Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேசியத் தலைவரை நேசிப்பவர்கள் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துரோகம்!

Featured Replies

எதிர்வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வெருவருடைய தனிப்பட்ட சுதந்திரம். ஆனால், மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழிநடத்திய தலைவர் பிரபாகரனை இன்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும் என முன்னாள் மூத்த போராளி காக்கா அண்ணா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சத்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

 

https://www.ibctamil.com/srilanka/80/146274

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் மிகப் பொருத்தமாக உள்ளது -  காக்கா அண்ணா 😂😂

  • தொடங்கியவர்
52 minutes ago, Kapithan said:

பெயர் மிகப் பொருத்தமாக உள்ளது -  காக்கா அண்ணா 😂😂

சுமத்திரன் குஞ்சுகளுக்கு முன்னாள் போராளிகளை கொச்சை படுத்துவது ஒன்றும் புதுசு இல்லையே 

  • கருத்துக்கள உறவுகள்

கபித்தான் அவர்களே,

உங்கள் எதிர்பார்ப்பு எனக்குப் புரிகிறது திரு பஸீர் காக்கா அவர்களையும் முள்ளிவாய்க்காலிலை சிங்களம் பிடித்துக்கொண்டுபோய் போட்டுத்தள்ளாமல் விட்டுட்டாங்கள் என நினைக்கிறியள்.

அப்படியெண்டால்தானே அவரது உறவுகள் கையில பதாகைகளுடன் தெருக்களில நிண்டு போராட்டம் செய்து நீங்களும் உங்களது உறவுகளும் வெளிநாடுகளில சொகுசா வாழ்வதற்கு நியாயம் கற்பிக்கலாம்.

உங்கள் எசமானர்கள் (ஒரு கபினட் அந்தஸ்துள்ள அமைச்சருக்குள்ள செல்வாக்குடனும், கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஒரு சிங்கிள் தொலைபேசி அழைப்பின்மூலம் விடுதலை செய்யக்கூடிய செல்வாக்குள்ள)  சுமந்திரன் சம்பந்தன் மாவையர் அவர்களை அனுதினமும் காக்கும் சிங்களப்படைகளது குதறல்களிலிருந்து உயிர்தப்பி வாழ்வதே கொடுமை அப்படி இருக்கையில் அவர் துணிந்து வந்து செவ்வி கொடுக்கிறாரே அதைப் பாரட்டவேணும்.

2 hours ago, Kapithan said:

பெயர் மிகப் பொருத்தமாக உள்ளது -  காக்கா அண்ணா 😂😂

 

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, spyder12uk said:

சுமத்திரன் குஞ்சுகளுக்கு முன்னாள் போராளிகளை கொச்சை படுத்துவது ஒன்றும் புதுசு இல்லையே 

போராளி என்கின்ற தகுதியை காக்கவேண்டியது போராளிக்குரிய கடமை. அதிலிருந்து தவறும்போது விமரிசனங்களை எதிர் கொள்ளத்தான் வேண்டும். ☹️

ஐயா பூச்சி,

முதலில் அந்தரத்தில் தொங்குவதிலிருந்து இறங்கி வாரும். அப்போதுதான் யதார்த்தம் புரியும். 😏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

கபித்தான் அவர்களே,

உங்கள் எதிர்பார்ப்பு எனக்குப் புரிகிறது திரு பஸீர் காக்கா அவர்களையும் முள்ளிவாய்க்காலிலை சிங்களம் பிடித்துக்கொண்டுபோய் போட்டுத்தள்ளாமல் விட்டுட்டாங்கள் என நினைக்கிறியள்.

அப்படியெண்டால்தானே அவரது உறவுகள் கையில பதாகைகளுடன் தெருக்களில நிண்டு போராட்டம் செய்து நீங்களும் உங்களது உறவுகளும் வெளிநாடுகளில சொகுசா வாழ்வதற்கு நியாயம் கற்பிக்கலாம்.

உங்கள் எசமானர்கள் (ஒரு கபினட் அந்தஸ்துள்ள அமைச்சருக்குள்ள செல்வாக்குடனும், கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஒரு சிங்கிள் தொலைபேசி அழைப்பின்மூலம் விடுதலை செய்யக்கூடிய செல்வாக்குள்ள)  சுமந்திரன் சம்பந்தன் மாவையர் அவர்களை அனுதினமும் காக்கும் சிங்களப்படைகளது குதறல்களிலிருந்து உயிர்தப்பி வாழ்வதே கொடுமை அப்படி இருக்கையில் அவர் துணிந்து வந்து செவ்வி கொடுக்கிறாரே அதைப் பாரட்டவேணும்.

 

சூரியன்,

போராளி என்கின்ற காரணத்தால் விரும்பியவாறு கதைக்கலாம் என்றில்லை. சுமந்திரன் தொடர்பாக அவர் தனது கருத்தை வெளிப்படுத்துவதில் எவரும் குறை காண முடியாது. ஆனால் சுமந்திரனுக்கு வாக்களிப்பவர்கள் இனத் துரோகிகள் என்று கூறுவது மிக மிகப் பொறுப்பற்ற செயல். அதற்குள் தலைவரை வேறு இழுத்துவிடுவது மிகவும் கயமைத்தனமான செயல்.  அதுவும் போராளியாக இருந்துகொண்டு......😡

கண்ணைத் திறந்து பாருங்கள்.

(அதென்ன உங்கள் எசமான் ? 😏)

 

 

Edited by Kapithan

இந்த முன்னாள் போராளி பசீர் காக்காவை ரேலோ  கடத்திய பிரச்சனையையொட்டியே  புலிகள் - ரேலோ மோதல் வெடித்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Elugnajiru said:

அவர் துணிந்து வந்து செவ்வி கொடுக்கிறாரே அதைப் பாரட்டவேணும்.

