Jump to content

வீழ்த்தப்பட்ட தமிழரும் ஆண்ட அந்நியரும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

முதலமைச்சருக்கு தெரியாமலே இது நிகழ்ந்திருக்கலாம். இருந்தாலும் ஆட்சியில் இருந்தவர் என்ற வகையில்.. அவர் மீது பழிபோவது தவிர்க்க முடியாதது. 

இதே எம் ஜி ஆர் தான் ஒப்பரேசன் லிபரேசனின் போது உதவிகளை நேரடியாக அனுப்பினார் என்பதையும் மறக்க வேண்டாம். அதுவே இறுதியில் இந்திய - இலங்கை ஒப்பந்தம்.. ஹிந்தியப் படை வரவு வரை போனது. ஒப்பரேசன் லிபரேசனால் வரவிருந்த பெரும் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டது.. மேலும் போராளிகளுக்கு தம்மை மீள ஆசுவாசப்படுத்த ஒரு கால அவகாசத்தை வழங்கியது. 

நெடுக்ஸ் , மத்திய  அரசிற்கு தெரியாமல் ,அவர்கள் அனுமதி இல்லாமல் இவரால் உதவி இருக்க முடியாது 

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நெடுக்ஸ் , மத்திய  அரசிற்கு தெரியாமல் ,அவர்கள் அனுமதி இல்லாமல் இவரால் உதவி இருக்க முடியாது 

எம் ஜி ஆர் துணிச்சல் மிக்க தலைவர். அவர் உதவ எண்ணி விட்டால்.. உதவியே தீருவார். அதேவேளை எதிர்க்க தீர்மானித்தால் எதிர்த்தே தீருவார்.

மத்திய அரசை தன் சார்ப்பு ஆக மாற்றும் ஆளுமை அவருக்கு இருந்தது. கருணாநிதிக்கு அது கிடையாது. தன் குடும்பத்துக்கு சலுகை பெற விட்டுக்கொடுப்புக்களை செய்ய மட்டுமே தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

எம் ஜி ஆர் துணிச்சல் மிக்க தலைவர். அவர் உதவ எண்ணி விட்டால்.. உதவியே தீருவார். அதேவேளை எதிர்க்க தீர்மானித்தால் எதிர்த்தே தீருவார்.

மத்திய அரசை தன் சார்ப்பு ஆக மாற்றும் ஆளுமை அவருக்கு இருந்தது. கருணாநிதிக்கு அது கிடையாது. தன் குடும்பத்துக்கு சலுகை பெற விட்டுக்கொடுப்புக்களை செய்ய மட்டுமே தெரியும். 

உங்கட நம்பிக்கையை ஏன் கெடுப்பான் ...அவர்களை விடுங்கள் இறந்து போய் விட்டார்கள் ...உப்ப சீமானை நம்புங்கோ துணிச்சல் மிக்கவர் , மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் மிக்கவர் ...முதலமைச்சராய் வந்தவுடன் தமிழீழம் எடுத்து தந்து விட்டு தான் ஓய்வார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

உங்கட நம்பிக்கையை ஏன் கெடுப்பான் ...அவர்களை விடுங்கள் இறந்து போய் விட்டார்கள் ...உப்ப சீமானை நம்புங்கோ துணிச்சல் மிக்கவர் , மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் மிக்கவர் ...முதலமைச்சராய் வந்தவுடன் தமிழீழம் எடுத்து தந்து விட்டு தான் ஓய்வார் 

சீமான் முதலமைச்சராக வரும் போது எப்படி கிழக்குக் பாகிஸ்தானை பங்களாதேஷ் ஆக்கனும் என்ற தேவை ஏற்பட்டதோ.. அப்படி ஒரு தேவை இலங்கையின் வடக்குக் கிழக்கை பிரித்து தனிநாடு ஆக்க வேண்டும் என்ற நிலையை.. சர்வதேச.. சீன இராணுவ - பொருண்மிய நிலை உருவாக்குமாக இருந்தால்.. சீமானால்.. தமிழீழம் அடைவது சாத்தியமே. எல்லாம் காலத்தின் கையிலும் சீமானின் தளராத கொள்கைப் பிடிப்பிலும் தான் உள்ளது. காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். கருணாநிதி மாதிரி குடும்பத்துக்கு என்று பயன்படுத்தினால்.. அழிவு தான் மிஞ்சும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

சீமான் முதலமைச்சராக வரும் போது எப்படி கிழக்குக் பாகிஸ்தானை பங்களாதேஷ் ஆக்கனும் என்ற தேவை ஏற்பட்டதோ.. அப்படி ஒரு தேவை இலங்கையின் வடக்குக் கிழக்கை பிரித்து தனிநாடு ஆக்க வேண்டும் என்ற நிலையை.. சர்வதேச.. சீன இராணுவ - பொருண்மிய நிலை உருவாக்குமாக இருந்தால்.. சீமானால்.. தமிழீழம் அடைவது சாத்தியமே. எல்லாம் காலத்தின் கையிலும் சீமானின் தளராத கொள்கைப் பிடிப்பிலும் தான் உள்ளது. காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். கருணாநிதி மாதிரி குடும்பத்துக்கு என்று பயன்படுத்தினால்.. அழிவு தான் மிஞ்சும். 

ஆக உங்களுக்கே சீமானின் நம்பிக்கை இல்லை 😆...கவலைப்படாதீர்கள் இவர்களுக்கு எல்லாம் ஈழ மக்கள் சிரமம் கொடுக்க மாட்டார்கள் ...ஒருமித்த குடைக்குள் ஒன்றாய் வாழ பழகி  விடுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரதி said:

ஆக உங்களுக்கே சீமானின் நம்பிக்கை இல்லை 😆...கவலைப்படாதீர்கள் இவர்களுக்கு எல்லாம் ஈழ மக்கள் சிரமம் கொடுக்க மாட்டார்கள் ...ஒருமித்த குடைக்குள் ஒன்றாய் வாழ பழகி  விடுவார்கள் 

ஒருமித்த குடைக்குள் அல்ல.. மொட்டைகளின் குடைக்குள் எக்கத்துக் கரன ஆகிடுவிடுவினம். அதுதான் அடிமைகள் சோம்பேறிகள்.. செய்யக் கூடிய ஒரே மார்க்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் எம்ஜிஆர் மு.வாய்க்காலுக்கு முன்னர் இறந்து விட்டார் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுபக்கங்களை வாசிச்சே களைச்சுப்போனன் .... அப்பாடா 😀

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

ஆக உங்களுக்கே சீமானின் நம்பிக்கை இல்லை 😆...கவலைப்படாதீர்கள் இவர்களுக்கு எல்லாம் ஈழ மக்கள் சிரமம் கொடுக்க மாட்டார்கள் ...ஒருமித்த குடைக்குள் ஒன்றாய் வாழ பழகி  விடுவார்கள் 

 

1 hour ago, nedukkalapoovan said:

ஒருமித்த குடைக்குள் அல்ல.. மொட்டைகளின் குடைக்குள் எக்கத்துக் கரன ஆகிடுவிடுவினம். அதுதான் அடிமைகள் சோம்பேறிகள்.. செய்யக் கூடிய ஒரே மார்க்கம். 

எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் பெரும் இழப்புகளை சந்தித்து வாழும் எம் மக்களை இப்படி “அடிமைகள் சோம்பேறிகள்” என்று சொல்கிறீர்களே? நியாயமா?

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

நல்ல காலம் எம்ஜிஆர் மு.வாய்க்காலுக்கு முன்னர் இறந்து விட்டார் 
 

முள்ளிவாய்கால் காலத்தில் எம்.ஜி. ஆர் இருந்திருந்தால் முன்பு செய்த உதவிகள் நன்மைகள் எல்லாம் நன்றி மறக்கபட்டு இன்று மாபெரும் துரோகிபோல்  சித்தரிக்கபட்டு திட்டி தீர்த்திருக்கப்பட்டிருப்பார். கருணாநிதி தப்பி இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2020 at 22:10, nedukkalapoovan said:

 

எங்களுடைய நிலைப்பாடு.. எமது போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில்.. எமது மக்களின் பணத்தை சிங்களவனும்.. அந்நியனும்.. துரோகிகளும் அனுபவிப்பதை விட.. நம்மவர்களே அனுபவிக்கட்டும்.  இல்லை அதனை சிங்களவனும் அந்நியனும் துரோகிகளும் தான் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை என்ன செய்ய முடியும். இலங்கையில் 10 பணக்காரர்களுக்கு கருணா என்ற துரோகி வந்திட்டார். டக்கிளஸ் இன்னொரு பக்கம். ஏன் அவர்களிடம் போய் காசுக்கணக்கு பார்க்கிறீர்கள் இல்லை..?! பயம் போல.

எத்தனையோ புலம்பெயர் போராளிகள் மக்கள் வேலைக்குப் போக முடியாத அளவுக்கு உள வளப்பிரச்சனையோடு இருக்கிறார்கள்.. உடல் நலிவுற்றிருக்கிறார்கள்.. அதாவது தெரியுமா உங்களைப் போன்றோருக்கு..?! 

 

நெடுக்கர் இப்பத்தான் சரியான இடத்துக்கு வந்திருக்கிறார். கருணா, டக்ளஸ் போன்றோரை நாம் எப்படி துரோகிகள் என்று கூறுகின்றோமோ, அதைவிட கேவலமானவர்கள் இந்த மக்களிடமிருந்து காசு சேர்த்து ஆட்டையைப்போட்டவர்கள். அவர்கள் எப்படியாவது எமது சமூகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்களே.

 மற்றயது நீங்கள் கூறியதுபோல் உடல், உள நலிவுற்றிருக்கும் ஊரிலுள்ளோருக்கு அவர்கள் சுருட்டிய பணத்தில் ஒரு சிறு தொகையை கொடுத்தாலே பல போராளிக்குடும்பங்கள் நிமிர்ந்திருக்கும்.

மற்றும்படி இந்த கருணாநிதி அவரது அரசியல் வாரிசுகள் எல்லாருமே கடைந்தெடுத்த சுயநலமிக்க அயோக்கியர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

இதே எம் ஜி ஆர் தான் ஒப்பரேசன் லிபரேசனின் போது உதவிகளை நேரடியாக அனுப்பினார் என்பதையும் மறக்க வேண்டாம். அதுவே இறுதியில் இந்திய - இலங்கை ஒப்பந்தம்.. ஹிந்தியப் படை வரவு வரை போனது. ஒப்பரேசன் லிபரேசனால் வரவிருந்த பெரும் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டது.. மேலும் போராளிகளுக்கு தம்மை மீள ஆசுவாசப்படுத்த ஒரு கால அவகாசத்தை வழங்கியது. 

நெடுக்ஸ் இங்குதான் நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆபரேஷன் லிபேரேஷன் நடவடிக்கை இலங்கை அரசால் தமிழர்களை (புலிகளை) அழிக்க முன்னெடுக்கப்பட்டது. அதைசாட்டாக வைத்து உதவுவதுபோல இந்தியா உள்ளே வந்தது. ஆனால் முள்ளிவாய்க்கால் சிறிலங்கா , இந்தியா மற்றும் பல நாடுகளின் தயவுடன்தான் நடந்தேறியது. இதை முன்னின்று நடத்தியதே சோனியா தலைமையிலான இந்தியாதான். அப்படியிருக்க இருவிடயங்களையும் ஒப்பிடுவது பொருந்தாது. ஒருவேளை கருணாநிதி தலைமையிலான திமுகவின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்திருந்தால் சோனியா ஆட்சி கலைந்து பிஜேபி வருவதற்கான சாத்தியப்பாடுகள் இருந்திருக்கும். எப்படியிருப்பினும் புலிகள் எவ்வாறாவது அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் பொதுசனத்தின் சாவையாவது தடுத்து நிறுத்தியிருக்கலாம்!!

Link to comment
Share on other sites

எப்போதும் தமிழன் 2009 ல் கருணாநிதியிடம் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவில்லை. திமுக வெறும் 16 எம்பிகளைஏ வைத்திருந்த‍து. மிகுதி காங்கிரஸ்,பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கூட்டணிக்கட்சிகளிடம் தான் இருந்த‍து. அதேவேளை தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சி காங்கிரசின் 35 சட்ட மன்ற உறுப்பினர்களின் தயவில் தான் நடந்து கொண்டிருந்த‍து. அவ்வேளை கருணாநிதி மத்திய அரசுக்கான தனது ஆதரவை விலக்கி இருந்தாலும் மத்தியில் ஆட்சி மாற்றம் நடக்க சந்தர்ப‍ம் இல்லை. அதன் பின்னர் 2009  தேர்தலில் நீங்கள் கூறியபடி பிஜேபி ஆட்சிக்கு வரவில்லை.  காங்கிசே வெற்றி பெற்று பதவிக்கு வந்திருந்தததை உங்களுக்கு ஞாபகப்ப‍டுத்து கின்றேன். அதே வேளை கருணாநிதிக்கான ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டிருக்கும். ஈழதமிழருக்காக  இரண்டாம்  முறை ஆட்சியை இழந்த கருணாநிதி என்ற பெயரை மட்டும் பெற்றிருப்பார்.  அதை விட  எதுவும் நடந்திருக்காது.

முள்ளிவாய்க்கால் பேரழிவு என்பது புலிகளின் வலிமை இழப்போடு அதாவது  கிளிநோச்சி வீழ்ச்சியோடு  உறுதி செய்யபட்டு விட்டது. 

நீங்கள் கூறியபடி பிஜேபி ஆட்சிக்கு வந்திருந்தாலும் காங்கிரஸ் என்ன செய்த‍தோ அதையே பிஜேபியும் செய்திருக்கும் என்பது இந்திய அரசியலை அவதானிக்கும் ஒருவருக்கு நன்கு தெரியும். காங்கிரசை விட ஈழத்தமிழரை அதிகம் வெறுக்கும் கட்சி பிஜேபி என்பது அவர்களது  நகர்வுகளை கவனமாக அவதானிப்பவர்களுக்கு தெரியும்.தமிழக அரசின் பரிந்துரையின் பிறகும் எழுவர் விடுதலை தொடர்பாக தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராகுல் காந்தியே கூறிய பிறகும் பிஜேபி அரசு அவர்களை விடுதலை செய்யாது இழுத்தடிப்பதில் இருந்து அதை புரிந்து கொள்ளலாம். 

