Jump to content

``பிரபாகரனோடு நாலு மாசம் இருந்தப்ப கறி இட்லி சாப்பிட்டிருக்கீங்களா?'' - ஜான் மகேந்திரன் பதில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் சினிமாவில் என்றைக்கும் நிலைத்திருக்கும் பெயர் இயக்குநர் மகேந்திரன். 'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்' என கிளாசிக் படங்களை இயக்கியவர். இவரும் இவரது மகன் ஜான் மகேந்திரனும் இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் தங்கியிருந்தனர். அந்நாள்களைப் பற்றிப்பேசினேன்.

இயக்குநர் பாலா தயாரிக்கும் மலையாள ரீமேக் படமான 'ஜோசப்' படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதிட்டிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருக்கு?

''இயக்குநர் பாலா சாரும், நானும் பக்கத்து வீட்டுக்காரங்கன்றதால எங்களுக்குள்ள நெருக்கம் அதிகம். அடிக்கடி மீட் பண்ணிப் பேசிக்குவோம். நிறைய படங்கள் பற்றின டிஸ்கஷன் எப்பவும் எங்களுக்குள்ள போயிட்டே இருக்கும். பாலா சாரின் 'தாரை தப்பட்டை' படத்துல இணை இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். அதனால பாலாவுக்கு என்னோட பலம் நல்லா தெரியும். திடீர்னு போன் பண்ணி, ''ஜோசப்' மலையாளப் படத்தை தமிழ்ல ரீமேக் பண்றேன். இதுல தமிழ்ல நீங்க வசனம் எழுதுங்க'னு சொன்னார். எனக்கு மலையாளம் நல்லா தெரியும். அதனால, 'தமிழ்ல உருவாகுற படத்துக்குக் கூடவே இருந்து உதவி பண்ணுங்க'னு சொன்னார். மலையாளத்துல இந்தப் படத்தை எடுத்த பத்மகுமார் சார்தான் தமிழ்லயும் எடுத்திட்டு இருக்கார். லைஃப்ல இந்த மாதிரியான இயக்குநரைத் திரும்பவும் மீட் பண்ணுவேனானு தெரியல. அந்தளவுக்கு ரொம்ப பர்ஃபக்ட்டான ஜென்டில்மேன் பத்மா சார். இவர்கூட வேலை பார்த்தது பெரிய அனுபவத்தைக் கொடுத்திருக்கு. இந்தப் படம் தவிர வேறொரு படத்தைத் தமிழ்ல எடுக்கவும் பத்மா சார் பிளான் பண்ணிட்டு இருக்கார். அந்த புரொஜக்ட்லயும் நான் இருக்கேன்

'ஜோசப்' மலையாளப் படத்துல அறுபது சதவிகிதம் ஒரு விதமான சைலன்ட் டிராவல் ஆகும். இந்த சைலன்ட் மூட் என்னை ரொம்ப பாதிச்சது. மலையாள ஆழ்வுணர்வும் மாறாம, அதேசமயம் நம்ம தமிழ் ஆடியன்ஸூக்கும் ஏத்த மாதிரி வசனங்கள் எழுதியிருக்கேன். அதேமாதிரி ஆர்.கே.சுரேஷோட சினிமா வாழ்க்கையில முக்கியமான படமா இது இருக்கும். இசை ஜி.வி.பிரகாஷ் பண்ணியிருக்கார். 'இந்தப் படத்துக்கு ஜி.வி. இசையமைச்சதான் சரியாயிருக்கும்'னு பாலா சார் சொன்னார். மலையாள வெர்ஷனை விட தமிழ்ல பாடல்கள் ரொம்ப நல்லாயிருக்கும்.''

 

அதிகமான மலையாளப் படங்கள் தமிழ்ல இப்போ ரீமேக் ஆகுது... ஆனால் இந்தப் படங்கள் இங்கே கமர்ஷியலா ஹிட் ஆகுமா?