பஸீர் காக்கா மூத்த போராளி. இத்தனை ஊடகவியலாளர் முன்னால் துணிந்து பேட்டி கொடுப்பதன் காரணம் இவருக்கு ஆட்சியில் உள்ளவர்களின் மறைமுக ஆதரவும் பாதுகாப்பும் நிறைவாக கிடைப்பதே. இவர் மேடையேறியுள்ள மண்டபத்துக்கும் ஒலிவாங்கிகளுக்கும் யார் செலவு பொறுப்பை ஏற்றார்கள்? புலிகள் இப்போது இல்லையே? சொந்த செலவில் இதை ஏற்பாடு செய்தார் என்றால் இவர் பெரும் பணக்காரரா?

பஸீர் காக்கா சொல்வது போல போரை விரும்புபவர்கள் சுமந்திரனுக்கு ஆதரவளிக்க கூடாது. போரினால் பாதிக்கப்பட்டவர்களும், இனி போர் வரக்கூடாது என்று விரும்புபவர்களும் சுமந்திரனை ஆதரிக்கலாம். சுமந்திரனின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்பதால் புதிய முயற்சிகள் தேவை என கருதுபவர்கள் விக்நேஸ்வரனை ஆதரியுங்கள். வேலைவாய்ப்பு, வணிக முயற்சிகளுக்கு ஆதரவு தேவையானவர்கள் அங்கஜனுக்கு ஆதரவு கொடுங்கள்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னது சரியோ /பிழையோ  ஒரு மூத்த போராட்ட வீரரை எதிர்க்கும் அளவிற்கு, கேவலமாய் அவமானப்படுத்தும் அளவிற்கு தமிழ் சமூகம் வளர்ந்து விட்டது ...இதை செய்ப்பவர்கள் யாரென்று பார்த்தால் தீவிர புலி ஆதரவாளர்கள் ...யாருக்காக செய்கிறார்கள் என்று பார்த்தால் இது வரை தமிழருக்காய் ஒரு புல்லும் புடுங்காத [இனி மேல் புடுங்குவாரோ தெரியாது ] சுமத்திரனிற்காய்😄 ...இருந்து பாருங்கள் இதே ஆட்கள் இன்னும் கொஞ்ச காலத்தில் தலைவருக்கு எதிராகவும் தொடங்குவார்கள் ...தற்போது தான் தங்களுக்கு உண்மை புரிந்தது என்றும் சொல்லுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

மண்டப ஒலிவாங்கிச் செலவு உபயம் யாழ் ஊடக அமையம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவர் சொன்னது சரியோ /பிழையோ  ஒரு மூத்த போராட்ட வீரரை எதிர்க்கும் அளவிற்கு, கேவலமாய் அவமானப்படுத்தும் அளவிற்கு தமிழ் சமூகம் வளர்ந்து விட்டது ...இதை செய்ப்பவர்கள் யாரென்று பார்த்தால் தீவிர புலி ஆதரவாளர்கள் ...யாருக்காக செய்கிறார்கள் என்று பார்த்தால் இது வரை தமிழருக்காய் ஒரு புல்லும் புடுங்காத [இனி மேல் புடுங்குவாரோ தெரியாது ] சுமத்திரனிற்காய்😄 ...இருந்து பாருங்கள் இதே ஆட்கள் இன்னும் கொஞ்ச காலத்தில் தலைவருக்கு எதிராகவும் தொடங்குவார்கள் ...தற்போது தான் தங்களுக்கு உண்மை புரிந்தது என்றும் சொல்லுவார்கள் 

விதண்டாவாதம் கதைக்காதீர்கள் ரதி,

சுமந்திரனை நிறுத்தியTNA. ஆனால் அவர் கூறிவது சுமந்திரன் தவிர்ந்த மற்றய TNA வினருக்கு  வாக்களிக்கும்படி. சுமந்திரனை முன்னிறுத்திய TNA யைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட கூறப்படவில்லை 😂😂

சுமந்திரனின் பெயரைக் கூறும்போது அவரது முலுப்பெயரும் ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரன் எனக் கூறப்படுகிறது. ஏன் ? கிறீத்துவர் என்பதைச் சுட்டிக்காட்டவா ? 😏

இவர் போன்று வேறு முன்னாள் ஆயுதப் போராளிகள் பகிரங்கமாக இவ்வாறு கருத்துத் தெரிவிக்கக்கூடிய சூழல் இலங்கையில் நிலவுகிறதா ? 😀 அவ்வாறு கருத்துக் கூற முனைந்தால் அவர்கள் வீடு போய்ச் சேர்வார்களா 😜

இவ்வாறு இவர் பகிரங்கமாகக் கருத்துக் கூறுவதற்குறிய சூழலை இவருக்கு யார் ஏற்படுத்திக் கொடுத்தது ? 🤔

தேர்தலில் சுமந்திரனுக்கு வாக்கு செலுத்துவோர் எல்லோருமே துரோகிகளா ? 😏

சுமந்திரன் வென்றால் அதன் பின்னர்  என்ன கூறுவார்கள் ? ☹️

போராளிகள், முன்னாள் போராளிகள் என்பதற்காக தமிழ் இனத்தைப் பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைக்கும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்க முடியாது. 😡

அவருக்குக் கோபம் இருக்கும்போது கூடவே பொறுப்பும் இருக்கிறது. பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு கோபத்தை மட்டும் வெளிக்காட்ட முடியாது 😡

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.