Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெத்தப்படித்த வரலாற்று ஆய்வாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

திரியை திசை திருப்பும் முயல்வுக்கு நன்றி. 

https://www.nature.com/articles/jhg2013112

நானா திசை திருப்புறேன்? 

இது 2014 இல் வந்தது. நேற்றே கோஷானின் திரியில் பேசியது. இதையாவது வாசிக்கவில்லை நீங்கள் என்று புரிகிறது. ஏனெனில் இந்த பேப்பரின் படி இலங்கைத் தமிழரும் சிங்களவரும் வேடுவர், இந்தியத் தமிழரிடமிருந்து விலகி அதிக தொடர்பு காட்டுகிறார்கள். 

அது சரி, உங்கள் சிங்களவர் தெலுங்கர் தியரிக்கு இது எப்படி உதவுகிறது?🤔

 

  • Replies 63
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லாந்தரும், கண்டி நாயக்கரும்

கீர்த்தி சிறி ராஜசிங்க என்ற நாயக்க மன்னன் காலத்தில் ஒல்லாந்தர்கள் கண்டியை கைபற்ற முனைந்தனர். அவர்களை நீர்கொழும்பு கரையோரப்பகுதி வரை அடித்து விரட்டினர். பின்னர் ஒல்லாந்தர் கண்டியினுள் புகுந்த போதும், நகரத்தினை காலை செய்து, மலைப்பகுதியில் பதுங்கி, கொரில்லா யுத்தம் செய்து பெரும் இழப்பினை உண்டாக்க, ஒல்லாந்தர் வெளியேறி, மீண்டும் கண்டி பக்கமே போகவில்லை.

கண்டிய உடன்படிக்கை.

கண்டியில் தென்னிந்திய (மலபார் என்ற வார்த்தையினை பயன்படுத்தி உள்ளனர்) ஆட்சியினை முடிவுக்கு கொண்டு வரும் பிரிட்டிஷ் - கண்டிய பிரதானிகள் உடன் படிக்கை, கடைசி கண்டிய மன்னனுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே நடை பெறாமல், கண்டிய பிரதானிகளுடன் கைச்சாத்தாகியது.

இந்த உடன் படிக்கையில் கையெழுத்து வைத்த அனைவருமே கண்டி சிங்களவர்கள். தெலுங்கு நாயக்க அரசருக்கு எதிராக இவர்கள் நடந்து கொண்டார்கள். 

Ehelepola Nilame
Molligoda sr. - Maha Adigar & Dissawa of the Sath Korles
Pilima Talawuwe sr. alias Kapuwatte - 2nd Adigar & Dissawa of Sabaragamuwa
Pilima Talawuwe jr. - Dissawa of Hathra Korles
Monarawila - Dissawa of Uva
Ratwatte - Dissawa of Matale
Molligoda jr. - Dissawa of Thun Korles
Dullewe - Dissawa of Walapane
Millewe - Dissawa of Wellassa & Binthenna
Galagama - Dissawa of Tamankaduwa
Galagoda - Dissawa of Nuwara Kalawiya

இந்த கடைசி மன்னன், மக்களின், பிரதானிகளின் வெறுப்புக்கு ஆளாகி இருந்தான்.

அத்துடன், இலங்கையில் நாயக்க வம்ச ஆடசி முடிவுக்கு வந்தது.

Key points
'Sri Wickrema Rajasinha', the 'Malabari' king, [is] to forfeit all claims to the throne of Kandy.
The king is declared fallen and deposed and the hereditary claim of his dynasty, abolished and extinguished.
All his male relatives are banished from the island.
The dominion is vested in the sovereign of the British Empire, to be exercised through colonial governors, except in the case of the Adikarams, Disavas, Mohottalas, Korales, Vidanes and other subordinate officers reserving the rights, privileges and powers within their respective ranks.
The religion of Buddhism is declared inviolable and its rights to be maintained and protected.
All forms of physical torture and mutilations are abolished.
The governor alone can sentence a person to death and all capital punishments to take place in the presence of accredited agents of the government.
All civil and criminal justice over Kandyan to be administered according to the established norms and customs of the country, the government reserving to itself the rights of interposition when and where necessary.
Other non-Kandyan's position [is] to remain [as privileged as previously] according to British law.
The proclamation annexing the Three and Four Korales and Sabaragamuwa is repealed.
The dues and revenues to be collected for the King of England as well as for the maintenance of internal establishments in the island.
The governor alone can facilitate trade and commerce.

