Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனப் பாணியிலான ஆட்சிக்கு அடித்தளம் ? - மங்கள

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

 

பௌத்த பிக்குகளின் எதிர்ப்பையும் மீறி நீதியமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைப் பாராட்டியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு அமைச்சின் கீழ் 'உள்நாட்டு அலுவல்கள்' என்ற விடயதானம்  கொண்டுவரப்பட்டமை சீனப்பாணியிலான 'கண்காணிப்பு மிகுந்த' அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அடித்தளமிடப்படுவதையே காண்பிக்கின்றது என்றும் எச்சரித்திருக்கிறார்.

Mangala.jpg

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று புதன்கிழமை கண்டியிலுள்ள தலதா மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. 

அதன்படி நீதியமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்பட்டிருப்பதுடன், இராஜாங்க அமைச்சுக்களின் கீழ் பல்வேறு புதிய விடயதானங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மங்கள சமரவீர செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

பௌத்த பிக்குகளின் எதிர்ப்பையும் மீறி நீதியமைச்சராக அலி சப்ரியை நியமித்தமைக்காக பிரதமரைப் பாராட்டுகின்றேன். எஞ்சிய அமைச்சரவை நியமனங்கள் அத்தனை வரவேற்கத்தக்கவையாக இல்லை என்பதுடன் பெரும்பாலும் இராஜாங்க அமைச்சர்களுக்குப் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ள விடயதானங்கள் பெரும் நகைப்பிற்குரியதாக இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் பாதுகாப்பு அமைச்சிற்குக் கீழான விடயதானங்களில் ஒன்றாக 'உள்நாட்டு அலுவல்களை' உள்ளடக்கி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலானது, சீனப்பாணியிலான கண்காணிப்பு மிகுந்த அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முதல் அடித்தளமாகவே அமைந்திருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

https://www.virakesari.lk/article/87928

சீனப்பணியினாலான அடித்தளம் இட முன்னர் சீன அடித்தளம் இங்கு இட்டுவிட்ட்து. இனி சீனாவின் ஆட்சிதான் விரைவில் உருவாகும். வடக்கிக்கான பாதை அபிவிருத்தி திட்ட்ங்களும் அவர்களுக்குவழங்கப்பட சந்தர்ப்பம் அதிகமாகவே காணப்படுகின்றது. முழு இலங்கையிலும் கால் பாதிக்க சீன முடிவெடுத்து விட்ட்து. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

சீனப்பணியினாலான அடித்தளம் இட முன்னர் சீன அடித்தளம் இங்கு இட்டுவிட்ட்து. இனி சீனாவின் ஆட்சிதான் விரைவில் உருவாகும். வடக்கிக்கான பாதை அபிவிருத்தி திட்ட்ங்களும் அவர்களுக்குவழங்கப்பட சந்தர்ப்பம் அதிகமாகவே காணப்படுகின்றது. முழு இலங்கையிலும் கால் பாதிக்க சீன முடிவெடுத்து விட்ட்து. 

சீனாவே தங்கள் வரவு நல்வரவாகுக 💐

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, Kapithan said:

சீனாவே தங்கள் வரவு நல்வரவாகுக 💐

இப்ப அவையள் என்ன செய்வினம்?  :grin:

9 hours ago, குமாரசாமி said:

இப்ப அவையள் என்ன செய்வினம்?  :grin:

எவ்வயள்? அவையள் அவர்களை சுற்றியுள்ள எல்லா நாடுகளையும் கோடடைவிட்டிட்டினம். இனி செய்வதட்கு ஒன்றுமில்லை. இனி எல்லாம் தட்காப்பு நடவடிக்கைகளை மேட்கொள்ளுவதுதான் அவர்களுக்குள்ள ஒரே வழி. டூ லேட்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

எவ்வயள்? அவையள் அவர்களை சுற்றியுள்ள எல்லா நாடுகளையும் கோடடைவிட்டிட்டினம். இனி செய்வதட்கு ஒன்றுமில்லை. இனி எல்லாம் தட்காப்பு நடவடிக்கைகளை மேட்கொள்ளுவதுதான் அவர்களுக்குள்ள ஒரே வழி. டூ லேட்.

