Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20200610_082723.jpg

யாழில் புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது!

யாழ். நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் வீதியோரமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிளில் வந்த இரு நபர்களே காண்ணாடி கூட்டை சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் தாக்குதல்தாரிகளை இனம் காணும் முகமாக விகாரையை சூழவுள்ள பிரதேசத்தில் காணப்படும் CCTV காணொளிகளை பொலிஸார் பரிசோதித்து வருகின்றனர்.

அதேவேளை, இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், இது தொடர்பில் மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நான் நினைக்கின்றேன்  வேண்டத்தகாதவர்களால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். நான் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றேன். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழர், சிங்களவர் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம். அதனை குழப்புவதற்காக சிலரால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதுதான் எனது கருத்து.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த விடயம் தொடர்பில் தென்பகுதியில் உள்ள பௌத்த மக்களோ அல்லது வேறு இன மக்களோ குழப்பமடைய வேண்டாம். எமது இன ஒற்றுமையை குழப்புவதற்காக இந்த விடயம் இடம்பெற்றிருக்கலாம்.

இந்த விடயத்தினை பெரிதாக்கி எமது இன ஒற்றுமையை குலைக்காது அனைவரும் ஒற்றுமையாக செயற்படுமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

இனவாததை தூண்டுபவர்களால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். எனினும் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சம்பந்தப்பட்டவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்“ எனத் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/யாழில்-புத்தர்-சிலையின்/

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் குழப்பமடைய வேண்டாம் : யாழ். நாக விகாரையின் விகாராதிபதி

(தி.சோபிதன்)

இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் நாக விகாரை மீது தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ள நாகவிகாரையின் விகாராதிபதி  ஸ்ரீ விமல தேரர்  இது தொடர்பில் மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தி ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பௌத்த  நிலையத்திற்கு இனம்தெரியாத நபர்களினால்  தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி  ஸ்ரீ விமல தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது நாக விகாரையில் ஒரு சிறிய தாக்குதல் சம்பவம்  ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்று இருக்கின்றது.

நான் நினைக்கின்றேன் யாரும்  வேண்டத் தகாதவர்களால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்   நான் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்விடுக்கின்றேன்.

IMG-1746.JPG

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் தமிழர் சிங்களவர் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

இது தொடர்பில் மக்கள் குழம்ப வேண்டாம் நாங்கள் தமிழர் சிங்களவர் முஸ்லிம் என்ற இன வேறுபாடு இன்றி இலங்கையில் வசித்து வருகின்றநிலையில் அதனை குழப்புவதற்காக சிலரால்.இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதுதான் எனது கருத்து.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த விடயம் தொடர்பில் தென்பகுதியில் உள்ள பௌத்த மக்களோ அல்லது வேறு இன மக்களோ இது தொடர்பில் குழப்பமடைய வேண்டாம் எமது இன ஒற்றுமையை குழப்புவதற்காக இந்த விடயம் இடம்பெற்றிருக்கலாம்.

இன ஒற்றுமையை குழப்புவதற்காக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம்  இந்த விடயத்தினை  பெரிதாக்கி எமது இன ஒற்றுமையை குலைக்காது. அனைவரும் ஒற்றுமையாக செயற்படுமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

சில இனவாதத்தை தூண்டுபவர்களால்   இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனினும் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய விசாரணைகளை முன்னெடுத்து உரிய சம்பந்தப்பட்டவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

புத்த பகவானின் கருத்துப்படி  அனைவர் மீதும் இரக்கம் காட்ட வேண்டும்.

எனவே இது தொடர்பில்  பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

தெற்கில் உள்ள பௌத்த மக்கள் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள பௌத்த மக்களுக்கும் நான் இது தொடர்பில் தெரிவிக்க விரும்புவது இது தொடர்பில் நீங்கள் குழப்பமடைய வேண்டாம் தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
 

https://www.virakesari.lk/article/83710

குழப்பமடைய வேண்டாம். அவர்களே உடைத்திருக்கலாம். தேர்தல்  வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எலி ஏன் அம்மணமாக ஓடுது. ஓ தேர்தல் வருதோ!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Iraivan said:

குழப்பமடைய வேண்டாம். அவர்களே உடைத்திருக்கலாம். தேர்தல்  வருகிறது.

ஒரு கல்லில் இரு மாங்காய்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் அடைக்கல மாதா கோவிற் சிலை சேதமாக்கப்பட்டது. அடுத்தது புத்தர் சிலை. இன்னும் சிறிது நாட்களில் சைவக் கோவில் ஏதேனும் தாக்கப்படும். 

ஆனை (தேர்தல்) வரும் பின்பே மணியோசை வருமுன்னே. 😏😏

குழப்பத்தில குளிர் காய்ஞ்சு பழகின சம்பந்தன்-சுமந்திரன் கோஷ்டி செய்திருக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நாகவிகாரை புத்தர் சிலை உடைப்பு, வடமராட்சி குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்னணி..! 400 முன்னாள் போராளிகளை கண்காணிக்க அரசு தீர்மானம்..

curfew-roadblock-sri.jpg

யாழ்.நாகவிகாரை உள்ளிட்ட பல இடங்களில் புத்தர் சிலைகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் 400 முன்னாள் போராளிகளை கண்காணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சாம்பலில் இருந்து எழுந்து வருவார்கள் என லண்டன் இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பாக அரசாங்கமும், 

புலனாய்வுப் பிரிவினரும் கவனம் செலுத்தி வருகின்றனர். வடமராச்சி பிரதேசத்தில் கிளைமோர் குண்டு வெடிப்பில் இரண்டு பொலிஸார் காயமடைந்ததை அடுத்து 

புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பாக அதிகமான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

https://jaffnazone.com/news/18503

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகளின் வாக்குக்கு இலக்கு வைக்கிறார் புத்தர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.