Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி | எடுத்துரைப்பார்களா தமிழ் எம்பிக்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி | எடுத்துரைப்பார்களா தமிழ் எம்பிக்கள்?

gra.jpg

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பணிப்பின் பேரில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலை வழங்கும் திட்டத்தில், தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன.

இதில் சுமார் 1500 தமிழ் பட்டதாரிகளின் விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கற்கை நெறியை இலங்கையில் பூர்த்தி செய்தமைகாக இவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் இலங்கை பல்கலைகக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலேயே இவர்கள் பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ளனர்.

அத்துடன் இலங்கை பல்கலைகக்கழக மானியங்கள் ஆணைக் குழு இப் பட்டப் படிப்பை அங்கீகரித்து சான்றிதழ்களை வழங்கியுள்ள போதும் இவ்வாறு நிராகரிப்பது ஏற்புடையதல்ல என்று பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கூறுகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் பல்வேறு சவால்களின் மத்தியில் தாம் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள நிலையில் இவ்வாறு புறக்கணித்து அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே ஜனாதிபதி கோத்தபாய இந்த விடயம் தொடர்பில் கரிசனை கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வேலையில் இணைய வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அமைச்சர்கள் இந்த விடயம் தொடர்பில் அரசுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தமிழ் பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/08/80911/

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பணிப்பின் பேரில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலை வழங்கும் திட்டத்தில், தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன.

இதில் சுமார் 1500 தமிழ் பட்டதாரிகளின் விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கற்கை நெறியை இலங்கையில் பூர்த்தி செய்தமைகாக இவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் இலங்கை பல்கலைகக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலேயே இவர்கள் பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ளனர்.

அத்துடன் இலங்கை பல்கலைகக்கழக மானியங்கள் ஆணைக் குழு இப் பட்டப் படிப்பை அங்கீகரித்து சான்றிதழ்களை வழங்கியுள்ள போதும் இவ்வாறு நிராகரிப்பது ஏற்புடையதல்ல என்று பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கூறுகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் பல்வேறு சவால்களின் மத்தியில் தாம் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள நிலையில் இவ்வாறு புறக்கணித்து அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே ஜனாதிபதி கோத்தபாய இந்த விடயம் தொடர்பில் கரிசனை கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வேலையில் இணைய வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அமைச்சர்கள் இந்த விடயம் தொடர்பில் அரசுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தமிழ் பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எங்க போனாலும் சுத்துமாத்து , நோப்படாமல் முன்னேறணும் 
அதென்ன வெளிநாட்டு பல்கலைக்கழகம் , ஹார்வார்டிலேயும் ஸ்டான்போர்டிலையுமா படிச்சு வந்து வேலை இல்லாமல் நிக்கினம்,
வெளிப்படையாக எழுத வேண்டியதுதானே மதுரை காமராஜர் வெளிவாரிக்கற்க்கை என்று, அரசாங்க தொழிலுக்கு டிகிரி வேணும் என்று காசைக்கொண்டுபோய் கொடுத்துவிட்டு வாழ்நாளிலே  பல்கலை கட்டிடம் எங்கே இருக்கென்று தெரியாமலே டிகிரி எடுத்துக்கொண்டு வருவீர்கள் அவன் இங்கே Internal ஆக படித்தவர்களை தட்டிவிட்டு உங்களுக்கு வேலை தரவேண்டுமா ...?
இந்த காமராசர் பல்கலை கோக்குமாக்கு எல்லோருக்கும் அத்துப்படி, அதென்ன எல்லோரும் இலங்கை திறந்த பல்கலைகழகம் இருக்கும்போது காமராசரிடம் ஓடுவது ,ஏனென்றால் திறந்த பல்கலை போட்டு குத்தும் குத்தில் குடல் வாயால் வரும், இப்படி கோக்கு மாக்கு பண்ணி நோகாமல் நோன்பு கும்பிட முடியாது, இந்த லட்சணத்தில் இவர்களை நிராகரிக்க அரசியல் காரணம் வேற வேண்டுமாம்,   

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல செய்தியை ஒழுங்கா எழுதப்பாருங்கோ வணக்கம் லண்டன். 

