Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரேயொரு நிபந்தனையுடன் கோட்டா அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவளிக்க தயார்: சுமந்திரன் அதிரடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் விதமான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால்- அதை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

இன்று யாழில் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 இல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்தில் நாமும் ஓரளவு பங்களித்திருந்த நிலையில், இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மீட்சிக்கும் நான்கரை வருடங்களில் பல விடயங்களை மேற்கொண்டோம். அபிவிருத்தி விடயத்தில் வடக்கு, கிழக்கிற்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது. நிலம் விடுவிக்கப்பட்டது. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது. இவையெல்லாம் முன்னேற்றங்களாக நாம் கருதுகிறோம்.

ஆனால், முழுமையாக எதையும் நாம் தீர்க்க முடியவில்லை. அரசியலமைப்பு நகல் வடிவம் பாராளுமன்றத்திற்கு வந்தாலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. அரசியல் கைதிகள், நிலம் விடுவிப்பு, அபிவிருத்தி திட்டங்கள் எதிலும் முழுமையடைகாமல், மக்கள் முன் சென்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்.

2015 தேர்தலிற்கும் முற்றும் மாறான ஒரு தேர்தல் இது. 2015 ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்ட நன்மையை தொடர்ந்து பேண முடியாத நிலையில், பழைய ஆட்சியாளர்களிடமே ஆட்சி சென்றுள்ளது. வரும் தேர்தலிலும் அவர்கள் பலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய ஜனாதிபதி எடுத்துள்ள சில முடிவுகள், அவரது ஆட்சி எப்படியாக அமையுமென்பதை காண்பிக்கிறது. கிழக்கில் மிகப்பெரும்பான்மையாக தமிழர்கள், முஸ்லிம்கள் இருந்தாலும், கிழக்கு தொல்பொருள் செயலணியில் தமிழர்கள், சிங்களவர்கள் இணைக்கப்படவில்லை. அகழ்வாராய்ச்சிக்கு பெயர் பெற்றவர் என சொல்லப்படும் எல்லாவல மேதானந்த தேரர் அதில் உள்ளார். அவரது கருத்து முழுவதும், இந்த பிரதேசங்கள் முழுவதும் சிங்கள பௌத்த பிரதேசங்கள், அவர்களின் மேலாதிக்கம் பேணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளவர். இராணுவ அதிகாரிகளும் உள்ளனர்.

அமைச்சர் டக்களஸ் தேவானந்தா ஒரு கடிதம் எழுதியுள்ளாராம். இந்த செயலணிக்கு தமிழர், முஸ்விம்களையும் நியமிக்கும்படி. அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், எங்களை போன்றவர்கள் எல்லோரும் உங்களுக்கு விசுவாசமானவர்கள்தானே. நாங்களும் இருக்கிறோம்தானே. எங்களிலும் உங்களிற்கு நம்பிக்கையில்லையா? நீங்கள் சொல்வதைதானே நாங்கள் செய்வோம். எங்களில் யாரையாவது நியமித்திருக்கலாம்தானே என. அந்த கடிதத்தால் எந்த பலனுமில்லை.

ஒழுக்கத்தை பேண இன்னொரு செயலணி, இராணுவ அதிகாரிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், மத தலங்கள் தவிர்த்து, ஒழுக்கத்தை பேண, ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர்களாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக இராணுவ மயமாக்கல் நடக்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் இல்லாவிட்டால் இவர்கள் ஒருவருக்கும் பதில் சொல்ல முடியாத, பொறுப்புக்கூறும் நிலை அல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையில் அவர்கள் பலமாக இருந்தாலும், எமது பிரதேசங்களில் நாம் எமது இருப்பை பாதுகாக்க வேண்டும்.

அதனால், முன்னெப்பொழுதுமில்லாத விதமாக ஒரு அணியாக தமிழ் மக்கள் ஒரு அணியாக தமது பிரதிநிதித்துவத்தை காட்ட வேண்டிய தேவையுள்ளது. பல பிரிந்து, பல அணிகளாக போனால் அது எம்மை பலவீனப்படுத்தும். இன்றைக்கு இருக்கும் கட்சிகள், அணிகளில் வடக்கு, கிழக்கிலுள்ள மக்களை ஓரணியாக பிரதிநிதித்துவப்படுத்தும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. அதனால் மாற்று அணி கோசங்களை புறக்கணித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றியடைய செய்ய வேண்டும்.

