Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை வேட்டியோடு கொள்ளைக்காரர் வருவார்கள்-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 


வெள்ளை வேட்டியோடு 
கொள்ளைக்காரர்கள் 
நாட்டை ஆள வருவார் 
நரிகள் கூட வருவர் 

ஊருக்காய் உழைத்தவன் 
படித்தவன் பண்பாளனை 
பாராளுமன்றம் அனுப்பி வைக்கார் 
படித்தவன் கூட வரான் 

போனவர் அனைவரும் 
பொழுது விடியுமுன்பே
மந்திரியாவார்கள் 
நூறுக்கு மேலே மந்திரிமார் 
பாதிக்கு மேலே வேலை இல்லை 

சிங்கப்பூர் போல் 
சிலோனை மாற்றுவோம் 
என்று  கூடச் சொன்னார் 
ஸ்ரீ லங்காவின் அரைவாசி 
இப்போ சீனாவுக்கு சொந்தம் 
எடுத்த கடன் தலைக்கு மேலே 
திருப்பி கொடுக்கவில்லை 

அரை நூற்ராண்டாய் 
அந்த மலையக மக்கள் 
படுக்குற துன்பம் 
அவன் தேனீருக்குள் தெரியுது 
இவன் இரத்தமும் வியர்வையுமாய் 

அவனுக்கு அங்கே எதுகும் இல்லை 
ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்காய் 
அழுது புலம்புறான் ஆண்டுக்கு மேலாக 
அவனுக்கு ஓர் வாழ்வும் இல்லை 

இனப் பிரச்சினை இன்னும் தொடருது 
யுத்தம் முடிந்த கையோட 
எல்லாம் தீர்ப்போம் என்றார்கள் 
ஏதும் தீர்வு வந்ததாய் இல்லை
ஏமாற்றம் தான் கண்டது மிச்சம் 

அடுக்காய் ஆயிரம் பொய்களைச் சொல்லி 
அந்தக் கதிரைக்காக காத்திருப்பர் 
கட்சித் தலைவர்கட்கு எல்லாம் 
இப்போ தள்ளாடும் வயது 
இளசுகளுக்கு இடம் கொடுக்க 
இப்பவும் விருப்பமில்லை  
பதவிக்கும் பணத்துக்கும் 
பாராளுமன்றம் 

சிறு பான்மை மக்களும் 
சில பேர் வருவினம் 
எவருமே கேளான் 
இவர்களின் கதைகளை 

சிலர் மந்திரியாக 
வாய்ப்புகள் கிடைக்கலாம் 
என்னத்தை கண்டோம் 
இது வரை காலம் 

இங்கு போய் என்ன செய்வது 
இவர்களுக்கு தெரியாத 
அரை நூற்ராண்டாய் 
அங்கு தானே இருந்தவ

எதற்காக என்று 
இன்னும் மக்களுக்கு 
தெரியவில்லை 

இதற்காகத் தான் 
இன்றும் அடி பிடி 
நடக்கிறது

நாட்டையே கெடுத்து 
தம் வீட்டை மட்டும் வளத்தவர்
நாளை நம்ம தலைவர் ஆவதா 
நாமும் துணை போவதா

இனியும் நம்புவோம் 
மனிதரைத் தான் 
மக்கள் அனுப்பி வைப்பார்கள் 
மக்களுக்காக மக்களின் ஆட்சிக்காய்.

பா.உதயன் ✍️

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை, நாட்டில் நிலவும் தற்போதைய சகல பிரச்சனைகளையும் கவிதை வடிவில் சொல்லிவிட்டீர்கள் அருமை, பாராட்டுக்கள், தொடர்ந்து பகிருங்கள்

சனங்களின் மனதை மாற்ற இனி ஒரு நல்ல தலைமை வேண்டும், ஆனா அப்படியொரு தலைமையை இனி அங்கு தலையெடுக்க இந்தியனும்,  சிங்களவனும், எம்மவரும் விடமாட்டார்கள், எழுத்தளவில் மட்டுமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

நல்ல கவிதை, நாட்டில் நிலவும் தற்போதைய சகல பிரச்சனைகளையும் கவிதை வடிவில் சொல்லிவிட்டீர்கள் அருமை, பாராட்டுக்கள், தொடர்ந்து பகிருங்கள்

உடையாருக்கும் குமாரசாமியாருக்கும் நன்றிகள் .என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ————-

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை, என்ன செய்வது நாங்கள் ஏதிலிகளாகி விட்டோம் .....!   🤔

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2020 at 04:33, uthayakumar said:

வெள்ளை வேட்டியோடு 
கொள்ளைக்காரர்கள் 

நல்லூர்த் திருவிழாவைத் தான் குறி வைத்து எழுதியிருக்கிறீர்கள் என்று எண்ணிவிட்டேன்.

காலத்திற்கு பொருத்தமான கவிதை. நல்ல வரிகள். பாராட்டுக்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

நல்ல கவிதை, என்ன செய்வது நாங்கள் ஏதிலிகளாகி விட்டோம் .....!   🤔

 

8 hours ago, nige said:

காலத்திற்கு பொருத்தமான கவிதை. நல்ல வரிகள். பாராட்டுக்கள்...

கருத்திட்ட சுவி  ஈழப் பிரியன் நிஜிக்கு நன்றிகள்.ஈழப் பிரியன் நல்லூர் திருவிழாவிலும் வெள்ளை வேட்டிகளை காணலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, uthayakumar said:

உடையாருக்கும் குமாரசாமியாருக்கும் நன்றிகள் .என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ————-

  ஊரிலையெல்லாம் அந்தக்காலத்திலையே வெள்ளை வேட்டிக்கள்ளர் எண்டு சும்மாவே சொன்னவையள் 😄

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் தோழர்..👍..💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2020 at 12:47, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் தோழர்..👍..💐

நன்றிகள்  புரட்சித்தமிழனுக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.