Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஆசனம்தான் கிடைக்குமென்றால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன்- டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Duglas-Devananda-Kalmunai-Peoples-Meeting.jpg

ஒரு ஆசனம்தான் கிடைக்குமென்றால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன்- டக்ளஸ்

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தால் அடுத்த ஐந்து வருடத்தின் பின்னர் ஓய்வு பெறவுள்ளதாகவும் பின்னர் அரசியல் செய்யப்போவதில்லை எனவும் கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அம்பாறை, கல்முனையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இக்கருத்தினை முன்வைத்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ஐக்கியம் பற்றிப் பேச்சு மாத்திரம் இறுதிவரை இருக்கின்றது. செயல்வடிவம் கொடுப்பது பற்றி பேச வேண்டும். நாங்கள் தயாராக இருக்கின்றோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது போல இருக்க வேண்டும்.

மக்களுக்கு தேசிய நல்லிணக்கம் அவசியமில்லாமல் எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. நாங்கள் கட்சி சார்ந்து இருந்தாலும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வுக்கு எம்மால் முடியும்.

அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதைப் போன்று எங்களுக்கு 5 ஆசனம் இருந்தால் போதும். அதனால்தான் மக்கள் ஆணையைப் பெறுவதற்காக வடக்கு கிழக்கில் தனித்துப் போட்டியிடுகிறோம். அத்துடன் பழிவாங்கும் எண்ணம் இருக்குமானால் நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை. நாங்கள் அன்று என்ன சொன்னோமோ அதுதான் இன்று நடந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

http://athavannews.com/ஒரு-ஆசனம்-மட்டுமே-கிடைத்/

  • கருத்துக்கள உறவுகள்

screenshot-2020-03-13-16-47-17.png 

  ======== வணக்கம் ======== 👍

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தால் அடுத்த ஐந்து வருடத்தின் பின்னர் ஓய்வு பெறவுள்ளதாகவும் பின்னர் அரசியல் செய்யப்போவதில்லை எனவும் கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அது என்ன அடுத்த ஐந்து வருடத்தின் பின் ஒய்வு. பேரப்புள்ள பூட்டபுள்ள பாத்திட்டு போறதா எண்ணமோ. நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுவ.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களை விரக்தியின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்களில் முதன்மையானவர்களாக இருப்பவர்கள் சம்பந்தரும், சுமந்திரனும் என்பது சொல்லித் தெரிவேண்டியதில்லை. சிங்கள அரசுக்கு முண்டுகொடுத்து இன்றுவரை அதனைக் காப்பாற்றி வந்தவர்கள் இவர்களே. இவர்களால் தமழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது எனபதை பெரும்பான்மையான தமிழர்கள் உணரத்தொடங்கிவிட்டதையும் 'ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி' என்ற நிலைக்கு அவர்கள் வந்துவிட்டதையும்,  டக்ளசு நன்றாகப் புரிந்துகொண்டதால்தான் இப்படி ஒரு அறிவித்தலை அவர் தயக்கமின்றி வெளியிட உதவியுள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தால் அடுத்த ஐந்து வருடத்தின் பின்னர் ஓய்வு பெறவுள்ளதாகவும் பின்னர் அரசியல் செய்யப்போவதில்லை

 எஜமானை சர்வதேச நெருக்கடியில் மீட்பதற்கு  ஒரு ஆசனம் போதாது. ஆனால் சுருட்டக்  கூடியதை சுருட்ட, தமிழர் பிரதேசத்தை சிங்களமயமாக்க உழைக்க  ஐந்து வருடம் தேவையாய் இருக்கு. அதன்பின் தமிழர் யார் இருப்பார் இவருக்கு வாக்களிக்க?

14 hours ago, தமிழ் சிறி said:

ஒரு ஆசனம்தான் கிடைக்குமென்றால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன்- டக்ளஸ்

மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்டு சொல்லி ஏமாத்தினத்தை யாரும் மறந்துவிடேல்லை.

ஒரு சீட் கிடைத்தாலே பெரிய காரியம்। இதுக்கு மேலயும் ஐயா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் எண்டால் அது நப்பாசைதான்। சில வேளைகளில் இந்த தேர்தலோடையே நீங்கள் ஒதுங்க நேரிடும்। எனவே ஒரு சீட்டாவது எடுக்க முயட்சி பன்னுங்கா। பேராசை பெரும் தரித்திரம்। 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்படி எத்தனை தரம் ஓய்வெடுத்திட்டார்.

1996 இல் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை காலத்தில்.. புலிகள் பேச்சுக்கு வரமுடியாது என்று தெரிந்து கொண்டு.. புலிகள் பேச்சுக்கு வந்தால்.. நான் அரசியலில் இருந்து விலகுவேன் என்றார்.  பின்னர் புலிகள் பேச்சுக்குப் போனார்கள்.. ஆனால்.. இவர் விலகவில்லை. 

அதன் பின்.. 2006 மாவிலாறு யுத்த காலத்தில்.. பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டால்.. எனக்கு அரசியல் தேவை இல்லை.. அரசியலில் இருந்து முற்றாக விலகுவேன் என்றார். பிரபாகரன் மட்டுமல்ல.. புலிகளே தோற்கடிக்கப்பட்டார்கள்.. இவர் விலகவில்லை. 

இப்ப இப்படி... இதுகளுக்கு எல்லாம் மான ரோசமே கிடையாது. அங்கால.. சம் சும் சாவை மாவை கும்பல். இங்கால.. இவர். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.