''நிறைய மலையாள சினிமா பார்த்துட்டு நம்ம ஊர்ல இப்படியொரு சினிமா எடுக்க மாட்டுறாங்களேனு ஒரு புலம்பல் எப்பவும் இருக்கும். ஆனா, இப்ப இருக்குற லாக்டெளன்ல தமிழ் ஆடியன்ஸ் நிறைய மலையாளப் படங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. சோஷியல் மீடியால மலையாள சினிமா பற்றி எழுதிக்கிட்டே இருக்காங்க. 'ஜோசப்' படமும் வசூல் ரீதியா ஹிட் அப்படிங்குறதைத் தாண்டி நல்ல ஃபீல்குட் படம். ஓடிடி ரிலீஸூக்குப் பிறகு நிறைய பேர் மலையாள சினிமா மாதிரியான கதைக்களத்துல படம் எடுக்க வர்றாங்க. 'உதிரிப்பூக்கள்' படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுனாங்க. அதே நேரத்துல 'சகலகலா வல்லவன்' படத்தையும் ரசிச்சாங்க. அப்பா, 'மக்கள் எப்போதும் நல்ல படங்களை பார்க்க விரும்புவாங்க. நாமதான் கொடுக்கறதில்லை'னு சொல்லுவார். அதனால மலையாளப் படங்களும் தமிழ்ல நிச்சயம் கமர்ஷியலாவும் ஹிட் ஆகும்.''

 

நிறைய படங்கள்ல வேலை பார்த்தும் 'சச்சின்' படத்துக்குப் பிறகு டைரக்‌ஷன் பண்ண நீங்க இன்னும் தயங்குறது ஏன்?.

''விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஃபிலிம் மேக்கிங் பற்றி அவரோட இயக்கத்துக்கு கத்துக் கொடுக்கணும்னு அப்பாவை ஈழத்துக்குக் கூப்பிட்டார். அப்பா மேல பிரபாகரன் பெரிய மரியாதை வெச்சிருந்தார். அப்போ, அப்பாகூட நானும் போயிருந்தேன். நாலு மாசம் வரைக்கும் அங்கே இருந்து அப்பா பயிற்சி கொடுத்தார். அப்போ, அங்கே கிடைச்ச அனுபவத்தை வெச்சு 'பனிச்சமரம்', '1996'னு குறும்படங்கள் எடுத்தார். அதுல 'பனிச்சமரம்' முழுக்க முழுக்கப் புலிகளைப் பற்றியது. அப்பாவுடைய மாஸ்டர் பீஸ் வொர்க் இதுல இருக்கும். ஆனா, இதை எல்லோரும் பார்க்க முடியாமப் போயிருச்சுனு ஒரு வருத்தம் எனக்குள்ள இருக்கு. அப்போ, 'ஆணிவேர்'னு ஒரு படத்தை நான் டைரக்‌ஷன் பண்ணேன். இதை பிரபாகரன் சார்தான் புரொடியூஸ் பண்ணார்.

அந்த நேரத்துல என்கூட வேலை பார்த்தவங்க எல்லாரும் பயந்து போயிருந்தாங்க. 'ஏன் பிரபாகரன் சார்கூட சேர்ந்து வேலை பார்க்குறீங்க'னு கேள்வி கேட்பாங்க. நானும், அப்பாவும் பிரபாகரனை மீட் பண்ண போட்டோஸ் எல்லாமே பரவ ஆரம்பிச்சிருச்சு. அப்பாவும் எதையும் மறைக்கத் தயாராயில்ல. அதனாலயே சில காரணங்களால் என்னால தொடர்ந்து படம் பண்ண முடியல. ஆனா, இப்போ ஒரு படத்தை இயக்கப் போறேன். தயாரிப்பு நிறுவனம் ரெடியா இருக்காங்க. சீக்கிரமே அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். அதே மாதிரி சில படங்கள்ல நடிக்கவும் செய்றேன். 'எங்கேயும் எப்போதும்' சரவணன் த்ரிஷாவை வெச்சு 'ராங்கி' படத்தை டைரக்‌ஷன் பண்ணிட்டு இருக்கார். இதுல நான் போலீஸ் கேரக்டர் பண்ணியிருக்கேன். தவிர, அசோக் செல்வன் நடிச்சிருக்குற 'ரெட்ரம்' படத்துலயும் நடிச்சிருக்கேன்.''