வேலைவாய்ப்பு 1 50 000 பேருக்கு வழங்கப்பட்டது. மொட்டையா ஐம்பதினாயிரம் என்றால்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/8/2020 at 07:37, அக்னியஷ்த்ரா said:

எங்க போனாலும் சுத்துமாத்து , நோப்படாமல் முன்னேறணும் 
அதென்ன வெளிநாட்டு பல்கலைக்கழகம் , ஹார்வார்டிலேயும் ஸ்டான்போர்டிலையுமா படிச்சு வந்து வேலை இல்லாமல் நிக்கினம்,
வெளிப்படையாக எழுத வேண்டியதுதானே மதுரை காமராஜர் வெளிவாரிக்கற்க்கை என்று, அரசாங்க தொழிலுக்கு டிகிரி வேணும் என்று காசைக்கொண்டுபோய் கொடுத்துவிட்டு வாழ்நாளிலே  பல்கலை கட்டிடம் எங்கே இருக்கென்று தெரியாமலே டிகிரி எடுத்துக்கொண்டு வருவீர்கள் அவன் இங்கே Internal ஆக படித்தவர்களை தட்டிவிட்டு உங்களுக்கு வேலை தரவேண்டுமா ...?
இந்த காமராசர் பல்கலை கோக்குமாக்கு எல்லோருக்கும் அத்துப்படி, அதென்ன எல்லோரும் இலங்கை திறந்த பல்கலைகழகம் இருக்கும்போது காமராசரிடம் ஓடுவது ,ஏனென்றால் திறந்த பல்கலை போட்டு குத்தும் குத்தில் குடல் வாயால் வரும், இப்படி கோக்கு மாக்கு பண்ணி நோகாமல் நோன்பு கும்பிட முடியாது, இந்த லட்சணத்தில் இவர்களை நிராகரிக்க அரசியல் காரணம் வேற வேண்டுமாம்,   

இலங்கை பல்கலைக்கழகத்துக்கு ஒரு பையன் 18 வயதில் சோதனை எழுதி....27 வயதில் டிகிரி முடிக்கிறான்... சராசரியாக..

இதே இங்கிலாந்தில்.. 18 வயதில் சோதனை எழுதி 21 வயதில் டிகிரி எடுக்கிதுகள்.

இலங்கையில்.. திறந்த பல்கலைக்கழகத்தை தவிர மிச்ச எல்லாமே.. கால இழுத்தடிப்புடன் தான் படிப்பிக்கினம். திறந்த பல்கலைக்கழகத்திலும்.. இப்ப சம்பள உயர்வுக்கு அதுஇதுக்கென்று மற்றவையோட சேர்ந்து பணிப்புறக்கணிப்பென்று கால நீட்டிப்பு.

இதனை இன்றைய பிள்ளைகள் விரும்பவில்லை. விரைவாக படித்து முடித்து வாழ்க்கையில் செற்றிலாக நினைக்கிறார்கள்.

அதனால்.. மேற்குலக.. குறிப்பாக பல பிரித்தானிய பல்கலைக்கழக கற்கை நெறிகளை.. அவுஸ்திரேலிய பல்கலைக்கழக கற்கை நெறிகளை 3 தொடக்கம் 4 ஆண்டுகளில்  இலங்கையிலேயே குறைந்த செலவில் படித்து.. முடித்துக் கொள்கிறார்கள். கல்வி கற்ற இளைய சமூகம் இருப்பது.. நாட்டுக்கு நன்மை தானே.

இதில் தமிழர்களை விட வசதி படைத்த சிங்களவர்களின் முஸ்லீம்களின் பிள்ளைகளே அதிகம் ஈடுபடுகின்றனர். அப்படி இருக்க.. தமிழ் பிள்ளைகள் மீது மட்டும் ஏனிந்த பாரபட்சம்..????!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, nedukkalapoovan said:

கல்வி கற்ற இளைய சமூகம் இருப்பது.. நாட்டுக்கு நன்மை தானே.

நாட்டின் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கற்பகதரு said:

நாட்டின் பெயர் என்ன?

ஈழம் அல்லது இலங்கை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

நாட்டின் பெயர் என்ன?

 

59 minutes ago, nedukkalapoovan said:

ஈழம் அல்லது இலங்கை.

