Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் விஜயிடம் வருமானவரி சோதனை

Featured Replies

பிகில் திரைப்படத்திற்கு பைனான்ஸ் செய்த மதுரை அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், நடிகர் விஜயிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து விநியோகித்தது. இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில், காலை 10 மணி முதல் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் உரிமையாளர் கல்பாத்தி அகோரம் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.

பிகில் படத்துக்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்படும் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளரான அன்புச்செழியனின் தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகம், மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள அவரது அலுவலகம் ,மதுரை தெப்பக்குளம் பகுதியிலுள்ள அவரது நண்பர் சரவணனின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது, நடிகர் விஜய்க்கு பிகில் படத்தில் நடித்ததற்காக அளிக்கப்பட்ட சம்பளம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம், வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் தொடர் விசாரணைக்காக அவரை சென்னைக்கு வருமாறு வருமான வரித்துறையினர் கேட்டுக் கொண்டதை அடுத்து நடிகர் விஜய் தனது காரில் முன்னே செல்ல வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

இதனிடையே சென்னை சாலிகிராம் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜயின் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இதே பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் விஜயின் பிள்ளைகள் இருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.

https://www.polimernews.com/dnews/99404/நடிகர்-விஜயிடம்-வருமானவரிசோதனை

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு சுத்தி வளைச்சு..? கட்சிக்கு நன்கொடை வேணுமென்டா கேட்டு வாங்கிட்டு போக வேண்டியான்.. 👍

memees.php?w=650&img=dmFkaXZlbHUvbWFydWR

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் வங்கியை அல்லவா சுத்தி வளைக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

வட்டிக்கு காசு கொடுப்பதாக சொல்லும் ரஜனியின் வீட்டை அல்லவா முதலில் சோதனை போட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசாரணை

ரசிகர்கள் வர வாய்ப்பு.. விஜய் வீடு முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பு.. பலத்த பாதுகாப்பு!

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பதால், அவரின் வீட்டு முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு நிற்கிறார்கள்.

நடிகர் விஜய் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.நடிகர் விஜய் வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை சோதனை நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிபில் இருக்கும் நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். தங்களுடன் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இன்றும் அவரிடம் விசாரணை நடக்கிறது.

விஜய் வீதியில் நடக்கும் இந்த ரெய்டிற்கு அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இணையம் முழுக்க இதற்காக அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அஜித் ரசிகர்ளும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். விஜய்க்கு ஆதரவாக இணையத்தில் இவர்கள் பேசி வருகிறார்கள். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிவிட்டர்

இதனால் டிவிட்டரில் நாங்கள் விஜயுடன் உடன் நிற்கிறோம் என்று பொருள்படும் வகையில் #WeStandWithVIJAY என்ற டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டேக்கில் விஜய்க்கு ஆதரவாக பலரும் டிவிட் செய்து வருகிறார்கள். விஜய் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுகிறார். அவரின் அரசியல் ஆசையை முடக்கும் வகையில் இப்படி செய்கிறார்கள். திட்டமிட்டு செய்யப்படும் மோசமான நடவடிக்கை இது என்று அதில் டிவிட் செய்து வருகிறார்கள்.

பண்ணை வீடு

தற்போது விஜய் பண்ணை வீட்டில் சோதனை நடக்கிறது. பனையூரில் உள்ள வீட்டில் வைத்து நடிகர் விஜயிடம் விசாரணை நடந்து வருகிறது. இதனால் அங்கு ரசிகர்கால் குவிய வாய்ப்புள்ளது என்கிறார்கள். விஜய்க்கு ஆதரவாக அங்கு ரசிகர்கள் வர வாய்ப்புள்ளது. வீட்டு வாசலில் ஆர்ப்பாட்டங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இதனால் அணுகு கொஞ்சம் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனால் தற்போது விஜய் வீடு முன் துப்பாக்கி இந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், மொத்தம் 7 போலீசார் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 3 சிஆர்பிஎப் படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இன்று காலைக்கு மேல் கூடுதலாக இப்படி படை வீரர்கள் குவிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அதே சமயம் விஜய் ரசிகர்கள் யாரும் விஜய் வீட்டு பக்கம் வர கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/income-department-raid-on-vijay-home-7-police-deployed-these-for-protection-376277.html

