Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத பிரச்சாரங்கள் - நீதிமன்றில் சுமந்திரன் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Vankalayan said:

சடடதரணியின் தொழிலே உண்மையை பொய்யென்றும் , பொய்யை உண்மை என்றும் நிரூபிப்பதும்தான்।

சட்டத்திற்கு  அரணாக இருந்து    சத்தியத்தைக் காப்பாற்றி நீதியை நிலைநாட்ட வேண்டிய கடமை சட்டத்தரணிகளுக்கு உண்டு. பொய்யை மெய்யாக்குவதற்கு அடாவடிகளாலும்,  பேச்சு வன்மை உள்ளவர்களாலும் முடியும்.  படித்து பட்டம்பெற்று இந்த ஏமாற்று வேலை செய்யவேண்டுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

 

இவ்வாறு சட்டத்தரணி சுமத்திரன் என்னிடம் சுட்டிக்காட்டினார்.

ஆகவே சட்டத்தரணி சுமந்திரனோடு உரையாடிதன்படி இந்த இரண்டு விடயங்களையும் எனது பதிவில் தற்போது இணைத்துள்ளேன்.

இந்த விடயம் தொடர்பாக நான் எழுதிய இரண்டு பதிவுகளில், முதல் பதிவைத் தான் வாசிக்கவில்லை எனவும் இரண்டாவது பதிவையே வாசித்ததாகவும் சுமந்திரன் என்னிடம் மேலும் க

 

அட இது சுமந்துவின் தேர்தல் பிரசார உத்தி...அதுக்கு இந்த பத்தி எழுத்தாளாரும் உதவி..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

சடடதரணியின் தொழிலே உண்மையை பொய்யென்றும் , பொய்யை உண்மை என்றும் நிரூபிப்பதும்தான்। இங்கு நேர்மை எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது।

இப்படி பெருமளவிலான பொதுமக்கள் நினைக்கிறார்கள், ஆனால் இது தவறான கருத்து. சட்டத்தரணியின் தொழில், சட்டத்தில் உள்ள வழிமுறைகளையும், நுணுக்கங்களையும், பலவீனங்களையும் நன்கு புரிந்துகொண்டு, அவற்றினூடக, தன்னால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுபவரின் நலன்களை உறுதிப்படுத்துவதாகும். இதை சுமேந்திரன் சிறப்பாக செய்கிறார்.

1 hour ago, satan said:

சட்டத்திற்கு  அரணாக இருந்து    சத்தியத்தைக் காப்பாற்றி நீதியை நிலைநாட்ட வேண்டிய கடமை சட்டத்தரணிகளுக்கு உண்டு.

சட்டத்திற்கு  அரணாக இருந்து    சத்தியத்தைக் காப்பாற்றி நீதியை நிலைநாட்ட வேண்டிய கடமை நீதிபதியுடைய கடமை. சட்டத்தரணியின் கடமை தன்னை சேவைக்கு அமர்த்தியவரின் நலன்களை உறுதிப்படுத்துவது. உதாரணமாக, பயங்ரவாத தடுப்பு சட்டத்தை எடுத்து கொள்ளுங்கள். பயங்கரவாதி பற்றி தகவல் தெரிந்திருந்தும் பொலிசுக்கு அறிவிக்காவிட்டால் பல ஆண்டுகள் கடூழிய சிறைவாசம். தாய் நோய்வாய் பட்டிருப்பது அறிந்து போராளியான மகன் பார்க்க வருகிறான். அடுத்த வாரம் இதே நேரம் வருவேன் என்று கூறி போகிறான். மகன் வந்தது பற்றி அறிந்து பொலிஸ் வருகிறது. தமக்கு அறிவிக்காத தாயை கைது செய்து கொண்டு போகிறார்கள். தாயின் சட்டத்தரணி இங்கே என்ன செய்ய வேண்டும்? நீங்கள் சொல்வது போல “சட்டத்திற்கு  அரணாக இருந்து    சத்தியத்தைக் காப்பாற்றி நீதியை நிலைநாட்ட” வேண்டுமானால், தாய் சொன்ன இவ்வளவு விடயங்களையும் பொலிசுக்கு சொல்லி மகனையும் கைது செய்ய வைக்க வேண்டுமா? தாயையும் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறையில் கடூழியம் செய்து சாகுமாறு ஆலோசனை சொல்வதா அவர் வேலை? இல்லை. சட்டத்தில் உள்ள பலவீனங்களை கண்டுபிடித்து தாயை விடுவிக்க வேண்டும். மகன் பற்றிய தகவலை அறியாதவர் போல இருக்க வேண்டும். முடிந்தால் மகனுடன் தொடர்பு கொண்டு அவனை வர வேண்டாம் என்று அறிவிக்க வேண்டும். இவற்றையே சட்டத்தரணிகள் செய்கிறார்கள். சட்டங்களை ஆக்குவது மனிதர்கள். சட்டங்கள் எல்லாம் நீதியானவை அல்ல. ஆகவே அநீதியான சட்டத்துக்கு ஒரு சட்டத்தரணி மட்டுமல்ல நீதிபதி கூட அரணாக இருக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

