Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த தர்மத்தை பாதுகாப்பதாக உறுதியளித்த போதிலும் வெசாக் தினத்தை கொண்டாட முடியாதுள்ளது - பிரதமர் மஹிந்த

Featured Replies

(இராஜதுரை ஹஷான்)

பௌத்த தர்மத்தை பாதுகாக்க அரசாங்கமாக உறுதியளித்த போதிலும் நாளை வெசாக் தினத்தை கொண்டாட முடியாத நிலை தோன்றியுள்ளது.
வெசாக் தினம் சிங்கள மக்களுக்கானது மட்டுமல்ல, உலகத்தில் பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களின் மதிப்பை பெற்ற தினமாகும். ஆகவே வெசாக் தினம் உலக விடுமுறை தினமாக கொண்டாடப்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

vesak.jpg

 

அலரி மாளிகையில் இன்று பௌத்த மத தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றிய அவர்,

வெசாக் தினத்தில் இலட்சக்கணக்கான மக்கள் வழிபடுகளை மேற்கொள்ளும் தினமாகும். மேலும் நாடு முழுவதிலும் வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்டு தன்சல்கள் வழங்கப்படும். அதனால் வெசாக் தினத்தை கொண்டாடுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னிருந்தே அனைத்து மக்களும் தயார் நிலையில் இருப்பர்.

கடந்த வருடத்திலும் வெசாக் தினம் கொண்டாட முடியாது போனது. இந்த நிலையில் வெசாக் தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகிய பின்புலத்தில் அனைத்து மக்களும் பாரிய மனஉலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால், பௌத்த மக்களின் பாரிய எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாது போனது.

இருப்பினும், வெசாக் தினத்தை கொண்டாட முடியாத நிலைமைக் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். தற்போது அந்த பூரணை வந்துள்ளது.
புத்த பகவானின் தர்மத்தை உணர்ந்தவர்கள் அந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்பவர்கள் இந்த அழிவுகளைக் கண்டு கவலையடைய மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். கொவிட் 19 தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள்

ஆனால் இந்த தொற்றானது இயற்கையினால் உலக விலங்குக்கு வழங்கிய தண்டனையென சிலர் கூறுகின்றார்.

அதனால் தற்போது கொரோனா தொற்று ஒழிப்புக்கு எதிராக செயற்படுவோருக்கு தண்டனை வழங்க வேண்டுமென ஒரு சிலர் போராடுவதாக நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால், நாங்கள் யாருக்கும் தண்டனை வழங்க மாட்டோம். இதனை இயற்கை கொடுத்த தண்டனையாகவும் ஏற்கவும் மாட்டோம்.

உலகில் யாரும் பலமானவர்கள் அல்ல. உலகில் யாரும் பலமானவர்கள் என்றாலும் உலகத்தை மாற்ற முடியாது. மரணம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதால் இந்த கொரோனா தொற்றினால் உலகிலுள்ள பலம் பொருந்திய நாடுகளிலுள்ள பலமானவர்கள் கூட பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

உலகிலுள்ள பலமான தலைவர்களுக்கும் இந்த கொரோனா தொற்றிலிருந்து மீள முடியாதுள்ளனர். இயற்கையை மாற்றுவதாகக் கூறியவர்களுக்கும் இன்று உலகத்தின் இயற்கைக்கு முன்னால் மண்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/81496

4 minutes ago, ampanai said:

பௌத்த தர்மத்தை பாதுகாக்க அரசாங்கமாக உறுதியளித்த போதிலும் நாளை வெசாக் தினத்தை கொண்டாட முடியாத நிலை தோன்றியுள்ளது.

சொறிலங்கால எங்க இருக்கு பௌத்த தர்மம்?
சொறிலங்கால இருக்கிறது சிங்கள-பௌத்த-அதர்மம் மட்டும் தானே!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Rajesh said:

சொறிலங்கால எங்க இருக்கு பௌத்த தர்மம்?
சொறிலங்கால இருக்கிறது சிங்கள-பௌத்த-அதர்மம் மட்டும் தானே!

 

சிங்களம் என்ன அஜாரம் செய்தாலும் அதை தர்மம் நியாயம் என நினைக்கின்றார்கள் போலும்.......அவர்களுடன் கூட இருக்கும் எம்மவர்களும் அவ்வழியே...

  • தொடங்கியவர்
8 hours ago, ampanai said:

பௌத்த தர்மத்தை பாதுகாக்க அரசாங்கமாக உறுதியளித்த போதிலும் நாளை வெசாக் தினத்தை கொண்டாட முடியாத நிலை தோன்றியுள்ளது

Despite the virtual lifestyle lockdown triggered by the coronavirus, enthusiastic people were yesterday seen purchasing Vesak lanterns in Kirulapone, Colombo to mark the ongoing Vesak week. 