 ஈழ‍தமிழருக்கு எதிரான  அரசியல் கொள்கை  என்பது இந்திய அரசின் கட்சிகளுக்கு அப்பால் இருந்த பொதுவான இந்திய வெளியுறவுக் கொள்ளை.  1991  ல் நடந்த ராஜீவ் கொலை  ஈழத்தமிழர் போராட்டடதை அழிப்பதை நியாயபடுத்த அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு. நாமே கொடுத்த அந்த வாய்ப்பை அவர்கள் திறமையாக பயன்படுத்தினார்கள் என்பதே உண்மை. 

10 hours ago, Eppothum Thamizhan said:

நெடுக்ஸ் இங்குதான் நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆபரேஷன் லிபேரேஷன் நடவடிக்கை இலங்கை அரசால் தமிழர்களை (புலிகளை) அழிக்க முன்னெடுக்கப்பட்டது. அதைசாட்டாக வைத்து உதவுவதுபோல இந்தியா உள்ளே வந்தது. ஆனால் முள்ளிவாய்க்கால் சிறிலங்கா , இந்தியா மற்றும் பல நாடுகளின் தயவுடன்தான் நடந்தேறியது. இதை முன்னின்று நடத்தியதே சோனியா தலைமையிலான இந்தியாதான். அப்படியிருக்க இருவிடயங்களையும் ஒப்பிடுவது பொருந்தாது. ஒருவேளை கருணாநிதி தலைமையிலான திமுகவின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்திருந்தால் சோனியா ஆட்சி கலைந்து பிஜேபி வருவதற்கான சாத்தியப்பாடுகள் இருந்திருக்கும். எப்படியிருப்பினும் புலிகள் எவ்வாறாவது அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் பொதுசனத்தின் சாவையாவது தடுத்து நிறுத்தியிருக்கலாம்!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

முள்ளிவாய்கால் காலத்தில் எம்.ஜி. ஆர் இருந்திருந்தால் முன்பு செய்த உதவிகள் நன்மைகள் எல்லாம் நன்றி மறக்கபட்டு இன்று மாபெரும் துரோகிபோல்  சித்தரிக்கபட்டு திட்டி தீர்த்திருக்கப்பட்டிருப்பார். கருணாநிதி தப்பி இருப்பார்.

MGR  இருந்து இருந்தால் முள்ளிவாய்க்கால் மட்டும் யுத்தம் போகுமட்டும் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார் .அவரின் தமிழ் உணர்வுக்கு பல உதாரணம் சொல்லலாம் .கருணாநிதி தமிழ்நாட்டு தமிழர்களின் ஆதரவை இழக்க கூடாது எனும் பயத்தினால் மட்டுமே எங்களுக்கு உதவுவது போல் நடித்தவர் பெரும் ஆரவாரத்துடன்  அவர் தத்தெடுத்த ஈழத்து அகதி சிறுவன் இப்ப எங்கிருக்கிறார் என்று தெரியுமா ?

எப்படி ஒரு மனிதன் வாழக்கூடாது என்பதுக்கு தெலுங்கு கருணாநிதி சாட்சி .

  1.  2009  ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரசிலிருந்து பேச வந்து போகும் பிரணாப் முகர்ஜி போன்றவர்களை கூட   ஈழப்போர் நிறுத்தம் குறித்துதான் பேச வந்ததாக கூட்டு சேர்ந்து நாடகமாடியது
  2.  ஈழப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்கும் வகையில் சுவரொட்டி அச்சிட தடை . அப்படியே அச்சிட்டு ஓட்ட சென்றாலும் சென்றவர்களை தூக்கி சிறையிலிடுதல்.
  3.  2009  ஜனவரியில் செங்கல்பட்டில்  சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த  சட்ட கல்லூரி மாணவர்களை கைது செய்ததோடு முத்துகுமார் மரணத்தினால் மாணவர்கள் மத்தியில் எழுர்ந்த பேரெழுச்சியை தடுக்க கல்வி கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறையளித்தது .
  4. லிபியா, எகிப்த்து  என பிற நாடுகளின் பதிக்கப்படும் , கொல்லப்படும் செய்திகளை ஒளிபரப்பவும் ,தன் ஏடுகளில் படமாகவும்  போடும் தன் ஊடகம்  தமிழின படுகொலைகளைப்பற்றி  சிறிதும் கண்டுகொள்ளாமல் ஊடக இருட்டடிப்பு செய்தும் இன்றும் ஈழப்படுகொலைப்பற்றியே விபரம் தெரியாத மக்களாக தமிழர்கள் இருக்க காரணமாயிருப்பது
  5. தமிழினத்தை காங்கிரஸ் அழிக்கிறது அதனுடன் கூட்டு சேர்த்ததால் நீண்ட  கால பழி வரும், நாங்கள் உங்களுடன் இருக்குறோம் கவலைபடாதிர்கள் என ராமதாஸ் , திருமா, வீரமணி உள்பட பலர் காதுகிழிய சொல்லியும் அதை சிறிதும் கண்டுகொள்ளாமல் இவர்களுக்கெல்லாம் விபரம் பத்தாதாது போல் நினைத்து, நீங்கள் பெரிதாக நினைக்கும் ஈழ விஷயத்தை என் சாணக்கிய புத்தியால் ஒன்றும் இல்லாமல் செய்கிறேன் பார் என திட்டமிட்டு,  திரும்ப திரும்ப சீமான் போன்றவர்களை சிறை தள்ளியதோடு இனத்திற்காக வெகுண்டெழுந்து உண்ணா விரதமிருந்து தமிழ் இனத்திற்கே தனியொரு தலைவனாய் உருவெடுத்த திருமாவையும் இரண்டு சிட் கொடுத்து ..இன்று தன்னைபற்றியே குறை பேசாத நபராக மாற்றியது .
  6. இனி என்ன செய்ய போகிறோம் என்ற  குறுவட்டை பார்த்த எந்த ஒரு நபரும் ஏன்? காங்கிரஸ்காரரே கூட தன் கட்சிக்கு ஒட்டு போட மாட்டார் .அப்படிப்பட்ட ஈழ படுகொலையை எடுத்து சொல்லும் குறுவட்டை எங்கும் பரப்பவிடாமல் பலரை சிறை அனுப்பியதோடு ,கலைஞர் ஒரு தமிழின கொலைஞர் என்ற குறுவட்டை தயாரித்த நபரையும் சிறைதள்ளியது.
  7. ஈழபிரச்சனையில் ஊர் ஊராக சென்று கருணாநிதி , காங்கிரஸ்க்கு எதிராக பிரசாரம் செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இயக்குனர் பாரதிராஜா அலுவலகத்தை முரட்டுத்தனமாக தாக்கி  தன்னை எதிர்ப்பவர் யாராகயிருந்தாலும் அவர்களுக்கு இந்த கதிதான் என பயமுறுத்தியும். வைக்கோ உள்ளிட்ட பல தலைவர்கள் கூடி கண்டன பொதுகூட்டம் நடத்தியும் குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து தண்டிக்காதது. அத்தோடு திரைத்துறையினர் தனக்கு சாதகமாக  நடப்பவர்களை  உக்குவித்தும் எதிராக நடப்பவர்களுக்கு எல்லாவிதமான நெருக்கடிகளையும் தொடர்ந்துகொடுத்துவருவது  அல்லது கூடி கண்டன எதிர்த்தவர்களையே தன்வசப்டுத்தி தனக்காக பேச வைப்பது 

