Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kaalee said:

அக்காவின் கற்பித்தல் பற்றியும்  அவாவின் பண்புகள் பற்றியும், அவாவின் மாணவர்களின் கருத்துக்களை  பார்த்தேன். மிகவும் பெருமையாக இருந்தது, இப்படிப்படட ஒரு சிறந்த ஆசானுடன் தொடர்பில் இருப்பதுபற்றி 

அக்கா  உங்களை போன்றவர்களின்  சேவை தமிழ் சமூகத்துக்கு தேவை , உங்களின்   ஓய்வுக்காலத்தில், தமிழ்ச்சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு உதவுவீர்கள் என நம்புகிறோம்..

அக்காவை பற்றி மாணவர்களின் கருத்துக்கள் 

BIOL4100
😎awesome
Aug 5th, 2017
For Credit: Yes
Attendance: Mandatory
Would Take Again: Yes
Grade: A
Textbook: Yes
By far the best Biology professor I have had at AUM. She truly cares about you understanding the information and welcomes questions. I would take her again without any questions asked. My understanding of Developmental Biology has expanded thanks to Dr. V. If there is one thing I want you to take from this rating would be to take her!

 

BIO2110
😎awesome
Aug 24th, 2017
For Credit: Yes
Attendance: Mandatory
Would Take Again: Yes
Textbook: No
I love love love love love love love Dr. V. If I could take her for the rest of my classes that I needed to graduate, I would! She is so caring and sweet. She is VERY helpful! She will meet with you outside of class and she's easy accessible. She really wants her students to achieve. She really knows how to explain what you need to know also!

வணக்கம். உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி. மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்த நிலையை அடைய நிறைய உழைத்தேன்.மிகச்சில மாணவர்களே மினக்கெட்டு  ஒன்லைனில் போடுவார்கள். 2017 முடிய மருத்துவ  கல்லூரியில் சேர்ந்ததால் ஒன்லைன் review கள்  இல்லாமல் போய்விட்டது. அல்லது இன்னும் நிறைய வந்திருக்கும்  மற்றவர்கள் எல்லாம் பல்கலை கழக internal website இல் தான் போடுவார்கள். நிறைய ஈமெயில் அனுப்புவார்கள். பூக்கள், வாழ்த்து மடல்கள், கைவேலைகள் எல்லாம்  எல்லாம் கொண்டுவந்து தருவார்கள். தமக்கு உள்ள கஷ்டங்களை, மனக்குறைகளை சொல்லி ஆறுதல் கேப்பார்கள். அமெரிக்க மாணவர்கள் நன்றாக படித்து உழைப்பவர்கள் . நல்ல  படிப்பிக்கும் ஆசிரியர்களை பெரிதும் மதிப்பார்கள். வேளைக்கு போனால் எனக்கு நேரம் போவதே தெரியாது. மனம் அவ்வளவு சந்தோசமாக இருக்கும். இப்பவும் பழுகாமம் இல்லது சிறுமியர்களுக்கு Skype வகுப்புகள் எடுக்கிறேன் . அநாதை ஏழை சிறுமியர் என்பதால் self confidence வளரவும்  தமது சோசியல்ஸ்டாட்ஸ் ஐ பற்றி களவழி படாமலும் இருக்க professional மற்றும் personal development  சொல்லிக்கொடுக்கிறேன். நிச்சயம்  யாழ்ப்பாணத்தில் கொஞ்சக்காலம் இருந்து எமது மக்களுக்கு ஏதவாது வகையில் உதவ வேண்டும் என்று ஒரேய ஆர்வம். நேற்றுகூட ஒரு யாழ் பத்திரிகை ஆசிரியரோடு இதைப்பற்றி கதைத்தேன். 

அக்கா உங்களின் பசிதீர்க்கும் பணியும் தொடரட்டும் 

 

  • Replies 391
  • Views 59.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2020 at 07:33, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!

தினசரி சுடு தண்ணீர் பருகுவதால் உடலுக்கும் மூட்டு வலிகளுக்கும் நல்லதென பல வலைத்தளங்களில் பகிர்கின்றார்கள். இது எந்தளவிற்கு உண்மை?
அத்துடன் மருந்து மாத்திரைகள் எடுப்பவர்கள் சுடு தண்ணீர் அருந்தலாமா?
மருந்துகள் பாவிப்பவர்கள் மஞ்சள், இஞ்சி போன்றவற்றை உண்ணலாமா?