நாம் பாராளுமன்றம் போய் என்ன செய்ய போகிறோம்? கடந்த 5 வருடத்தில் செய்யாததை இனி செய்யப் போகிறோமா என கேட்கிறார்கள். 5 வருடத்தில் நிறைய செய்யப்பட்டுள்ளது. நாம் நாடாளுமன்றம் போகும்போது, எமது அரசியல் அபிலாசையைத்தான் வலியுறுத்துவோம். தீர்வை பெற்றுத்தருவது எமது தலையாய கடமை. அதில் எந்த விட்டுக்கொடுப்பில்லாமல் செய்வோம்.பெற்றுத் தருவோம். ஆனால் அரசியல் தீர்வு வரும்வரை மக்களின் வாழ்வு எப்படியாவது இருக்கட்டும் என விடவும் மாட்டோம். கடந்த அரசின் காலத்திலும்  நாங்கள் சில முன்னெடுப்புக்களை செய்தோம். அரசிலிருந்து பணத்தை பெற்று அபிவிருத்தி திட்டங்கள் செய்தோம்.

ஒரு கட்டமைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்திற்குள் செல்ல வேண்டிய தேவையுள்ளது. விசேடமாக ஒரு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். பொருளாதாரம் எப்படியிருக்க வேண்டுமென்றால், இளையவர்களிற்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இது இலங்கை முழுவதுமுள்ள பொருளாதார திட்டமென்றாலும், வடக்கு கிழக்கில் விசேடமாக உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

இது அத்தியாவசியமானது. இது பற்றி தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடுவோம். எமது மக்கள் தொடர்ந்து இங்கு வாழ்ந்தாலே எமது இருப்பு பாதுக்கப்படும். இளையவர்கள் வேலையில்லையென வெளிநாடு சென்றால், இனப்பிரச்சனை தீர்வுக்கெ தேவையில்லாத நிலையேற்படலாம். மக்களின் வாழ்க்கை கட்டியெழுப்பப்பட வேண்டும், இளையவர்களிற்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.  மக்கள் இங்கு வாழ வழியேற்படுத்த வேண்டும். அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  புலமையாளர்களுடனும் பேசியுள்ளோம். அவர்களின் உதவியுடன் பொருளாார மீள் எழுச்சியென்பதற்கு வருகிற பாராளுமன்ற காலத்தில் கொடுப்போம்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் மரணத்திற்கு எமது அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்.

கொரொனா போகும் போது, ஜனநாயகமும் போய்விடும் என்ற பயமிருந்தது. இதனால்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென விரும்பினோம். தேர்தல் சுயாதீனமாக இருக்க வேண்டும். தேர்தல் நடத்தப்பட வேண்டும், பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து அரசாங்கம் மக்களின் அச்சத்தை நீக்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு ஆதரவு என சொல்ல மாட்டேன். நாம் அரசாங்கத்தை உருவாக்கிய போது கூட அரசில் இணையவில்லை. எமது இனப்பிரச்சனை தீர்வு குறித்து நீண்டதூரம் பயணித்துள்ளோம். அப்படியான சூழலில், அதை நிறைவுக்கு கொண்டுவர அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவைப்பட்டால், அந்த தீர்வு எமது அபிலாசைகளை தீர்க்குமாக இருந்தால் நிச்சமாக ஆதரவை கொடுப்போம்.

ஜனவரி 3ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, புதிய அரசியலமைப்பின் அவசியத்தை சொன்னார். நான் பின்னர் உரையாற்றியபோது, அதை சொல்லியிருந்தேன். நாம் அரசியலமைப்பை உருவாக்கியபோது சொன்ன 3 விடயங்களை அவரும் சொல்லியிருந்தார். அதனால் தொடக்கத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டியதில்லை.

அண்மையில் பிரதமரை சந்தித்தபோது, உங்களிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது. நீங்கள் இதயசுத்தியுடன் செயற்பட்டு, ஜனநாயக அடிப்படையிலான தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய கூடிய விதமாக அரசியலமைப்பை தயாரித்தால், அதை பூர்தி செய்யவும், தயாரிக்கவும் எமது முழு ஆதரவை தர தயாராக இருப்பதாக சொல்லியிருக்கிறேன்.

அரசியல் கைதிகள் 96 பேரின் பெயர் விபரங்களை வழங்கியுள்ளோம். நீதியமைச்சர் அண்மையில் பத்திரிகையொன்றற்கு தெரிவித்தபோது, அதில் 84 பேரின் பெயர்களை தெரிவு செய்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழங்கியிருப்பதாகவும், அவரது பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் எப்படி செயற்படுவார்கள் என தெரியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் எமது கொள்கையல்ல என மாவை சேனாதிராசா சொன்னதாக வெளியான பத்திரிகை செய்தியை படித்தேன். ஆனால் அவர் அப்படி சொன்னாரா என்பதை அவருடன் பேசாமல் என்னால் பதிலளிக்க முடியாது.