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் அண்ணா  மத மாற்றல் கும்பல்களோடு சேர்ந்து ஆட்களை மதம் மாற்ற பல்லாயிரக்கணக்கான பணம் வாங்கி இருக்கிறார் என்று   சொல்லினம்...உண்மையாய் வாங்கி இருக்காரோ அல்லது அரசியல் பழி  வாங்கலோ 

  • தொடங்கியவர்

ரூ.300 கோடி வரி ஏய்ப்பு - ரூ.77 கோடி பறிமுதல்..!

ஏஜிஎஸ் குழுமம், பைனான்சியர் அன்புச் செழியன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது. மேலும் பைனான்சியர் தொடர்புடைய இடங்களில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் கண்டுபிடித்து கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏஜிஎஸ் குழுமம், பைனான்சியர் அன்புச்செழியன், அவரது நண்பர் சரவணன், நடிகிர் விஜய் ஆகியோரது தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து விளக்கம் அளித்து வருமான வரித்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் பிகில் படத்தின் பெயரை குறிப்பிடாமல், அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடிப்படையாக வைத்து, தயாரிப்பாளர், நடிகர், அவரது விநியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகியோருக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள 38 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில், பைனான்சியருக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையிலுள்ள இடங்களில் அதிக எண்ணிக்கையில் சொத்து ஆவணங்கள், உறுதிபத்திர குறிப்புகள் (Promissory notes),

முன்தேதியிட்ட காசோலைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது. மேலும் பைனான்சியர் தொடர்புடைய இடங்களில் 77 கோடி ரூபாய் அளவிற்கு ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின்போது கிடைத்த ஆதாரங்களின்படி சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறை, படவினியோகஸ்தருக்கு சொந்தமான பல ஆவணங்கள், அவரது நண்பர் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டு உள்ளது என்றும், அங்கு கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் திரைப்பட தயாரிப்பாளர் அலுவலகங்களின் கணக்குகளை ஆய்வு செய்யும் பணி நடப்பதாகவும், நடிகர்- நடிகைகளுக்கு அந்த தயாரிப்பாளரால் அளிக்கப்பட்ட சம்பளம் குறித்து விசாரணை நடப்பதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

இதே போல் சோதனைக்கு ஆளான நடிகர், அசையா சொத்துகளில் மேற்கொண்டுள்ள முதலீடுகள், அண்மையில் அவர் நடிப்பில் வெளியான படத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து அவர் பெற்ற சம்பளம் குறித்து, சோதனையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் சில இடங்களில் சோதனை தொடர்ந்து சோதனைகள் நடைபெறுவதாகவும் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது. 

https://www.polimernews.com/dnews/99510/ரூ.300-கோடி-வரி-ஏய்ப்பு---ரூ.77கோடி-பறிமுதல்..!

 

  • தொடங்கியவர்

விஜய் என்ன தீவிரவாதியா ?

விஜய் என்ன தீவிரவாதியா என்று விஜய் ரசிகர் மன்றத்தின் மாநில செயலாளர் ரவி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். 

பிகில் திரைப்படத்துக்கு வாங்கிய சம்பளம் தொடர்பாக விஜய் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. 

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வந்த இடத்திற்கே சென்று விஜயிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் பின்னர் அவரை காரில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இது குறித்து பேட்டியளித்த விஜய் ரசிகர் மன்ற மாநில செயலாளர் ரவி ராஜா, “ தமிழ் சினிமாவில், மக்களுக்கு இலவச மருத்துவம் கிடைக்க வேண்டும் என்று மெர்சல் படத்தில் நடித்தார்.

விவசாயிகளுக்காக கத்தி படத்திலும், பெண்களுக்காக பிகில் படத்திலும், தேச பற்றுக்காக துப்பாக்கி படத்திலும் விஜய் நடித்துள்ளார். 

இந்த நிலையில், ஒரு தீவிரவாதியை நடத்துவது போல் படப்பிடிப்புதளத்திற்கு சென்று அவரை அழைத்து வந்து விசாரிப்பது ஏன் ?"