பொதுவாகவே சுடுதண்ணீர் உடம்புக்கு நல்லம் என்று எல்லோருக்கும் தெரியும். தடிமன், சைனஸ்,தொண்டை நோ, சமிபாடு, உடல் நிறை குறைய (தேன்  சேர்த்து விடிய வெள்ளன குடிக்கலாம், அல்லது சூடான  கிறீன் டீ ( நச்சுப்பொருட்கள் உருவாவதை குறைக்கும் - Freeradicals ), செமிக்க உதவும். சுடுநீர் ( தேசிக்காய் புளி சேர்க்கலாம்) வியர்க்க வைக்கும். அதனுடன் சேர்ந்து நச்சு வாயுக்கள், கழிவுகள் வெளியேறும். சுடுதண்ணி குடிக்கும்போது உடனே தசை சுருங்கும் ஆனால் ரத்த ஓட்டம் அதிகரித்து தசைகள் தளர்வடைந்து ,  தசை , மூட்டு வலிகள் சுகமாகும். எமது ரத்தக்குழாய்களை சுற்றியிருக்கும் தசைகள் சுருங்கி விரிவதாலேயே இரத்த ஓட்டம் ஒழுங்காக நடக்கிறது. சுடுநீர் இதனை சீராக்கி ரத்த அழுத்தத்தை சரிப்படுத்தும். படுக்கபோகும்போது  சுடுநீர் குடித்தால் நிம்மதியான  நித்திரை வரும், இரவில் வரும் food cravings வராது. பொதுவாகவே இளஞ்சூட்டு நீர் தான் உடலுக்கு மிகவும் உவந்தது . எனது அனுபவத்தில் ஓரளவு சுடுதண்ணீர் ஒவ்வொரு நாளும் குடித்தால் நல்லா செமிக்கும் , ஓரளவு மெலியலாம்.  மருந்துகள் எடுப்பவர்கள் கொதிநீரை ஒவ்வொருநாளும் குடிப்பது கூடாதென ஆய்வுகள் கூறுகின்றன.  சுடுதண்ணி குடிப்பவர்கள் இளமையான தோற்றத்துடனும் , நல்ல குணம் படைத்தவர்காளாகும் இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன (இது எனது தந்தைக்கு பொருந்தும்)

இஞ்சி மஞ்சள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் (Zingiberaceae family). Blood pressure diabetes மருந்துகள்  எடுக்கும்போது வயிற்றில் கொஞ்சம் அமிலத்தன்மையை தன்மையை கூட்டும் . ஆனால்  நாங்கள் சிறு வயதில் இருந்தே இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிடுபவர்கள். எமது உடல் இதற்கு பழகி இருக்கும். அத்துடன் உணவில் சேர்த்து சமைப்பதால் இந்த மருந்துகளுடன் interfere பண்ணாது. வெள்ளைகள்  Turmeric , ginger capsules குடிப்பது வழக்கம். அவர்களுக்குத்தான் இவ்வாறான பிரச்சனைகள் வரும். மஞ்சள் இஞ்சியினால் மிகக்கூடிய பலன்கள் உண்டு. அதனால் விலை கூடினாலும் பரவாயில்லை என்று Organic மஞ்சள் இஞ்சி நித்தமும் சமையலில்  பாவிப்பது நன்று.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2020 at 10:48, ரதி said:

சாப்பிட்ட உடனே கிறீன் டீ குடிப்பது உடம்பிற்கு நல்லதா /கூடாதா  என்றும் சொல்லுங்கள் நில்மினி 

தேயிலையில் இருக்கும்  Tannin என்னும் மூலப்பொருள்  எமது சாப்பாட்டில் இருக்கும் புரதம் மற்றும் மாப்பொருட்கள் , அவற்றை சமிபாடடைய செய்யம் நொதியங்கள் இவற்றுடன் தாக்கமடைந்து உணவு செமிப்பதை குறைக்கும். இதனால் செமிக்க மிகவும் நேரம் எடுப்பதுடன் மிகவும் அசௌகரியமாகவும் இருக்கும். என்றபடியால் எந்த தேநீரும் சாப்பிட 2 மணித்தியாலத்துக்கு முன் அல்லது பின் தான் குடிக்க வேணும் ரதி 

Edited by nilmini

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, nilmini said:

பொதுவாகவே சுடுதண்ணீர் உடம்புக்கு நல்லம்

நேரம் எடுத்து விரிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி நில்மினி.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/5/2020 at 06:26, உடையார் said:

 

மன்னிகவும் நில்மினி, உங்கள் பதிவை தவறவிட்டுவிட்டேன். நன்றி பயனுள்ள தகவல்களுக்கு. நான் இப்ப காலை எழுந்தவுடன்  முருங்கை வல்லாரை இலைகளை பொடி செய்து குளிசைகளாக எடுக்கின்றேன், பிள்ளைகளுக்கும் கொடுக்கின்றேன். இதனால் ஏதும் பக்கவிளைவுகள் உண்டா? குளிர் காலங்களில் இவற்றின் இலைகள் கிடைக்கா, அதனால் இப்படி எடுக்க நினைத்தேன். வீட்டுக்குள் தான் காய வைத்தது 

20200506-155202.jpg

 

வணக்கம் உடையார்!
இந்த குளிசைகளை எப்படி செய்கின்றீர்கள்?
இவைகளை கடைகளில் நம்பி வாங்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் உடையார்!
இந்த குளிசைகளை எப்படி செய்கின்றீர்கள்?
இவைகளை கடைகளில் நம்பி வாங்கலாமா?

உடையார் வீட்டிலேயே செய்கிறார் போல.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வணக்கம் உடையார்!
இந்த குளிசைகளை எப்படி செய்கின்றீர்கள்?
இவைகளை கடைகளில் நம்பி வாங்கலாமா?

 

குமாரசாமி, இவை நான் வீட்டில் காய வைத்து பவுடரக்கி செய்தவை. குளிசை செய்யும் இயந்திரமும் குளிசைகளும் ebay இல் வாங்கினேன். கடைசி மகனிடம் கொடுத்தேன் செய்ய சொல்லி, அவர்தான் கிழமைக்கு 200nos செய்வார். நீங்கள் காய்ந்த வல்லாரை முருங்கை இலைகளை தமிழ்கடைகளில் வாங்கி பவுடராக செய்யலாம், இவை கடைகளில் வாங்க முடியாது. அங்கு இல்லாவிட்டால், தேவை என்றால் தனிமடலில் விலாசம் அனுப்புங்கள், என்னிடம் முருங்கை இலை குளிசைகள் அதிகமிருக்கு அனுப்பிவிடுகின்றேன்

குளிசை:

https://www.ebay.com.au/sch/i.html?_nkw=Empty Vegetable Capsules

இயந்திரம்:

https://www.ebay.com.au/itm/100-Holes-Capsule-Filler-Pill-filler-Filling-Machine-for-size-0/164184578360?hash=item263a29d938:g:e-oAAOSwS51er4Dv

https://www.youtube.com/watch?v=uvSkshSX520

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வணக்கம் உடையார்!
இந்த குளிசைகளை எப்படி செய்கின்றீர்கள்?
இவைகளை கடைகளில் நம்பி வாங்கலாமா?

இவை தொடர்ந்து மூன்று கிழமைக்கு மேல் எடுக்கின்றேன், எடுத்து சிறிது நேரத்தில் உடம்பில் ஒரு புத்துணர்வு. நன்றாக வேலை செய்கின்றது. பிள்ளைகளும் விரும்பி எடுக்கின்றார்கள் காலையில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இவை தொடர்ந்து மூன்று கிழமைக்கு மேல் எடுக்கின்றேன், எடுத்து சிறிது நேரத்தில் உடம்பில் ஒரு புத்துணர்வு. நன்றாக வேலை செய்கின்றது. பிள்ளைகளும் விரும்பி எடுக்கின்றார்கள் காலையில்

பதில் போட மிகுந்த நாட்கள் எடுத்துவிட்டேன். மன்னிக்கவும். எனக்குத்தெரிந்து முறைப்படி காயவைத்து பவுடர் பண்ணவேணும் என்று கேள்விப்பட்டேன். அப்படி முறையை பின்பற்றாவிட்டால் அதன் பலன் அவ்வளவு கிடைக்காது என்று. ஆனால் உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கிறது. என்றபடியால் இந்த குளுசைகளை எடுப்பது நன்மைதான். பொதுவாக பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைத்து விற்கப்படும் எதுவும் கூடாது. மற்றம்படி Frozen மற்றும் காயவைத்த உணவுகள் பவுடர்கள் எல்லாமே நல்லம் தான் 

11 hours ago, ஈழப்பிரியன் said:

உடையார் வீட்டிலேயே செய்கிறார் போல.

