Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2
பலிபீடமுமாய் அலங்கரித்தாயே 

பாவ நிழலே அணுகா
பாதுகாத்தார் உன்னையே பரமன்
பாவ நிழலே அணுகா
தாய் உதரம் நீ தரித்திடவே - 2
தனதோர் அமல தலமெனக் கொண்டார் - 2 
 

 

ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2
பலிபீடமுமாய் அலங்கரித்தாயே 

பாவ நிழலே அணுகா
பாதுகாத்தார் உன்னையே பரமன்
பாவ நிழலே அணுகா
தாய் உதரம் நீ தரித்திடவே - 2
தனதோர் அமல தலமெனக் கொண்டார் - 2 
 

 

  • Replies 2.9k
  • Views 225.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இடம் உண்டு

(எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு)

அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு

கார்த்திகை விளக்கு பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன் (2)

தினம் பூத்திடும் ஞான மலர்களுடன்
ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்

(எனக்கும் … )

நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம் (2)

வரும் காற்றில் அணையா சுடர்போலும்
இனி கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்

(எனக்கும் … )

ஆடும் மயிலே என்மேனி
அதில் அழகிய தோகை என் உள்ளம் (2)

நான் உள்ளம் என்னும் தோகையினால்
கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
உறவு கண்டேன் ஆகையினால்

(எனக்கும் … ).

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் ஆ..ஆ
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்

வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆ..
வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி
வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி கூறுங்கள் ஆ

திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்

கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்

காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள்
சேவற்காவடிகள் சர்ப்பக் காவடிகள் சிற்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள்
பால் கவடி பழக் காவடி புஷ்பக் காவடி சேவற்காவடி மச்சக் காவடி

கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் தேடி வருவார்

வடிவேல் முருகனுக்கு அரோகரா
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை
திருத்தணி முருகனுக்கு அரோகரா
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை
அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி
அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி

கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே - உன்
சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
முருகனருள் கூட வருமே

கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே - உன்
சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே - உன்
சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
முருகனருள் கூட வருமே கந்தனாருள் கூட வருமே
குமரன் அருள் கூட வருமே

 

  • கருத்துக்கள உறவுகள்
ஆத்தங்கரை சண்டியர்
யாழ்ப்பாணத்தில் தொண்டைமானாற்றில் இருக்கும் பிரசித்தமான முருகன் ஆலயம் செல்வச்சந்நிதி. இன்றும் வாய்கட்டி பூசை நடைபெறும் தலமாகும்.
 
வரிகள் - உமாகரன் ராசையா
இசை - சிந்துஜன் வெற்றிவேல்
பாடியவர் - பவனுஜா கஜாகரன்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணக் கண் கோடி வேண்டும் காபாவை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன அழகு உன் அருள் அழகு 
என்ன அழகு உன் அன்பழகு (2)*
ஏவனின் நீர்ச்சுமையே...  தாவீதின் கோபுரமே...  
சாரோனின் மலரழகே...  சீயோனின் அருள் மகளே...  
                                (என்ன அழகு...)* அம்மா 
1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மென்மையும் 
வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதே
என்னை கொள்ளைக்கொண்டதே... (2)
ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே – 2 
அன்பே... அருளே... அமுதே... அழகே... நீ வாழ்க... - 2
                                                      (என்ன அழகு...)* அம்மா


2. அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்
விதையாய் என் நெஞ்சினில் 
விளைந்திடுமே கணிந்திடுமே (2)
வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே – 2 
அன்பே... அருளே... அமுதே... அழகே... நீ வாழ்க... - 2
                                                      (என்ன அழகு...)* அம்மா
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனை முக பெருமான்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டாட்டு காலமாய் நாம் ஆண்ட பூமியின் நாயகன் நல்லை கந்தன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவாரம் : மாதர் மடப்பிடி
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : யாழ்மூரி
தலம் : தருமபுரம்

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
  நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
  அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை 
  இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
  எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ இருக்க எனக்கு பயமேது முருகா

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

நீ இருக்க எனக்கு பயமேது முருகா

 