நன்றி - நல்ல சிந்தனை

On 18/8/2020 at 12:07, அக்னியஷ்த்ரா said:

எங்க போனாலும் சுத்துமாத்து , நோப்படாமல் முன்னேறணும் 
அதென்ன வெளிநாட்டு பல்கலைக்கழகம் , ஹார்வார்டிலேயும் ஸ்டான்போர்டிலையுமா படிச்சு வந்து வேலை இல்லாமல் நிக்கினம்,
வெளிப்படையாக எழுத வேண்டியதுதானே மதுரை காமராஜர் வெளிவாரிக்கற்க்கை என்று, அரசாங்க தொழிலுக்கு டிகிரி வேணும் என்று காசைக்கொண்டுபோய் கொடுத்துவிட்டு வாழ்நாளிலே  பல்கலை கட்டிடம் எங்கே இருக்கென்று தெரியாமலே டிகிரி எடுத்துக்கொண்டு வருவீர்கள் அவன் இங்கே Internal ஆக படித்தவர்களை தட்டிவிட்டு உங்களுக்கு வேலை தரவேண்டுமா ...?
இந்த காமராசர் பல்கலை கோக்குமாக்கு எல்லோருக்கும் அத்துப்படி, அதென்ன எல்லோரும் இலங்கை திறந்த பல்கலைகழகம் இருக்கும்போது காமராசரிடம் ஓடுவது ,ஏனென்றால் திறந்த பல்கலை போட்டு குத்தும் குத்தில் குடல் வாயால் வரும், இப்படி கோக்கு மாக்கு பண்ணி நோகாமல் நோன்பு கும்பிட முடியாது, இந்த லட்சணத்தில் இவர்களை நிராகரிக்க அரசியல் காரணம் வேற வேண்டுமாம்,   

கூடுதலாக இந்தியாவில் கல்வி கற்றவர்களையே நிராகரித்திருக்கிறார்கள். காமராஜர், பச்சையப்பன், பொன்னம்மாள் , காமாட்சி etc .,etc . போன்ற பல்கலைகழகங்களில் (?) கற்றவர்களையே நிராகரித்திருக்கிறார்கள். நான் கண்டிருக்கிறேன் அநேகமானோர் இந்த கல்லூரிகளில் கற்று MA , Phd படடமெல்லாம் வைத்திருக்கிரார்கள். மேர்வின் சில்வாவும் இதில் ஒரு கல்லூரியில் காற்றுதான் டாக்டர் படம் பெற்றாராம். எப்படி இருக்குது?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

அதனால்.. மேற்குலக.. குறிப்பாக பல பிரித்தானிய பல்கலைக்கழக கற்கை நெறிகளை.. அவுஸ்திரேலிய பல்கலைக்கழக கற்கை நெறிகளை 3 தொடக்கம் 4 ஆண்டுகளில்  இலங்கையிலேயே குறைந்த செலவில் படித்து.. முடித்துக் கொள்கிறார்கள். கல்வி கற்ற இளைய சமூகம் இருப்பது.. நாட்டுக்கு நன்மை தானே.

இப்படியான பல்கலைகளில் ஆங்கில மொழிமூலம் கற்கையை பூர்த்திசெய்பவர்கள் யாரும் அரச தொழில் தான் வேண்டும் என்று கொடிபிடித்துக்கொண்டு நிற்பதில்லை, நீங்கள் சொல்வதுபோல் ஆஸி, பிரிட்டிஷ் கற்கைநெறிகளை  படித்தவர்கள் படிப்பு முடிந்ததுமே தனியார்துறையில் வேலையெடுத்து இரண்டு வருடத்திற்குள் 6 இலக்க சம்பளத்தை தொட்டுவிடுவார்கள், இந்த கொடிபுடிக்கும் கேஸ்களே வேறு 
ஆங்கில அரிச்சுவடியில் A  ஐ எடுத்தீர்கள்  என்றாலே  ஆறடிக்கு அப்பால் நிற்பார்கள், எந்த போட்டிப்பரீட்சைக்கும் தோற்றமாட்டார்கள், அரசாங்க தொழிலுக்கு பட்டம் வேண்டுமென்பதால் துட்டை  தட்டி விட்டு  டிகிரி  எடுத்த  கூட்டம், காசை கொடுத்து எடுத்தால் அறிவு எங்கே இருக்கும்,அது இலங்கை அரசாங்கத்துக்கும் இப்போது தெரிந்துவிட்டது, எவன் அரசாங்க தொழில் அதுவும் வாத்தி தொழில் தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில்  நிக்கிறானோ அவனை மடச்சாம்பிராணி என்று இலங்கையில் பார்க்கும் காலம் வந்துவிட்டது  

Edited by அக்னியஷ்த்ரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.