Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் வணக்கம் சொல்கின்றோம்? வணக்கம் என்றால் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஏன் வணக்கம் சொல்கின்றோம்?  வணக்கம் என்றால் என்ன?

(What is Vanakam in Tamil?)

“வணக்கம்” என்ற சொல் தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் இனக்காட்டுகின்ற அரிய கருவூலமாய் உள்ளது. வணக்கம் என்ற சொல் நம் தமிழ்ப் பாரம்பரியத்தைச் சுட்டுகின்ற; காக்கின்றதோடு மட்டுமல்லாமல் உயரிய ஆன்மீகச் சிந்தனையையும் தன்னிடத்தே அடக்கியுள்ளதென்பதை இனி சிந்திப்போம்.

வணக்கம் என்பதைச் சிலர் ஆங்கிலத்தில் “குட் மோர்னிங்” அல்லது தேசிய மொழியில் “சிலாமாட் பாகி” என்று சுட்டுவது போன்று எண்ணுகிறார்கள். இது தவறு. “குட் மோர்னிங்” என்றால் நல்ல காலைப்பொழுதாகட்டும் என்று விளிப்பது. “சிலாமாட் பாகி” என்றால் நல்ல பாதுகாப்பான நலமான பொழுதாக அமையட்டும் என்று பொருள்படும். ஆனால் வணக்கம் என்கின்றபோது. உங்கள் உயிரில் கலந்துள்ள இறைவனை நான் வணக்குகின்றேன் என்று பொருள்படுகிறது. ஒருவரைப் பார்த்து வணக்கம் என்று கூறும்போது அவர் முகத்துக்கு மட்டுமல்லாமல் அவர் உயிரில் கலந்துள்ள இறைவனை வணங்குவதாய் எண்ணி வணங்குகிறோம். எனவேதான் வணக்கம் என்பது ஒரு வழிபாட்டிற்குச் சமம் என்று ஆன்றோர் கூறுவர். மேலும் இதன் காரணமாகத்தான் வணக்கம் கூறுகின்றபோது காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம் என்று நாம் கூறுவதில்லை. அப்படிக் கூறுவதும் அயல் கலாச்சாரத்தின் தாக்கத்தினாலேதான்.

வணக்கம் கூறும் பொழுது இரண்டு கைகளையும் கூப்பிக்கூற வேண்டும் என்பதை நம் முன்னோர் வலியுறுத்தி இருக்கின்றனர். இதற்கு அறிவியல் சார்ந்த அறிவார்த்தமான பொருளுண்டு. நமக்குத் தலையில் இடது பக்க மூளை வலது பக்க மூளை என்பவை உண்டு. நாம் நம் இரு கைகளையும் கூப்பி வணக்கம் கூறுகையில் நம் உடல் முழுக்க ஆற்றல் செயல்பட்டு, நமது இடது பக்க மூளையும் வலது பக்க மூளையும் முழு விழிப்பு நிலையினை அடைந்து, நாம் முழு விழிப்பு நிலையில் உங்கள் உயிரில் கலந்துள்ள இறைவனை நான் வணங்குகின்றேன் என்று செயல்படுகின்றோம். எனவே வணக்கம் கூறுகையில் இரண்டு கைகளையும் கூப்பிக் கூற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. சிலர் ஒரு கையை மட்டும் உயர்த்துவது, இன்னும் சிலர் வெறும் “ஊம்” என்று மட்டும் சொல்வது இன்னும் சிலர் அதைக் காலத்தால் பின்தங்கியவர்கள் செய்வது என்று எண்ணுவது தவிர்க்கப்பட வேண்டியது.

 

https://youtu.be/v8sSn01JUvw

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து....கு. சா.....உங்களுக்கு வணக்கம்......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

vanakkam.0.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, suvy said:

நல்ல கருத்து....கு. சா.....உங்களுக்கு வணக்கம்......!  🙏

வணக்கம்.......🙏🏿
அதில்லை பாருங்கோ எங்கடை முறையிலை வணக்கம் சொல்லுறதிலையும் சுத்தம் சுகாதாரம் எல்லாம் இருக்கெண்டு கொரோனாவும் உணர்த்தியிருக்கெல்லோ :cool:

14 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

vanakkam.0.gif

வணக்கம் புரட்சியர்...🙏🏿
இப்பிடியும் சொல்லலாமாம்😄

Rajinikanth Padaiyappa GIF | Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

ஏன் வணக்கம் சொல்கின்றோம்?  வணக்கம் என்றால் என்ன?