மேலதிக வாசிப்புக்கு

How the Wily British took the Kandyan chiefs for a rideby Godwin Witane

http://www.worldgenweb.org/lkawgw/britkand.html

Karava of Sri Lanka

http://karava.org/other/radala

 

  • கருத்துக்கள உறவுகள்

#பல்லவர்கள்_தமிழர்களா?

"தமிழ் என் தாய்மொழி" எனும் தலைப்பில் இந்த மாதம் இரண்டாம் வாரம் வேலூர் கோட்டை பூங்கா அருகில் கண்ட நேர்காணலில் மருத்துவர் செந்தில்குமார் A.S. அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று.

#கேள்வி:

ஐயா, காஞ்சிபுரம் எனக்கு பிடித்த நகரங்களில் ஒன்று, மாமல்லபுரம் நான் மறக்க முடியாத நகரம், செங்கல்பட்டு என்வாழ்வில் மூன்று முறை திருப்புமுனை ஏற்படுத்திய நகரம். ஆகவே இந்தப்பகுதியை ஆட்சிப்புரிந்த பல்லவர்கள் யார்? இவர்கள் தமிழர்களா என்று அறிய அதிக ஆர்வம்.

#பதில்:

  வரலாற்று ஆசிரியர்களிடையே பல்லவர் பற்றிய குழப்பங்கள் நிறையவே உள்ளன.தெளிவான தரவுகள் இல்லை.

1. சிலரின் கருத்துப்படி கரிகால சோழன் இலங்கையின் நாக இளவரசியை மணந்து அவர்களுக்கு பிறந்த மகனான தொண்டைமான் இளந்திரையனுக்கு காஞ்சியின் அரசுரிமையைத்தந்தார். 

  அந்த  தொண்டைமான் பரம்பரையில் வந்தவர்கள் பல்லவர் என்று தெரிகிறது. தொண்டைமான், பல்லவர்கள் இருவருமே காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டுதான் ஆண்டனர். #தொண்டையர்கோன் என்கிற பட்டப் பெயரும் பல்லவர்களுக்கு உண்டு.

2. காஞ்சிபுர மக்கள் இயல்பாகவே பல்லவர்களை ஏற்றுக் கொண்டு அவர்கள் 700 ஆண்டுகள் அரசராகவும், மேலும் 400 ஆண்டுகள் சிற்றரசர்களாகவும் ஆட்சி செய்ய உதவியாக இருந்தனர். 

 பல்லவ மன்னர்கள் சிறப்பு மிக்க கோயில்கள், சிற்பங்கள் யாவற்றையும் காஞ்சி, மாமல்லபுரத்தில்தான் நிறுவி உள்ளனர்.

பின்னாளில் பல்லவநாட்டின் எல்லாப் பகுதிகளையும் இழந்தாலும் காஞ்சியை மட்டும் தக்கவைத்துக் கொண்டு ஆட்சி செய்துள்ளார்கள்.

ஆகவே பல்லவர்கள் தமிழ் மைந்தர்களாகவே இருக்க  வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

3. சாதவாகன பேரரசின் கீழ் பல்லவர்கள் சிற்றரசர்களாக ஆட்சிபுரிந்தனர் என்றும் சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அதனால் சிலர் பல்லவர்களை தெலுங்கர் என்கின்றனர்.
 
ஆரம்பக்கால பல்லவர்களின் செப்பேடுகள் பிராகிருத மொழியில் மட்டுமே இருந்தன. தமிழ் பயன்படுத்தப்படவில்லை. பல்லவர்கள் சொந்தமாக பல்லவ கிரந்த எழுத்துக்களை வைத்திருந்தனர்.

 இதற்கு காரணம் பல்லவப் பேரரசு தமிழ்நாடு தவிர ஆந்திரா கன்னட நாடுகளையும் உள்ளடக்கி இருந்ததால் இருக்கலாம்.

 இதுவரை நமக்குக் கிடைத்துள்ள பழைமையான தெலுங்கு மொழி கல்வெட்டு 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கலமலா கல்வெட்டு. இதுவும் கூட அதிகளவு பிராகிருதம் கலந்தது. 

தெலுங்கு தனித்த மொழியாக பிற்பாடுதான் பிரிகிறது. எனவே, பல்லவர் காலத்தில் தெலுங்கு என்ற மொழியே இருக்கவில்லை. 

