Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். நவாலி தேவாலயம் மீது தவறுதலாகவே குண்டு வீசப்பட்டது! - சந்திரிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல் தவறாகவே இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதைத் தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும்" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் 1995ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தியிருந்தனர். 147 பேர் வரையில் உயிரிழந்திருந்தனர்.

யாழ். குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் அப்போதைய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து ஆலயத்தில் தங்கியிருந்த மக்கள் விமானப் படைக் குண்டு வீச்சில் சாவடைந்திருந்தனர்.

அவர்களை நினைவுகூர்ந்து நினைவேந்தலை கடைப்பிடிப்பதற்குத் தடை விதிக்குமாறு கோரி மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இது தொடர்பில் சந்திரிகாவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

"நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் தவறுதலாகவே குண்டு வீச்சு நடத்தினர். விமானப் படையினரின் இலக்காக தேவாலயம் இருக்கவில்லை.

அந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டதுமே விமானப் படையினரைக் கண்டித்தேன். உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது அடிப்படை உரிமை. அதை யாரும் தடுக்கக் கூடாது" எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/250551?ref=home-top-trending

7 hours ago, பெருமாள் said:

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல் தவறாகவே இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொலைகாரியின் நியாயம் பேசுகிறது
அப்பாவிகளின் நியாயத்துக்கு இடமில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல் தவறாகவே இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

செம்மணி படுகொலைகளைப் பற்றியும் பாடசாலை மாணவியான கிருசாந்தி மானபங்கப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதையும் யார் யார் தவறுதலாக செய்தார்கள் என்று சொன்னால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. தேவாலயத்தை நோக்கி குண்டுகள் வீசப்படவில்லை. 

தேவாலயத்தையும் அதனை அண்டிய சூழலில் இடம் பெயர்ந்திருந்த மக்களையும் இலக்கு வைத்தே குண்டு வீசப்பட்டது. 

இந்த குண்டு வீச்சில் எனது நண்பரின் தம்பி ஒருவரும் கொல்லப்பட்டார். இடம் பெயர்ந்தவர்களுக்கு தாக சாந்தி வழங்கியவர்கள்.

அந்தக் குண்டு வெடிப்பின் சத்தம் இப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறது.

😡😡😡

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்த நியாயம் (அரசியல் தோல்வி தந்த ஞானம்)அவரை அப்படி பேச வைக்குது. ஆனால் இராணுவம் எனும் பூதத்தை இனி யாராலும் பூட்டி வைக்க முடியாது இலங்கையில். அது ஆடும் நரகாட்டத்துக்கு தலையாட்டுவதை தவிர. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, பெருமாள் said:

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல் தவறாகவே இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் சிங்கள தலைமைகள் இது போன்று  சிறு அறிக்கைகளை உதிர்த்து விட்டு சர்வசாதாரணமாக கடந்து செல்வர்.ஆனால் எம் தமிழ் தலைமைகள்  சிங்களத்திற்கு எதுவுமே சம்பந்தமில்லை என ஐ நா வரைக்கும் வாதிட்டுக்கொண்டிருப்பர். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலங்களில் சிங்கள தலைமைகள் இது போன்று  சிறு அறிக்கைகளை உதிர்த்து விட்டு சர்வசாதாரணமாக கடந்து செல்வர்.

 

 சில சிங்கள கட்சிகள் கடந்த காலங்களில் அரசியலில் மிளிர, ஏமாந்த தமிழரே காரணமானார்கள். இன்றும் நிலைக்க சுயநல தமிழர் காரணம்.  பவுத்த சிங்களம் போதும் தாம் அரசியல் அமைக்க, என்று சிங்களம் எவ்வளவுதான்  எகத்தாளம் போட்டாலும், உண்மை அதுவல்ல. சிங்களம் அரசியல் செய்ய,அசைக்க முடியாத வலு தமிழரே. அல்லாவிடின் சிங்களம் ஏன் தமிழ்ப் பிரதேசங்களில் போட்டி இடுகிறது? ஏன் தலைமைகளை விலை கொடுத்து இழுக்கிறது? ஏன் நம்மை தனித்து விட மறுக்கிறது? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இனி வரும் காலங்களில் சிங்கள தலைமைகள் இது போன்று  சிறு அறிக்கைகளை உதிர்த்து விட்டு சர்வசாதாரணமாக கடந்து செல்வர்.ஆனால் எம் தமிழ் தலைமைகள்  சிங்களத்திற்கு எதுவுமே சம்பந்தமில்லை என ஐ நா வரைக்கும் வாதிட்டுக்கொண்டிருப்பர். :cool:

அவர்கள் செய்வார்கள் காரணம் எமது அரசியல்வாதிகளின் முதுகெலும்பில்லா நடவடிக்கைகள் ஐந்து நாளில் 80 கூட்டம்களுக்கு சென்ற சுமத்திரனால் நவாலி படுகொலை நிகழ்வுக்கு இரங்கல் தெரிவிக்க போக முடியவில்லையாம் நம்புங்கள் மக்களே இவர்தான் ஜனநாயகவழியில்  போராடி தீர்வு பெற்றுத்தர போகிறாராம் அப்ப  கடந்த பத்து வருடமாய் என்ன செய்தவர் என்று கேட்க்க கூடாது  கேட்டால் செம்புத்தவளைகளுக்கு கோபம் வந்துவிடும் ஒருவேளை 2010 தொடக்கம் 2020 வரை  வன்னி காட்டில் இருந்து இலங்கை ராணுவத்துக்கு எதிராக போராடிக்கொண்டு இருந்தவரோ ?😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பெருமாள் said:

அவர்கள் செய்வார்கள் காரணம் எமது அரசியல்வாதிகளின் முதுகெலும்பில்லா நடவடிக்கைகள் ஐந்து நாளில் 80 கூட்டம்களுக்கு சென்ற சுமத்திரனால் நவாலி படுகொலை நிகழ்வுக்கு இரங்கல் தெரிவிக்க போக முடியவில்லையாம் நம்புங்கள் மக்களே இவர்தான் ஜனநாயகவழியில்  போராடி தீர்வு பெற்றுத்தர போகிறாராம் அப்ப  கடந்த பத்து வருடமாய் என்ன செய்தவர் என்று கேட்க்க கூடாது  கேட்டால் செம்புத்தவளைகளுக்கு கோபம் வந்துவிடும் ஒருவேளை 2010 தொடக்கம் 2020 வரை  வன்னி காட்டில் இருந்து இலங்கை ராணுவத்துக்கு எதிராக போராடிக்கொண்டு இருந்தவரோ ?😁

கூத்தமைப்பு தமிழினத்திற்க்காக செய்த சாதனைகள் பல.....

Bild

  • கருத்துக்கள உறவுகள்

தவறு  நடந்தவுடன் அதை  மக்களுக்கு அறிவித்து

தவறான போரை  நிறுத்தியிருக்கணும்

தற்பொழுது அதிகாரமற்ற நிலையில்???

இனி கிருசாந்திக்கும் ?????

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தவறு  நடந்தவுடன் அதை  மக்களுக்கு அறிவித்து

தவறான போரை  நிறுத்தியிருக்கணும்

தற்பொழுது அதிகாரமற்ற நிலையில்???

இனி கிருசாந்திக்கும் ?????


 



உந்த சுத்துமாத்து அம்மா  நல்லதொரு  தீர்வுபொதி தமிழர்களுக்காக வைத்திருந்தவர் என்றும் புலிகள் தான் குழப்பி போட்டாங்கள்  என்று சொல்கிறவர்கள் இருக்கும் வரை அவர் நிறைய புழுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டிக்கொண்டே இருப்பார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.