Jump to content

வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிக்கிறது - மாவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிக்கிறது - மாவை

வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

mavai.jpg

பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டியில் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

நாட்டில் என்றுமில்லாத வகையில் கடந்த காலத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றிணைந்து ஒரு நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தது. இந்தக் காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. 

வடக்கிற்கு அதிகளவான  அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் இந்தக் காலப்பகுதியில் தான், இருப்பினும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்  அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக முன்னைய அரசாங்கத்தால் ஒதுக்கீடுசெய்யப்பட  நிதியை  இந்த அரசாங்கம் விடுவிக்காது செயற்பட்டு வருகின்றது. 

அது மட்டுமன்றி கடந்த அரசாங்கத்தால் செய்யப்பட்டு வந்த வேலைத்திட்டங்களையும் இடை நிறுத்தியுள்ளது. தேர்தலுக்கு பின்னரான சூழலில் தமிழ் மக்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்ற சூழலில் ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளையும் அதிலிருந்து விலகுவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இது ஒரு புறம் இருக்க மறுபுறத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக்கூறி அந்த நேர்முகத் தேர்வில் இராணுவத்தினரைப் பயன்படுத்தியுள்ளது. வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் குழப்பி இராணுவ ஆட்சிக்குள் தமிழ் மக்களை வைத்திருப்பதற்கான முயற்யாகவே இதன் வெளிப்பாடு உள்ளது. இத்தகைய விடையங்களை தமிழ் மக்கள் சரியாக முறையாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இங்குள்ள சிலரும் இணைந்து செயற்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது. தமிழ் மக்கள் கடந்த காலங்களில்தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எவ்வாறு ஆதரவை வழங்கினார்களோ! அத்தகைய ஆதரவை தொடர்ந்தும் வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தவேண்டும். என தெரிவித்தார்.

fgwer__3_.jpg

 

https://www.virakesari.lk/article/76772

 

Link to comment
Share on other sites

17 minutes ago, கிருபன் said:

நாட்டில் என்றுமில்லாத வகையில் கடந்த காலத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றிணைந்து ஒரு நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தது. இந்தக் காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன

அந்த ஐந்து வருடங்களிலும் என்ன சாதனைகளை இவர்கள் மைத்திரி - இரணில் அரசில் செய்தார்கள் ? ஏன் எந்த தீர்வையும் அவர்களால் தரமுடியவில்லை? இல்லை தந்து தான் இருப்பார்கள் என நம்பவைப்பதும் ஏமாற்று வேலை தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

அந்த ஐந்து வருடங்களிலும் என்ன சாதனைகளை இவர்கள் மைத்திரி - இரணில் அரசில் செய்தார்கள் ? ஏன் எந்த தீர்வையும் அவர்களால் தரமுடியவில்லை? இல்லை தந்து தான் இருப்பார்கள் என நம்பவைப்பதும் ஏமாற்று வேலை

101% உண்மை 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்துதான் இருக்கினம்...பை நிறைய காசு...போதாக்குறைக்கு மாட மாளிகை...இனி அவை வந்து மகன் பேரப்பிள்ளை குடும்பத்துக்கு குடுக்க வென்றாலும் மீளவும் ஆட்சிக்கு வரவேண்டும்..

Link to comment
Share on other sites

On 2/29/2020 at 6:23 PM, கிருபன் said:

வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிக்கிறது - மாவை

கடந்த 5 வருஷத்துல கூட்டமைப்பின் சாதனை.

  • மாவையின் மகன் அரசியலில். குடும்ப அரசியல்.
  • சம்பந்தனுக்கு கொழும்பில ஒரு சொகுசு வீடு.
  • சுமந்திரன் ரணிலிடமிருந்தும் கனடாவில இருந்து கோடி கோடியா பணம் சுருட்டினார்.
  • செல்வம் அடைக்கலநாதன் குழுத்தலைவர் என்டு அரச பாதுகாப்போட சொகுசு பயணம், மகனுக்கு மத்திய வங்கில வேலை வாய்ப்பு
  • பாராளுமன்றதுல ஒவ்வொருக்காவும் கைதூக்கேக்க கோடி கோடியா பணம் போகேற்றுக்குள்ள.
  • சுமந்திரன் சொறிலங்கா அரசுக்கு காலத்தை கடத்த கால அவகாசம் கிடைக்க நாய்படாதபாடா அலைஞ்சார். அதால மந்திரி பதவி தேடிவந்தும் பெறமுடியாத சூழ்நிலை
  • சுமந்திரன் புனையப்பட்ட ஒரு கொலை முயற்சி மூலம் அரச பாதுகாப்போட சொகுசு பயணம்,
  • அரசியல் கைதிகள் விடுவிக்க படேலை
  • பல காணிகள் விடுவிக்க படேலை
  • கல்முனை பிரதேச சபை இன்னுமில்லை
  • சரவணபவன் ஜனாதிபதியை வீட்டுக்கு கூப்பிட்டு பர்த்டே கொண்டாடினார்
  • சொறிலங்கா அரசுக்கு எதிரா ஐநா சென்ற அனந்தி சசிதரனால் வெகுண்ட சம்பந்தன்-சுமந்திரன்-மாவை கோஷ்டி அவவை கட்சியை விட்டு துரத்தினர்
  • சுமந்திரன், மாவை சொறிலங்கா அரசோட விக்கியை துரத்த பலசதிகளை செய்து அவரை வெளியேற்றினர்
  • கூட்டமைப்பிலிருந்து சுரேஷ் கட்சியை வெளியேற்றினர்
  • சுரேஷ் கட்சியை சேர்ந்த சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ள முடியாமல் தடைகளை சம்பந்தன்-சுமந்திரன்-மாவை கோஷ்டி ஏற்படுத்தினர்

இப்பிடி 5 வருஷத்துல கூட்டமைப்பின் தமிழின விரோத செயல்களை பக்கம் பக்கமா அடுக்கிக்கொண்டே போகலாம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவை பற்றி இவ்வளவு விபரமாக எப்படி கதைக்கிறீர்கள் என்பது விளங்கிவிட்டது😄   ஆனால் மகிந்தா தோற்க்க வேண்டும் என்பதற்காக இன்னொருவருக்கு வாக்களிப்பதானால்  தங்கள் வாக்கை சிவாசிலிங்கத்திற்கே அளித்திருக்கலாமே.நான் இலங்கை பிரசையாக இலங்கையில் இருந்தால் அப்படி தான் செய்திருப்பேன்    நான் நம்புகின்றேன் அவர்கள் விரும்பி தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர் அல்லது தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.  
    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
    • நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
    • கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது?   2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்?   Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST   NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#
    • முந்தி உந்த‌ மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து மிக‌ மிக‌ சிர‌ம‌ம் சுவி அண்ணா இப்ப‌ நில‌மை வேறு மாதிரி ஒரு நாள் தொட‌ரில் சில‌ அணிக‌ள் 250 ர‌ன்ஸ் அடிக்க‌வே சிர‌ம‌ ப‌டுவின‌ம் 20ஓவ‌ரில் இந்த‌ ஸ்கோர் பெரிய‌ இஸ்கோர்😮......................... 2004 ஆசியா கோப்பை பின‌லில் இல‌ங்கை முத‌ல் துடுப்பெடுத்தாடி 228 ர‌ன்ஸ் தான் அடிச்ச‌வை ,இந்தியாவை 203 ர‌ன்னுகை ம‌ட‌க்கிட்டின‌ம் இல‌ங்கை 25 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெற்றி......................இது 50 ஓவ‌ர் விளையாட்டில் ஹா ஹா😁.............................................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.