எனவே, உறுதியாக பல்லவர்கள் தெலுங்கர்கள் இல்லை எனக் கூறமுடியும்.

 சாதவாகனர்கள் எப்போதும் காஞ்சியை கைப்பற்றியதாக வரலாறும் இல்லை. ஆரம்பத்தில் இருந்து காஞ்சியை தலைநகராகக் கொண்டுதான் பல்லவர்கள் ஆட்சி செய்து வந்தார்கள்.

ஏற்கனவே ஆந்திரப் பிரதேசங்களை ஆண்ட சாதவாகனர்கள் பிராகிருத மொழி பேசினாலும்  தாங்கள் வெளியிட்ட நாணயங்களில் தமிழும் இருந்தது.அங்கு வாழ்ந்த தமிழர்களுக்காக இப்படி நாணயங்களை வெளியிட்டுருக்க வேண்டும். அந்தக் காலக்கட்டத்தில் தமிழர்கள் கிருஷ்ணா நதித்தாண்டி கோதாவரி ஆறுவரை வாழ்ந்துவந்தனர் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

ஆகவே பல்லவர்கள் குண்டூர் (பல்நாடு பகுதி) அல்லது தெலுங்கானா எல்லைப்புறத்தில் வாழ்ந்த காஞ்சியை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களாகவும் இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.

4. இன்னொரு கோட்பாடு அன்றைய வேலூர் பகுதியான அருவா நாடு, மற்றும் மாவிலங்கை நாட்டை ஆண்ட நாகர் வம்சத்தில் பல்லவர்கள் மணமுடித்து அரசராகி பின்பு காஞ்சிப்பகுதிகளை அரசாண்டு இருக்கலாம் என்பது. 

அதற்கு கிரேக்க அறிஞர்  #ப்டாலாமியின்(Ptolemy) பதிவுகளை ஆதாரமாகத் தருகிறார்கள்.

அருவா நாடு (இன்றைய அம்மூர் பகுதிகள்)

மாவிலங்கை ( இன்றைய கணியம்பாடி பகுதிகள்)

5. கங்கநாட்டு வரலாறு, கன்னட வரலாறு முதலியவற்றில் வெளிப்படும் செய்திகள் பல்லவர்கள் தமிழர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

கடைசியாக எனது தனிப்பட்ட மேலும் ஓர் ஆய்வில் இதற்கும் வாய்ப்பு உண்டு.

   அதியமான் பரம்பரையைச் சேர்ந்த குதிரை மலை எயினி (சங்க காலத்தில் மாண்டியா மேட்டூர் மேற்கு, தருமபுரியை ஆண்ட குறுநில மன்னன்) வழியினராகவும் இருக்கலாம்.

அதை குதிரையிம் ஆழை என்று திரிபாக வாசித்து சமற்கிருதத்தில் அசுவத்தாமன் என்று எழுதியுள்ளனர்.

 பின்னர் மகாபாரதக் கதையில் வரும்
பரத்வாஜர் முனி மகனான துரோணாச்சாரியார் மகன் அசுவத்தாமனின் வம்சத்தினர் பல்லவர்கள் என்று பின்னாளில் கல்வெட்டுகளில் கதைப் புனைந்துள்ளனர்.

ஆக மேற்குறிப்பிட்ட எந்தத் தரவுகளின்படி பார்த்தாலும் பல்லவர்கள் தமிழர்களே  என்கிற முடிவுக்குதான் வரமுடிகிறது.

நன்றி ஐயா.

(முகநூலில் இருந்து)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

நானா திசை திருப்புறேன்? 

இது 2014 இல் வந்தது. நேற்றே கோஷானின் திரியில் பேசியது. இதையாவது வாசிக்கவில்லை நீங்கள் என்று புரிகிறது. ஏனெனில் இந்த பேப்பரின் படி இலங்கைத் தமிழரும் சிங்களவரும் வேடுவர், இந்தியத் தமிழரிடமிருந்து விலகி அதிக தொடர்பு காட்டுகிறார்கள். 

அது சரி, உங்கள் சிங்களவர் தெலுங்கர் தியரிக்கு இது எப்படி உதவுகிறது?🤔

 

இதெல்லாம் பார்த்து விட்டு வந்து தான், ஒன்றுமே இணையத்தில் காணவில்லை என்று இங்கே கதை விட்டதை காட்டத்தான் அதை பதிந்தேன்.

