Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் சாட்சியம் அளிக்கமாட்டேன் – கருணா அதிரடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karuna-amman-1-620x330.jpg

புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் சாட்சியம் அளிக்கமாட்டேன் – கருணா அதிரடி!

விடுதலைப் புலிகள் 600 பொலிசாரைக் கொன்று போர்க்குற்றம் புரிந்தார்கள் என்ற ஐ.நாவில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு ஆதரவாக தான் சாட்சியமளிக்க மாட்டேன் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா தெரிவித்துள்ளார்.

தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் பிரதியமைச்சரிடம்   இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற யுத்தக் காலத்தில் 600 பொலிஸாரைக் கொன்று விடுதலைப் புலிகளும் போர்க் குற்றம் புரிந்துள்ளார்களென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விசேட அதிரடிப்படையின் முன்னாள் அதிகாரியான ஜெனட் விமல முறைப்பாடு செய்திருந்தார். இம்முறைப்பாட்டுக்கு சாட்சியாக கருணா ஆஜராவார் என விமல தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ அதிகாரியின் கூற்றை மறுத்த விநாயகமூர்த்தி முரளிதரன்,  அந்தச் சம்பவம் நடைபெறும்போது தான் தலைவர் பிரபாகரனுடன் வன்னியில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ்க் குரலுக்கு வழங்கிய நேர்காணல்:

 

http://thamilkural.net/?p=28847

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் சாட்சியம் அளிக்கமாட்டேன் – கருணா அதிரடி!

தேர்தலுக்கு முன்பா?

தேர்தலுக்கு பின்பா?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தேர்தலை குறிவைத்து பேசினாலும், அவரின் நிலை இப்போ ஆப்பிழுத்த குரங்கின் நிலை. புலிகளுக்கு எதிராய் சாட்சி சொன்னால் சர்வதேசத்திடம் குற்றவாளியாய் மாட்டுப்படுவார். அரசுக்கு ஆதரவானாலும், ஒட்டுக்குழுக்களே போர்குற்றத்தில் ஈடுபட்டன, அதை வழிநடத்தியவர்கள் இவர்கள் என்று வாலாட்டும் சிலதை கைகாட்டும் சிங்களம். வசதி எப்பிடி? பாவம். வீரமரணம் அடைந்திருந்தால் மக்கள் மனதில் இருந்திருப்பார். இப்போ சிங்களவன் கையாலும் துரோகி என்கிற பெயரோடு மாழுவார். யார்  அழுவாரோ யார் துப்புவாரோ 

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. விடயத்தில்..... சுமந்திரனை விட,  கருணா... 💯  மேலானவர். :)

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கெதிரா தானே சாட்சியம் அளிக்கனுமே என்று கும்மான் பயந்திட்டார். 

போர்க்களத்தில் சரணடையும் போர் வீரர்களை ஜெனீவா போர்க்கைதிகள் விதிகளின் கீழ் ஐநா உடன்படிக்கையை அங்கீகரித்து கையெழுத்திட்டுள்ள நாடுகள் தான் பின்பற்ற வேண்டும். 

விபு ஒரு விடுதலை அமைப்பு. அது எந்த ஒரு சர்வதேச உடன்படிக்கைகளிலும் கையெழுத்திட்டிருக்கவில்லை. ஆனாலும் மனிதாபிமான அடிப்படையில்.. இயன்றளவு களத்தில் பிடிக்கப்பட்ட சரணடைந்த..போர்க்கைதிகளை பராமரித்தனர். சில சமயங்களில்.. தவிர்க்க முடியாத சூழல்களில் உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. 

ஆனால்.. கும்மான் தவிர்க்கக் கூடிய சூழலிலும் திட்டமிட்டு படுகொலை செய்தவர். 

ஏனெனில்..1990 இல்.. கிளிநொச்சி.. மன்னாரில்.. சரணடைந்த சிங்கள.. தமிழ்.. முஸ்லீம் பொலிஸார் விடுதலை செய்யப்பட.. கிழக்கில் மட்டும் படுகொலை செய்யப்பட்டது.. தலைமைக்கு தெரியாமல் செய்யப்பட்ட படுகொலை ஆகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nedukkalapoovan said:

தனக்கெதிரா தானே சாட்சியம் அளிக்கனுமே என்று கும்மான் பயந்திட்டார். 