நான் முருங்கை, வல்லாரை, வேப்பம் பவுடர் capsule களை   ISHA யோகா ஆஸ்ரமத்தில் வாங்கினேன் (அமெரிக்காவிலும் (Mcminville, TN), இந்தியாவிலும் (Coimbatore)  https://www.ishalife.com/usa/catalogsearch/result/?q=+Capsule  https://www.ishalife.com/in/neem-turmeric-powder-in-veg-caps-combo-pack-100nos/

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nilmini said:

பதில் போட மிகுந்த நாட்கள் எடுத்துவிட்டேன். மன்னிக்கவும். எனக்குத்தெரிந்து முறைப்படி காயவைத்து பவுடர் பண்ணவேணும் என்று கேள்விப்பட்டேன். அப்படி முறையை பின்பற்றாவிட்டால் அதன் பலன் அவ்வளவு கிடைக்காது என்று. ஆனால் உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கிறது. என்றபடியால் இந்த குளுசைகளை எடுப்பது நன்மைதான். பொதுவாக பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைத்து விற்கப்படும் எதுவும் கூடாது. மற்றம்படி Frozen மற்றும் காயவைத்த உணவுகள் பவுடர்கள் எல்லாமே நல்லம் தான் 

நான் முருங்கை, வல்லாரை, வேப்பம் பவுடர் capsule களை   ISHA யோகா ஆஸ்ரமத்தில் வாங்கினேன் (அமெரிக்காவிலும் (Mcminville, TN), இந்தியாவிலும் (Coimbatore)  https://www.ishalife.com/usa/catalogsearch/result/?q=+Capsule  https://www.ishalife.com/in/neem-turmeric-powder-in-veg-caps-combo-pack-100nos/

நன்றி நில்மினி உங்கள் பதிலிற்கு. நான் நிழலில் முறையாகதான் காயவைத்தேன், வெயிலில் வைக்கவில்லை. 

20 minutes ago, nilmini said:

 

 

Jogger's Lungs Collapsed After Running With Facemask. Here Is Why You Should Avoid Working Out With Masks

https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/joggers-lungs-collapsed-after-running-with-facemask-here-is-why-you-should-avoid-working-out-with-masks/photostory/75860611.cms?picid=75860645.

முக கவசம் அணிவதனால் சுவாசப்பைக்கு பிரச்சனை உண்டா? 

  • கருத்துக்கள உறவுகள்

 

51 minutes ago, nilmini said:

நான் முருங்கை, வல்லாரை, வேப்பம் பவுடர் capsule களை   ISHA யோகா ஆஸ்ரமத்தில் வாங்கினேன் (அமெரிக்காவிலும் (Mcminville, TN), இந்தியாவிலும் (Coimbatore)  https://www.ishalife.com/usa/catalogsearch/result/?q=+Capsule  https://www.ishalife.com/in/neem-turmeric-powder-in-veg-caps-combo-pack-100nos/

உங்களின் இந்த இணைப்பை பார்த்தவுடன்தான், வேப்பிலை குளிசையும் செய்யம் யோசனை வந்திச்சு, நன்றி இணைப்பிற்கு. 🙏 

உடனே இப்பவே பிடிங்கி காய வைச்சாச்சு, இரண்டு கிழமையில் குளிசைகள்தான் 

Organic Neem Capsules

20200522-111020.jpg

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நன்றி நில்மினி உங்கள் பதிலிற்கு. நான் நிழலில் முறையாகதான் காயவைத்தேன், வெயிலில் வைக்கவில்லை. 

https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/joggers-lungs-collapsed-after-running-with-facemask-here-is-why-you-should-avoid-working-out-with-masks/photostory/75860611.cms?picid=75860645.

முக கவசம் அணிவதனால் சுவாசப்பைக்கு பிரச்சனை உண்டா? 