(What is Vanakam in Tamil?)

“வணக்கம்” என்ற சொல் தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் இனக்காட்டுகின்ற அரிய கருவூலமாய் உள்ளது. வணக்கம் என்ற சொல் நம் தமிழ்ப் பாரம்பரியத்தைச் சுட்டுகின்ற; காக்கின்றதோடு மட்டுமல்லாமல் உயரிய ஆன்மீகச் சிந்தனையையும் தன்னிடத்தே அடக்கியுள்ளதென்பதை இனி சிந்திப்போம்.

வணக்கம் என்பதைச் சிலர் ஆங்கிலத்தில் “குட் மோர்னிங்” அல்லது தேசிய மொழியில் “சிலாமாட் பாகி” என்று சுட்டுவது போன்று எண்ணுகிறார்கள். இது தவறு. “குட் மோர்னிங்” என்றால் நல்ல காலைப்பொழுதாகட்டும் என்று விளிப்பது. “சிலாமாட் பாகி” என்றால் நல்ல பாதுகாப்பான நலமான பொழுதாக அமையட்டும் என்று பொருள்படும். ஆனால் வணக்கம் என்கின்றபோது. உங்கள் உயிரில் கலந்துள்ள இறைவனை நான் வணக்குகின்றேன் என்று பொருள்படுகிறது. ஒருவரைப் பார்த்து வணக்கம் என்று கூறும்போது அவர் முகத்துக்கு மட்டுமல்லாமல் அவர் உயிரில் கலந்துள்ள இறைவனை வணங்குவதாய் எண்ணி வணங்குகிறோம். எனவேதான் வணக்கம் என்பது ஒரு வழிபாட்டிற்குச் சமம் என்று ஆன்றோர் கூறுவர். மேலும் இதன் காரணமாகத்தான் வணக்கம் கூறுகின்றபோது காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம் என்று நாம் கூறுவதில்லை. அப்படிக் கூறுவதும் அயல் கலாச்சாரத்தின் தாக்கத்தினாலேதான்.

வணக்கம் கூறும் பொழுது இரண்டு கைகளையும் கூப்பிக்கூற வேண்டும் என்பதை நம் முன்னோர் வலியுறுத்தி இருக்கின்றனர். இதற்கு அறிவியல் சார்ந்த அறிவார்த்தமான பொருளுண்டு. நமக்குத் தலையில் இடது பக்க மூளை வலது பக்க மூளை என்பவை உண்டு. நாம் நம் இரு கைகளையும் கூப்பி வணக்கம் கூறுகையில் நம் உடல் முழுக்க ஆற்றல் செயல்பட்டு, நமது இடது பக்க மூளையும் வலது பக்க மூளையும் முழு விழிப்பு நிலையினை அடைந்து, நாம் முழு விழிப்பு நிலையில் உங்கள் உயிரில் கலந்துள்ள இறைவனை நான் வணங்குகின்றேன் என்று செயல்படுகின்றோம். எனவே வணக்கம் கூறுகையில் இரண்டு கைகளையும் கூப்பிக் கூற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. சிலர் ஒரு கையை மட்டும் உயர்த்துவது, இன்னும் சிலர் வெறும் “ஊம்” என்று மட்டும் சொல்வது இன்னும் சிலர் அதைக் காலத்தால் பின்தங்கியவர்கள் செய்வது என்று எண்ணுவது தவிர்க்கப்பட வேண்டியது.

 

https://youtu.be/v8sSn01JUvw

 

 

இதுக்கும் பெருமைக்குள்ளும் ஒரு கூட்டம்
பின்பு தமிழனையும் அவன் அரசுகளையும் அழிக்க 
பார்ப்பான் புனைந்த கதை அசிங்கங்களுக்கும்  பெருமையோடு 
காவடியாடும் ஒரு லூசு கூட்டமாக இருக்கிறதே? என்றால்  

ரோமில் இல்லையா  ருமேனியாவில் இல்லையா என்று வாதம் செய்யும் 
இல்லாதவனுக்கும் இருக்கிறதை அழிக்கும் மூடருக்கும் இடையில் 
இருக்கும் இடைவெளியை கூட புரிந்துகொள்ளும் ஓர் அறிவற்ற 
நடைப்பிணமாக பார்ப்பான் மாற்றி வைத்து இருக்கிறான். 

