Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலியாக இருந்த கரோனா தற்போது பூனையாகிவிட்டது; விரைவில் மறைந்து போகும் - இத்தாலி மருத்துவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் நால்வர் கைது!

புலியாக இருந்த கரோனா தற்போது பூனையாகிவிட்டது; விரைவில் மறைந்து போகும் - இத்தாலி மருத்துவர்

coronavirus-is-weakening-could-disappear-on-its-own-italian-doctor  

மார்ச் மாதத்தில் புலியாக இருந்த கரோனா வைரஸ் தற்போது பூனையாகி வலுவிழந்துவிட்டது என்று இத்தாலி நோய் தடுப்பு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் மேட்டியோ பாஸ்செட்டி இத்தாலியில் உள்ள சான் மார்டினோ மருத்துவமனையின் நோய் தடுப்பு பிரிவின் தலைமை மருத்துவராக உள்ளார்.

நீண்ட நாட்களாக கரோனா குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர், கரோனா வைரஸ் வலுவடைந்துவிட்டதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேட்டியோ பாஸ்செட்டி கூறும்போது, “ வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. இதற்கு மரபணுக்கள் மாற்றம் காரணமாக இருக்கலாம். மார்ச் , ஏப்ரல் மாதங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டதால் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த மாதங்களாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் கரோனா புலியாக இருந்தது ஆனால் தற்போது பூனையாகிவிட்டது. தற்போது 80 வயதை கடந்தவர்கள் கரோனா வந்தால் சிரமத்துக்கு உள்ளாகமல் இருக்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் கரோனா வலிவிழந்துவிட்டது, விரைவில் கரோனா தானாகவே மறையக் கூடும்” என்றார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா, கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை அதன் இயல்பு வாழ்கையிலிருந்து நகர்த்தியுள்ளது.

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மார்ச் மாதத்தில்அதிக பாதிப்பைச் சந்தித்த இத்தாலியில் கரோனா தாக்கம் தற்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.

https://www.hindutamil.in/news/world/560730-coronavirus-is-weakening-could-disappear-on-its-own-italian-doctor-1.html

 

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட்-19 வைரஸ் வலுவிழந்துவிட்டது: இத்தாலி நோய் தடுப்பு மருத்துவர்

 

 

 

     by : Anojkiyan

matteo_bassetti-720x450.jpg

மனித அழிவுகளை ஏற்படுத்தும் கொவிட்-19 வைரஸ் தற்போது வலுவிழந்துவிட்டது என சான் மார்டினோ மருத்துவமனையின் நோய் தடுப்பு பிரிவின் தலைமை மருத்துவர் மேட்டியோ பாஸ்செட்டி (matteo bassetti) தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக கொவிட்-19 குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர், செய்தி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. இதற்கு மரபணுக்கள் மாற்றம் காரணமாக இருக்கலாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டதால் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த மாதங்களாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது 80 வயதை கடந்தவர்கள் கொரோனா வந்தால் சிரமத்துக்கு உள்ளாகமல் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கொரோனா வலுவிழந்துவிட்டது. விரைவில் கொரோனா தானாகவே மறையக் கூடும்’ என கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி, இத்தாலிக்கு வந்த 2 சீன சுற்றுலா பயணிகளுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது முதல் முறையாக உறுதி செய்யப்பட்டதும், பிற ஐரோப்பிய நாடுகளைவிட மிகவும் துரிதமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை இத்தாலி முழு வீச்சில் முடுக்கி விட்டது. சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் இத்தாலிதான் முதல் முறையாக தடை விதித்தது.

கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி வரை பெரும்பாலான நாடுகளைப் போல் இரண்டொரு மரணங்கள், நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு பாதிப்பு என்றிருந்த இத்தாலியில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அந்த நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இத்தாலி சீனாவை முந்தியது.

ஆனால், தற்போது பெருந் தொற்று குறைந்துள்ளதால், அங்கு அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு 238,720பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,657பேர் உயிரிழந்துள்ளனர்.

http://athavannews.com/கொவிட்-19-வைரஸ்-வலுவிழந்து/

  • கருத்துக்கள உறவுகள்

பூனை ஆகினால் சந்தோசம்.

ஆனால் புலி பதுங்கி திரும்பி பாயாமல் இருக்க வேணுமே.


 

  • கருத்துக்கள உறவுகள்

🐯“புலி... 🐅பதுங்குவது,  பாய்வதற்காக” என்ற தமிழ் பழமொழியை... 

இத்தாலி 🇧🇬மருத்துவருக்கு.... ஆராவது மொழி பெயர்த்து சொல்லிபிடுங்களேன்.😁

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

பூனை ஆகினால் சந்தோசம்.

ஆனால் புலி பதுங்கி திரும்பி பாயாமல் இருக்க வேணுமே.