Mask போட்டுகொண்டு ஓடும்போது சாதாரணமாக உள்ளெடுக்கும் மூச்சை எடுப்பதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டும். அதன்போது இதயத்துடிப்பு அதிகமாகும். அந்தாளுக்கு ஏதாவது இருதய பிரச்சனை இருந்திருக்கலாம். ஏனென்றால் கஸ்ரப்பட்டு மூச்சை எடுக்கும்போது ஏலாமல் போய்விட்டால் ஓடாமல் நின்றுவிடுவார்கள். இந்த jogger  இப்படி  ஆகி விழுமட்டும் ஓடியிருக்கமாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
மலை ஏறுபவர்கள் , SCUBA diving செய்பவர்கள் மாஸ்க்கை போட்டுகொண்டு பயிற்சி செய்வார்கள். அப்படி செய்யும் போது  அவர்களின் நுரையீரல் வலுப்பெற்று  கொஞ்ச ஒட்ஸிசன் இருக்கும்போதும் வலுவாக வேலை செய்யும். மலையில் ஏறும்போது காற்றின் அளவு குறைந்து 8000 மீட்டர் அளவில் மனிதர்களுக்கு தேவையான ஒட்சிசன் அளவு உயிர் வாழ போதாதமல் இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடங்களில் வாசிக்கியும் மக்களின் ரத்தத்தில் செங்குருதி  கலங்கள் அளவு அதிகமாக இருக்கும். ஏனென்றால் அதில் இருக்கும் Hb  தான் ஒட்சிசனை நுரை ஈரலில் இருந்து உடல் முழுதும் கொண்டு செல்லும். எனவே உயர இடங்களில் போய் வாழ்ந்தால் நாளடைவில் செங்குருதி கலங்கள் அதிகமாகிவிடும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, உடையார் said:

உங்களின் இந்த இணைப்பை பார்த்தவுடன்தான், வேப்பிலை குளிசையும் செய்யம் யோசனை வந்திச்சு, நன்றி இணைப்பிற்கு. 🙏 

உடனே இப்பவே பிடிங்கி காய வைச்சாச்சு, இரண்டு கிழமையில் குளிசைகள்தான்

 

என்ன இது விளையாட்டு? ஊர் மாதிரி எல்லா மரங்களும் வீட்டோட இருக்கு போல. எங்களுக்கு இப்ப எரிச்சலாக இருக்கு 😗

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nilmini said:

என்ன இது விளையாட்டு? ஊர் மாதிரி எல்லா மரங்களும் வீட்டோட இருக்கு போல. எங்களுக்கு இப்ப எரிச்சலாக இருக்கு 😗

உங்கள் இடத்தில் எல்லா வகையான மரங்களும் வைக்கக் கூடிய காலநிலை தானே? அப்புறம் என்ன தொடங்க வேண்டியது தானே.

47 minutes ago, உடையார் said:

 

உங்களின் இந்த இணைப்பை பார்த்தவுடன்தான், வேப்பிலை குளிசையும் செய்யம் யோசனை வந்திச்சு, நன்றி இணைப்பிற்கு. 🙏 

உடனே இப்பவே பிடிங்கி காய வைச்சாச்சு, இரண்டு கிழமையில் குளிசைகள்தான் 

Organic Neem Capsules

20200522-111020.jpg

 

 

 

உடையார் எதுக்கும் மனைவியிடம் சொல்லி ஒரு நாவூறு பார்க்கிறது நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கள் இடத்தில் எல்லா வகையான மரங்களும் வைக்கக் கூடிய காலநிலை தானே? அப்புறம் என்ன தொடங்க வேண்டியது தானே.

உடையார் எதுக்கும் மனைவியிடம் சொல்லி ஒரு நாவூறு பார்க்கிறது நல்லது.

அலபாமா tropical பெல்ட்டுக்கு நல்ல மேல இருக்கு. என்றபடியால் 3, 4 வருசத்துக்கு ஒருக்கா snow வே வரும். 3 மாசம் நல்ல குளிர். ஒரு மரமும் தப்பாது. என்றாலும் எரிச்சல் பழக்கம் கூடாதுதான்😀

உடையார் வேப்பிலையாலேயே  சுத்திப்போடச்சொல்லுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nilmini said:

உடையார் வேப்பிலையாலேயே  சுத்திப்போடச்சொல்லுங்கோ 

அப்புறம் ஆடத் தொடங்கினால் என்னவாம் செய்யிறது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