அவ்வையள் தாய்வானுக்காக ஐ.நா. சபையில் குரல் கொடுக்க போயினமாம்...
இவையள் சீனாக்கார்னின்ட சீலைக்குள் மறைந்திருந்து அவையளுக்கு வெடி வைக்க போயினமாம்...

அவ்வையளுக்கு இப்ப எங்களை கொஞசம் உசெளப்பி விடுகிற பிளானும் இருக்கு போல.....

 

 

14 minutes ago, putthan said:

அவ்வையள் தாய்வானுக்காக ஐ.நா. சபையில் குரல் கொடுக்க போயினமாம்...
இவையள் சீனாக்கார்னின்ட சீலைக்குள் மறைந்திருந்து அவையளுக்கு வெடி வைக்க போயினமாம்...

அவ்வையளுக்கு இப்ப எங்களை கொஞசம் உசெளப்பி விடுகிற பிளானும் இருக்கு போல.....

 

 

உசுப்பிவிட்டு முள்ளி வாய்க்காலில் கொண்டுபோய் விடாமல் விடடாள் சரிதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

44 minutes ago, putthan said:

அவ்வையள் தாய்வானுக்காக ஐ.நா. சபையில் குரல் கொடுக்க போயினமாம்...
இவையள் சீனாக்கார்னின்ட சீலைக்குள் மறைந்திருந்து அவையளுக்கு வெடி வைக்க போயினமாம்...

அவ்வையளுக்கு இப்ப எங்களை கொஞசம் உசெளப்பி விடுகிற பிளானும் இருக்கு போல.....

21 minutes ago, Robinson cruso said:

உசுப்பிவிட்டு முள்ளி வாய்க்காலில் கொண்டுபோய் விடாமல் விடடாள் சரிதான்.

புதிய கோணத்திலை/கொஞ்சம் வித்தியாசமாய் உசுப்பிவிடுற பிளானாம் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன சீனா பானியிலான ஆட்ச்சி.இனி சீனாவின் ஆட்ச்சயேதான்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, சுவைப்பிரியன் said:

அதென்ன சீனா பானியிலான ஆட்ச்சி.இனி சீனாவின் ஆட்ச்சயேதான்.

சீனா பாதி  சீறிலங்கா பாதி சேர்த்து வைச்ச கலவை ...

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

 

புதிய கோணத்திலை/கொஞ்சம் வித்தியாசமாய் உசுப்பிவிடுற பிளானாம் :grin:

ஓம் ஓம்...தாய்வானுக்காக உவையள் ஐ.நா.சபையில் குரல் கொடுத்து அவையளை (சீனாவை) கடுப்பாக்கினவையள்  அல்லோ..
அந்த கடுப்பில் அவையள்(சீனா) சீறிலங்காவிலிருந்து உவையளுக்கு தொல்லை கொடுக்கிற பிளான்.....

எங்கன்ட சனம் மெளனித்த மாதிரியே விசயத்தை கொண்டு நடத்த வேண்டும் ......குறிப்பாக இளைஞர்கள் ஆயுதப்பக்கம் தலைவைச்சு படுக்காமல் இருக்க வேண்டும் மிச்சத்தை அவையளும் உவையளும் சிறிலங்காவில் பட்ட பாடு என்று இருக்க வேணும்...

4 hours ago, putthan said:

ஓம் ஓம்...தாய்வானுக்காக உவையள் ஐ.நா.சபையில் குரல் கொடுத்து அவையளை (சீனாவை) கடுப்பாக்கினவையள்  அல்லோ..
அந்த கடுப்பில் அவையள்(சீனா) சீறிலங்காவிலிருந்து உவையளுக்கு தொல்லை கொடுக்கிற பிளான்.....

எங்கன்ட சனம் மெளனித்த மாதிரியே விசயத்தை கொண்டு நடத்த வேண்டும் ......குறிப்பாக இளைஞர்கள் ஆயுதப்பக்கம் தலைவைச்சு படுக்காமல் இருக்க வேண்டும் மிச்சத்தை அவையளும் உவையளும் சிறிலங்காவில் பட்ட பாடு என்று இருக்க வேணும்...

முதலில் அவர்கள் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கி சிறிய அதிர்ச்சி கொடுக்கிற திடடம். பின்னர் மேட்குலக நாடுகளில் பிரச்சாரம் செய்வதட்கு உதவி செய்து பின்னர் மனித உரிமை ஆணையகத்துக்கு கொண்டு செல்லுவது.