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருந்த நாள்கள் பற்றிச் சொல்லுங்க?

''பிரபாகரன் சாருக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும். ஒரு படத்தை எடுத்துக்கிட்டு முழுசா அலசி, ஆராய்வார். ரொம்ப நுணுக்கமா பேசுவார். புலிகளின் தலைவர் மாதிரி நம்மகிட்ட இருக்க மாட்டார். சினிமால பிரபாகரன் கேரக்டரை உருவகப்படுத்திக் காட்டுறதுக்கும் ஒரிஜினலா பார்த்ததுக்கும் நிறைய வித்தியாசமிருக்கு. அங்கேபோய் இறங்கினதும் பிரபாகரன் சாரைப் பார்க்க நானும், அப்பாவும் ஒவ்வொருநாளும் காத்துட்டு இருப்போம். அப்பா சில புத்தகங்கள்லாம் கையில வெச்சுட்டு ரெடியா உட்கார்ந்திருப்பார். 'சில சம்பவங்கள் இப்போ நடந்திருக்கு, பிறகு சந்திக்கலாமே'னு சொல்லுவாங்க. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு 'இரவு உணவு அண்ணன் கூட இருக்கும்'னு சொல்லுவாங்க. ஆனா, நடக்காது. 'என்னடா மீட் பண்ணுவோமா மாட்டோமா'னு ஒரு சர்ப்ரைஸோடயே டிராவல் ஆனோம். நமக்குள்ள அவரைப் பற்றின நிறைய இமேஜ் இருக்கும். ஆனா, அவரை மீட் பண்ணப்போ அந்த இமேஜ் எல்லாத்தையும் உடைச்சுதான் அவரைப் பார்த்தோம். அவரோட தோற்றம், பாடி லாங்குவேஜ் எல்லாம் ரொம்ப இயல்பா இருந்தது. ரொம்ப நெருக்கமான சொந்தக்காரனைப் பார்த்த மாதிரியிருந்தது.

'கனநேரம் காக்க வெச்சுட்டேனா'னு சிரிச்சிக்கிட்டே வந்தார். அதே மாதிரி அங்கே இருந்தவங்கலாம் அப்பாகிட்டா, 'தம்பி, தலைவர், பிரபானு எப்படி வேணா கூப்பிடுங்க. எப்படி கூப்பிட்டாலும் அண்ணன் தப்பா நினைக்க மாட்டார்'னு சொல்லுவாங்க. சாப்பிடும்போது 'இதைச் சாப்பிடுங்க'னு பாசமா எங்களுக்கு எடுத்து வைப்பார். அங்கே இருந்த ஒரு வெஜிடபிள் ரோலுக்குப் பெயர் கன்னிவெடி. ஒரு நியூ இயர் டைம் அவர்கூட அங்கே இருந்தேன். அப்போ என்னை அவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டார். 'Will to freedom' புத்தகத்துல கையெழுத்து போட்டுக் கொடுத்தார். எந்தச் சூழலிலும் உலகமே பார்த்து மிரண்டு மரியாதை கொடுக்குற ஒருத்தர்கூட பேசிக்கிட்டு இருக்கோம்னு தோணவே இல்ல. யாராவது டூப் போட்டுக்கிட்டு நம்மகிட்ட பேசிக்கிட்டு இருக்காங்களானு ஆச்சர்யப்பட வைக்குறளவுக்கு நடந்துகிட்டார். பிரபாகரன் மற்றும் தமிழ்செல்வன் ரெண்டு பேருமே இப்படிதான் நடந்துகிட்டாங்க. அங்கே இருந்து கிளம்பி சென்னைக்கு எங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் அவரோட ஆட்களை வெச்சு விசாரிச்சிக்கிட்டே இருந்தார்.''

பிரபாகரன் வீட்டில் பரிமாறப்படும் உணவுகள் மிகுந்த ருசியாக இருக்கும் என்கிறார்களே... அவரோடு சேர்ந்து சாப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் அனுபவம் எப்படி?

''உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசை வரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''

https://cinema.vikatan.com/tamil-cinema/director-john-mahendran-shares-his-experience-in-sri-lanka-with-his-father

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அப்போ, 'ஆணிவேர்'னு ஒரு படத்தை நான் டைரக்‌ஷன் பண்ணேன். இதை பிரபாகரன் சார்தான் புரொடியூஸ் பண்ணார்.

தலைவர் புரொடியூசர் ஆகவும் இருந்திருக்கிறார்....

சேராவின் நண்பன் இதற்கு பதில் தருவாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பிழம்பு said:

 

''உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசை வரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''

பிட்டும், இடியாப்பமும், பாணும் சாம்பலும் இருக்கிற இடத்தில ஆறின 100 தோசையா?
பிரபாகரனின் பிட்டு என்று தென் இலங்கையர்களே அனுபவித்து எழுதி இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசைவரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''""

அவர் தனக்கு புரிந்ததைக் கூறுகிறார். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு உண்மை தெரியும்தானே. 🙂

Link to comment
Share on other sites

1 minute ago, Kapithan said:

""உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசைவரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''""

அவர் தனக்கு புரிந்ததைக் கூறுகிறார். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு உண்மை தெரியும்தானே. 🙂

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

நான் சாப்பிடேல‌ , ஆனால் போர்க‌ள‌த்தில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ளுக்கு போர‌ உண‌வை பார்த்து இருக்கிறேன் , ப‌லாளியில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ளுக்கு இர‌வு நேர‌ உண‌வை என‌து மாமா தான் சைக்கில‌ எடுத்து செல்வார் ,

நாம‌ இர‌வில் சாப்பிடும் புட்டு க‌றிக‌ள் இவை தான் மாமா போராளிக‌ளுக்கு எடுத்து சென்ற‌ போது பார்த்தேன் , 

18 minutes ago, நிழலி said:

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

யாழ்ப்பாண‌த்தில் உற‌வுக‌ள் நேரில் சென்று அவ‌ர்க‌ள் ச‌மைத்த‌ உண‌வை குடுப்பின‌ம் , 
1994ம் ஆண்டு நீங்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் இருந்து இருந்தா இது உங்க‌ளுக்கு தெரிந்து இருக்கும் , யாழ்ப்பாண‌ ஆரிய‌ குள‌ ச‌ந்தியில் போராளிக‌ளின் சிறு முகாம் இருந்த‌து அந்த‌ முகாமில் இருக்கும் போராளிக‌ளுக்கு ம‌க்க‌ள் தான் கொண்டு போய் குடுக்கிற‌வை  உண‌வை ,பெரிய‌ம்மா ச‌மைத்து த‌ர‌ நானும் கொண்டு போய் குடுத்த‌ நான் 1994ம் ஆண்டு 

Link to comment
Share on other sites

7 minutes ago, பையன்26 said:

நான் சாப்பிடேல‌ , ஆனால் போர்க‌ள‌த்தில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ளுக்கு போர‌ உண‌வை பார்த்து இருக்கிறேன் , ப‌லாளியில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ளுக்கு இர‌வு நேர‌ உண‌வை என‌து மாமா தான் சைக்கில‌ எடுத்து செல்வார் ,

நாம‌ இர‌வில் சாப்பிடும் புட்டு க‌றிக‌ள் இவை தான் மாமா போராளிக‌ளுக்கு எடுத்து சென்ற‌ போது பார்த்தேன் , 

யாழ்ப்பாண‌த்தில் உற‌வுக‌ள் நேரில் சென்று அவ‌ர்க‌ள் ச‌மைத்த‌ உண‌வை குடுப்பின‌ம் , 
1994ம் ஆண்டு நீங்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் இருந்து இருந்தா இது உங்க‌ளுக்கு தெரிந்து இருக்கும் , யாழ்ப்பாண‌ ஆரிய‌ குள‌ ச‌ந்தியில் போராளிக‌ளின் சிறு முகாம் இருந்த‌து அந்த‌ முகாமில் இருக்கும் போராளிக‌ளுக்கு ம‌க்க‌ள் தான் கொண்டு போய் குடுக்கிற‌வை  உண‌வை ,பெரிய‌ம்மா ச‌மைத்து த‌ர‌ நானும் கொண்டு போய் குடுத்த‌ நான் 1994ம் ஆண்டு 

பையன், வெளியாட்களோ பெற்றோர்களோ போராளுகளுக்கு உணவு கொடுக்க அனுமதி இல்லை. ஒரு வேளை அந்த காலகட்டத்தில் நீங்கள் மிகச் சிறுவனாக இருந்திருப்பீர்கள் என்பதால் அவ்வாறு விளங்கிக் கொண்டீர்களோ தெரியாது.