சட்டத்திற்கு  அரணாக இருந்து    சத்தியத்தைக் காப்பாற்றி நீதியை நிலைநாட்ட வேண்டிய கடமை சட்டத்தரணிகளுக்கு உண்டு.

சட்டத்தரணி முன் வைக்கும்  வாதம், ஆதாரம், குறுக்கு விசாரணை  ஆகியவற்றைக்கொண்டே நீதிபதி தீர்ப்பெழுதுகிறார். சில சமயம் சட்டத்தரணி வழக்கு சம்பந்தப்படாத கேள்விகள் கேட்டு வழக்கை திசை திருப்புவதை தடுக்கலாம். எத்தனையோ வழக்குகளை, தனது திறமையான வாதத்தால் திசை திருப்பி, பாதிக்கப்பட்டவருக்கு அநீதி இழைத்த சட்டத்தரணிகள் பலர் உண்டு. அவர்களை திறமையானவர் என்று பாராட்டுவோரும் உண்டு. தொழில் தர்மம் மீறி நடந்து தொழிலில் இருந்து இடைநிறுத்தப்பட்டு, தனது உயிருக்கு புலிகளால் ஆபத்து. ஆகவே நான் இப்போ வழக்குகளில்  ஆஜர் ஆவதில்லை என்று புலுடா விட்டவர்களும் உண்டு. நீதிபதியால் மட்டும்  நீதியை நிலைநாட்ட முடியுமென்றால், சட்டத்தரணிகள் தேவையில்லை. பயங்கரவாதச் சட்டம் தமிழரை ஒடுக்க உருவாக்கப்பட்டது.   அது அரசாங்கத்தின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப மாற்றப்படும்.  அதனாலோ என்னவோ சிங்கள விசுவாசிகள் அவர்களை பற்றி கதைப்பதில்லை. ஆனால் கிறிஸ்தவ ஆலயங்களின் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் மட்டும் பயங்கரவாதிகள் கிடையாது. அதற்கு விரும்பியோர் ஆஜராகுகின்றனர். 

3 hours ago, alvayan said:

அட இது சுமந்துவின் தேர்தல் பிரசார உத்தி...அதுக்கு இந்த பத்தி எழுத்தாளாரும் உதவி..

ஏற்கனவே சொறிலங்கா அரசின் எடுபிடியாக மாறிய, தன்னைத்தானே ஊடக ஜாம்பவான் என வர்ணிக்கும் ஒரு கதிரான யாழ் ஊடகவியலாளர் கொஞ்ச காலமாகவே சுமந்திரன் ஜால்ராவாக மாறியுள்ளார்.

இதன் பின்னணியில் எல்லை தாண்டி கொலைகளை புரியும் கோஷ்டியும் இருப்பதாக தெரியுது.

23 hours ago, satan said:

சட்டத்திற்கு  அரணாக இருந்து    சத்தியத்தைக் காப்பாற்றி நீதியை நிலைநாட்ட வேண்டிய கடமை சட்டத்தரணிகளுக்கு உண்டு. பொய்யை மெய்யாக்குவதற்கு அடாவடிகளாலும்,  பேச்சு வன்மை உள்ளவர்களாலும் முடியும்.  படித்து பட்டம்பெற்று இந்த ஏமாற்று வேலை செய்யவேண்டுமா? 

