Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவரை காணவில்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவரை காணவில்லை!

Missing.jpg?189db0&189db0

 

பாகிஸ்தான் – இஸ்லாமாபாத்தில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் இன்று (15) காலை முதல் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் அந்நாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் உளவுத்துறையின் பிடியில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் இந்தியாவில் பணிபுரிந்த பாகிஸ்தான் தூதரகத்தின் உயர் ஆணைய அதிகாரிகள் இருவர் உளவு பார்த்தாக குற்றஞ்சாட்டி இந்திய அரசால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து இந்திய தூதரகத்தில் பணிபுரியும் கவுரவ் அலுவாலியா என்ற பொறுப்பதிகாரியை பாகிஸ்தான் உளவுத்துறை (ஐஎஸ்ஐ) பின்தொடர்ந்து அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றது.

இந்நிலையிலேயே தூதரக அதிகாரிகள் காணாமல் போயுள்ளனர்.

https://newuthayan.com/பாகிஸ்தானில்-இந்திய-தூதர/

 

  • கருத்துக்கள உறவுகள்

🇮🇳இந்தியாவுக்கு... தினமும், புது 🎭தலையிடி வந்து கொண்டிருக்குது.

எது நடக்க வேண்டுமோ.... அது நன்றாகவே நடக்கின்றது. 🕉 பகவத் கீதை 🕉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, உடையார் said:

பாகிஸ்தான் – இஸ்லாமாபாத்தில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் இன்று (15) காலை முதல் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டுத்தள்ளிட்டாங்கள் போலை 😎

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி இந்தியா சும்மா இருக்காதே.சுழன்டு சுழன்டு அடிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பலுச்சிஸ்தானில் போய்த்தேடிப்பார்க்கச் சொல்லுங்கோ 😏

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் மாயமான இரு இந்திய தூதரக அதிகாரிகளும் திரும்பினர்

பாகிஸ்தானில் காணாமல் போன இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும் மீண்டும் இஸ்லாமாபாத்திலுள்ள இந்தியத் தூதரகத்திற்க்கு திரும்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

india-pakistan.jpg

குறித்த இரு இந்திய தூதரக அதிகாரிகளும் சென்ற வாகனம் நபரொருவர் மீது மோதியதால் குறித்த இரு அதிகாரிகளையும் மக்கள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/84033

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா சப்பென்டு போச்சு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் திடீர் கைது

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் திடீர் கைது

 

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் நேற்று திடீரென்று கைது செய்யப்பட்டனர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததால், பாகிஸ்தான் பின்னர் அவர்களை விடுதலை செய்தது.
பதிவு: ஜூன் 16,  2020 05:15 AM
புதுடெல்லி, 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான மோதல் போக்கை கடந்த சில மாதங்களாக தீவிரப்படுத்தி உள்ளது.


இந்த நிலையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. நிறுவனத்துக்காக இந்தியாவில் உளவு பார்த்த டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அபித் உசேன், முகமது தாகிர் ஆகியோர் இரு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். மறுநான் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள், இந்திய ராணுவத்தின் இடம் பெயர்தல் தொடர்பான ரகசிய ஆவணங்களை பணம் கொடுத்து இந்தியர் ஒருவரிடம் இருந்து பெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களை மத்திய அரசு வெளியேற்றியது.

இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொல்லை கொடுத்து வந்தது. இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியாவின் காரை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் இரு முறை பின்தொடர்ந்து சென்றனர்.

இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இந்தியா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் 2 பேர் நேற்று திடீரென்று மாயம் ஆனார்கள்.

அந்த இரு அதிகாரிகளும் அலுவலகத்தில் இருந்து நேற்று காலை வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு போய்ச் சேரவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் கதி என்ன? அவர்களை யாராவது கடத்திச் சென்றார்களா? என்பது பற்றி எதுவும் தெரியாமல் இருந்து வந்தது.

2 அதிகாரிகள் மாயமானது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள், இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்திய அரசுக்கும் முதல் கட்ட அறிக்கையை அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்தியதாக கைது

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும் சென்ற சொகுசு கார் காலை 8 மணி அளவில் எம்பசி சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த நடந்த வந்த ஒருவர் மீது மோதியதாகவும், அப்போது அங்கு கூடிய ஏராளமான பேர், காரை தடுத்து நிறுத்தி தப்பி ஓட முயன்ற 2 இந்திய தூதரக அதிகாரிகளையும் பிடித்து இஸ்லாமாபாத் போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. கார் மோதியதில் அந்த நபர் படுகாயம் அடைந்ததாகவும், அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது.

இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போதுதான் அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் என தெரிய வந்தது என்ற தகவலையும் அந்த தொலைக்காட்சி வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அழைத்து, இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவோ, துன்புறுத்தவோ கூடாது என்றும், அவர்களுடைய பாதுகாப்புக்கு பாகிஸ்தான் அரசுதான் பொறுப்பு என்றும் கண்டிப்புடன் கூறினார்கள்.

மேலும் 2 அதிகாரிகளையும் அவர்கள் சென்ற அலுவலக காருடன் இந்திய தூதரகத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் கேட்டுக் கொண்டனர்.

இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரிகள் இருவரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று மாலை விடுதலை செய்தனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் இருவரும் இந்திய தூதரகத்துக்கு வந்தனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/16022851/Two-Indian-embassy-officials-arrested-in-Pakistan.vpf

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

ச்சா சப்பென்டு போச்சு.

ஹா...ஹா.... ஹா...... சரியாய் சொன்னீங்கள்.   😁😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஹா...ஹா.... ஹா...... சரியாய் சொன்னீங்கள்.   😁😂

 

6 hours ago, உடையார் said:

இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும் சென்ற சொகுசு கார் காலை 8 மணி அளவில் எம்பசி சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த நடந்த வந்த ஒருவர் மீது மோதியதாகவும், அப்போது அங்கு கூடிய ஏராளமான பேர், காரை தடுத்து நிறுத்தி தப்பி ஓட முயன்ற 2 இந்திய தூதரக அதிகாரிகளையும் பிடித்து இஸ்லாமாபாத் போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. கார் மோதியதில் அந்த நபர் படுகாயம் அடைந்ததாகவும், அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது.

கோரோனோ சீசன் ஊதி காட்ட ஏலாது சரி ; அதற்கான கிற் இருக்குமெல்லொ..பெரிய இடம் என்பதால் விட்டு போட்டார்களோ தோழர்.? 👍

_83314806_drink_drive_two.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.