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் என்று ஒரு சமையல் காம்ப் இருக்கும். ஊரில் இருக்கும் பலர் (முக்கியமாக பெண்கள்)  தாமாகவே முன் வந்து சமையலில் ஈடுபடுவார்கள். ஆனால் உணவு தாயாரிப்பதற்கான உணவுப் பொருட்கள் அனைத்தும் புலிகளினால் தான் கொடுக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு சமைத்த பின் அங்கிருந்து வாகனங்களில் போராளிகளின் முகாம்களுக்கு எடுத்துச் செல்வர். அவ்வாறு சமைத்த உணவு போராளிகளின் கைகளுக்கு கிடைக்கும் போது அவை ஆறிப் போனதாக அனேக நேரங்களில் இருக்கும். எல்லா போராளிகளும் ஒரே நேரத்தில் உண்பதும் இல்லை.

உணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட  போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

பையன், வெளியாட்களோ பெற்றோர்களோ போராளுகளுக்கு உணவு கொடுக்க அனுமதி இல்லை. ஒரு வேளை அந்த காலகட்டத்தில் நீங்கள் மிகச் சிறுவனாக இருந்திருப்பீர்கள் என்பதால் அவ்வாறு விளங்கிக் கொண்டீர்களோ தெரியாது.

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் என்று ஒரு சமையல் காம்ப் இருக்கும். ஊரில் இருக்கும் பலர் (முக்கியமாக பெண்கள்)  தாமாகவே முன் வந்து சமையலில் ஈடுபடுவார்கள். ஆனால் உணவு தாயாரிப்பதற்கான உணவுப் பொருட்கள் அனைத்தும் புலிகளினால் தான் கொடுக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு சமைத்த பின் அங்கிருந்து வாகனங்களில் போராளிகளின் முகாம்களுக்கு எடுத்துச் செல்வர். அவ்வாறு சமைத்த உணவு போராளிகளின் கைகளுக்கு கிடைக்கும் போது அவை ஆறிப் போனதாக அனேக நேரங்களில் இருக்கும். எல்லா போராளிகளும் ஒரே நேரத்தில் உண்பதும் இல்லை.

உணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட  போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

மாமா என‌து உற‌வின‌ர்க‌ள் ச‌மைத்த‌ உண‌வை எடுத்து செல்வ‌து இல்லை , ம‌ல்லாக‌த்தில் இருந்து எடுத்து வ‌ந்து ப‌லாளியில் நிக்கும் போராளிக்கு இர‌வு நேர‌ங்க‌ளில் கொண்டு போய் குடுப்பார் ,

நான் யாழ்பாண‌த்தில் 1994ம் ஆண்டு குடுத்த‌து என‌க்கு இப்ப‌வும் நினைவு இருக்கு , எங்க‌ட‌ வீட்டில் இருந்து அவையின் முகாமுக்கு 5நிமிச‌ ந‌டை / 

இவை தெரிந்த‌ ப‌டியால் தான் எழுதினேன் , ஒரு த‌ட‌வை தான் நான் உண‌வு கொண்டு போய் கொடுத்த‌ நான் / நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி , ஒரு இர‌வு மிஞ்சிய‌ சாப்பாட்டு பாச‌ல் மாமா த‌ந்தார் சாப்பாட்டில் சூடு இல்ல‌ , நான் கொஞ்ச‌ம் சாப்பிட்டு அப்ப‌டியே வைத்து விட்டேன் , 

16 minutes ago, நிழலி said:

பையன், வெளியாட்களோ பெற்றோர்களோ போராளுகளுக்கு உணவு கொடுக்க அனுமதி இல்லை. ஒரு வேளை அந்த காலகட்டத்தில் நீங்கள் மிகச் சிறுவனாக இருந்திருப்பீர்கள் என்பதால் அவ்வாறு விளங்கிக் கொண்டீர்களோ தெரியாது.

