Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

 

 

image_40b084c5ed.jpg-சண்முகம் தவசீலன்

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து, இன்று (12) மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

image_ecd9ad670a.jpg

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையை நிர்மாணிபதற்காக, வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் காணியில், துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

image_a0f7eebcf8.jpg

இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களால், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

image_335b1910d2.jpg

இந்நிலையில், இன்று (12), குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டன.

image_27dee69cb4.jpg

இதன்போது, குறித்த பகுதியில் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு, பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதுடன், குறித்த வளாக வாயில் கதவும் கண்ணிவெடியகற்றும் பணியாளர்களால் மூடப்பட்டது.

image_4d4a70dff7.jpg

பின்னர், குறித்த இடத்தை பார்வையிட்ட நீதிபதி, குறித்த இடத்தின் ஆரம்பகால வரலாறுகளையும் இந்த விடயம் தொடர்பான வரலாறுகளையும், ஆராயுமாறு, மாங்குளம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததுடன், இன்று (13) குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மஙகளததல-மனத-எசசஙகள-கணடபடபப/46-245369

மன்னார் மனித எச்சங்கள் வைத்த அறை உடைப்பு

இந்நிலையில் மன்னார் மனித எச்சங்கள் தொடர்பிலான தற்போதைய நிலைமை குறித்து பிபிசி தமிழ் விடயங்களை ஆராய்ந்தது.

மன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 342 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு சட்ட மருத்துவ அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த மனித எச்சங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள மன்னார் நீதிமன்ற வளாகத்திலுள்ள அறையின் பூட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விடயங்கள் குறித்து விசாரணைகளை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்கள் மற்றும் அறையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளமை குறித்து போலீசார் விசாரணைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மன்னார் மனிதப் புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானது என அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தினால் நடத்தப்பட்ட கார்பன் டேட்டிங் பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கை கடந்த வருடம் மார்ச் மாதம் 9ஆம் தேதி வெளியாகியிருந்தது.

அதன்படி, இந்த மனித எச்சங்கள் கி.பி 1477 - 1642 காலப் பகுதிக்கு உரியது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-51478918

மாங்குளத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

image_947af4c77b.jpg

-விஜயரத்தினம் சரவணன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மருத்துவ புனர்வாழ்வு வைத்தியசாலை வளாகத்தில், மனித எச்சங்கள் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றின் உத்தரவுக்கமைய இன்றைய தினம் (13) மேலதிக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தனுஷன் தலைமையில் பொலிஸார், தடயவியல் பொலிஸார், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரின் பங்கு ற்றுதலுடன், இந்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சிதைவடைந்த மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள் சில, இரண்டு பேருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட தடையப்பொருள்கள் சட்ட வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளன.

image_3ff1ee2eee.jpgimage_2e767ced1d.jpg

http://www.tamilmirror.lk/வன்னி/மஙகளததல-அகழவப-பணகள-ஆரமபம/72-245452

  • கருத்துக்கள உறவுகள்

காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கும் எந்தப் பெற்றோர் பெற்ற பிள்ளையோ? யார் பிள்ளை, என்பதை இந்தப் புதைகுழி அடையாளப்படுத்துமா?

  • கருத்துக்கள உறவுகள்

காணப்படும் உடுதுணிகளை வைச்சுப் பார்க்கும் போது.. அவை 3 ம் 4ம் நூற்றாண்டுகளுக்கு முன் பூமிக்குள் நுழைந்த ஏலியன்களினுடையதாக இருக்க வாய்ப்புள்ளதாக.. அரிச்சந்திரன் வீட்டு ஆய்வு புகழ் அமெரிக்க நாசா ரகசியக் குறிப்பு வழங்கியுள்ளதாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, satan said:

காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கும் எந்தப் பெற்றோர் பெற்ற பிள்ளையோ? யார் பிள்ளை, என்பதை இந்தப் புதைகுழி அடையாளப்படுத்துமா?

உது சங்கிலியன் காலத்தான் எண்டு சொல்லுறதுக்கும் ஒரு கூட்டம் திரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உது சங்கிலியன் காலத்தான் எண்டு சொல்லுறதுக்கும் ஒரு கூட்டம் திரியும்.

கூட்டமாக சனம் தேவையில்லை  மந்தியே நாளை சொல்லிவிடும்

மாங்குளத்தில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருட பழைமையானவை

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருடங்கள் பழைமை வாய்ந்தவை என கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும்நிலையில் இதன்போது மேற்கொண்ட அகழ்வுப் பணியின்போது சில என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக, கடந்த வெள்ளிக்கிழமை (07), மாங்குளம் பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவரினால், மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பில் அதே நாளில் (07) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையம் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், பின்னர் அந்த இடத்தை நீதவான் கடந்த புதன்கிழமை (12) ஆய்வு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, நீதவான் உத்தரவின் பேரில், கிளிநொச்சி மருத்துவமனையின் நீதிமன்ற விசேட மருத்துவ நிபுணரினால் நேற்றையதினம் (13) காலை 10.00 மணிக்யளவில் அவ்விடம் அகழ்வாராய்ச்சிக்குட்படுத்தப்பட்டதோடு, அதன்போது மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருடம் பழைமை வாய்ந்தது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.thinakaran.lk/2020/02/14/உள்நாடு/48370/மாங்குளத்தில்-மீட்கப்பட்ட-என்புக்கூடுகள்-20-வருட-பழைமையானவை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

மாங்குளத்தில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருட பழைமையானவை

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருடங்கள் பழைமை வாய்ந்தவை என கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும்நிலையில் இதன்போது மேற்கொண்ட அகழ்வுப் பணியின்போது சில என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக, கடந்த வெள்ளிக்கிழமை (07), மாங்குளம் பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவரினால், மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பில் அதே நாளில் (07) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையம் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், பின்னர் அந்த இடத்தை நீதவான் கடந்த புதன்கிழமை (12) ஆய்வு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, நீதவான் உத்தரவின் பேரில், கிளிநொச்சி மருத்துவமனையின் நீதிமன்ற விசேட மருத்துவ நிபுணரினால் நேற்றையதினம் (13) காலை 10.00 மணிக்யளவில் அவ்விடம் அகழ்வாராய்ச்சிக்குட்படுத்தப்பட்டதோடு, அதன்போது மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருடம் பழைமை வாய்ந்தது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.thinakaran.lk/2020/02/14/உள்நாடு/48370/மாங்குளத்தில்-மீட்கப்பட்ட-என்புக்கூடுகள்-20-வருட-பழைமையானவை

20 வருசத்துக்கு முந்தி என்றால் புலிகள் காலத்தா ?

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

அதன்போது மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருடம் பழைமை வாய்ந்தது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதெப்படி உடனடியாக  அவர்களால் முடிவு செய்ய முடிந்தது? அதோடு சம்பந்தப்பட்டவர் தெரிவித்தாரா? அல்லது மீட்க்கப்பட்ட  எலும்புக்கூடு கூறியதா?

மாங்குளம் மனித எச்சங்கள்: 26இல் விசாரணை ஆரம்பம்

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான வழக்கு விசாரணை, 26ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

http://www.tamilmirror.lk/வன்னி/மாங்குளம்-மனித-எச்சங்கள்-26இல்-விசாரணை-ஆரம்பம்/72-245579

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.