    இனத்திற்கு ஆதரவான போராட்டங்களை ஓடிக்கி கொண்டே .. காங்கிரசோடு கூட்டணி வேண்டம், கூட்டணி வேண்டம் என தலைபாடக அடித்து கூறிய வீரமணி போன்றவர்கள் வாயிலாகவே.. நாம் கருணாநிதியை வெற்றி பெற வைத்தால் தான் இந்தளவுக்காவது போராட முடியும் . ஜெயலலிதா வந்துவிட்டால் வாயை துறந்து இனத்திற்கு ஆதரவாக பேசமுடியாது எனும் ஒரு கூற்றை.. மீண்டும் மீண்டும் தனக்காக பிறரை பேச வைத்து நாடகமாடியது . ஏதோ மீண்டும் ஒரு முறை அதே 2008  .  அதேபுலிகள் கையில் ஈழம் .. அதே சோனியா  அதேஇந்தியபடை உதவி .. அந்த நேரம் பார்த்து இங்கு ஜெயலலிதா ஆட்சி இருக்க போவது போலவும், இவர் போலவே அவரும் துரோகம் செய்வார் போலவும், அந்த நேரம் போராடுவர்களை இவரைவிட அதிகமாக முடக்குவார் போலவும் கூறும் இவரின் கூற்றையும் சிலர் நம்பினார்களே

    நம்ப வைத்தார். இப்படி பேசினால் எப்படி முடியும் என சாணக்கியனுக்கு தெரியும்.

  8. கடலில் என்னை தூக்கி போட்டால் நன் கட்டுமரமாக உதவுவேன் வசனம் பேசிய கருணாநிதி மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்பட்டும் கொல்லப்படும் நிகழ்வுக்கு .. நம் மீனவர்கள் பேராசைகாரர்கள் அதனால் தான் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்று பேட்டி கொடுத்தது .
  9.  நாம் தமிழர் இயக்கத்தினரை சம்மந்தமில்லாமல் ஈ.வி.கே.ஸ்.இவன்கோவன் வீட்டில் பெட்ரோல் குண்டு விசியதாக சிறை தள்ளியும் .. அதே இயக்கத்தை சேர்ந்த ஈழ படுகொலையின் போது செத்து கொண்டிருந்த மக்களுக்கு இரத்தபொட்டலம் கடத்தியதாக அதே இயக்கத்தை சேர்ந்த (கடத்தினால் என்ன ?) முத்துகுமார் மீது  வழக்கு பதிவு செய்து புழல் சிறையிலடைத்து .அதே இயக்கத்திலிருந்த என்னை ஜெயராம் வழக்கில் சிக்க வைத்து 16 நாள் சிறையிலடைத்து .. ஆம் 25  / 01 / 2010   தேதியே நடிகர் ஜெயராம் தமிழச்சியை கேவலமாக பேசியது குமுதம் நாளிதழில் வெழிவந்தது அதனை தொடர்ந்து  இதற்க்கு மனிப்பு கேட்பிர்களா என்று அவரிடம் கேட்க  அவர் அது தவறில்லை  என்று கூறியிருக்கிறார்  இந்நிலையில்  நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கசென்றது 5 / 2  /2010 .   ஆக இப்படி கேவலமாக தமிழச்சியை பேசிய ஒரு நடிகரை 10  நாளாகியும் கண்டிக்காதது விட்டு   விட்டது யார் தவறு?   பின் எங்களை கைது செய்ததோடு சட்டம் அதன் கடமையை  செய்யும் என்றதோடு எங்களுக்கு கண்டனம் வேறு
  10. தன் சிங்கள இனத்திற்கு விசுவாசமாக தமிழினத்தை கொன்று மீதியுள்ளோரையும் முள் வேலி முகாமில் அடைத்த ராஜபட்செவிடமே தமிழ் இன தலைமகனின் மகளான கனிமொழியை அனுப்பி, கைகுலுக்கி பரிசு பெற்று

    வந்த பாக்கிய முகாமில் அடைத்த ராஜபட்செவிடமே  தியை பெற்ற தந்தை.. அதே மகளை வைத்தே பின் அதே ராஜபக்சேவுக்கு எதிராக மீனவ நண்பன் போராட்டம்

  11. செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்ற பெயரில் காரணமின்றி வருடக்கணக்கில் அடைத்து வைத்துள்ளவர்களின் கோரிக்கையான ஒன்று விடுவி அல்லது தண்டனை கொடு என்ற தொடர் போராட்டங்களை ஒடுக்க தமிழரல்லாத ஒரு பிகாரி அதிகாரியை போட்டு உயிர்போக அடித்த பின் வாரி திருச்சியலடைந்த்து அகதிமுகாம்களில் உள்ளவர்களையும் புலி ஆதரவு கருணாநிதி ஆதரவு என பிரித்து நடந்தும்    சூழ்ச்சி       பொய்வழக்குகள் போடுவது.

  12.  

    முத்துகுமார்  இறந்த போது தான் உடலை எடுத்து செல்ல விடவில்லை .. கட்சி சார்பற்று இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஏற்பாடு செய்த முத்துகுமார் முதலாம் அன்டு நினைவு துண்  வைக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து நீதிமன்றம் அலையவிட்டது

    புலிகள் ஒட்டு மொத்தமாக ஒளிந்துவிட்டோம் என ராஜபக்சேவே கூறிய பின்னும்  தடையை நீக்க, கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதி கேட்டால்அதற்க்கு அனுமதி மறுத்து நிதிமன்றம் அலையவிட்டது. இது போன்ற இனம் சார்ந்த பல நிகழ்வுகள் நீதிமன்றத்திற்கு சென்றே அனுமதிபெற்று நடத்தினாலும் அடுத்த அடுத்த நிகழ்ச்சிக்கு அனுமதி  மறுப்பதை அரச வாடிக்கையாக்கியது

  13. மீனவர்களில் ஒருவன் தாக்கப்பட்டால் சிங்கள மாணவர்கள் பாதுகாப்புடன் இங்கு நடமாட முடியாது என கூறிய சீமானை கைது செய்து 5  மாதம் சிறையில் அடைத்த கருணாநிதி ,மீனவனை  கொன்ற சிங்களனை கைது செய்து தண்டிக்க வேண்டுமென   இதுவரை ஒரு வார்த்தை கூறாதது

  14.  இனத்திற்காக போரடுபவர்களிடம் பணம் கிடையாது அந்தநிலையிலும் பிச்சை எடுத்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து  ஒட்டப்படும் சுவரொட்டிகளையும் பதாகைகளையும் காவல்துறையை விட்டு தெரு தெருவாக சுற்றி கிழிக்க வைப்பது அல்லது மொத்தமாக கைப்பற்றி காவல்நிலையத்தில் போடுவது இன்னும் ஒருபடி மேலே போய் தடை செய்த இயக்கத்தை பற்றி பேசினாலோ எழுதினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என 26 / 11 / 2009  தேதி ஒரு பக்க விளம்பரம் போல அவ்வபோது அரசு செலவிலேயே அச்சுறுத்துவது 7  , 8  , பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வது.

