Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு பிள்ளையானுக்கு அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு பிள்ளையானுக்கு அனுமதி

 

நாடாளுமன்ற உறுப்பிராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ளுவதற்காக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நகர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதனை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.எம்.சூசைதாசன், நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கும் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்வதற்குமானு அனுமதியை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு சந்திரகாந்தனை அழைத்துச் செல்லும்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சந்திரகாந்தன் விரைவில் விலங்கினை உடைத்துவெளியில் வந்து அனைவருடனும் பேசுவதாக தெரிவித்தார்.

Pillayan-1-720x405.jpg

Pillayan-6-720x405.jpg

Pillayan-5-720x405.jpg

Pillayan-3-720x405.jpg

Pillayan-4-720x405.jpg

  by : Dhackshala

http://athavannews.com/நாடாளுமன்ற-அமர்வுகளில்-க/

  • கருத்துக்கள உறவுகள்

கொலை வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள பிள்ளையான் எம்.பி பதவியேற்க அனுமதி

இலங்கை நாடாளுமன்றத்தன் எதிர்வரும் 9ஆவது அமர்வில் நீதிமன்ற விளக்கமறியலில் உள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தொடர், நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நடந்து முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தலின் ஊடாக சிறையிலுள்ள இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர ஆகியோர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின ஆராதனைகளின் போது, அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்திருந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

அதேவேளை, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டமொன்றின் ஏற்பாடுகளில் போது இரத்தினபுரி - காஹவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பிரேமலால் ஜயசேகரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) 9ஆவது நாடாளுமன்ற கன்னி அமர்வில் கலந்துகொள்ள நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் அந்த மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளாக 54 ஆயிரத்து 198 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

சிறைச்சாலையில் இருந்தவாறு, ஒரு பிரசார கூட்டத்தில் கூட கலந்துகொள்ளாத நிலையில், மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் பிள்ளையானுக்கு செலுத்தப்பட்டன.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்றம் செல்ல நீதிமன்றம் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

https://www.bbc.com/tamil/sri-lanka-53822097

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கொலை செய்திருக்கிறார் 
இலங்கை பிரதமர் ஆக கூட ஆகலாம் 
ஒரு அமைச்சராக அதன் அமர்வில் அமர்வதால் என்ன பிரச்சனை?
செய்த கொலை போதாது என்பதால் இது செய்தியாகிறதா? ஒன்னும் புரியவில்லை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Maruthankerny said:

இவ்வளவு கொலை செய்திருக்கிறார் 
இலங்கை பிரதமர் ஆக கூட ஆகலாம் 
ஒரு அமைச்சராக அதன் அமர்வில் அமர்வதால் என்ன பிரச்சனை?
செய்த கொலை போதாது என்பதால் இது செய்தியாகிறதா? ஒன்னும் புரியவில்லை 

Bild

Bild

  • கருத்துக்கள உறவுகள்

நெல்சன் மண்டேலாக்கும் பிள்ளையானுக்கும் என்ன தொடர்பு??

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, MEERA said:

நெல்சன் மண்டேலாக்கும் பிள்ளையானுக்கும் என்ன தொடர்பு??

இப்படி குறுக்கு கேள்வி கேட்டு போலி சிறிலங்கா தேசியவாதிகளை கடுப்பாக்காடையுங்கோ பிளிஸ்

இருவரும் பிளக்காம்....
மண்டேலா உயிருடன் இல்லை ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, MEERA said:

நெல்சன் மண்டேலாக்கும் பிள்ளையானுக்கும் என்ன தொடர்பு??

இங்கே விளக்கம் தரப்பட்டுள்ளது.தியாகி பிள்ளையானை அவமதிக்கும் கேள்விகளை இனியும் கேட்காதீர்கள். 😎

Bild

எமது தமிழ் அறிஜர்களது கருத்தையும் , பிள்ளையானின் கருத்தையும் பாராளுமன்றில் கேட்கலாம். அப்பொதாவது தெரிய வரும் யார் படித்த முடடாள், யார் படிக்காத மேதை என்று. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.