1995 அந்த‌ கால‌ப் ப‌குதியில் மீசாலையில் அத்தை வீட்டை த‌ங்கி இருந்தேன் உடையார் அண்ணா ,அத்தை வீட்டில் சிவ‌பெருமானின் ப‌ட‌த்துக்கு கீழ‌ யாம் இருக்க‌ ப‌ய‌ம் ஏன் என்று த‌மிழில் எழுதி இருந்த‌து 

அதற்கு பிற‌க்கு நான் போகும் இட‌ம் எல்லாம் சிவ‌பெருமான் 🙏
 

உடையார் அண்ணா என‌க்கு உங்க‌ளிட‌ம் பிடிச்ச‌து எல்லா க‌ட‌வுளுக்கும் நீங்க‌ள் கொடுக்கும் ம‌ரியாதை , சில‌ர் அன்மையில் சைவ‌ ம‌த‌ம் இந்து ம‌த‌த்தில் இருந்து ம‌த‌ம் மாறி விட்டு போடும் கூத்துக‌ளை பார்க்கும் போது உண்மையில் கோவ‌த்துட‌ன் கூடிய‌ எரிச்ச‌ல் வ‌ரும் ,

என‌க்குள் ம‌த‌ வெறி ஒரு போதும் இருந்த‌து இல்லை , ந‌ல்ல‌ ம‌ன‌சு இருந்தால் அந்த‌ ம‌ன‌சில் நாங்க‌ள் நேசிக்கும் க‌ட‌வுள்க‌ளும் இருப்பின‌ம் 🙏🙏🙏

🙏🙏🙏🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருள் புரிவாய் ரஹ்மானே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமான் நபிகள் தோன்றாவிட்டால்... குர் ஆன் வந்தே ||இசை முரசு E.M.நாகூர் ஹனிபா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயத்தமா ஆயத்தமா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே
புதுமைகளை புரியும் எங்கள புனித அந்தோணியாரே
சரணமய்யா சரணமய்யா உந்தன் பாதம் சரணமய்யா 

துன்பப்படும் எங்களுக்கு சஞ்சீவி நீரே
துன்பம் பிணி வறுமைகளை களைபவரும் நீரே
ஆறு மலை காடுகளை கடந்து வந்தோமே
அழுது புலம்பும் எங்களுக்கு ஆறுதல் நீரே
சரணமய்யா...

நற்கருணை மகிமையதை உணத்தியவர் நீரே
நற்செய்தி போதித்த போதகரும் நீரே
உயிருள்ள இயேசுவிற்காய் வாழ்வைத் தந்தாயே
உம்மைப் போல வாழ்ந்து காட்ட வரம் தருவாய் நீரே
சரணமய்யா...

பரிசுத்தம் விளங்குகின்ற லீலி மலர் நீரே
உன்னதமாம் எழ்மையின் மாதிரியும் நீரே
கரமதிலே பாலனை சுமந்து நின்றாயே
கருணைக் கொண்டு வேண்டுதலை பரிந்துரைப்பாய் நீரே
சரணமய்யா...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞான சூரியன் உனது வதனமாம்  ஞானத்துந்துபி உனது  நயனமாம் 
ஒன்று சேர பெரும் விந்தையானவா போற்றி குருவே போற்றி 
வரம் அளித்திடும் உனது பாதமே போற்றி குருவே போற்றி

குரு பகவானே சரணம்(2)  கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம்  
மஞ்சள் ஆடைக்  கொண்ட நாயகா ஆளும் ஞான காலகா  
வேதம் கண்ட  ஈஸ்வரா வியாழன் என்னும் மன்னவா 
தேவ லோகம்  போற்றுகின்ற எங்கள் யுவநாதா 
குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2)
குரு பகவானே சரணம் கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம்

கரம் இருக்குமோர் கமண்டலம் கருணை என்பதோ அதில் ஜலம் 
கணக்கேதும் இல்லாமல் நீ அருள்பவன் தானே 
அதை கவிழ்த்தாலும்  ஜீவ வெள்ளமே குரு பகவானே   (2)
திருமுகப்பார்வை சிறிதே சேர்த்து எறுவினை  எங்கள் மனதில் ஊற்று 
கஜமதில் உலவும் கனகநாதனே குருபகவானே     (2) 
வில்லும் மீனும் ஆளும் அரசே வாக்கில் நின்றிட வேண்டினோம் 
வியாழக்கிழமை வாரந்தோறும் தீபமேற்றியே போற்றினோம் (2)
ப்ரஹஸ்பதியே சுடர் நிதியே ஜாதகமெங்கிலும் சாதகமாகிட வேணும் குருவே வா 
குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2)
குரு பகவானே சரணம் கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம்