Mask போட்டுகொண்டு ஓடும்போது சாதாரணமாக உள்ளெடுக்கும் மூச்சை எடுப்பதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டும். அதன்போது இதயத்துடிப்பு அதிகமாகும். அந்தாளுக்கு ஏதாவது இருதய பிரச்சனை இருந்திருக்கலாம். ஏனென்றால் கஸ்ரப்பட்டு மூச்சை எடுக்கும்போது ஏலாமல் போய்விட்டால் ஓடாமல் நின்றுவிடுவார்கள். இந்த jogger  இப்படி  ஆகி விழுமட்டும் ஓடியிருக்கமாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
மலை ஏறுபவர்கள் , SCUBA diving செய்பவர்கள் மாஸ்க்கை போட்டுகொண்டு பயிற்சி செய்வார்கள். அப்படி செய்யும் போது  அவர்களின் நுரையீரல் வலுப்பெற்று  கொஞ்ச ஒட்ஸிசன் இருக்கும்போதும் வலுவாக வேலை செய்யும். மலையில் ஏறும்போது காற்றின் அளவு குறைந்து 8000 மீட்டர் அளவில் மனிதர்களுக்கு தேவையான ஒட்சிசன் அளவு உயிர் வாழ போதாதமல் இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடங்களில் வாசிக்கியும் மக்களின் ரத்தத்தில் செங்குருதி  கலங்கள் அளவு அதிகமாக இருக்கும். ஏனென்றால் அதில் இருக்கும் Hb  தான் ஒட்சிசனை நுரை ஈரலில் இருந்து உடல் முழுதும் கொண்டு செல்லும். எனவே உயர இடங்களில் போய் வாழ்ந்தால் நாளடைவில் செங்குருதி கலங்கள் அதிகமாகிவிடும் 

நன்றி விளக்கத்திற்கு. இப்ப விளங்குகின்றது. 

1 hour ago, nilmini said:

என்ன இது விளையாட்டு? ஊர் மாதிரி எல்லா மரங்களும் வீட்டோட இருக்கு போல. எங்களுக்கு இப்ப எரிச்சலாக இருக்கு 😗

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

உங்கள் இடத்தில் எல்லா வகையான மரங்களும் வைக்கக் கூடிய காலநிலை தானே? அப்புறம் என்ன தொடங்க வேண்டியது தானே.

உடையார் எதுக்கும் மனைவியிடம் சொல்லி ஒரு நாவூறு பார்க்கிறது நல்லது.

 

47 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் ஆடத் தொடங்கினால் என்னவாம் செய்யிறது?

ஆமாம் நில்மினி, இது நான் தேடி வாங்கி வைத்தது. எல்லா வீடுகளிலுமில்லை. முதலிருந்த வீட்டில் வேம்பு வைத்து பூ பிடுங்கி வடகமே செய்தனான்😀😃.  இப்ப வைத்தது இன்னும் சில வருடம் செல்லும்போலிருக்கு பூப்பதற்கு. 

சுத்திப்போடுகின்றேன் மனைவியிடம் சொல்லி  😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

 

உங்களின் இந்த இணைப்பை பார்த்தவுடன்தான், வேப்பிலை குளிசையும் செய்யம் யோசனை வந்திச்சு, நன்றி இணைப்பிற்கு. 🙏 

உடனே இப்பவே பிடிங்கி காய வைச்சாச்சு, இரண்டு கிழமையில் குளிசைகள்தான் 

Organic Neem Capsules

20200522-111020.jpg

 

 

 

"உடையார்".... மெல்ல மெல்ல,  "பரியாரியார்"  ஆகிக் கொண்டு வருகிறார். வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, உடையார் said:

 

குமாரசாமி, இவை நான் வீட்டில் காய வைத்து பவுடரக்கி செய்தவை. குளிசை செய்யும் இயந்திரமும் குளிசைகளும் ebay இல் வாங்கினேன். கடைசி மகனிடம் கொடுத்தேன் செய்ய சொல்லி, அவர்தான் கிழமைக்கு 200nos செய்வார். நீங்கள் காய்ந்த வல்லாரை முருங்கை இலைகளை தமிழ்கடைகளில் வாங்கி பவுடராக செய்யலாம், இவை கடைகளில் வாங்க முடியாது. அங்கு இல்லாவிட்டால், தேவை என்றால் தனிமடலில் விலாசம் அனுப்புங்கள், என்னிடம் முருங்கை இலை குளிசைகள் அதிகமிருக்கு அனுப்பிவிடுகின்றேன்

குளிசை:

https://www.ebay.com.au/sch/i.html?_nkw=Empty Vegetable Capsules

இயந்திரம்:

https://www.ebay.com.au/itm/100-Holes-Capsule-Filler-Pill-filler-Filling-Machine-for-size-0/164184578360?hash=item263a29d938:g:e-oAAOSwS51er4Dv

https://www.youtube.com/watch?v=uvSkshSX520

உடையார்!   உங்கள் நல்ல மனதிற்கு மிக்க நன்றி.எல்லோருக்கும் இந்த மனது வராது.
கடவுளின் கிருபை உங்களுக்கு என்றும் இருக்க வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

