுங்கைகளுக்குள்.. கிடுகு வேலிகளுக்குள் அடக்கி விடுகின்றனர்.

காதல் என்பது.. ஒரு இனத்தின் பெருக்கத்தின் முக்கிய அம்சம். அதனை ஏன் அசிங்கமான இடத்தில் ஆரம்பித்து வைக்கிறார்கள்..??!

ஆகவே இந்த புராதன சின்னத்தை சீரமைத்து.. சுத்தமாக்கி.. நிறம்பூசி.. அழகுபடுத்தி.. பாரமரித்து.. அதற்கான.. செலவினத்தை மீளக் கூடிய வகையில் ஒரு சிறிய கட்டணத்தை அமுல்படுத்தி காதலர்கள் சுத்தமான காதல் செய்ய அனுமதித்தால்.. என்ன குறைந்தா போய்விடுவீர்கள்.

சொறீலங்கா அரச அமைப்புக்கள் செய்யாது. குறைந்தது தனியார் அல்லது தொண்டர் அமைப்புக்கள் செய்யலாமே..???! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.