தவவிளக்கமே தரும் கரம் தண்டம் ஏந்திடும் இடப்புறம் 
எமக்காக தவமுகம் காட்டும் குருபகவானே 
இங்கே எமக்காக  அறிவொளி ஏற்றும் ஜெபனிலையானே (2)
அபயமாய் தோன்றும் வரமாய்  உந்தன் அருளினைக் காட்டும் கரமே கொண்டு  
ஆங்கீரசனின் சுதனே எம்மை அணைக்க வேணும்   (2)
உபதேசங்கள் நிகழுமிடத்தில் உறையும் தீதாம்பரநாதா  
உன்னை நினைந்து வலமாய் வந்தோம் உறுதுணை செய்வாய் சந்தானா  (2)
குரு பலமே தரவருவாய் கோளில் நின்று கோலம் காணும் எங்கள் குருதேவா
குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2)
குரு பகவானே சரணம் கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம்
மஞ்சள் ஆடைக் கொண்ட நாயகா ஆளும் ஞான காலகா  
வேதம் கண்ட  ஈஸ்வரா வியாழன் என்னும் மன்னவா 
தேவ லோகம்  போற்றுகின்ற எங்கள் யுவநாதா 
குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி

சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி
பழனி மலையாண்டி பழனி மலையாண்டி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காண கண்ணாயிரம் வேண்டும்
ராகம்:  கர்நாடக தேவகாந்தரி 
இயற்றியவர் : அருளவன் 

விருத்தம்:
சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம்கமழ
பாலபீஷேகமுடன் வெற்றிதிருநீர் அணிந்து 
தங்கரத தேரினிலே பக்தர்ப்படை சூழ்ந்துவர 
வள்ளி தெய்வயானையுடன் காட்சிதரும் 

உன்னழகை காண ஆயிரம் காணவேண்டும் 
முருகனை காண  கண்ணாயிரம் வேண்டும் 
முருகனை காண ஆயிரம் காணவேண்டும் 
வேலணை காண கந்தனை காண குமரனை 
காண ஆயிரம் காணவேண்டும் 

உலகலந்த வல்லவனை வண்ண மயில் வாகனை 
கணபதி சோதரனை தந்தைஸ்வாமி ஆனவனை || (காண)

சரவணை காண சிவகுமரனை காண ஆயிரம் காணவேண்டும் 
செங்கதிரும் முழுமதியும் செர்ந்தணிந்த சுந்தரனை 
விண்ணகமும் மண்ணகமும் காத்துநிற்கும் அருளகனை ||

முருகனை காண ஷண்முகனை காண 
வேலணை காண சிவபாலனை காண 
ஆறுமுகனை காண கந்தனை காண
குகனை காண கடம்பனை காண  
குருபரனை காண கார்த்திகேயனை காண 
மயில்வாகனை காண பழனி வேலணை காண
உன்னை கானா கண் ஆயிரம் வேண்டும் முருகா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: சிந்து பைரவி.
ராகம். நாட்டை
முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் கிருதி.
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ்.
+
ஸ்ரீ மஹா கணபதிம்
ஸ்ரீ மஹா கணபதிம்- மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் - மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் - மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி 
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித
மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி 
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித
மஹா கணபதிம்... ஆ ஆ ஆ...
.
மஹா தேவ சுதம்
ஆ ஆஅ ஆ.....
மஹா தேவ சுதம் - குரு குக நுதம்
மஹா தேவ சுதம் - குரு குக நுதம்
மாரகோடி ப்ரகாஷம் சாந்தம்
மாரகோடி ப்ரகாஷம் சாந்தம்
மஹா காவ்ய நாடகாதிப்ரியம்,
மஹா காவ்ய நாடகாதிப்ரியம்,
மூஷிக வாகன் மோதக்ப்ரியம்
மஹா காவ்ய நாடகாதிப்ரியம்,
மூஷிக வாகன் மோதகப்ரியம்,
மஹா கணபதிம். மனஸா ஸ்மராமி
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித மஹா கணபதிம்...!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் தீர்த்திடும் கங்கையும் பாலின் வெண்ணிற பிறை திங்களும்
மேவிடும் பனி மேருவும் கொண்ட ஈசனே பரமேசனே. 