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் என்று ஒரு சமையல் காம்ப் இருக்கும். ஊரில் இருக்கும் பலர் (முக்கியமாக பெண்கள்)  தாமாகவே முன் வந்து சமையலில் ஈடுபடுவார்கள். ஆனால் உணவு தாயாரிப்பதற்கான உணவுப் பொருட்கள் அனைத்தும் புலிகளினால் தான் கொடுக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு சமைத்த பின் அங்கிருந்து வாகனங்களில் போராளிகளின் முகாம்களுக்கு எடுத்துச் செல்வர். அவ்வாறு சமைத்த உணவு போராளிகளின் கைகளுக்கு கிடைக்கும் போது அவை ஆறிப் போனதாக அனேக நேரங்களில் இருக்கும். எல்லா போராளிகளும் ஒரே நேரத்தில் உண்பதும் இல்லை.

உணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட  போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

எம் போராட்ட‌த்துக்கு என்று ப‌ல‌ விதிமுறைக‌ள் இருக்கு , சாப்பாட்டுக்கும் க‌ட்டுப் பாடு என்று இப்ப‌ தான் அறியிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

ஆம்.  🙂

போர் முன்னரங்குகள் எவ்வாறு இருக்கும் என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால் முகாம்களில் சமைக்கும்போது முடிந்த அளவு சுவையாக சமைக்க முற்படுவர். அதன் அர்த்தம் எப்போதுமே,  எல்லோருமே  சுவையாக சமைக்க மாட்டார்கள் என்றாகாது. 👍

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

பிட்டும், இடியாப்பமும், பாணும் சாம்பலும் இருக்கிற இடத்தில ஆறின 100 தோசையா?
பிரபாகரனின் பிட்டு என்று தென் இலங்கையர்களே அனுபவித்து எழுதி இருக்கிறார்கள்.

என்ன செய்யிறது எங்கடை வீடைப்பற்றி பக்கத்துவீட்டுக்காரன் சொல்லிகேக்கவேண்டிய நிலையில் எங்கடை ஆட்கள் இருப்பதை பார்த்து …………..

விடுதலை புலிகளின் சாப்பாடை பற்றித்தான் நிறையபேருக்கு பிரச்சனையா இருக்கு.

தலைவர் நல்லபடியாகத்தான் தன்னுடைய பிள்ளைகளை பார்த்தார் .

இது எனது சகோதரர் சொன்னது 
எல்லோருக்கும் ஒரேவகையான உணவு வழங்கப்படுவதில்லை. ஒவ்வொருவரின் செயற்படடை பொறுத்து அவர்களின் உணவும் மாறுபடும். அரசியல், நிர்வாகம் செய்ப்பவர்களுக்கு சாதாரண உணவு {அது யாராக இருந்தாலும்}, பயிற்சி, மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு விசேட உணவு, விசேட பயிற்சியில் இருப்பவர்களுக்கு அதிவிசேட உணவு (இந்த உணவை கனவில் கூட ஒருவரும் நினைத்து பார்த்திருக்க மாடீர்கள்  )
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

நான் போய் இருக்கின்றேன் சமையல் அறை வரை, பொன்னாலை காட்டுக்குள் பிடிக்கப்பட்ட 10-15 உடும்புகளை நான்தான் உரித்துக்கொடுத்தேன் சமைப்பதற்கு, நின்று பார்த்தேன் அவர்களுடன் சமைப்பதை, ஏன் அவர்களும் மனிதர்கள் தானே? நல்ல உணவு சாப்பிடக்கூடாத?

இவரின் பேட்டியை முதலே படித்துவிட்டேன், வேணுமேன்றே விகடன் இதை செய்கின்றார்கள்

Link to comment
Share on other sites

9 minutes ago, உடையார் said:

நான் போய் இருக்கின்றேன் சமையல் அறை வரை, பொன்னாலை காட்டுக்குள் பிடிக்கப்பட்ட 10-15 உடும்புகளை நான்தான் உரித்துக்கொடுத்தேன் சமைப்பதற்கு, நின்று பார்த்தேன் அவர்களுடன் சமைப்பதை, ஏன் அவர்களும் மனிதர்கள் தானே? நல்ல உணவு சாப்பிடக்கூடாத?