மனிதர்கள் ஒருவரை ஒருவர் கண்டவுடன் greeting  செய்வது  சக மனிதன் மீது தனக்கு இருக்கும் கெளரவத்தை வெளிப்படுத்தவே. இது உலக நாடுகளில் நடைமுறையில் இருக்கும் பழக்கம்.  இதை தமிழில் தமிழில் வணக்கம் என்ற வார்த்தை பிரயோகத்தின் மூலம் தமிழர்கள் வெளிபடுத்துவர். இதற்கு அர்த்தம் சக மனிதனை சம்மாக மதிக்கும் பண்பே. இதற்கு வேறு அரத்தம் எதுவும் இல்லை.  இதில் துதி பாடலுக்கு இடமில்லை. ஆன்மீகம் என்ற பெயரில் துதி பாடுவதை விரும்பும் வருணா சிரம சாக்கடையை  தமிழர்களிடம் புகுத்திய ஒரு கும்பல்  தமிழகத்தில்  ''கும்பிறன் சாமி'' என்ற அடிமை தமிழை முன்பு அறிமுகபடுத்தி இருந்த‍து. தன்னை பார்த்து  துண்டை எடுத்து இடுப்பில் கட்டி ''கும்பிறன் சாமி'' என்ற கூறும் மனிதனுக்கு திருப்பி எதுவும் சொல்லாமல் திமிரோடு அவனை கடந்து செல்லும் நடைமுறையை  அந்த கும்பல் தமிழர்களிடம் 20 ம் நூற்றாண்டில் ஆரம்ப காலம் வரை  நடைமுறைபடுத்தி இருந்த‍து. 

ஈழத்தை பொறுத்த வரை நடைமுறை வாழ்வில் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டவுடன் ''வணக்கம்'' என்று கூறும் நடைமுறையை அங்கு  ஏற்படுத்தியவர்கள் புலம் பெயர் ஈழத்த‍மிழரே. இதை எவரும் மறுக்க முடியாது. தாம் வாழும் நாடுகளில் மற்றைய இன மக்களிடம் தாம் அவதானித்த அந்த நல்ல பழக்கத்தை தமது தாயகத்திற்கும் அறிமுகபடுத்தியவர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களே. ஆனால் இன்றும் அங்கு வாழும் தமிழர்கள் அதை முழுமையாக நடைமுறை படுத்துவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முகத்துக்கு நேரே அல்லது தலைக்கு மேலே கைகளை வைத்து வணக்கம் சொல்லுதல் உயர்ந்தவர்களையும்  (ஆசான், கடவுள், மூத்தோர்.....)😀

நெஞ்சுக்கு  நேரே கைகளைக் கூப்பி வணக்கம் சொல்லுதல் தங்களுக்கு இணையானவர்களையும் (வயது, தகுதி....)🙂

நெஞ்சுக்குக் கீழே கைகளைக் குவித்து வணக்கம் சொல்லுதல் தங்களுடன் ஒப்பிட முடியாத , தகுதி குறைந்தவர்களுக்கு (???) என்றும் முறைகள் உள்ளதாக எங்கோ படித்த நினைவு. ☹️

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

ஈழத்தை பொறுத்த வரை நடைமுறை வாழ்வில் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டவுடன் ''வணக்கம்'' என்று கூறும் நடைமுறையை அங்கு  ஏற்படுத்தியவர்கள் புலம் பெயர் ஈழத்த‍மிழரே. இதை எவரும் மறுக்க முடியாது.

உண்மை.
அதே போல் அங்கு வாழும் தமிழர்கள் அதை விரும்பவில்லை என்பதும் உண்மை. அங்கே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் நலம் விசாரிக்கும் நல்ல பழக்கம் இருந்துவருகிறது. வெளிநாடுகளில் உள்ள ஈழத்த‍மிழர்கள் வணக்கம் சொல்லும் முறையை இலங்கையில்  அறிமுகபடுத்திய காரணம் அவர் கட்டுரையாளர் சொன்ன மாதிரி இறைவனை வணங்குவதாய் எண்ணி வணங்கும் ஒரு இன்பம்.மேல்நாட்டு இளைய தலைமுறையினர் தங்களுக்குள் இந்த குட்மோனிங் சொல்வது இல்லை.

வணக்கம் 
நல்ல கருத்து 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.