நீங்கள் இங்கே வரும் போதே உங்கள் நோக்கம் தெரியும், இருந்தாலும் கண்ணியமாக கருத்தாடினேன். நீங்கள் திண்ணையில் போட்ட கருத்துக்களையும் பார்த்தேன்.

பயோலாஜி படிப்பிப்பவனுக்கே பயோலாஜி படிப்பிக்கிறான்கள் என்று திண்ணையில் குறிப்பிட்டீர்கள். நான் உங்களுக்கு பயோலாஜி படிப்பிக்க முனையவில்லையே.

உங்கள் கூர்ப்பு பற்றிய கருத்துக்களில் விளக்கமின்மையால்,  வேறு பயோலாஜி நன்றாக தெரிந்தவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதுக்கும் குதர்க்கமான பதிலை போடுகிறீர்கள். நீங்கள் வாத்தி என்றால், மாணவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இருந்தாலும், கருத்தாட இங்கே வந்தமைக்கு நன்றிகள் பல.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதுரை நாயக்கர் வரலாறு

கண்டி நாயக்கர் வரலாறு

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

இதெல்லாம் பார்த்து விட்டு வந்து தான், ஒன்றுமே இணையத்தில் காணவில்லை என்று இங்கே கதை விட்டதை காட்டத்தான் அதை பதிந்தேன்.

நீங்கள் இங்கே வரும் போதே உங்கள் நோக்கம் தெரியும், இருந்தாலும் கண்ணியமாக கருத்தாடினேன். நீங்கள் திண்ணையில் போட்ட கருத்துக்களையும் பார்த்தேன்.

பயோலாஜி படிப்பிப்பவனுக்கே பயோலாஜி படிப்பிக்கிறான்கள் என்று திண்ணையில் குறிப்பிட்டீர்கள். நான் உங்களுக்கு பயோலாஜி படிப்பிக்க முனையவிலையே.

உங்கள் கூர்ப்பு பற்றிய கருத்துக்களில் விளக்கமின்மையால்,  வேறு பயோலாஜி நன்றாக தெரிந்தவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதுக்கும் குதர்க்கமான பதிலை போடுகிறீர்கள். நீங்கள் வாத்தி என்றால், மாணவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இருந்தாலும், கருத்தாட இங்கே வந்தமைக்கு நன்றிகள் பல.

ஆழ்ந்த அனுதாபங்கள் நாதம்! இதை விட வேறெதுவும் சொல்வதற்கில்லை! 

இனி நீங்கள் எழுதும் எதையும் நான் கேள்வி கேட்க முனையப் போவதில்லை! வாசிப்பவர்களே புரிந்து கொள்ளட்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

ஆழ்ந்த அனுதாபங்கள் நாதம்! இதை விட வேறெதுவும் சொல்வதற்கில்லை! 

இனி நீங்கள் எழுதும் எதையும் நான் கேள்வி கேட்க முனையப் போவதில்லை! வாசிப்பவர்களே புரிந்து கொள்ளட்டும்!

நீங்கள் எந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்று தெரிவதால், உங்கள் நோக்கம் அனைவரும் புரிந்து கொள்வர். 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலர் மறுப்பதால், இலங்கையின் கண்டி தெலுங்கு நாயக்கர்கள் வரலாறு இல்லை என்று ஆகி விடாது.

@6.33 க்கு இந்த கடைசி நாயக்க மன்னரின் கொடூரம் குறித்து சிங்கள மக்களின் நாடகம் ஒன்றின் காட்சி. 

மிக முக்கியமாக சேர, சோழர், பாண்டியர் காலத்தில், சைவமும், நாயக்கர் காலத்தில் வைணவமும் தமிழகத்தில் தழைத்தது.

இந்த காரணத்தினால் தான், கண்டிக்கு சென்ற நாயக்கர்கள், இலகுவாக பௌத்தர்கள் ஆனார்கள்.

வரலாறு முக்கியம் மன்னரே. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஏனெனில் இந்த பேப்பரின் படி இலங்கைத் தமிழரும் சிங்களவரும் வேடுவர், இந்தியத் தமிழரிடமிருந்து விலகி அதிக தொடர்பு காட்டுகிறார்கள். 

இதை மறுக்கிறீர்களா அல்லது முதலில் இப்பொது தான்  அந்த research அறிக்கையில் இருந்து அறிந்து கொண்ட முடிவா?