போர்க்களத்தில் சரணடையும் போர் வீரர்களை ஜெனீவா போர்க்கைதிகள் விதிகளின் கீழ் ஐநா உடன்படிக்கையை அங்கீகரித்து கையெழுத்திட்டுள்ள நாடுகள் தான் பின்பற்ற வேண்டும். 

விபு ஒரு விடுதலை அமைப்பு. அது எந்த ஒரு சர்வதேச உடன்படிக்கைகளிலும் கையெழுத்திட்டிருக்கவில்லை. ஆனாலும் மனிதாபிமான அடிப்படையில்.. இயன்றளவு களத்தில் பிடிக்கப்பட்ட சரணடைந்த..போர்க்கைதிகளை பராமரித்தனர். சில சமயங்களில்.. தவிர்க்க முடியாத சூழல்களில் உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. 

ஆனால்.. கும்மான் தவிர்க்கக் கூடிய சூழலிலும் திட்டமிட்டு படுகொலை செய்தவர். 

ஏனெனில்..1990 இல்.. கிளிநொச்சி.. மன்னாரில்.. சரணடைந்த சிங்கள.. தமிழ்.. முஸ்லீம் பொலிஸார் விடுதலை செய்யப்பட.. கிழக்கில் மட்டும் படுகொலை செய்யப்பட்டது.. தலைமைக்கு தெரியாமல் செய்யப்பட்ட படுகொலை ஆகும். 

நெடுக்ஸ்... இது, கேள்விப்  படாத புதிய செய்தி. 🥺

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

முன்னாள் இராணுவ அதிகாரியின் கூற்றை மறுத்த விநாயகமூர்த்தி முரளிதரன்,  அந்தச் சம்பவம் நடைபெறும்போது தான் தலைவர் பிரபாகரனுடன் வன்னியில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

ஆக, தலைவரும் இதைச் செய்யவில்லை. விநாயகமூர்த்தி முரளிதரனும் செய்யவில்லை.  இஸ்லாமிய தீவிரவாதிகள்......? புத்த சிலையை உடைத்து புத்தமத காவலனாக காட்டிக்கொள்ளும் கொலை, கொள்ளைக்கூட்டம்.....? யார் செய்தாலென்ன சிங்களம் ஒருநாள் இவரை சுட்டியே விரலை நீட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா குற்றவியல் பிரேரணை 
மனித உரிமைகள் சாசனம்  

இரண்டிலுமே இவர் போர் குற்றவாளி என்பது 
உறுதியாக பதியப்பட்டு இருக்கிறது 

இவர் ஜெனீவா போனால் திரும்பி வாரத்துக்கே வழி  இல்லை 
கைது செய்து சர்வதேச நீதிமன்றில் ஒப்படைக்கவே அதிக சாத்தியம் உண்டு.

இதிலே மூஞ்சூரு விளக்குமாத்தையும் காவிச்சுதாம் 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maruthankerny said:

ஐநா குற்றவியல் பிரேரணை 
மனித உரிமைகள் சாசனம்  

இரண்டிலுமே இவர் போர் குற்றவாளி என்பது 
உறுதியாக பதியப்பட்டு இருக்கிறது 

இவர் ஜெனீவா போனால் திரும்பி வாரத்துக்கே வழி  இல்லை 
கைது செய்து சர்வதேச நீதிமன்றில் ஒப்படைக்கவே அதிக சாத்தியம் உண்டு.

இதிலே மூஞ்சூரு விளக்குமாத்தையும் காவிச்சுதாம் 

இப்பதான்  முரளிதரனுக்கு திரை விலக தொடங்கியிருக்குது. ஆனால் காலம் கடந்து போச்சுது. தான்  சிங்களத்தின்  அடிமை என்பதை வெகுவிரைவில்  உணருவார். மாரடைப்பு வருகுதோ, தற்கொலை செய்யும் துணிவு இருக்குமா இவருக்கு?  தீனி போட்ட எஜமான் பொட்டில போடப்போறார். இடையிடை புலிபுரளி  விடுவதன் காரணத்தில் இதுவும் ஒன்று. தன் அடிமைகளை வைத்து தான் எப்படி தப்புவது என்றே அவர் திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். 

On 2/22/2020 at 2:55 AM, தமிழ் சிறி said:

ஐ.நா. விடயத்தில்..... சுமந்திரனை விட,  கருணா... 💯  மேலானவர். :)

ம்ம்ம்.
சுமந்திரனைப் போன்ற ஒரு மோசமான பேர்வழியை காணுறது கஷ்டம் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.