இவரின் பேட்டியை முதலே படித்துவிட்டேன், வேணுமேன்றே விகடன் இதை செய்கின்றார்கள்

அவர்கள் மனிதர்கள் இல்லையென்றும் நல்ல உணவு சாப்பிடக் கூடாது என்றம் எவராவது இங்கு குறிப்பிட்டுள்ளார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

அவர்கள் மனிதர்கள் இல்லையென்றும் நல்ல உணவு சாப்பிடக் கூடாது என்றம் எவராவது இங்கு குறிப்பிட்டுள்ளார்களா?

இந்திரியின் நோக்கமும் நீங்கள் கேட்ட கேள்வியும், அவர்கள் நல்ல உணவு சாப்பிடக்கூட மாட்டார்கள் என்ற மாதிரி இருந்திச்சு, அப்படி நீங்கள் நீங்கள் நினைக்கவில்லையென்றால் மிக்க சந்தோஷம் 🙏

 

Link to comment
Share on other sites

13 minutes ago, உடையார் said:

இந்திரியின் நோக்கமும் நீங்கள் கேட்ட கேள்வியும், அவர்கள் நல்ல உணவு சாப்பிடக்கூட மாட்டார்கள் என்ற மாதிரி இருந்திச்சு, அப்படி நீங்கள் நீங்கள் நினைக்கவில்லையென்றால் மிக்க சந்தோஷம் 🙏

 

 

4 hours ago, நிழலி said:

 

உணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட  போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

இவ்வாறு நான் எழுதியதை பார்த்து(ம்) எவ்வாறு இப்படி  உங்களுக்கு தோன்றியது என யோசிக்கின்றேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

 

இவ்வாறு நான் எழுதியதை பார்த்து(ம்) எவ்வாறு இப்படி  உங்களுக்கு தோன்றியது என யோசிக்கின்றேன்...

நிழலி நீங்கள் கனக்க யோசிக்கவேண்டாம், என்னில்தான் பிழை, நீங்கள் அப்படி யோசிப்பவர் இல்லையென்று தெரிந்து கேட்டது எனென்றால், இதை முதலே விகடனில் வாசித்து கடுப்பில் இருந்தனான் இவர் மேல்😡, அதை இங்கு கண்டு, உங்கள் கேள்வியையும் பார்த்து இன்னும் கடுப்பாய்விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது, 

ஈழ விடுதலைப் போராட்டத்தை போராளிகள் சாப்பிட்ட  சப்பாட்டைக் கொண்டும் சமையலின் ருசியைக் கொண்டும் அளவிடும் நிலைக்கு நாம் தரம் தாழ்ந்து போய்விட்டோம் 

வெட்கக் கேடு. 😡

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது, 

ஈழ விடுதலைப் போராட்டத்தை போராளிகள் சாப்பிட்ட  சப்பாட்டைக் கொண்டும் சமையலின் ருசியைக் கொண்டும் அளவிடும் நிலைக்கு நாம் தரம் தாழ்ந்து போய்விட்டோம் 

வெட்கக் கேடு. 😡

என்ன செய்யிறது, இதுவும் கடந்து போகும் ,

போராடடத்தை மல்லினபடுத்துவர்க்கு  இந்தியாவின்  சவுத் புளொக் ஆடும் நாடகம், இதை விளங்கிக்கொள்ளாமல் எம்மவர்களும் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. http://1.bp.blogspot.com/_otWn2PlEOdY/Sufo3lEtaUI/AAAAAAAARJs/FIeQXuzwL5E/s400/untitled.bmp 1989 ஆம் ஆண்டு ரஜீவுடன் ரஸ்ஸியா நோக்கிப் பயணிக்கும் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
    • @theeya  வணக்கம். உங்களுக்கும் துடுப்பாட்டத்தில் ஆர்வம் இருந்தால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்கலாம். நன்றி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.