Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

யாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை! Top News

 

 

[Wednesday 2020-01-22 16:00]

யாழ்ப்பாணம்-  பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கற்கும் சிங்கள மாணவி  ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

 

யாழ்ப்பாணம்- பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கற்கும் சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

   
 

இந்த சம்பவம் இன்று மதியம் 2.30 மணியளவில் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்தனர். திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

 

jaffna-murder-220120-seithy%20(1).jpg

 

 

jaffna-murder-220120-seithy%20(2).jpg

 

 

jaffna-murder-220120-seithy%20(3).jpg

 

 

jaffna-murder-220120-seithy%20(4).jpg

 

 
https://www.seithy.com/breifNews.php?newsID=239567&category=TamilNews&language=tamil  
 
    
1 hour ago, nunavilan said:

கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்தனர். திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த அரசால் இவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு, பாராட்டப்பட்டு, லண்டன் தூதரகத்தில் கழுத்தறுப்பதில் வல்ல பிரியங்காவின் வேலைக்கு அமர்த்தப்படுவார் என்று  நம்பலாம்.

ஒரே இடத்தில தான் உதைக்குது.

செத்தது சிங்களப் பிள்ளை ஆச்சே.

  • கருத்துக்கள உறவுகள்

காதலி ஏமாற்றியதால கொலை செய்யப்பட்டதாக கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கழுத்தை கத்தியால் அறுப்பேன் என்றதை ஊரெல்லாம் ஓவியம் வரைந்ததால் வந்த வினை..

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்தது அவவின் கணவனாம்...அவ யூனிக்கு படிக்க வரு முன்னரே அவர்கள்  பதிவு திருமணம் செய்து கொண்டார்களாம்...படிக்க வந்த பிறகு கூட  படிக்கின்ற பெடியனோட தொடர்பு என்று சந்தேகப்பட்டு  வெட்டியுள்ளார்....நல்ல காலம் உடனே பிடிச்சிட்டினம்.இல்லாட்டில் யாராவது தமிழ் பெடியனின் தலையில் விழுந்திருக்கும் 

On 1/23/2020 at 12:55 AM, ரதி said:

.நல்ல காலம் உடனே பிடிச்சிட்டினம்.இல்லாட்டில் யாராவது தமிழ் பெடியனின் தலையில் விழுந்திருக்கும் 

எல்லார் பேச்சும் அதுவாத்தான் இருந்திச்சு!

  • கருத்துக்கள உறவுகள்
On 1/22/2020 at 2:25 PM, MEERA said:

கழுத்தை கத்தியால் அறுப்பேன் என்றதை ஊரெல்லாம் ஓவியம் வரைந்ததால் வந்த வினை..

சரியான கூற்று. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.