Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனக்கு ஏற்பட்ட நிலைமையே கோட்டாவுக்கும் ஏற்பட்டுள்ளது – மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Maithiri.jpg

தனக்கு ஏற்பட்ட நிலைமையே கோட்டாவுக்கும் ஏற்பட்டுள்ளது – மைத்திரி

2015ஆம் ஆண்டு தான் ஜனாதிபதியாக வந்தபோது தனக்கு ஏற்பட்ட நிலைமையே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “எனக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அது ரகசியம் அல்ல. நான் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடனேயே செயற்பட்டேன். நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என செயற்பட்டேன். இதன்போது எங்களுக்குள் சில முரண்பாடுகள் ஏற்பட்டன.

நான் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக வந்தபோது எனக்கு ஏற்பட்ட நிலைமையே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஏற்பட்டுள்ளது. அதாவது நான் ஜனாதிபதியாக வந்தபோது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கே பெரும்பான்பை அதிகமாக இருந்தது. அதாவது மஹிந்த ராஜபக்ஷவிற்கே பலம் அதிகமாக இருந்தது.

ஆனால் அவர் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு வழங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் எனக்கு வழங்கினார். அதன் பின்னர் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றினோம்.

ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே போதை பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் சிகரட் பக்கட்களின் பின்புறத்தில் கென்சர் நோயாளி ஒருவரின் புகைப்படத்தை அச்சிட செய்தேன். அத்தோடு பல திட்டங்களையும் அமுல்படுத்தினேன். இதை செய்ய முடிந்தமைக்கான காரணம் அன்று மஹிந்த ராஷபக்ஷ தரப்பினர் எனக்கு நாடாளுமன்றத்தில் வழங்கிய ஒத்துழைப்பே ஆகும்.

ஆனால் இன்று அவ்வாறான சூழ்நிலை இல்லை. அதனாலேயே மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தைக் களைத்து, ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி கடந்த ஒக்டோபர் மாதமே தீர்மானித்தது. அதன்பின்னர் ஜனாதிபதியுடனும் பொதுஜன பெரமுனவுடனும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம்.

அதன் பின்னரான கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவும் இருந்தமையாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகூடிய வாக்குகளால் வெற்றிபெற்றார்.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து ஜனாதிபதி நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து அவருடன் இணைந்து செயற்பட வேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

http://athavannews.com/தனக்கு-ஏற்பட்ட-நிலைமையே/

  • கருத்துக்கள உறவுகள்

9-F2-C0-CA5-5-B8-A-4592-BDE4-CC2-A537-DF

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஆனால் அவர் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு வழங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் எனக்கு வழங்கினார். அதன் பின்னர் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றினோம்.

ஆக ஐ . தே. கட்சியை அழிக்கவே திட்டமிட்டு அந்தக் கட்சிக்குள் உள்நுழைந்தார் இந்தத் துப்புக் கெட்டது. புற்று நோயாளியின் படத்தை அச்சிட்டதுதான் இவரது ஆட்சியில் செய்த சாதனை. தன்னைத்தானே பாராட்ட வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய புற்றுக்கு வெளியே உலவிக் கொத்தும் பாம்பு.

மைத்திரி புற்றுக்குள் மறைந்திருந்து கொத்தும் பாம்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே போதை பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் சிகரட் பக்கட்களின் பின்புறத்தில் கென்சர் நோயாளி ஒருவரின் புகைப்படத்தை அச்சிட செய்தேன். அத்தோடு பல திட்டங்களையும் அமுல்படுத்தினேன். இதை செய்ய முடிந்தமைக்கான காரணம் அன்று மஹிந்த ராஷபக்ஷ தரப்பினர் எனக்கு நாடாளுமன்றத்தில் வழங்கிய ஒத்துழைப்பே ஆகும்.

மைத்திரி  ஒன்றாக இருந்து அப்பம் சாப்பிட்டு விட்டு மகிந்தவுக்கு ஆப்படித்ததை ஏன் சொல்லவில்லை??

1 hour ago, nunavilan said:

மைத்திரி  ஒன்றாக இருந்து அப்பம் சாப்பிட்டு விட்டு மகிந்தவுக்கு ஆப்படித்ததை ஏன் சொல்லவில்லை??

இப்ப ஒன்னுக்குள்ள ஒன்னு!

  • கருத்துக்கள உறவுகள்

 சேர்ந்து அப்பம் உண்டு, அவர் ஆசியோடு  சென்று அந்தக் கட்சியை பிளவுபடுத்தி வெற்றியோடு பாசறைக்கு திரும்பி விட்டார் வீரன்.

17 hours ago, Kavi arunasalam said:

9-F2-C0-CA5-5-B8-A-4592-BDE4-CC2-A537-DF

அருமை!

18 hours ago, Paanch said:

கோத்தபாய புற்றுக்கு வெளியே உலவிக் கொத்தும் பாம்பு.

மைத்திரி புற்றுக்குள் மறைந்திருந்து கொத்தும் பாம்பு.

இருவருமே திட்டமிட்ட தமிழின அழிப்பில் ஈடுபட்டிருக்கும் சிங்கள-பௌத்த போர்க்குற்றவாளிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.