Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டமை உறுதியானது!

Featured Replies

Gotabhaya-Rajapaksa-5.jpg

அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுறிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷ இரட்டை பிரஜா உரிமை கொண்டிருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ய கோரி, அதற்காக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கோட்டாபயவின்-அமெரிக்க-க-2/

எதிர்க்கட்சிகள் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார்கள் வழக்கு தொடர்வதட்கு। எல்லாம் தவிடுபொடியாகிவிட்ட்து। இனி கோத்தாவை அசைக்க முடியாது। அமெரிக்காவிலும் ஒன்றும் செய்ய முடியாது। 

அடுத்த நாற்பது வருடங்களுக்கு இராசபக்சாக்கள் தான் ஆட்சியில்  என கடந்த வருடம் முடிவானது. 
இந்த வருடம் நடக்க உள்ள / நடக்க இருந்த பாராளுமன்ற தேர்தலிலும் 2/3 பெரும்பான்மை என கணிப்பு இருந்தது. 

ஆனால், கொரோனா புரட்டி போட்டுவிட்டது.

மகிந்த குடும்பமும் ஆடும், ஆட்டப்படும் அதே சிங்கள பெரும்பான்மை மக்காளால் !  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Vankalayan said:

எதிர்க்கட்சிகள் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார்கள் வழக்கு தொடர்வதட்கு। எல்லாம் தவிடுபொடியாகிவிட்ட்து। இனி கோத்தாவை அசைக்க முடியாது। அமெரிக்காவிலும் ஒன்றும் செய்ய முடியாது। 

அமேரிக்க பிரஜைகளை சர்வதேச நீதிமன்றில்  விசாரணைக்கு அனுப்பி வைக்க முடியாது எண்டது டிரம்ப் நிர்வாக முடிவு.

கோத்தா, அமேரிக்க குடியுரிமையை வெகு விரைவாக இழந்ததற்கு வேறு காரணமும் இருகலாம்.

1 minute ago, Nathamuni said:

அமேரிக்க பிரஜைகளை சர்வதேச நீதிமன்றில்  விசாரணைக்கு அனுப்பி வைக்க முடியாது எண்டது டிரம்ப் நிர்வாக முடிவு.

கோத்தா, அமேரிக்க குடியுரிமையை வெகு விரைவாக இழந்ததற்கு வேறு காரணமும் இருகலாம்.

அப்படி இருந்தாலும் , அவருக்கு எதிராக அமெரிக்கா பிரஜை என்ற ரீதியில் அவருக்கு எதிராக அமெரிக்காவில் போடப்படட வழக்கு செல்லுபடியற்றதாகும்। சர்வதேச நீதிமன்றம், சர்வதேச வழக்கு என்பதெல்லாம் நடந்து முடிய இன்னும் 25 , 30 வருடங்கள் செல்லலாம்। உலகமே இப்போது ஒரு புதிய கடடமைப்புக்குள் மாற்றமடைந்து செல்லப்போகின்றது। எனவே பொறுத்திருந்துதான் நிலைமைகளை பார்க்க வேண்டும்।

அமெரிக்கா உயர் அதிகாரி ஒருவர் கோதாவுடன் பேசியபின்னர்தான் இந்த list வெளியிடப்பட்டிருக்கிறது। எனவே அங்கு ஏதும் பேசப்பட்டிருக்கலாம்। 

  • கருத்துக்கள உறவுகள்

பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பட்டியல் எப்போது வெளியிடப்பட்டது என்பதிலும் பார்க்க ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு கையளிக்கப்பட்ட திகதிக்கு முன்பா அல்லது பின்னரான  ஒரு திகதியிலா கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டது  என்பதுதான் இங்கு முக்கியமானதாக இருக்கமுடியும். அது பின்னரான திகதியாக இருந்தால் கோட்டா தனது வேட்புமனுவில் பொய்த்தரவு வழங்கியமைக்காகவும் அந்த நேரத்தில் தேர்தலில் போட்டியிடும் தகமையை கோத்தா  கொண்டிருக்கவில்லை என்ற அடிப்படையிலும் ஜனாதிபதியை பதவியில் இருந்து தூக்கமுடியும். தமிழ்(?) சிங்கள தரப்பு அரசியல்வாதிகள் சட்டத்தின் துணையுடன் இந்த விடயத்தை மேலும் ஆராய்வார்களா அல்லது கோட்டாவை தகுந்த இடத்தில் வைப்பதற்கு இதை துருப்புசீட்டாக பயன்படுத்துவார்களா?

2 hours ago, Vankalayan said:

அமெரிக்கா உயர் அதிகாரி ஒருவர் கோதாவுடன் பேசியபின்னர்தான் இந்த list வெளியிடப்பட்டிருக்கிறது। எனவே அங்கு ஏதும் பேசப்பட்டிருக்கலாம்। 

அதே சந்தேகம் தான் எனக்கும். ஏதோ டீல் இருக்கும்.

சீனாவை நோக்கியதாக இருக்கலாம். சீனாவே கடவுளா நினைக்கும் கோத்தா இதை எப்பிடி கையாள நினைச்சாலும் பாதிப்பு தமிழர்களுக்கே.

தமிழர் தரப்பு ஹிந்தியா மேற்குலக நாடுகளுடன் மட்டும் நின்டு விடாம சந்தர்ப்பங்களை பாத்து சீனா ரஷ்யாவுடனும் நெருக்கமாக வேண்டும்.

21 hours ago, Rajesh said:

அதே சந்தேகம் தான் எனக்கும். ஏதோ டீல் இருக்கும்.

சீனாவை நோக்கியதாக இருக்கலாம். சீனாவே கடவுளா நினைக்கும் கோத்தா இதை எப்பிடி கையாள நினைச்சாலும் பாதிப்பு தமிழர்களுக்கே.

தமிழர் தரப்பு ஹிந்தியா மேற்குலக நாடுகளுடன் மட்டும் நின்டு விடாம சந்தர்ப்பங்களை பாத்து சீனா ரஷ்யாவுடனும் நெருக்கமாக வேண்டும்.

கோதாவுடன் பேசியது அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் என்னும்போது அது மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும்। இல்லாவிடடாள் எப்பவோ வெளியிடவேண்டிய பட்டியலை இப்போது வெளியிட வேண்டிய அவசியமில்லை। இருந்தாலும் சீன சார்பு ராஜபக்சே அரசு இதை எப்படி கையாளும் என்பதை இப்போது சொல்ல முடியாது।

தமிழ் அரசியல்வாதிகள் சீன , ரஸ்சிய சார்பு நிலைப்பாடுகளை எடுக்க நிச்சயமாக இந்தியா விருக்கும்பாது। எதிரிக்கு எதிரிக்கு நண்பன் என்பது போலத்தான் அரசியலும்। எனவே தமிழர் தரப்பு இந்திய சார்பாக இருக்கும்போது (India  தமிழர் சார்பாக இருக்குதா என்பது வேறு விடயம்) இலங்கை சீன சார்பாகத்தான் இருக்கும்। மேலும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவமும் வல்லரசு நாடுகளிடையே போட்டியை உருவாக்கி இருப்பதால் இது ஒரு சிக்கலான அரசியல் விடயம்। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.