  15.  

    தமிழ்  மொழி பேசிய ஒரே காரணத்திற்காக, முள்வேளிக்குள்ளே ஆடு மாடுகளாய்  அடைத்து வைத்திருந்தவர்களை திறந்துவிட்டாவது நடத்தினால் பரவாயில்லை என்ற எந்த கூச்ச சுபாவம் இல்லாமல் இனத்துரோக அலை பரவுவதை தடுக்க ஓடிசியா மைதானத்தில் செம்மொழி மாநாடு

    அதனை தொடர்ந்து 1000 ம் ஆண்டு விழா இராஜ இராஜ சோழனுக்கு. இதில் ஒவ்வொன்றிலும் எதாவது சித்து விளையாட்டு போல கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவு செய்ததே ஆகா , அப்படி, இப்படி என மக்களே வாய்விட்டு பேச வைக்கும்  உள்நோக்கம்  இதில் யார் யாரையெல்லாம் எந்த எந்த நிகழ்ச்சிவாயிலாக பங்கெடுக்க வைக்கலாமென யோசித்து,  செம்மொழியா……. தமிழ்மொழியா ..என ஆஸ்கர்  பரிசு பெற்றவரையே கூட துரோகம் மறைக்க இசையமைக்க வைத்த செயல். அரசு நிகழ்ச்சி வாயிலாகவே   வந்தஅனைவரும்    தன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற மாயையை வெழிக்காட்டவும் வராதவர்களை தனியே பிறித்தது… பிறித்துமேயத்தான் .

    செம்மொழிக்கு எதிராக

    எட்டப்பனை கட்டபொம்மனாக்க செம்மொழி மாநாடா ? என சுவரொட்டி ஒட்டியவர்கள் பேசியவர்களுக்கு கவனிப்பு

    25  ஒக்கனேக்கல் கர்நாடகாவை சேர்ந்தது என எடியுரப்பாவை எல்லை தாண்டி உள்ளே வந்து  போராட அனுமதித்து .கேரளா அமராவதி குறுக்கே அணைகட்டுவதை கண்டித்து போராடிய வைக்கோவை கேரளா எல்லையே நுழைய விடாமல்  தடுத்தது கேரளா காவல்துறையை மகிழ்வித்தது .

  16.  மத்திய அரசே அனுமதித்தும்  இங்கு வந்து சேர்ந்த அன்னை பார்வதி அம்மாவை தமிழ்நாட்டில் இருந்து சிகிச்சை பெற அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதற்கு வைக்கோ போன்றவர்கள் பெரும்கூட்டமாக விமான நிலையம் சென்றதுதான் காரணம் என கூறியது. அதுவல்ல  காரணம் . தன்னை பற்றி எதாவது பார்வதியம்மாள் தவறாக கூறிவிடுவரோ  இல்லை உடல் நிலை தேறிய பிறகு கூறிவிடுவரோ .. இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட்டால் துரோகத்தோடு துரோகமாக   ஒன்று கூடும் என்ற உள் எண்ணம் .

    27 .https://thamukablog.wordpress.com/2017/04/17/தெலுங்கர்-கருணாநிதியின்/ தமிழ் இனத்தையே கொன்று முள்வேலிக்குள் அடைத்து வைத்தவனும், பல கோவில்களைக்கூட இடித்த  இராசபக்சே அவனது அமைச்சர்கள்    எந்த வித பயமும் இன்றி தமிழக  கோவில் குளங்களுக்கு வருவது எதற்கு ? தமிழினத்தை கொன்றதை தமிழ்நாட்டு தமிழர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள் என   உலகத்தாரை நம்ப வைத்து.. இனப்படுகொலை விசாரணை யிலிருந்து தப்பிக்க, அடிக்கடி தமிழகம் வந்து செல்வதை மட்டுமாவது தடுக்கலாம். அதைவிட்டு இன்னும் தமிழ் உணவாளர்கள் சுடுசுரனையுடன் தான் இருக்கிறார்ககளா? என்று அவ்வபோது பரிசோதித்து கொள்வதற்காவது அவர்களின் வருகை பயன் படட்டுமே

    வெறும் 2008 முதல்  ,2009,முதல் 2010 என வெறும் இரண்டே  ஆண்டுகளில்  வெளியில் தெரியும்படி  நடந்தது  இந்த 27  துரோக செயல்கள் . தன்னை தமிழன் என்று சொல்லி   நம்மை ஏமாற்றிய  தெலுங்கர் கருணாநிதி   2008 ஆம் ஆண்டுககு  முன் செய்த துரோகத்தின் எண்ணிக்கை என்ன ?  தெரியாமல் இருக்கும் துரோகங்களின் எண்ணிக்கை என்ன ?

  17.    1 /2 நாள் உண்ணாவிரதம் ..அதனை தொடர்ந்து போர் நின்று விட்டது என அறிவித்து, பின் தானே முடித்து கொண்ட நிலையில் போர் இன்னும் நிற்கவில்லையே என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ..  மழை நின்றும் துவானம் விடவில்லை என பேசியது .

  18.  29 / 01 / 2009  ல்  முத்துகுமார் தீக்குளித்து இறந்து போனதும் அந்த உடலை கொளத்தூரிலிருந்து புரசைவாக்க பிரதான சாலை வழியாக கூட எடுத்து  செல்ல  அனுமதிக்காதது  முத்துகுமாரின் கடைசி ஆசைப்படி என்  உடலை கருவியாக வைத்து போராடுங்கள் என்ற கூற்றுப்படி தமிழகமெங்கும் எடுத்து செல்ல வேண்டும். அப்படி போராடுங்கள் செய்தால் நம் துரோகம் அதிகமாக வெளிப்பட்டுவிடும் என பயந்து அதற்க்கு அனுமதி மறுத்தது .

  19. முத்துகுமார் செய்தி காட்டு தீயாய் தமிழ் உணர்வாளர்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையிலேயே .. தன் மகன் அழகிரியின் பிறந்த நாளை பிரியாணி பொட்டலங்களுடன் தடபுடலாய்  கொண்டாட அனுமதித்தது .

  20. முத்துக்குமாரை தொடர்ந்து அதே 2009 பிப்ரவரி மாதத்தில் இனத்திற்க்காக தீக்குளித்து இறந்த சிலரை ,குடும்ப சண்டையில் இறந்துவிட்டதாக  பொய் செய்திகளை   பரப்பி அவர்களின் தியாகத்தை கேவலப்படுத்தியது .

நன்றி அதியமான் .

இதுக்கு மேலயும் கருணாநிதி நல்லவர் வல்லவர் என்று கம்பு சுத்த வருபவர்கள் வந்து கருத்துக்களை வையுங்கள் பார்க்கலாம் !.........................

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

 

பெருமாள் விவாத்தில் சொல்லபட்ட கருத்துகளை ஒருமுறை வாசித்து பாருங்கள். கருணாநிதி நல்லவரா? கெட்டவரா? என்பதல்ல இங்கு விவாதப்பொருள். 