Edited by Kadancha
amend

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்த உடன் படிக்கையில் கையெழுத்து வைத்த அனைவருமே கண்டி சிங்களவர்கள். தெலுங்கு நாயக்க அரசருக்கு எதிராக இவர்கள் நடந்து கொண்டார்கள். 

Ehelepola Nilame
Molligoda sr. - Maha Adigar & Dissawa of the Sath Korles
Pilima Talawuwe sr. alias Kapuwatte - 2nd Adigar & Dissawa of Sabaragamuwa
Pilima Talawuwe jr. - Dissawa of Hathra Korles
Monarawila - Dissawa of Uva
Ratwatte - Dissawa of Matale
Molligoda jr. - Dissawa of Thun Korles
Dullewe - Dissawa of Walapane
Millewe - Dissawa of Wellassa & Binthenna
Galagama - Dissawa of Tamankaduwa
Galagoda - Dissawa of Nuwara Kalawiya

இந்த ஓப்பத்தின் பிம்பப் படிவம். ஒருவரை தவிர மிகுதி எல்லோருடைய கையொப்பத்திலும் தமிழ் (வெளிபடையாக தெரிவது) மற்றும்    , மலையாள எழுதுகல் கலந்துள்ளதாக விடயம் தெரிந்தவரியோடம் இருந்து அறிந்து கொண்டேன்.  

Signatures-of-11-Sinhalese-Chiefs-in-181

 

 

Signatures-of-11-Sinhalese-Chiefs-in-181

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

இதை மறுக்கிறீர்களா அல்லது முதலில் இப்பொது தான்  அந்த research அறிக்கையில் இருந்து அறிந்து கொண்ட முடிவா?

கடன்ஞா, இது வெள்ளிடை மலை. இதைப் பற்றி கோசானின் திரியில் நேற்றே எழுதியாகி விட்டது. இங்கே ஏன் இது வந்தது என்று நாதத்தின் குவோரா பதிவில் இருந்து வாசித்தால் புரியும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kadancha said:

இதை மறுக்கிறீர்களா அல்லது முதலில் இப்பொது தான்  அந்த research அறிக்கையில் இருந்து அறிந்து கொண்ட முடிவா?

கடஞ்சா... விடுங்கள்... இவருக்கு, குவோரா தளத்தின் புகழ் குறித்த கவலை. அதிலுள்ள தகவல் குறித்து அல்ல. 

இவர் இங்கே வருவது குதர்க்கத்துக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

#உசாத்துணை 84, ஹப்லோரைப் R1a

இவை இரண்டுமே இனி உங்கள் பதிவுகளின் நம்பகத் தன்மையை யாழ் வாசகர்கள் மதிப்பிட உதவும்! 😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

#உசாத்துணை 84, ஹப்லோரைப் R1a

இவை இரண்டுமே இனி உங்கள் பதிவுகளின் நம்பகத் தன்மையை யாழ் வாசகர்கள் மதிப்பிட உதவும்! 😇

வாசகர் மதிப்பினை நாம் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் சார்பான திரியின் மதிப்பினை பார்த்தால் போதும் தல.

நாயக்கர் பத்தி பேசினால், குவோரா தளத்தின் ரேட்டிங் பத்தி பேசி நேரத்தினை விரயம் செய்யாமல், போய் உங்கள் பதவி உயர்வுக்கு தயார் செய்யுங்கள்.

மெய்மா பேகம் பத்தின விக்கிப்பீடியா திரியை பாருங்கோ. பதவி உயரலாம்.

ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தேன். அடுத்தவர்களுக்கு மதிப்பு கொடுக்காவிடில் வரவேண்டாம் என்று. திண்னையில் உங்கள் எழுத்தினை பார்த்த பிறகு, நீங்கள் உண்மையிலேயே படித்தவர் தானே என சந்தேகம் வந்தது.

கண்ணியம் என்பது கல்வியால் வருவது.

கற்றபின் நிற்க அதுக்கு தக என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்? 

கூர்ப்பு பற்றி விக்கிப்பீடியாவில் இருக்கிறது. நானும் அடித்து ஒட்டி, படித்தவன் மாதிரி பீலா.விடலாம். அவனவன் வேலையே இல்லாமல் வீடுகளில் நிக்கிறான். பதவி உயர்வாம் என்று பீலா வேற.