பாவ கங்ககைள் பாய்ந்தது ஓடிடும் பாழ் மனத்துப் பராரி யான்
சீவனே கொண்டு செல்கிறேன் சீர் என் சிந்தையுள் செலுத்துவாய். 

கூப்பிடும் கைகள் கொண்டுனைத்தொழும் கோடி கோடி நற்த்தேவரும்
கூவுவார் கூடிப்பாடுவார் ஏற்றும் குன்றுரு கொண்ட குருவனே. 

காப்பிடும் காயத் தோப்பிலே காலம் போக்கிடும் கடைக்கேடன் யான்,
காத்து நீ கரை சேர்த்திடாய் எனை ஏற்றிடார் தாளில் ஏற்றுவாய். 

மெய்யிலே நான்மறையிலே நடு மய்யென உள் உறைந்தவா,
தையர்க்கே தன்னை தந்தவா தயை கொண்டவா தாயின் மேலவா. 

பொய்யிலே புழுப்பையிலே கிடந்தையனே இன்றற்றுவேர்,
மெய்யுளகத்துக்கேற்றியே எந்தன் மேன்மைக்கே கைக்கள் காட்டுவாய். 

பிச்சையே உணத்திச்சையாய் கொண்டு சுற்றி காடு திரிந்தவா,
எச்சில் வைத்து ருசித்துதந்ததை மெச்சி உண்ட மேலானவா.

பிச்சையாய் வினை மிச்சமே இட்ட நச்சு தேகம் கிடக்கிறேன்,
மெச்சிவாய் புகழ்ந்தேற்றினேன் எனை மெல்ல மலர்த்தாழ் ஏற்றுவாய். 

எண்ணிலாதவர் எண்ணிடும் எண்ணற்க்கரியவா எமக்குரியவா,
எண்ணிடில் எண்ணற்க்கெளியவா பாண்டிதென்னவா எங்கள் மன்னவா.

எண்ணிடா வந்தத்தேகமே இதில் என்னதான் பன்னற்க்காகுமோ,
அன்னலே கண்ணின் மின்னலால் இந்த பின்னலை பிரித்தோட்டிடு.

உன்னை நாடியற்க்கென்சுழி எனை தன்னைப்போல் செய்த தன்மையா,
பின்னை நாடிய அன்பர் பின்னமும் தீர்க்கும் அன்னலை கொண்டவா.

உன்னை பாடிடும் என்னை நீ இனி என்ன செய்திட போகிறாய்,
அன்பினால் அருட்கண்ணில் நோக்கி உன் மென்மலரடி சேர்த்திடு. 

ரமணசர்குரு ரமணசர்குரு ரமானசர்குரு ராயனே.. 
ரமணசர்குரு ரமணசர்குரு ரமானசர்குரு ராயனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
முன்னம் நிகழ்ந்ததெல்லாம் மனக்கண் முன்னாலே தோன்றிடுதே.. இன்னம் நினைந்திருந்து நெஞ்சம் அலை பாய்ந்து தவிக்கிறதே...ஏ
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
(பால ரமணர் குரல்)
அருணாச்சலா...
அருணாச்சலா...
அருணாச்சலா...
அன்றொரு நாள் மரண பய சோதனையில்,
கொன்று விட்டான் ,தான் என்னும் தன்னை விசாரனையில்...
கட்டிய ஆடைகள்,சாதி குலத்தையும் தொட்டவிழ்த்தான்,
ஒட்டி வளர்ந்த தலை முடி தன்னை மொட்டையிட்டான்..
அண்ணாமலையாரை ஒட்டிக்கொண்டான்..........
அண்ணாமலையாரை ஒட்டிக்கொண்டான்.,
கண்ணீர் கயிற்றால் கட்டிக்கொண்டான்...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே... திண்ணை தெருக்களிலே தங்கி கொண்டான்,கைகளைப் போர்த்திக்கொண்டான்... உண்ணக்கிடைக்கைலே,உண்டு விட்டு உடம்பில் துடைத்துக் கொண்டான். பூதமும் போகாத பாதாள லிங்கத்துள் போயமர்ந்தான்...
ஒரு மாதம்,வருடமற்று,மனமற்று,தவத்தில் ஆழ்ந்துவிட்டான்.... பூரானும்,பூச்சியும் ஊர்ந்ததம்மா,இளம் தேகத்திலே,
புற்றுக்கறையான் அரித்ததம்மா,பல பாகத்திலே...
நவ முனி யோகத்திலே....

சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

ஷேஷாத்ரி ஸ்வாமிகள் காப்பாற்ற,நாம் செய்த புண்ணியம் என்றாச்சு...
ஆசா பாசத்துள் அல்லாடும் நமக்காசான் கிடைத்தான் நன்றாச்சு...
புற்றோடு புற்றாக போயிருந்தால் மனம் விற்றுப் போனவற்க்கு மருந்துண்டோ? முற்றும் அறிந்து முனிவனானவன்,
இல்லால் நம் பிறவிக்கு பயனுண்டோ?
இல்லால் நம் பிறவிக்கு பயனுண்டோ?
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

மாங்கிளையில்,தூங்கி வாழ்ந்த மனிதர்கள் மண்ணில் உண்டோ?
பூங்குழவி கொட்டி,கால்கள் வீங்கத்தாங்கி கொண்டாருண்டோ?

த்யானித்திருப்பான்...சோரூட்டிப் போவார்கள்...தெரியாது....
நாலு நாள் ஆனாலும் வாயை விட்டு சோறு இறங்காது...

சிறு முனிக்கு மக்கள் கூடுவார்,சிலருக்கு பொறுக்காது..
உடலை மாய்த்திடப் போனானே ...விடவில்லை,ஈசனும் விதியா அது?
யாருக்கும் தெரியாது...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

உடம்போடு வாழ்ந்தாலும் உடம்பின்றி வாழ்ந்தவன் குரு ரமணன்..
உடம்பின்றி ஆன்மாவாய் உடன்வந்து உறைபவன் குரு ரமணன்..

புற்று நோயகற்ற கீறினாலும், அவன் தேகத்தில் இல்லை..
முற்றும் தேக வாழ்வு முடிந்தாலும் அவன் தேகி இல்லை..

ஒளி வெள்ளமாய்..மலை உச்சியில்,கலந்து விட்டான் ரமணன்,
கலியுகத்தில் களி ஒளிப்போன் அவனே குரு ரமணன்..
அவனே குரு ரமணன்..

சின்ன பையன் ஒருவன்,உலகத்தை சின்னதாய் ஆக்கிவிட்டான்.
இந்த சின்ன உலகினையும்,அன்பு கொண்டு,தன்னோடினைத்துக்கொண்டான்.. முன்னம் நிகழ்ந்ததெல்லாம் மனக்கண் முன்னாலே தோன்றிடுதே..
இன்னம் நினைந்திருந்து நெஞ்சம் அலை பாய்ந்து தவிக்கிறதே...ஏ
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருள் மாமலையே அருணாச்சலனே அனலுருவானவனே அருணாச்சலனே
வரம்பல வழங்கிடும் அருணாச்சலனே வாழ்விக்கும் தெய்வம் நீயே அருணாச்சலனே

அடிமுடியேதுமில்லா அருணாச்சலனே ஆடலின் அரசே அருணாச்சலனே
கிரிவலம் வருவோம் அருணாச்சலனே கேட்டதைத் தருவாய் அருணாச்சலனே

நடப்பவையாவும் அருணாச்சலனே உந்தனின் நாடகம் அருணாச்சலனே
நினைப்பது முடித்திடும் அருணாச்சலனே நிகரில்லாதவனே அருணாச்சலனே

சுடலையில் இருப்பவனே அருணாச்சலனே சொக்கனாகவந்த எங்கள் அருணாச்சலனே
தடைகளை விலக்கிடும் அருணாச்சலனே தாழ்ப் பணிந்திடுவோம் அருணாச்சலனே

திருச்சாம்பலுள்ளிருக்கும் அருணாச்சலனே தினமுன்னைப் போற்றுகின்றோம் அருணாச்சலனே
நினைவுடன் வாழவைக்கும் அருணாச்சலனே நீயின்றி ஏதுத்துணை அருணாச்சலனே