முன்னாள் போராளிகளை கட்சியில் சேர்க்க வேண்டுமென ஒரு தடவை கட்சிக்குள் முன்மொழிந்தபோது, நான் மட்டும்தான் ஆதரித்தேன். அந்த நிலைப்பாட்டில் எப்பொழுதும் இருக்கிறேன். எமது உரிமைக்காக அவர்கள் ஒரு முறையை உபயோகித்து போராட்டம் நடத்தினார்கள். அந்த வடிவத்திலான போராட்டம் முடிந்து விட்டது. ஆனால் எந்த அர்ப்பணிப்புடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்களோ, அந்த அர்ப்பணிப்பு இருக்கும். அவர்களிடம்தான் கூடுகலாக இருக்கும். வேறொரு வடிவத்தில் போராட்டம் நடந்தாலும் அவர்களின் அர்ப்பணிப்பு மிகமிக அத்தியாவசியமானது.

விடுதலைப் புலிகள் பற்றிய நான் பேசியதாக எழுந்த சர்ச்சை பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெதுவும் எடுக்கப்படவில்லை. இதைப்பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை.

எனது உருவப்பொம்மையை யார் எரித்தார்கள் என்பது தெரியாது. இது விழக்கமானது. 2012ஆம் ஆண்டு எனது உருவப்பொம்மையை எரித்தார்கள். அதன் பின்னர் கிரமமாக எரித்து வருகிறார்கள். சிலர் சொல்கிறார்கள், நான்தான் இதை ஏற்பாடு செய்வதாக (நகைச்சுவையாக). அப்படியல்ல.

https://www.pagetamil.com/129426/

  • கருத்துக்கள உறவுகள்

காகமும், நரியும்,  வடையும் கதை ஞாபகத்துக்கு வருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

103306775_3097633016989676_9162776149296743118_o.jpg?_nc_cat=100&_nc_sid=110474&efg=eyJpIjoidCJ9&_nc_oc=AQmvXhNThTCO0YkPk0vQbMbZV-Jm9-xnAr_x5tLI2XlGU_YYcQoqjjssJmB-W1ZjAQ8&_nc_ht=scontent-lax3-1.xx&_nc_tp=14&oh=9af2f151a927a1618fd1aa9d273b7a4d&oe=5F0B1E30

 

அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும்  அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும்  தயாராக இருந்தால் மாத்திரமே  ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்  குறிப்பிட்டார்.

 

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதயில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை(14) மதியம் இடம்பெற்ற போது  தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய  அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக   ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

 

மேலும் தனதுகருத்தில்

 

தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும்  அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும் இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெருன்பான்மை ஆதரவு  வழங்க  தயாராக உள்ளோம்.அதற்காக இந்த ஆதரவிற்காக பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ள முயற்சிக்கின்றோம்.முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் மக்களிடம் தேர்தலுக்காக பணம் கேட்டுள்ளார்.இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என கூறினார்.

 

 

மேலும் நாங்கள் இந்த அரசாங்கத்தை ஏற்படுத்திய போது ஆதரவு வழங்கவில்லை. ஆனால் எமது இனப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக  நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம். அரசியல் தீர்வு  எமது அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதாக இருந்தால் நிச்சயமாக அதற்கு ஆதரவைக் கொடுப்போம் என்றார்.

https://www.madawalaenews.com/2020/06/blog-post_500.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

அரசியல் தீர்வு  எமது அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதாக இருந்தால் நிச்சயமாக அதற்கு ஆதரவைக் கொடுப்போம் என்றார்.

இலவங்காயும் பழுக்கும் உண்ணலாம் என்பது எம்.ஏ. சுமந்திரனுக்குமட்டுமே தெரிந்த இரகசியம். 😋

  • கருத்துக்கள உறவுகள்

அதோ தெரியுது பார் மல.!அதைத்தான் நீ சாண பிடிக்கணும்..☺️..😊

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

மடவளவை  யாழ் முஸ்லிலிம் கூட்டத்துக்கு இப்ப சொந்த இனத்தை கூறு போட்டு விக்கும் சுமத்திரன் தான் தலைவர் முன்பு எண்டால் இலங்கைக்கு எண்ணெய் குடுக்க விடமாட்டம்  என்று உதார் விட்டுக்கொண்டு திரிவினம் கொரனோ  வந்து எல்லாத்தையும் தலைகீழாக்கி போட்டுது . 

கோட்டா ஜனாதிபதி தேர்தல்ல வென்டத்திலிருந்து கோட்டா வீசும் எலும்புத்துண்டை பொறுக்க சுமந்திரன் நாய்படாதபாடா அலைஞ்சு கொண்டிருக்கார்.

மனோகணேசன் வழில எப்பிடியாவது அமைச்சு கதிரைல உட்கார்றது சுத்துமாத்து சுமந்திரனின் தற்போதைய கனவு.

அதை நோக்கி சொதப்பல் சுமந்திரனின் பல அறிக்கைகளை பேட்டிகளை கண்டாச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.