இதன்மூலம் அவர்கள் ஒரு பிரச்சினையை இலங்கை அரசுக்கு எதிராக உருவாகும் எண்ணம் இருக்கிறது. அனால் உண்மையான நோக்கத்துடன் செய்வார்களா என்பதுதான் பிரச்சினை.

அண்ணனுக்கு ஒரேயடியாக இலங்கையை பகைக்கும் எண்ணம் இல்லை. அவர்களுக்கு வசதிப்படும்போது , அவர்களுக்கு தேவைக்கேட்ப காய் நகர்த்துவார்கள். எனவே எதுவும் நடக்கும்வரை ஒன்றும் சொல்ல முடியாது.

மேலும் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கு சந்தர்ப்பம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Robinson cruso said:

முதலில் அவர்கள் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கி சிறிய அதிர்ச்சி கொடுக்கிற திடடம். பின்னர் மேட்குலக நாடுகளில் பிரச்சாரம் செய்வதட்கு உதவி செய்து பின்னர் மனித உரிமை ஆணையகத்துக்கு கொண்டு செல்லுவது.

இதன்மூலம் அவர்கள் ஒரு பிரச்சினையை இலங்கை அரசுக்கு எதிராக உருவாகும் எண்ணம் இருக்கிறது. அனால் உண்மையான நோக்கத்துடன் செய்வார்களா என்பதுதான் பிரச்சினை.

அண்ணனுக்கு ஒரேயடியாக இலங்கையை பகைக்கும் எண்ணம் இல்லை. அவர்களுக்கு வசதிப்படும்போது , அவர்களுக்கு தேவைக்கேட்ப காய் நகர்த்துவார்கள். எனவே எதுவும் நடக்கும்வரை ஒன்றும் சொல்ல முடியாது.

மேலும் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கு சந்தர்ப்பம் இல்லை.

ஒரு சில சதி திட்டங்களுக்கு சாத்தியம் இருக்கு.....தொடர்ந்து மகிந்தா&கோ வை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க மாட்டார்கள்....கச்சதீவு மூலம் ஒரு சில பிரச்சனையை உருவாக்க முயல்வார்காள்

ஆயுத போராட்டத்திற்கு சாத்தியமில்லை ஆனால் ஆயுததாரிகளை உருவாக்குவார்கள்....முன்னாள் ஆயுததாரிகளை அரவணைத்து இருக்கும் இரு சாராரும்  எதுவும் செய்வார்கள்...

3 hours ago, putthan said:

ஒரு சில சதி திட்டங்களுக்கு சாத்தியம் இருக்கு.....தொடர்ந்து மகிந்தா&கோ வை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க மாட்டார்கள்....கச்சதீவு மூலம் ஒரு சில பிரச்சனையை உருவாக்க முயல்வார்காள்

ஆயுத போராட்டத்திற்கு சாத்தியமில்லை ஆனால் ஆயுததாரிகளை உருவாக்குவார்கள்....முன்னாள் ஆயுததாரிகளை அரவணைத்து இருக்கும் இரு சாராரும்  எதுவும் செய்வார்கள்...

இருந்தும் என்ன. எல்லாவற்றாலும் பாதிக்கப்படப்போவது அப்பாவி தமிழ் மக்களே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

இருந்தும் என்ன. எல்லாவற்றாலும் பாதிக்கப்படப்போவது அப்பாவி தமிழ் மக்களே.

உண்மைதான்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

ஒரு சில சதி திட்டங்களுக்கு சாத்தியம் இருக்கு.....தொடர்ந்து மகிந்தா&கோ வை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க மாட்டார்கள்....கச்சதீவு மூலம் ஒரு சில பிரச்சனையை உருவாக்க முயல்வார்காள்

ஆயுத போராட்டத்திற்கு சாத்தியமில்லை ஆனால் ஆயுததாரிகளை உருவாக்குவார்கள்....முன்னாள் ஆயுததாரிகளை அரவணைத்து இருக்கும் இரு சாராரும்  எதுவும் செய்வார்கள்...

நிறைய பேருக்கு இன்னமும் தீனி போட்டு வளர்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.