 கருணாநிதி மட்டுமல்ல  இந்தியா இலங்கையில் உள்ள அரசியில் வாதிகள் யாரும் நல்லவர் என்று யாரும் கம்பு சுத்த முடியாது. எல்லோரும் சுயலநல வாதிகளே. சுயநல வாதிகள் எங்கும் உள்ளார்கள்.  எமக்கு அதுவல்ல பிரச்சனை. நாம் இங்கு விவாதிப்பது அது பற்றி அல்ல. 

எமது போராட்ட தோல்விக்கு கருணாநிதி மட்டும் தான் காரணம் என்று நெடுக்கர் போட்ட மீம்ஸ் பற்றி  மட்டும் தான் இங்கு விவாதிக்கிறோம். 

உங்கள் அதியமான் கருணாநிதி மீது வைத்து குற்றச்சாட்டு போல் தமிழகத்தில் வாழும்  எல்லா அரசியல்வாதி மேலும்    ஆயிரம் குற்றச்சாட்டுக்களை ஆளாளுக்கு ஒவ்வொருவரின் அரசியல் எதிரிகளால் சுமத்த முடியும். இதை எழுதியவருக்கெதிராகவும் அவரின் எதிரியால் இப்படி ஆயிரம் குற்றங்களை சுமத்த முடியும். என்ன அதியமான் யார் என்று தெரியாத‍தால் அவர் செய்த குற்றங்களை பற்றி எமக்கும் தெரியாது. அவ்வளவு தான். ஆனால் அவை அத்தனையும் பற்றி நாம் சிந்திக்கவோ அவற்றின் உண்மை தன்மை பற்றி விவாதிக்கவோ எம்மால்  முடியாது.  எமது போராட்டத்திற்கு எதிராக எமக்குள் நடந்த ஆயிரம் குற்றங்களை எமக்கு தெரிந்தும் அதை பற்றி பேச விருப்பம் இல்லாமல் அடுத்தவன் மீது குற்றம் சாட்டுவது எமது இயலாமையை மறைக்க என்பது தான் நான் சொல்லும் குற்றச்சாட்டு.  போராட்டத்தை சாட்டி மக்களை கடனாளியாக்கி மில்லியன் கணக்கான பணத்தை சூறைய  திருட்டு கும்பல்  பற்றி கூறும் போதுஅந்த திருட்டு பணம் தமிழனிடம் தானே இருக்கிறது என்ற திருட்டு கும்பலுக்கு வக்காலத்து வாங்குவோர் அக்குற்றங்களை மறைக்க கருணாநிதி என்ற அரசியல் வாதியை சாட்டி ஒழிவது பற்றி தான் விவாதிக்கிறோம். 

மீண்டும் கூறுகிறேன் 1991 ராஜீவ் கொலையில் பின்னர் முதலமைச்சராக யார்  இருந்தாலும்  இந்திய அரசை எதிர்த்து அவர்களால் ஈழ மக்களுக்கு எதையும் வெட்டிப் புடுங்க முடியாது.  அது தான் நிஜம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

மீண்டும் கூறுகிறேன் 1991 ராஜீவ் கொலையில் பின்னர் முதலமைச்சராக யார்  இருந்தாலும்  இந்திய அரசை எதிர்த்து அவர்களால் ஈழ மக்களுக்கு எதையும் வெட்டிப் புடுங்க முடியாது.  அது தான் நிஜம். 

 

ராஜீவ் கொலைக்குப் பின்னர் தான் புலிகள் மிகப்பெரிய இராணுவ வெற்றிகளை பதிவுசெய்தனர்.

ராஜீவ் கொலைக்கு பின்னர் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தோர்.. ஒருவர் பழைய சுயநல அரசியல்வாதி கருணாநிதி.. மற்றவர் தானும் தன் ஊழல்களும் என்றிருந்த ஜெயலலிதா. இவர்கள் இருவரிலும் கருணாநிதியே.. ஈழத்தமிழரை வைச்சு சுயநல அரசியலை முன்னெடுத்ததில் அதிக பங்குள்ளவர். ஜெயலலிதாவுக்கு ஈழத்தவர் பற்றி அக்கறை ஏதுமே இல்லை. அவர் கருணாநிதிக்கு எதிர்ப்பு அரசியல் செய்தாரே தவிர.. கருணாநிதியை விட மோசமாக ஈழத்தவர்களை எதிர்ப்பது எப்படி என்ற பார்பர்ணிய சித்தாந்தத்தில் இருந்தாரே தவிர ராஜீவ் படுகொலைக்கு அப்பால் சென்று தமிழகத்தில் ஈழ உணர்வூட்டலை செய்ய விளையவில்லை. அவருக்கு போட்டியா கருணாநிதியும் ஈழத்தவர் அரசியலை செய்யாமல்.. நல்ல பிள்ளைக்கு நடித்துக் கொண்டார்.

மேலும் இருவரும்..அவரவர் செய்த ஊழல்களும்.. அவர்களின் வாரிசுகள் செய்த ஊழல்களும் செய்த தொந்தரவில் இருந்து வெளிவரவே அதிக காலத்தை செலவிட வேண்டி வந்திருந்தது.

ஆனாலும்.. 2009 மே க்குப் பின் நாம் தமிழர் கட்சியின் அழுத்தங்களை அடுத்து ஜெயலலிதா அம்மையார் இனப்படுகொலை மற்றும்.. ஐநா மத்தியத்தத்தோடு பொதுவாக்கெடுப்பை வடக்குக்கிழக்கில் நடத்த கோரி இருந்தார். அதற்கான பிரேரணையையும் தமிழக சட்டமன்றில் நிறைவேற்றி இருக்கிறார். 

ஆனால்.. மத்திய அரசியல்.. வாஜ்பாய் ஆட்சியிலும் சரி.. நரசிம்ராவ் ஆட்சியிலும் சரி சோனியாவின் தனிப்பட்ட வெறுப்பை ஈழமண்ணில் பதிவு செய்ய முடியாமல் போனது. வாஜ்பேய் ஆட்சியில்.. ஜார்ஜ் பெர்னாடஸ் அவர்கள்.. பாதுகாப்பு மந்திரியாக இருந்த வேளையில் தான் புலிகள் இயக்கம் பாரிய இராணுவ தளபாட வளர்ச்சி கண்டது. ஹிந்தியா நேரடியாக உதவாவிட்டாலும்.. விடுதலைப்புலிகள் தம்மை பலப்படுத்துவதை ஹிந்தியா அப்போது பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

அதன் பயனாக... விடுதலைப்புலிகள்.. ஓயாத அலைகள் மூலம்.. பெரும் இராணுவ வெற்றிகளையும் முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பற்ற நில விடுவிப்புக்களையும் சாத்தியமாக்கினர். 

ஆனால்.. சோனியாவின் எடுபிடிகளாக மன்மோகன் சிங் மத்தியிலும்.. கருணாநிதி தமிழகத்திலும் வந்த பின் தான் சோனியா தன் தனிப்பட்ட காழ்புணர்ச்சி நிமித்தம் ஈழத்தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் பழிவாங்கினார். அதன் ஒரு விளைவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. சோனியாவின் அந்த தேவையோடு.. சிங்களம் சர்வதேச அரங்கில் இருந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற மேற்குலக நிலைப்பாடுகளையும் ஒரு நேர்கோட்டில் சமப்படுத்தி செய்த இனப்படுகொலை தான்.. முள்ளிவாய்க்கால் படுகொலை.