அப்படி இல்லாவிடடாள் அவர்கள் கோவணத்துடன்தான் திரியவேண்டி வரும்। 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, satan said:

சட்டத்தரணி முன் வைக்கும்  வாதம், ஆதாரம், குறுக்கு விசாரணை  ஆகியவற்றைக்கொண்டே நீதிபதி தீர்ப்பெழுதுகிறார். சில சமயம் சட்டத்தரணி வழக்கு சம்பந்தப்படாத கேள்விகள் கேட்டு வழக்கை திசை திருப்புவதை தடுக்கலாம். எத்தனையோ வழக்குகளை, தனது திறமையான வாதத்தால் திசை திருப்பி, பாதிக்கப்பட்டவருக்கு அநீதி இழைத்த சட்டத்தரணிகள் பலர் உண்டு.

சட்டத்தரணிகளும் நீதிபதியும் நீதியை நிலை நாட்ட தேவையானவர்கள் என்பதில் நாம் உடன்படுகின்றோம். இதில் நீதிபதியின் கடமை சட்டத்தை நிலைநாட்டுவது. சட்டத்தரணிகளின் கடமை, தமது சேவையை பெறுபவரின் நலன்களை உறுதிப்படுத்துவது.

கடுமையான உழைப்பின் பின் தனது சம்பளத்தை பெற்ற ஒருவர் மனைவிக்கு மருந்து வாங்க கடைக்கு போகிறார். வழிப்பறித் திருடன் ஒருவன் ஒருவன் அவருடைய சம்பளத்தை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். நான்கு நாட்களின் பின் திருடன் பிடிபட்டான். இரு பகுதி சட்டத்தரணிகளும் நீதிபதியும் நீதியை நிலைநாட்ட வேண்டும். இதற்குள் பணத்தை பறிகொடுத்தவர் மனைவிக்கு நோய் குணமாகி விட்டது. திருடன் திருடிய காரணத்தை சட்டத்தரணிக்கு கூறினான். மூன்று நாளாக சாப்பாடில்லை. மகளுக்கு அஸ்த்மா நோய் முற்றி சாவது போல இளுவை உண்டாயிற்று. வேறு வழி இல்லாததால் திருடினேன் என்றான். இரு பகுதி சட்டத்தரணிகளும், வழக்குமன்றம் வழங்கிய இலவச சட்டத்தரணிகள். திருடன் கைது செய்து பதியப்பட்ட விதத்தில் தவறுள்ளதை திருடனின் சட்டத்தரணி கண்டுகொண்டார். திகதியும் இடமும் தவறாக உள்ளன. இவ்வாறன தவறுகள் இருந்தால் சட்டப்படி கைது செல்லுபடியற்றது. ஒரு முறை நீதிமன்று விடுதலை செய்த குற்றத்துக்கு அதே நபரை மீண்டும் கைது செய்ய முடியாது. இந்த சட்டத்தரணி அந்த திருடனை இலகுவாக விடுதலை செய்யலாம். பட்டினியால் வாடும் அவன் மகள் நோய் முற்றி அவலப்படுகிறாள். அந்த சட்டத்தரணிக்கு உங்கள் ஆலோசனை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

சமூக விரோதிகள் பயமில்லாமல் தங்கள் விரோதச் செயலை தொடர்ந்து செய்யவும்  இவர்களே உந்து சக்தியாகவும்  உள்ளார்கள். காப்பாற்ற ஒருவர் இருந்துவிட்டால் திருடர் வாழ்விலும் நிஞாயம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் ஒரு இருட்டறை. அதற்குள் எந்தப் பேய்பிசாசும் நின்று கூத்தாடலாம். சில மனிதப் பேய்களும் அதற்குள் நின்று கூத்தாட விரும்புவதைக் கண்டுதான் அறிஞர் அண்ணா அது ஒரு இருட்டறை என்று கூறினாரோ.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

சமூக விரோதிகள் பயமில்லாமல் தங்கள் விரோதச் செயலை தொடர்ந்து செய்யவும்  இவர்களே உந்து சக்தியாகவும்  உள்ளார்கள். காப்பாற்ற ஒருவர் இருந்துவிட்டால் திருடர் வாழ்விலும் நிஞாயம் உண்டு.

போர்வீரரும் போராளிகளும் கொலை செய்கிறார்கள், திருடுகிறார்கள். அவர்கள் சமூகவிரோதிகளா? வறுமை தாங்காமல் திருடுபவன் மீது இரக்கப்படக்கூடாது என்கிறீர்களா?
 