மேலும் தொடர்ந்த ரவி ராஜா, “அவர் என்ன நித்யானந்தாவா? விஜய் மல்லையாவா?. இது போன்ற விசாரணை வேறு எந்த நடிகருக்காவது நடைபெற்றுள்ளதா? விஜய் வாங்கிய பணத்திற்கு முறையாக வரி கட்டி வருகிறார். மத்திய அரசின் இந்த செயல் எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

5ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை 264 பேரின் படிப்பு செலவை முழுவதுமாக ஏற்று படிக்க வைத்து வருகிறார். 

இந்த நிலையில் வருமான வரி துறையினரின் செயல் எங்களுக்கு மன உளைச்சலை கொடுத்துள்ளது. அனைத்து இடங்களில் இருந்தும் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். 

ஆனால் நாங்கள் பொறுமையாக இருக்கும்படி ரசிகர்களிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்" என்றார் அவர்.

http://www.tamilmirror.lk/cinema/வஜய-எனன-தவரவதய/54-245088

  • தொடங்கியவர்

தர்பார் வசூல் ஆப்பசைத்த அன்பு செழியன்..! ரூ.77 கோடி பின்னணி

தமிழ் திரை உலகின் கந்துவட்டி பைனான்சியர் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான அன்பு செழியன் வீட்டில் இருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

தர்பார் படத்தின் விநியோகஸ்தர்களுக்கு பைனான்ஸ் வழங்கி நஷ்டகணக்கு காட்டியதால் வருமான வரிச்சோதனையில் சிக்கியதாக வெளியான தகவலின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தமிழ் திரை உலகில் அதிக படங்களை தயாரிக்கும் லைக்கா முதல் சாதாரண தயாரிப்பாளர்கள் வரை அனைவருக்கும் அள்ள அள்ள குறையாமல் வட்டிக்கு பணம் அளிக்கும் பைனான்சியர் அன்புச்செழியன்..!

பிரபல தயாரிப்பாளர்களிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டு அடுத்த நொடியே 50 கோடி ரூபாய் வரை ரொக்கபணமாக அள்ளிக்கொடுக்கும் வல்லமை மிக்க அன்பு செழியனுக்கு எதிராக கடிதம் எழுதிவைத்துவிட்டு சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட போது கூட கந்து வட்டி புகார் மீது நடவடிக்கை பாயவில்லை..!

ஆனால் கடந்த 2 நாட்களாக தொடரும் வருமானவரிச் சோதனையில் அன்புச்செழியன் மற்றும் அவரது கூட்டாளி சரவணன் உள்ளிட்டோர் வீடுகளில் இருந்து இதுவரை 77 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டிருப்பது சாமானியர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், திரை உலகினர் இந்த தொகை குறைவு என்றே பேசிக் கொள்கின்றனர்.

கந்து வட்டி புகார்கள் வரிசை கட்டி நின்றாலும், அரசியல் செல்வாக்குடன் பைனான்ஸ் தொழிலை பந்தாவாக செய்து வந்த அன்புசெழியனின் பேராசை தான் அவரை வருமான வரித்துறையினரின் பிடியில் சிக்கவைத்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர் திரை உலகினர்.

பொங்கலுக்கு வெளியான ரஜினியின் தர்பார் படத்தை குறைந்த விலைக்கு கேட்டதால் அன்பு செழியனுக்கு பதில் பல்வேறு வினியோகஸ்தர்களுக்கு ஏரியாக்களை பிரித்து விற்றது லைக்கா நிறுவனம். தொடர் விடுமுறை என்பதால் படம் நல்ல வசூலை பெற்று திரையரங்கு உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் கோடிகளில் புரண்டனர்.

ஆனால் 21 நாட்களுக்கு பின்னர் தர்பார் படத்தால் தங்களுக்கு நஷ்டம் என கூறி 10 பேர் கொண்ட வினியோகஸ்தர்கள் திடீர் போர்க் கொடி உயர்த்தினர். ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டனர். முதலில் 25 கோடி கேட்டவர்கள் 65 கோடி ரூபாய் வரை கேட்டு மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியானது. இதன் பின்னணியில் வினியோகஸ்தர்களுக்கு வட்டிக்கு பணம் வழங்கிய பைனான்சியர் அன்பு செழியனின் தூண்டுதல் இருப்பதாக கூறப்பட்டது.