இதில் கருணாநிதியின் துரோகம் மிக முக்கியமான ஒன்று. புறக்கணிக்கப்பட முடியாத ஒன்று. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

கருணாநிதி மட்டுமல்ல  இந்தியா இலங்கையில் உள்ள அரசியில் வாதிகள் யாரும் நல்லவர் என்று யாரும் கம்பு சுத்த முடியாது. எல்லோரும் சுயலநல வாதிகளே. சுயநல வாதிகள் எங்கும் உள்ளார்கள்.  எமக்கு அதுவல்ல பிரச்சனை. நாம் இங்கு விவாதிப்பது அது பற்றி அல்ல. 

எமது போராட்ட தோல்விக்கு கருணாநிதி மட்டும் தான் காரணம் என்று நெடுக்கர் போட்ட மீம்ஸ் பற்றி  மட்டும் தான் இங்கு விவாதிக்கிறோம். 

நீங்கள்  நித்திரையில் இருப்பது போல் நடிக்குகிறீர்கள் .எழுப்ப முடியாது .

ஆனால் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதுக்காக  கருணாநிதியின் தமிழருக்கு எதிரான துரோகங்கள் ஓடி ஒளிந்து விடாது மற்றவர்களை  விட கருணாநிதி தமிழ் மீது பற்று போல் நடித்த அரசியல் வியாபாரி அதை அறியாது தெலுங்கு வடுகனை தமிழின காவலர் என்று நினைத்து ஏமாந்தது தமிழ் சனம்  .

ஆனால் அம்மு ஈழத்தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் போர்க்குற்றம் இழைத்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராகச் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் எடுக்க முடிந்தது இதை  எப்படி அவர்களால் செய்ய முடிந்தது ?

உங்கள் கருணாநிதி கடிதம் எழுதிக்கொண்டு இருந்தவர் 

மேலும் ஒரு படி மேலே போய் போர்க்குற்றமிழைத்த இலங்கைப் படையினருக்குத் தமிழ்நாட்டு மண்ணில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று மனிசி பிடிவாதம் பிடித்து மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, குன்னூரிலும் தாம்பரத்திலும் பயிற்சி பெற்ற இலங்கைப் படையினரைத் கலைக்க அவரால் முடிந்தபோது தமிழின காவலாளி என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் வடுகன் எங்கே போனவர் ? அதற்குப் பின்னர், இலங்கைப் படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதையே முற்றாக இல்லாதொழித்தவர் ஜெயலலிதா அம்மா .

நாளைக்கு கனிமொழியோ சுடானிலோ   முதலமைச்சராய் வந்தால் தமிழ்நாட்டில்  மறுபடியும் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி தொடருமா தொடராதா ?

இதே கனிமொழி ராஜபக்சேவுக்கு சென்னைக்கு கூப்பிட்டு  பெரும் விழா எடுத்தாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை .

அன்று கருணாநிதி ஆட்சியில்  இல்லாவிட்டால்  ஈழத்தில் போர் வேறு விதமாக போயிருக்கும் .

முதலில் புலிகளை பலமிழக்க செய்து ஒரு வலிந்த தீர்வை கொடுப்பதுக்கு இடைவிடாத போர் என்றார்கள்  மக்கள் வன்னியில் 1வருடத்துக்கு மேல்  அங்குமிங்கும் அகதியாய் ஓடிக்கொண்டு இருக்குதுகள் அப்போது சொல்லப்பட்டது அதன் பின் முகமாலை புலிகளின் முன்னரங்கு தகர்ப்படும் பொழுது முடிவு தெரிய தொடங்கியது பாரிய அழிவுகள் என்று அப்போது   அதிகாரப் பகிர்வை புலிகளிடம் தரப்போவதில்லை புலிகளை அழித்துவிட்டுத்தான் அதிகாரத்தை தமிழ் மக்களிடம்  கொடுப்போம் என்று  ராஜபக்சேவினர் சொல்லியதாக திமுக முக்கியஸ்த்தர் சொல்லிவிட்டு அதன் பின் வடகிழக்கில் இருந்தும்  உலகத்தமிழர்களிடமிருந்தும்  சென்ற ஒரு போனுக்கும்  பதில் இல்லை .டெல்லிக்கு போரை நிறுத்தச்சொல்லி கடிதம் எழுதிக்கொண்டு இருந்தார் உங்கள் ஆள் .

Link to comment
Share on other sites

6 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  நித்திரையில் இருப்பது போல் நடக்குகிறீர்கள் .எழுப்ப முடியாது .

ஆனால் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதுக்காக  கருணாநிதியின் தமிழருக்கு எதிரான துரோகங்கள் ஓடி ஒளிந்து விடாது மற்றவர்களை  விட கருணாநிதி தமிழ் மீது பற்று போல் நடித்த அரசியல் வியாபாரி அதை அறியாது தெலுங்கு வடுகனை தமிழின காவலர் என்று நினைத்து ஏமாந்தது தமிழ் சனம்  .

 

பெருமாள் நீங்கள் தான் அப்படி நடிக்கிறீர்கள். நான் என்ன கூற வருகிறேன் என்று தெளிவாக கூறியும் மீண்டும்  ஒரே விடயத்திற்குள்ளையே நிற்கிறீகள்.  1986 லேயே  நம்பாத ஒருவரை 25 வருடம் கழித்து  2009 நம்பி ஏமாந்தோம் என்று கூறவது எவ்ளவு அபத்தமானது.  போலியானது. 

கருணாநிதி சுயநல வாதி என்பதும் அவர் தனது குடும்பத்தை கட்சிக்குள் வளர்க்கும் வாரிசு அரசியலில் தான் ஈடுபடுகிறார் என்பதும்  பல வருடங்கள் முன்பே தெரிந்த ஒன்று தான். அப்படியான ஒருவர் பதவியில் உள்ளார் என்றால் அவர் எமக்கு உதவமாட்டார் என்பது குழந்தைப்பிள்ளைக்கும் தெரியும்.  அதற்கெதிரான ராஜதந்திர நடவடிக்கைகளை  தகுந்த வேளையில் எடுத்து போராட்டத்தை நகர்த்தும் பொறுப்பு எங்களுடைது . அதை செய்யாமல் போரின் இறுதிவரை இருந்து விட்டு ஒரு நபரை ஒட்டு மொத்த தோல்விக்கும் ஒரு நபரை கைகாட்டுவது கோழைத்தனம்.  எமக்குள் இருந்த போராட்டத்தை சாட்டி மக்களின் பணத்தை கையாடியவர்கள் பற்றி கேட்டும்  அது பற்றி பேச நீங்கள்  பேசாமால்   இருப்பது ஏன்? போராட்டத்தை தொடங்கியது நாம். நடத்தியது நாம். தோல்விக்கு மட்டும் கருணாநிதி எப்படி காரணமாக இருக்க முடியும்.  நீங்கள் கூறிய அம்மு தான் பிரபாகரனை பிடித்து வந்து இந்தியாவில் தூக்கில் போட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.  