மாதொருபாகனே அருணாச்சலனே மண்ணுலகாள்பவனே அருணாச்சலனே
காதலினால் உன்னை அருணாச்சலனே கைதொழுவோமய்யா அருணாச்சலனே

நாதசொரூபனே அருணாச்சலனே நல்லிசையேழும் நீயே அருணாச்சலனே
பேதமில்லாதவனே அருணாச்சலனே பேரறிவாளன் நீயே அருணாச்சலனே

கார்த்திகை தீபத்திலே அருணாச்சலனே காட்சிக் கொடுப்பவனே அருணாச்சலனே
நேர்த்திக்கடன் தன்னை அருணாச்சலனே நிறைவேற்ற செய்திடுவாய் அருணாச்சலனே

மூர்த்திகள் மூவரில் அருணாச்சலனே மூத்தவன் நீதானய்யா அருணாச்சலனே
காத்திடுவாய் எங்கள் அருணாச்சலனே காருண்ய நாயகனே அருணாச்சலனே

ஐந்தெழுத்தானவனே அருணாச்சலனே அன்பரைக் காப்பவனே அருணாச்சலனே
சிந்தையில் இருப்பவனே அருணாச்சலனே சிரம்பணிந்தோமய்யா அருணாச்சலனே

பொன்மலையானவனே அருணாச்சலனே புவியினுக்கரசே அருணாச்சலனே
உன்மலை உயர்ந்தது அருணாச்சலனே ஊழ்வினைத் தீர்ப்பது அருணாச்சலனே

உண்ணாமுலையம்மை அருணாச்சலனே உடனிருப்பவனே அருணாச்சலனே
கண்ணாய் உயிர்களை அருணாச்சலனே காப்பாற்றுவாய் எங்கள் அருணாச்சலனே

அண்ணாமலையே அருணாச்சலனே அல்லலைத் தீர்த்துவைக்கும் அருணாச்சலனே
சொன்னால் இனித்திடும் அருணாச்சலனே சுந்தர வடிவமே அருணாச்சலனே

அண்ணாமலையே ஓம்சிவா . . .  அருணாச்சலனே சதாசிவா . . .
அண்ணாமலையே ஓம்சிவா . . .  அருணாச்சலனே சதாசிவா . .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகையாளும் ஈஸ்வரா ஓம்சக்தி ஈஸ்வரா
அருள்மழையே ஈஸ்வரா அருணாச்சல ஈஸ்வரா

ஒளிவடிவாய் காட்சிதரும் உயர்ந்தவன் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

கலிநடனம் புரிந்தவனே கயிலாய ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

நலம்வழங்கும் நாயகனே நான்வணங்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

தலம்வருவோர் வேண்டுவதை தருவபவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

குலம்தழைக்க செய்பவனே குறைத்தீர்க்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

நிலம் செழிக்க நீர்சொரியும் நீலகண்ட ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

உமையவளின் துணைவனே உனைப்பணிந்தோம் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

தவமிருந்தால் பெரும்பயனைத் தருபவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

சுமையெனவே வரும்துன்பம் தீர்ப்பவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

எமையாளும் ஒருதெய்வம் நீதானே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

எளியவரின் அன்புதனை ஏற்பவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

கலைபலவும் மண்ணுலகில் நிலை நிறுத்தும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

அணுவுக்குள் அணுவாக இருப்பவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

உனது அருள் இல்லாமல் எது நடக்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

கனவெல்லாம் நனவாக கைகொடுக்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

மனமுருக வேண்டிக்கொண்டால் மனமிறங்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

அனைத்துயிரும் வாழ்ந்திடவே அருள்கொடுக்கம் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

தனமுடனே நல்லறிவு தருபவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

பஞ்சபூதமானவனே பணிந்திடுவோம் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

அஞ்சிடுவோர் துயர்துடைக்கும் ஆண்டவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

நெஞ்சிலே குடியிருந்து நிழல் கொடுக்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

நஞ்சுதனை உண்டவனே நான் வணங்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

வஞ்சகரின் மனம்தெளிய வைப்பவன் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

பஞ்சமுடன் பசிதீர்க்கும் பரம்பொருளே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானிலம் போற்றிடும் நாகூரா... || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிரந்தரமானவரே உம் நிகருக்கு நிகர் நீரே

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.