Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா பீதி: நாட்டு மக்களுக்கு தமிழில் ருவிட்டர் பதிவிட்டுள்ள ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gotabaya-1.jpg

கொரோனா பீதி: நாட்டு மக்களுக்கு தமிழில் ருவிட்டர் பதிவிட்டுள்ள ஜனாதிபதி

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதன் காரணமாக இன்றைய தினம் அரசவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் கணக்கிலேயே இவ்வாறு அவர் தமிழில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ,பொது இடங்களில் கூடவோ வேண்டாம்.

கட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுங்கள். உங்களையும் ஏனையோரையும் பாதுகாக்கவும்” என பதிவிட்டுள்ளார்.

"குறித்த பதிவில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ,பொது இடங்களில் கூடவோ வேண்டாம்.

கட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுங்கள். உங்களையும் ஏனையோரையும் பாதுகாக்கவும்” என பதிவிட்டுள்ளார்"

எத்தனை தமிழ் மக்கள் குறுங்செய்தியை வைத்துள்ளார்கள் என தெரியவில்லை. அதேவேளை, சுகாதார அமைச்சின் அறிவிப்புக்கள் தமிழில் இல்லை எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது. 

இலங்கையர் என்ற ரீதியில் நாம் எமது ஜனாதிபதியின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்। நல்ல கருத்து அதை கடைப்பிடிக்க வேண்டும்।

இதுவரை கொரோனா வைரஸ் பற்றிய சகல அரச மருத்துவ எச்சரிக்கைகளும் ஆலோசனைகளும் சிங்களத்திலேயே வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் பல அரச அறிவித்தல்களில் தமிழ் முற்றாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என அறிய தனிமைப்படுத்தும் இடங்களை பெருமளவில் தமிழர் பகுதியில் அமைத்த ஒரு மிலேச்ச போர்க்குற்றவாளி தேர்தல் காலத்தில் வீசும் கபட தூண்டில் இந்த ருவிட்டர் !

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் உண்மையான அக்கறை உள்ளவர்கள் எக்காலத்திலும் இது போன்ற போர்க்குற்றவாளிகள் நடவடிக்கைகளில் அவதானமாகவே இருக்க வேண்டும்.

போர்க்குற்றவாளிகளின்  ஒற்றர்கள் இதை ஆகா ஓகோ என்று பாராட்ட முனையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Vankalayan said:

இலங்கையர் என்ற ரீதியில் நாம் எமது ஜனாதிபதியின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்। நல்ல கருத்து அதை கடைப்பிடிக்க வேண்டும்।

உங்கள் ஜனாதிபதி ஒரு போர் குற்றவாளி .

  • கருத்துக்கள உறவுகள்

297716c4455b413475a5d79ce1e29799.jpgசும்மா அங்கன ஏ.சி அறையில் அமர்ந்து " நட்டை லூஸ் பண்ணிக்க .. அதை ரைட் பண்ணு.." என்பதை விடுத்து.. மாண்புமிகு சனாதிபதி அவர்கள் மக்களோடு மக்களாக இணைந்து செயற்பட வேண்டும்..

கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் சொல்ல வேண்டும்..👌

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அங்கன ஏ.சி அறையில் அமர்ந்து " நட்டை லூஸ் பண்ணிக்க .. அதை ரைட் பண்ணு.." என்பதை விடுத்து.. மாண்புமிகு சனாதிபதி அவர்கள் மக்களோடு மக்களாக இணைந்து செயற்பட வேண்டும்..

கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் சொல்ல வேண்டும்..👌

தோழர்   இலங்கையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் 28 இவர்கள் 28 பேருக்கும் நேரில் ஆறுதல் சொல்வது எப்படி என்பதை பெரியவர்களான மோடி இந்தியாவில் பாதிக்கபட்டவர்கள் 129 பேருக்கும் அமெரிக்காவில் பாதிக்கபட்ட 4108 பேருக்கு ட்ரம்பும் செய்து  காட்டலாமே 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தோழர்   இலங்கையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் 28 இவர்கள் 28 பேருக்கும் நேரில் ஆறுதல் சொல்வது எப்படி என்பதை பெரியவர்களான மோடி இந்தியாவில் பாதிக்கபட்டவர்கள் 129 பேருக்கும் அமெரிக்காவில் பாதிக்கபட்ட 4108 பேருக்கு ட்ரம்பும் செய்து  காட்டலாமே 

நான் மறுக்கவில்லையே தோழர் அனைவரும் செய்து காட்டவேண்டும்.. 👍 குறிப்பாக தீவிரவாதத்தை ஒழித்து.. மக்களிடையே சமூக நல்லிணக்கம், ஐக்கியம்,சுதந்திரம் நிலைநாட்ட பாடுபட்டவர்கள் இப்படியான சூழலில் முன்னிலை வகிக்க வேண்டும் என்பதே என் ஆவல்..☺️

16 hours ago, பெருமாள் said:

உங்கள் ஜனாதிபதி ஒரு போர் குற்றவாளி .

யாராவது நடவடிக்கை எடுக்கலாமே। அதை விட்டுப்போட்டு இணையதள போராளிகளாக இங்கு எழுதுவதில் வேலை இல்லை।

இலங்கையர்கள் இலங்கை அரசுக்கு ஒற்றர் வேலை பார்ப்பதில் தவறில்லை। சிலர் வெளி நாடுகளுக்கு ஒற்றர்  வேலை பார்க்கிறார்கள்। அவர்களைத்தான் முதலில் பிடித்து அடைக்க வேண்டும்।

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Vankalayan said:

யாராவது நடவடிக்கை எடுக்கலாமே। அதை விட்டுப்போட்டு இணையதள போராளிகளாக இங்கு எழுதுவதில் வேலை இல்லை।

இலங்கையர்கள் இலங்கை அரசுக்கு ஒற்றர் வேலை பார்ப்பதில் தவறில்லை। சிலர் வெளி நாடுகளுக்கு ஒற்றர்  வேலை பார்க்கிறார்கள்। அவர்களைத்தான் முதலில் பிடித்து அடைக்க வேண்டும்।

நடவடிக்கை எடுத்தால் வெளிநாடுகளுக்கு ஒற்றர் வேலை செய்கிறார்கள் என்கிறீர்கள் .

சொறிலங்காவானுக்கு  சிங்களவன் ஒற்றர் வேலை பார்ப்பது நியாயம் தமிழர்கள் ஏன் போகணும் ?

யார் சொன்னது இணையதள போராளி என்றாலும் சொறிலங்காவில் தமிழ ர்களுக்கு நடக்கும் அநியாயத்துக்கு குமுறுகிறார்கள்  தமிழரசு கூட்டம் போல் இல்லையே ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.