தர்பார் படத்தின் வசூல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வந்த வருமானவரித்துறையினருக்கு, வரிஏய்ப்பு செய்வதற்காக இந்த நஷ்ட கணக்கு நாடகம் நடத்தப்படுகிறதா ? என்று சந்தேகம் எழுந்தது. மேலும் தீபாவளிக்கு வெளியாகி 300 கோடி ரூபாய் வசூலித்த படம் என்று டுவிட்டரில் டிரெண்டிங்கான பிகில் படத்தின் முக்கிய விநியோகஸ்தர் அன்பு செழியன் என்பதாலும் அவரது வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டனர்.

முதலில் அன்பு செழியன் அலுவலகத்தில் விசாரணையை தொடங்கிய வருமான வரித்துறையினரிடம் ஏராளமான உறுதிபத்திர குறிப்புகள், சொத்துபத்திரங்கள், கையெழுத்திட்ட வெற்று பத்திரங்கள் ஏராளமாக சிக்கியது. வரவு செலவு கணக்கு எழுத பயன்படுத்தப்பட்ட டைரி ஒன்றும் சிக்கியது.

அதில் பிகில் படத்தின் புரொடக்சன் மேனேஜர் வெங்கட் மாணிக்கம் என்பவர் மூலம் நடிகர் விஜய்க்கு ரொக்கமாக 20 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக குறித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்திலும், உரிமையாளர் கல்பாத்தி அகோரம் வீடுகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அங்கு பிகில் படத்திற்கு என்று நடிகர் விஜய்க்கு வங்கி கணக்கில் 30 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மொத்தம் விஜய்யிடம் 50 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதா ? என்பதை அறிய விஜய்யின் வீட்டுக்கு சென்றுள்ளனர் அதிகாரிகள்.

அங்கு விஜய் இல்லை என்பதை அறிந்து நேரடியாக நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கே சென்று முறைப்படி சம்மன் வழங்கி அவரை விசாரணைக்காக வீட்டுக்கு அழைத்து வந்தனர். பைனான்சியர் அன்பு செழியன் கொடுத்த 20 கோடி ரூபாய் குறித்து தொடர்ந்து விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டது. விஜய்க்கு சொந்தமான இடங்களில் 24 மணி நேரத்திற்கு மேல் நீடித்த சோதனை இரவு நிறைவு பெற்றது.

மேலும் 20 கோடி ரூபாயை பெற்றுக் கொடுத்ததாக கூறப்படும் பிகில் படத்தின் தயாரிப்பு மேலாளர் வெங்கட்மாணிக்கம் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது

அண்மை காலமாக தமிழ்திரை உலகில் பிரபல நாயகர்களின் படங்கள் சரியாக போகவில்லை என்று நஷ்ட கணக்கு காட்டி மீண்டும் அதே நாயகர்களை வைத்து படம் தயாரித்து வசூல் பார்ப்பதை அன்பு செழியனிடம் பைனன்ஸ் பெறும் தயாரிப்பாளர்கள் சிலர் தொடர்ச்சியாக செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்பு செழியன் வட்டிக்கு கொடுப்பதில்லை என்று தன்னிடம் தெரிவித்ததாக இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.

 ஒரு காலத்தில் பாலிவுட் திரைஉலகம் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளிடம் சிக்கி அல்லோலப்பட்டது போல, தமிழ் திரைஉலகம் கந்து வட்டி பைனான்சியர் அன்பு செழியனின் ஆதரவாளர்களிடம் சிக்கி உள்ள நிலையில் இந்த அதிரடி சோதனையால் தர்பார் நஷ்டம் என்றவர்கள் ஓட்டமெடுத்துள்ளனர் என்கின்றனர் திரை உலகினர்.

https://www.polimernews.com/dnews/99530/தர்பார்-வசூல்-ஆப்பசைத்தஅன்பு-செழியன்..!-ரூ.77-கோடிபின்னணி

 

  • தொடங்கியவர்

தர்பார் பட விவகாரம்: பாதுகாப்புக் கோரி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மனு

ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் தன்னை மிரட்டுவதால், தனக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த தர்பார் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கினார். இந்தத் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதியன்று வெளியானது.
 