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

ஜார்ஜ் பெர்னாடஸ் அவர்கள்.. பாதுகாப்பு மந்திரியாக இருந்த வேளையில் தான் புலிகள் இயக்கம் பாரிய இராணுவ தளபாட வளர்ச்சி கண்டது. ஹிந்தியா நேரடியாக உதவாவிட்டாலும்.. விடுதலைப்புலிகள் தம்மை பலப்படுத்துவதை ஹிந்தியா அப்போது பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

அதன் பயனாக... விடுதலைப்புலிகள்.. ஓயாத அலைகள் மூலம்.. பெரும் இராணுவ வெற்றிகளையும் முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பற்ற நில விடுவிப்புக்களையும் சாத்தியமாக்கினர். 

மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவு ஒன்றே எல்லாவற்றையும் தீர்மானித்தது.

42 minutes ago, tulpen said:

பெருமாள் நீங்கள் தான் அப்படி நடிக்கிறீர்கள். நான் என்ன கூற வருகிறேன் என்று தெளிவாக கூறியும் மீண்டும்  ஒரே விடயத்திற்குள்ளையே நிற்கிறீகள்.  1986 லேயே  நம்பாத ஒருவரை 25 வருடம் கழித்து  2009 நம்பி ஏமாந்தோம் என்று கூறவது எவ்ளவு அபத்தமானது.  போலியானது. 

கருணாநிதி சுயநல வாதி என்பதும் அவர் தனது குடும்பத்தை கட்சிக்குள் வளர்க்கும் வாரிசு அரசியலில் தான் ஈடுபடுகிறார் என்பதும்  பல வருடங்கள் முன்பே தெரிந்த ஒன்று தான். அப்படியான ஒருவர் பதவியில் உள்ளார் என்றால் அவர் எமக்கு உதவமாட்டார் என்பது குழந்தைப்பிள்ளைக்கும் தெரியும். 

குழந்தைப்பிள்ளைகளுக்கு கூட தெரியக்கூடியதை அறியாமல் இருக்கும் சிலர் யாழ் களத்தில் இருக்கிறார்கள் - ஆதாரம் இதோ:

1 hour ago, பெருமாள் said:

 

டெல்லிக்கு போரை நிறுத்தச்சொல்லி கடிதம் எழுதிக்கொண்டு இருந்தார் உங்கள் ஆள் .

😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

குழந்தைப்பிள்ளைகளுக்கு கூட தெரியக்கூடியதை அறியாமல் இருக்கும் சிலர் யாழ் களத்தில் இருக்கிறார்கள் - ஆதாரம் இதோ:

சும்மா எதையாவது எழுதணும் என்பதுக்கு எழுதாதிங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவு ஒன்றே எல்லாவற்றையும் தீர்மானித்தது.

மட்டுமல்ல.. குறிப்பாக.. வை.கோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் ஜோர்ஜ் பெர்னான்டஸ் போன்றவர்களுக்கு கள நிலைமையை விளக்கிக் கொண்டும் இருந்தார்கள்.  தமிழக முதல்வர்களாக இருந்தவர்களின் பார்வையில்.. புலிகளின் செயற்பாடுகள் கண்டும் காணாமலும் போலுமால் போய் இருந்தன. காரணம்.. அவர்களுக்கு தமது ஊழலை சமாளிக்கவே நேரம் கிடைக்கவில்லை. அதனை சரி செய்ய மத்தியை தாஜா பண்ணுவதே குறியாய் இருந்தனர். 

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

மட்டுமல்ல.. குறிப்பாக.. வை.கோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் ஜோர்ஜ் பெர்னான்டஸ் போன்றவர்களுக்கு கள நிலைமையை விளக்கிக் கொண்டும் இருந்தார்கள். 

வை.கோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் ஜோர்ஜ் பெர்னான்டசுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் வை.கோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் விளக்கித்தான்  ஜோர்ஜ் பெர்னான்டஸ் களநிலையை அறிய வேண்டிய நிலையில் இருந்தார் என்பது சாத்தியக் குறைவானதாக தெரிகிறது. இதற்கு காரணம் வை.கோ போன்றே ஜோர்ஜ் பெர்னான்டசும் தனிப்பட்ட முறையில் இலங்கைத் தமிழர் மீது இரக்கம் கொண்டவராக இருந்ததுடன், மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சர் என்ற அளவில் செய்மதிகள் முதல் அனைத்து உளவுப்பிரிவுகளினதும் சேவைகளை பெற்றுக் கொண்டவராக இருந்தார். ஆகவே அவர் தானாகவே களநிலை பற்றி போதிய அறிவை பெற்றுக் கொண்டிருந்தார் - தமிழகத்தில் அதற்கு தங்கி இருக்கவில்லை என்றே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

●2009 மே இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப்புலிகளுக்கு என்ன நடந்தது
●கருணாநிதியின் தமிழீழ துரோகம் விபரிக்கிறார் அப்போதைய இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைப்புலிகளின் சரணடைவு தொடர்பாக இலங்கை இந்திய அரசுகளுடனும் விடுதலைப்புலிகளுடனும் தொடர்பில் இருந்தவர் சந்திரகாந்தன்
●தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் அண்ணா சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் அண்ணா உட்ப்பட சரணடைந்த போராளிகளை அமர வைத்து தேனீர் அருந்த கொடுத்து சுட்டு கொண்டு இருக்கிரார்கள் அம்பலப்படுத்தினார் சந்திர நேரு அனைவரும் காணொளி பாக்கவும்
●இந்திய ரோவின் தலைமையில் பல நாடுகள் சேர்ந்து அழிக்கபட்ட ஈழவிடுதலை
 

மீள்பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் adminApril 26, 2024 யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.     https://globaltamilnews.net/2024/202016/
    • வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியாக விற்ற யாழ்.வாசி விளக்கமறியலில் adminApril 26, 2024   வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார். அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை  நபர் ஒருவருக்கு விற்பனை செய்ததுடன் , மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக கொடுத்து , அதனை மீள அறுதியாக பெற்றுள்ளார். இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து , காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை , மன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.   https://globaltamilnews.net/2024/202012/  
    • காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும். இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது. ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.     http://www.samakalam.com/காணி-தருவதாக-யாராவது-பணம/  
    • ”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்” பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம். ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும்இ விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் பாராளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம். காத்தான்குடியில் பள்ளியொன்றினுள் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக தமிழ்வின் என்ற நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது. அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004இ 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது. 2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004இ 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார். பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004இல் ‘இமானிய நெஞ்சங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்;. இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார். மேலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர். கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார். இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன். 2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர். இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன்இ தப்பிராஜா வசந்தராஜா கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் ‘கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த’ பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை. 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த பாராளுமன்றத்தினுள்ளும் உள்ளனர். இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13ஆம் திகதி கண்கள் வாய் கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார். அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார். சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார். இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர். டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது. அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர். இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம். டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார். லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது. அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது. 2008இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர். அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார். அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்துவிட்டனர். 2019இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம். அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்துவிட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன். அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாபதியிடம் கோருவதுஇ இந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். 2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம். அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும். அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள். -(     http://www.samakalam.com/பிள்ளையானை-கைது-செய்து-வ/
    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.