என்ன இது விளையாட்டு? ஊர் மாதிரி எல்லா மரங்களும் வீட்டோட இருக்கு போல. எங்களுக்கு இப்ப எரிச்சலாக இருக்கு 😗

நான் இதை முதலே எழுதி விட்டேன்....எல்லாம் அவரின் வீட்டு  வளவுக்குள் இருப்பதால் தான்  அவருக்கு ஊருக்கு போக வேண்டிய தேவையில்லை 🙂
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

"உடையார்".... மெல்ல மெல்ல,  "பரியாரியார்"  ஆகிக் கொண்டு வருகிறார். வாழ்த்துக்கள். :)

உடையார் கிராம வாசனை உள்ள ஆள் எண்டு நான் நினைக்கிறன்.

சிறித்தம்பி! ஊர்மனகளிலை இருக்கிற சனங்கள் கூடுதலாய் சாப்பிடுற சாப்பாடே கிட்டத்தட்ட மருந்து போலதான்.
வேலியிலை படருற தூதுவளை தொடக்கம் குப்பையிலை முளைக்கிற குப்பைக்கீரை வரைக்கும் மருந்துதான்.
தேங்காய்ப்பூ கீரை எண்டு ஒரு கீரை இருக்கு.அதை அவிச்சு குடிச்சாலே வயித்திலை இருக்கிற அத்தனை கோளாறுகளும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

ஏனென்றால் கஸ்ரப்பட்டு மூச்சை எடுக்கும்போது ஏலாமல் போய்விட்டால் ஓடாமல் நின்றுவிடுவார்கள். இந்த jogger  இப்படி  ஆகி விழுமட்டும் ஓடியிருக்கமாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்.

உடற் பயிற்சியை உரிய முறையில் செய்வதற்ககான முறைகள் விளக்கத்துடன், படத்துடனும், வீடியோ உடனும்.

UK இன் public health and  medical service ஆல் வெளியிடப்பட்டது. 

அநேகமான அறிவுறுத்தல்கள், பயிற்சிகள் lock down வரைக்கும் update பண்ணி உள்ளார்கள்.

உள் சென்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, ஆரம்பிப்பது நன்று.  

https://www.nhs.uk/live-well/exercise/

ற்றும் உடல் நலத்தை பொதுபவாக பராமரிக்க வேண்டிய பொது அறிவுறுத்தல்கள்.

https://www.nhs.uk/live-well

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உடையார் கிராம வாசனை உள்ள ஆள் எண்டு நான் நினைக்கிறன்.

சிறித்தம்பி! ஊர்மனகளிலை இருக்கிற சனங்கள் கூடுதலாய் சாப்பிடுற சாப்பாடே கிட்டத்தட்ட மருந்து போலதான்.
வேலியிலை படருற தூதுவளை தொடக்கம் குப்பையிலை முளைக்கிற குப்பைக்கீரை வரைக்கும் மருந்துதான்.
தேங்காய்ப்பூ கீரை எண்டு ஒரு கீரை இருக்கு.அதை அவிச்சு குடிச்சாலே வயித்திலை இருக்கிற அத்தனை கோளாறுகளும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.:cool:

சிறுநீரகக் கற்களை கரைக்க உதவும் ... 

நச்சுக்கள் :

குமாரசாமி அண்ணா.... உடையாருக்கு, ஊரில் உள்ள மரங்களை... 
வளர்க்கக் கூடிய, கால நிலை உள்ள நாட்டில் வாழ்வதும்...
எமது மூலிகை உணவுகள்  மீது, ஆர்வம் இருப்பதும்... நன்றாக அமைந்துள்ளது.

தேங்காய்ப்பூ கீரை...  எமது வளவிலும், தன்னுடைய பாட்டில் வளரும் ஒரு தாவரம்.
அதனை அப்பா... அடிக்கடி அவித்து குடிப்பார். அப்போது அதன் அருமை தெரியவில்லை.
இப்போ... அதனை நினைத்து ஏங்க வேண்டி உள்ளது.

தேங்காய்ப்பூ கீரையை... தமிழ்நாட்டில்  பொங்கல் பூ என்றும்,  சிறுபீளைச் செடி என்றும் சொல்வார்கள்.  சிறுநீரக பிரச்சினைக்கு.. நல்ல மருந்தாம். :)

அங்கு,  இப்போ... இதனை பெரும் தோட்டப் பயிராகவே செய்கிறார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உடையார் கிராம வாசனை உள்ள ஆள் எண்டு நான் நினைக்கிறன்.