படத்தை பார்க்க 'க்ளிக்; செய்யவும் , இங்கே 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ampanai said:

உலகில் யாரும் பலமானவர்கள் அல்ல. உலகில் யாரும் பலமானவர்கள் என்றாலும் உலகத்தை மாற்ற முடியாது. மரணம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதால் இந்த கொரோனா தொற்றினால் உலகிலுள்ள பலம் பொருந்திய நாடுகளிலுள்ள பலமானவர்கள் கூட பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

உண்மையாகவா? உங்களுக்கு இதை புரிய வைக்கத்தான் கொரோனா வந்ததோ? கொரோனாவுக்கு நன்றி. 

  • தொடங்கியவர்

வெசாக் அலங்காரக் கூடுகளை தயாரிக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர்......!

Image

 

Image

  • தொடங்கியவர்

வெசாக் தினத்திலும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட களனி , கங்காராம விகாரைகள்..!: படங்கள் உள்ளே...

Image

Image

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 00:13, ampanai said:

வெசாக் தினத்தில் இலட்சக்கணக்கான மக்கள் வழிபடுகளை மேற்கொள்ளும் தினமாகும். மேலும் நாடு முழுவதிலும் வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்டு தன்சல்கள் வழங்கப்படும். அதனால் வெசாக் தினத்தை கொண்டாடுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னிருந்தே அனைத்து மக்களும் தயார் நிலையில் இருப்பர்.

கடந்த வருடத்திலும் வெசாக் தினம் கொண்டாட முடியாது போனது. இந்த நிலையில் வெசாக் தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகிய பின்புலத்தில் அனைத்து மக்களும் பாரிய மனஉலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால், பௌத்த மக்களின் பாரிய எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாது போனது.

இருப்பினும், வெசாக் தினத்தை கொண்டாட முடியாத நிலைமைக் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். தற்போது அந்த பூரணை வந்துள்ளது.
புத்த பகவானின் தர்மத்தை உணர்ந்தவர்கள் அந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்பவர்கள் இந்த அழிவுகளைக் கண்டு கவலையடைய மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். கொவிட் 19 தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள்

ஆனால் இந்த தொற்றானது இயற்கையினால் உலக விலங்குக்கு வழங்கிய தண்டனையென சிலர் கூறுகின்றார்.

அதனால் தற்போது கொரோனா தொற்று ஒழிப்புக்கு எதிராக செயற்படுவோருக்கு தண்டனை வழங்க வேண்டுமென ஒரு சிலர் போராடுவதாக நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால், நாங்கள் யாருக்கும் தண்டனை வழங்க மாட்டோம். இதனை இயற்கை கொடுத்த தண்டனையாகவும் ஏற்கவும் மாட்டோம்.

புலிப்பயங்கரவாதிகளை அழித்த எமக்கு கொரோனா  எல்லாம் கால்தூசு என்று கண்டவற்றுக்குள் எல்லாம் 
இராணுவத்தை ஓட்டி ஓட்டி கொக்கரித்த நீங்கள் ,அவர்களுக்கும் கொரோனாவை வாரிவழங்கி 
இப்போது இப்படி புலம்புவதை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது ...கர்மாவை நினைத்து .மிகவிரைவில் உங்களுக்கு ஓட்டு  போட்ட மக்கள் பஞ்சம் ,பட்டினி,பிக்கல் ,பிடுங்கல் தாங்காமல் உங்களை அடித்து துரத்த இந்த வெசாக் நாளில் புத்தபெருமான் அருள் புரிவாராக  

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் பெருமானை வணங்குவதால்தான் இந்த இனத்தில் சிலர் மனிதர்களாக வாழ்கிறார்கள். இல்லையென்றால்..... 😵

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா உலகிலேயே பெரிய பயங்கரவாதத்தை முறியடித்ததாக , கல்லிலே கால் தடக்கி விழுந்தாலும் , உமிழும் உங்களால் , அதனால் உங்களால் எதனையும் செய்ய முடியும் என்று கூவும் உங்களால் ஏனய்யா இந்த வெசாக்கை கொண்டாட முடியாமல் போகிறது ??

 

  • தொடங்கியவர்
On 6/5/2020 at 12:13, ampanai said:

வெசாக் தினம் சிங்கள மக்களுக்கானது மட்டுமல்ல, உலகத்தில் பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களின் மதிப்பை பெற்ற தினமாகும்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.