ஆனால், படம் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லையென சில விநியோகிஸ்தர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக படத்தில் நடித்த ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடமும் பேச முயன்றனர். பல இடங்களில் இது தொடர்பாக போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. இந்நிலையில், இது தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
 
அதில், தர்பார் படத்தை இயக்கியது மட்டுமே தனது பணி என்றும் அந்தப் படத்தின் விநியோகத்திலோ, வியாபாரத்திலோ தனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் முழுக்க முழுக்க லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமே அனைத்தையும் கவனித்துக்கொண்டதாகவும் அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார்.
 
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3ஆம் தேதியன்று தங்களை விநியோகிஸ்தர்கள் என்று அழைத்துக்கொண்ட அடையாளம் தெரியாத 25 பேர் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இயக்குனரின் அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த பணியாளர்களிடம் தகாத வார்த்தைகளைப் பேசி அச்சுறுத்தியதாகவும் மேலும் பதினைந்து பேர் சாலிகிராமத்தில் உள்ள இயக்குனரின் வீட்டின் முன்பாக அச்சுறுத்தும் வகையில் நின்றுகொண்டு, இயக்குனரின் பெயரைச் சொல்லி கெட்டவார்த்தைகளில் திட்டியதாகவும் தன் மனுவில் ஏ.ஆர். முருகதாஸ் கூறியிருக்கிறார்.

அந்த நபர்கள் தற்போதும் இயக்குனரின் வீடு மற்றும் அலுவலகத்தின் முன்பாக நின்றுகொண்டு அவருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் மேலும் சிலர் இது தொடர்பாக தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களிலும் பேட்டி அளித்து இயக்குனருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திவருவதாகவும் இயக்குனருக்கு ஊறு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவரது வீடு, அலுவலகத்தில் புகுந்து மிரட்டியதாகவும் ஏ.ஆர். முருகதாஸின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனால், ஏ.ஆர். முருகதாஸிற்கு தனிப்பட்ட முறையில் போலீஸ் காவல் அளிக்க வேண்டுமென்றும் அவரது வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது தொடர்பாக இரு காவல் நிலையங்களில் புகார் அளித்தும் பாதுகாப்பு அளிக்கப்படவில்லையெனக் கூறினார்.

இந்த விவகாரம் இரண்டு காவல்நிலைய எல்லைகளுக்குள் வருவதால், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கேட்டுச் சொல்வதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புக் கோரும் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை மனுவாக தாக்கல் செய்யும்படிகூறி, வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

https://www.bbc.com/tamil/india-51395836

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2020 at 5:40 PM, ampanai said:

நடிகர் விஜயிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

304-F2-B08-C87-D-4893-8-DD6-8-AE6-D3-CB4

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

விஜய் அண்ணா  மத மாற்றல் கும்பல்களோடு சேர்ந்து ஆட்களை மதம் மாற்ற பல்லாயிரக்கணக்கான பணம் வாங்கி இருக்கிறார் என்று   சொல்லினம்...உண்மையாய் வாங்கி இருக்காரோ அல்லது அரசியல் பழி  வாங்கலோ 

கிறிஸ்தவர்கள் என்றாலே மதம் மாற்றம்தான்  நினைவிற்கு வருகிறது ? BJP  ராஜாவுக்குப் போட்டியோ ?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, ரதி said:

விஜய் அண்ணா  மத மாற்றல் கும்பல்களோடு சேர்ந்து ஆட்களை மதம் மாற்ற பல்லாயிரக்கணக்கான பணம் வாங்கி இருக்கிறார் என்று   சொல்லினம்...உண்மையாய் வாங்கி இருக்காரோ அல்லது அரசியல் பழி  வாங்கலோ 

என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களே மா? 

Animated GIF

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.