சிறித்தம்பி! ஊர்மனகளிலை இருக்கிற சனங்கள் கூடுதலாய் சாப்பிடுற சாப்பாடே கிட்டத்தட்ட மருந்து போலதான்.
வேலியிலை படருற தூதுவளை தொடக்கம் குப்பையிலை முளைக்கிற குப்பைக்கீரை வரைக்கும் மருந்துதான்.
தேங்காய்ப்பூ கீரை எண்டு ஒரு கீரை இருக்கு.அதை அவிச்சு குடிச்சாலே வயித்திலை இருக்கிற அத்தனை கோளாறுகளும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.:cool:

குமாரசாமி, நான் வளர்ந்தது ஒரு அழகிய சிறிய கிராமம் அந்த கிரமத்தை சுற்றி வயலும் காடுதான், எங்கள் ஊரில் ஒரு 20 குடும்பங்கள் இருக்கும், எல்லாரும் சொந்தம் ஒருவர் வீட்டில் ஒருவர் மாறி சாப்பிடுவோம், பெடியள வாசிக சாலையில்தான் முழு நேரமும் இரவு படுப்பது முதல், அப்படியொரு சந்தோஷமான கவலையற்ற வாழ்க்கை, இரவு பன்னிரண்டு மணிக்கு சுட சுட பாண் வாங்கி வந்து சம்பலுடன் சப்பிடுவோம், பனையேறி களவாக கள் இறக்கி குடிப்போம், நான் நன்றாக ஏறுவேன் பனை, ஏறி இருந்து குடித்துவிட்டு, மிகுதியை இறக்கி கொண்டுவருவேன், தேவாமிர்தம். இரவு ........குளத்து விசி கிணற்றில் நில வெளிச்சத்தில் நீச்சல் அடிப்போம், யாரும் எங்களை கேள்வி கேட்கமாட்டார்கள், அப்படி வளர்ந்தோம் ஒற்றுமையாக. அந்த நினைவுகள் இறக்கும்வரை பசுமையாக இருக்கும். கவலையற்ற வாழ்க்கை ஊரோடு.

இப்ப எங்கள் கிராமில்லை, ஒரே காடுதான்.  தனால் எனக்கு அங்கு போக விருப்பமில்லை, இங்கேயே இருக்கப்போகின்றேன், ஆனா, என் மக்களுக்கு ஏதவாது நல்லது செய்துவிட்டுதான் இறப்பேன், அதுதான் என் கடைசி ஆசை. பல திட்டங்களிருக்கு, செயல் வடிவத்திற்க்கு இன்னும் நாட்கள் தேவை. பிள்ளைகளை கரையேற்றிவிட்டால் என் உழைப்பு முழுக்க மக்களின் முன்னேற்றத்திற்குதான் 

5 hours ago, தமிழ் சிறி said:

"உடையார்".... மெல்ல மெல்ல,  "பரியாரியார்"  ஆகிக் கொண்டு வருகிறார். வாழ்த்துக்கள். :)

நான் வளர்ந்த தே ஒரு உடையாருடன்தான், அவர் இயற்க்கையுடன் வாழ்ந்தார், பிள்ளைகளில்லை, நாங்கள்தான் பிள்ளைகள், நல்லதொரு மனிதர், அப்படியொரு ஆசான் கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும்🙏, இப்ப அவரில்லை. 😪😪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 22/5/2020 at 06:07, nilmini said:

 

வணக்கம்! மீண்டும் ஒரு அலுப்புக் கேள்வியுடன்.......

அக்குபஞ்சர் சிகிச்சை  மூட்டுவலிகளுக்கு பலன் தருமென சொல்கிறார்கள். இதனால் பின்விளைவுகள் ஏதேனும் இருக்கின்றதா?

எனக்கு பதில் சொல்லுறதுக்கு முதல் தேங்காய் எண்ணை நல்லதோ எண்டு கேட்டுப்போட்டு  அங்கை ஒராள்  காய்ஞ்சு போய் நிக்கிறார் அவருக்கு  பதிலை சொல்லீட்டு எனக்கு ஆறுதலாய் சொல்லலாம்.😁

Is Cosmetic Acupuncture The New Botox?

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.