 

எந்த நேரமும் காசு அது இது என்று கொல்லுப்பட்ட நம்ம புலம்பெயர் தமிழரையும் இந்த கொரனோ  வந்து மாத்தி போட்டுது .குடும்ப உறுப்பினரை காணும் நேரம் குறைவாக காலில் சில்லுக்கட்டினவர்களை  உறவு என்றால் என்னவென்று புரிய வைத்துள்ளது . ஒன்றாய் இருந்து உணவருந்துவதில்  உள்ள இன்பம் சொர்க்கத்தில் கூட கிடைக்காது என்று அடித்து சொல்லியுள்ளது  .மாடிப்படி ஏறினால்  தஸ்புஸ் என்று மூச்சை விட்டு எடுத்தவர்கள் பாய்ந்து ஏறி இறங்க வைத்துள்ளது தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வைத்துள்ளது . மக்கும் kfc யும் தான் சாப்பாடு என்றிருந்தவர்களை  வீட்டு சாப்பாடு அதிலும் சத்து மிகுந்த உணவுகளை தேடி உண்ண  சொல்லிக்கொடுத்துள்ளது .சூரிய வெயிலை கண்டால் நிழலில் ஒதுக்கியவர்களை  வெயிலை நாடி உடலை  உறுதிபட செய்துள்ளது .தூங்குவதை கடமையாக கொண்டவர்களை ஆழ்ந்த தூக்கம் என்றால் என்னவென்று புரிய வைத்துள்ளது .

இனி கொரனோ  இப்படியானவர்களின்  உடம்பில் இறங்குவதுக்கு  அஞ்சும் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

German authorities in North Rhine-Westphalia are bringing back local lockdown measures after a coronavirus outbreak linked to a meatpacking plant.

More than 1,500 employees of the Tönnies plant have tested positive.

State premier Armin Laschet said the "preventative measures" in Gütersloh district, home to about 360,000 people, would last until 30 June.

It is the first such move since Germany began lifting its lockdown restrictions nationwide in May.

The country has been praised for its response to the crisis, but there are fears infections are rising again.

https://www.bbc.co.uk/news/world-europe-53149762

ஒரு இறைச்சி பொதி தயாரிக்கும் ஜெர்மனி   ஆலையில் வேலை செய்பவர்களுக்கு   1,500 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரனோ  வைரஸ் தொத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . சுமார் 360,000 மக்கள் வசிக்கும் கோட்டர்ஸ்லோ மாவட்டத்தில் "தடுப்பு நடவடிக்கைகள்" ஜூன் 30 வரை நீடிக்கும் என்று மாநில பிரதமர் அர்மின் லாஷெட் கூறினார். மே மாதத்தில் ஜெர்மனி தனது பூட்டுதல் கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் நீக்கத் தொடங்கிய பின்னர் இதுபோன்ற முதல் நடவடிக்கை இதுவாகும். நெருக்கடி சமாளிப்பு திறனில் ஜெர்மன்  நாடு பாராட்டப்பட்டது, ஆனால் தொற்றுநோய்கள் மீண்டும் உயரும் என்ற அச்சங்கள் மீண்டும் எழுந்துள்ளன .

ஆக்கம் பெருமாள் .

 

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

ஒன்றாய் இருந்து உணவருந்துவதில்  உள்ள இன்பம் சொர்க்கத்தில் கூட கிடைக்காது என்று அடித்து சொல்லியுள்ளது 

 

3 hours ago, பெருமாள் said:

ஒன்றாய் இருந்து உணவருந்துவதில்  உள்ள இன்பம் சொர்க்கத்தில் கூட கிடைக்காது என்று அடித்து சொல்லியுள்ளது

ஒன்றாய் இருந்தோ அல்லது தனிமையாகவோ உணவருந்தும் போது, உணவிலும், அதை ரசித்து ருசித்து அருந்துவதிலும், மற்றவர்களையும் மட்டுமே கவனத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதை, எம்மவரின் வளர்ந்தோருக்கும், இளையோருக்கும் சொல்லிக கொடுத்ததா?

குறிப்பாக, உணவருந்தும் நேரத்தையும் screeன்-time ஆக மாற்றி, தொலைக்காட்சி, மொபைல், tablet பார்ப்பதை தவறு என்று அறிந்தும், தாமும் பார்த்து, இளையவர்களை கண்டிக்க தொகுத்து இல்லாதவர்களாக மாறிக் கொண்டிடுக்கும் எம்மவர்கள்.  

 

  • கருத்துக்கள உறவுகள்

நவீன கொரனாவைரஸ் பலமிழந்து வருவதாகக் காட்டும் எந்த விஞ்ஞான ஆதாரங்களும் இது வரை வரவில்லை. இந்த இத்தாலிய மருத்துவர் ஒரு மாதத்திற்கு முன்னர் இப்படியான ஒரு அவதானிப்பைச் செய்திருந்தார் ஆனால் இது அவதானிப்பு மட்டுமே! நவீன கொரானாவைரசின் பரம்பரை அலகுகள் மாறுகின்றனவா என்று தொடர்ந்து அவதானித்து வருகிறார்கள், இது வரை மாற்றங்கள் இல்லை!. 

நான் ஏற்கனவே எனது கொரானா வைரஸ் தடுப்பு மருந்து பற்றிய கட்டுரையில் சொன்னது போல, எல்லா வைரசுகளும் மாறும், ஆனால் அது மாறும் போது நமக்கு ஆப்பாகவும் முடியலாம் வாய்ப்பாகவும் அமையலாம்! இது இந்த வைரசில் இது வரையில் நடக்கவில்லை என்பது தான் உண்மை! எனவே தொடர்ந்து அவதானமாக இருக்க வேண்டியது எமது கடமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.