1 hour ago, Paanch said:

சட்டம் ஒரு இருட்டறை. அதற்குள் எந்தப் பேய்பிசாசும் நின்று கூத்தாடலாம். சில மனிதப் பேய்களும் அதற்குள் நின்று கூத்தாட விரும்புவதைக் கண்டுதான் அறிஞர் அண்ணா அது ஒரு இருட்டறை என்று கூறினாரோ.

சட்டங்களை ஆக்குபவர்கள் அரசியல்வாதிகள். அவர்களில் பலர் சமூகவிரோதிகள், தாமாகவோ அல்லது மற்றவர்களை வைத்தோ கொலைகளை செய்பவர்கள். இவர்கள் எல்லோருமே மக்கள் பணத்தை திருடுபவர்கள். இவர்கள் ஆக்கும் சட்டத்துக்கு எவ்வளவு மதிப்பு கொடுப்பது பொருத்தமானது? இந்த சட்டங்களால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு யார் உதவுவது?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கற்பகதரு said:

போர்வீரரும் போராளிகளும் கொலை செய்கிறார்கள், திருடுகிறார்கள். அவர்கள் சமூகவிரோதிகளா? வறுமை தாங்காமல் திருடுபவன் மீது இரக்கப்படக்கூடாது என்கிறீர்களா?

போர்வீரர்களும் போராளிகளும் கொலை செய்யவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ஆனாலும் கொலைகள் போர் நெறிமுறைகளை மீறாமல் மேற்கொள்ளப்படுவதை உலகம் அனுமதிக்கின்றது.

திருடுவது பாவம். பிச்சை எடுப்பது பாவமல்ல. 

12 hours ago, கற்பகதரு said:

சட்டங்களை ஆக்குபவர்கள் அரசியல்வாதிகள். அவர்களில் பலர் சமூகவிரோதிகள், தாமாகவோ அல்லது மற்றவர்களை வைத்தோ கொலைகளை செய்பவர்கள். இவர்கள் எல்லோருமே மக்கள் பணத்தை திருடுபவர்கள். இவர்கள் ஆக்கும் சட்டத்துக்கு எவ்வளவு மதிப்பு கொடுப்பது பொருத்தமானது? இந்த சட்டங்களால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு யார் உதவுவது?

மக்கள்தான்.... அவர்கள்தான் பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்படாமல் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது பெரும்பாலும் மக்களாட்சியைக் கொண்ட உலகம்.

Edited by Paanch

16 hours ago, Paanch said:

போர்வீரர்களும் போராளிகளும் கொலை செய்யவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ஆனாலும் கொலைகள் போர் நெறிமுறைகளை மீறாமல் மேற்கொள்ளப்படுவதை உலகம் அனுமதிக்கின்றது.

திருடுவது பாவம். பிச்சை எடுப்பது பாவமல்ல. 

மக்கள்தான்.... அவர்கள்தான் பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்படாமல் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது பெரும்பாலும் மக்களாட்சியைக் கொண்ட உலகம்.

தமிழ் தலைமைகளை தமிழர்களே தெரிவு செய்து விட்டு பின்னர் தாறுமாறாக விமர்சனம் செய்கிறார்கள்। இங்குள்ள தமிழர்களை பொறுத்தவரையில் இந்தியர்களைவிட நன்கு படிப்பறிவு உள்ளவர்கள் , பண்புள்ளவர்கள்। அப்படியாயின் என் இப்படியான தலைமைகளை தெரிவு செய்துவிட்டு பின்னர் விமர்சிக்கிறார்கள்।

அநேகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு முறைக்குமேல் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்கள்। அப்படியாயின் இவர்களை மக்கள் ஏன் திரும்ப திரும்ப தேர்ந்தெடுக்கிறார்கள்? மாற்று தலைமை ஒன்று இல்லாததலா ?

இப்போது சந்தர்ப்பம் வந்திருக்கிறது। என்னைப்பொறுத்தவரை 80 % மனோர் மீண்டும் தெரிவு செய்யப்படுவார்கள்। அப்படி என்றால் மீண்டும் இன்னொரு ஐந்து வருடத்துக்கு விமரிசனத்தை எதிர்பார்க்கலாம் । கருத்துக்கள் நிறையவே இருக்கின்றது , ஆனால் தீர்வுதான் இல்லை। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.