பீலா விட்டு போட்டு, இங்கவே சுத்தினா, நம்புற மாதிரியா இருக்குது?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kadancha said:

இந்த ஓப்பத்தின் பிம்பப் படிவம். ஒருவரை தவிர மிகுதி எல்லோருடைய கையொப்பத்திலும் தமிழ் (வெளிபடையாக தெரிவது) மற்றும்    , மலையாள எழுதுகல் கலந்துள்ளதாக விடயம் தெரிந்தவரியோடம் இருந்து அறிந்து கொண்டேன்.  

Signatures-of-11-Sinhalese-Chiefs-in-181

 

 

Signatures-of-11-Sinhalese-Chiefs-in-181

 

 

கடஞ்சா,

உங்களுக்கு தெரியாததல்ல. கண்டி ராச்சியத்தின் கடைசி 75 ஆண்டுகள் தென்னிந்தியாவில் இருந்து வந்த நாயக்க மன்னர்களால் ஆழப்பட்டது. ஆனால் அரசை வழிநடத்திய பிரதானிகள் (கையொப்பதாரிகள் சிங்களவர்கள் - பெயர்களை பாருங்கள்).

அப்போ ஏன் கையொப்பம் மட்டும் தமிழில்? ஏனென்றால் அப்போது அரசகரும மொழியாக தமிழ் இருந்தது. இது எல்லாமே பல வரலாற்று நூல்களில் ஏலவே இருக்கிறது.

ஒரு காலத்தில் தென்னித்தியா எங்கினும் அரச மொழியாக தமிழ் இருந்தது.

இங்கிலாந்து அரசவையில் கூட குறிப்பிட்ட காலம் வரை பிரென்ஞ் மொழியே இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

கடஞ்சா,

உங்களுக்கு தெரியாததல்ல. கண்டி ராச்சியத்தின் கடைசி 75 ஆண்டுகள் தென்னிந்தியாவில் இருந்து வந்த நாயக்க மன்னர்களால் ஆழப்பட்டது. ஆனால் அரசை வழிநடத்திய பிரதானிகள் (கையொப்பதாரிகள் சிங்களவர்கள் - பெயர்களை பாருங்கள்).

அப்போ ஏன் கையொப்பம் மட்டும் தமிழில்? ஏனென்றால் அப்போது அரசகரும மொழியாக தமிழ் இருந்தது. இது எல்லாமே பல வரலாற்று நூல்களில் ஏலவே இருக்கிறது.

ஒரு காலத்தில் தென்னித்தியா எங்கினும் அரச மொழியாக தமிழ் இருந்தது.

இங்கிலாந்து அரசவையில் கூட குறிப்பிட்ட காலம் வரை பிரென்ஞ் மொழியே இருந்தது.

இஞ்சை பாருங்கோ எங்களுக்கு அது இது எது தேவையில்லை.
ஊரிலை என்ன பிரச்சனையை எப்பிடி தீர்க்கலாம் எண்டு சொல்லுங்கோ பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Kadancha said:

இதை மறுக்கிறீர்களா அல்லது முதலில் இப்பொது தான்  அந்த research அறிக்கையில் இருந்து அறிந்து கொண்ட முடிவா?

இதுவும் பெரிய ஒரு விடயமில்லை. 

வேடுவர்களே இலங்கையின் பூர்வகுடிகள். அவர்களுக்கும் தமிழர் சிங்களவர்கும் இருக்கும் தொடர்பு மிகவும் அரியது.

ஆனால் இந்திய குழுக்களுக்கும் சிங்களவர், தமிழருக்குமான தொடர்பு காத்திரமானது.

தெற்காசியாவின் இனங்களிலே மிகவும் புதியது சிங்கள இனம். 

விக்கி சொன்னது போல - தேவநம்பிய தீசன் ஒரு தமிழன் - மறுப்பே இல்லை. ஆகவே தமிழரில் இருந்து இனமாகிய சிங்களவரில் தென்னிந்திய டி என் ஏ இருப்பது வியப்பானது அல்லவே?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

கடஞ்சா,

உங்களுக்கு தெரியாததல்ல. கண்டி ராச்சியத்தின் கடைசி 75 ஆண்டுகள் தென்னிந்தியாவில் இருந்து வந்த நாயக்க மன்னர்களால் ஆழப்பட்டது. ஆனால் அரசை வழிநடத்திய பிரதானிகள் (கையொப்பதாரிகள் சிங்களவர்கள் - பெயர்களை பாருங்கள்).

அப்போ ஏன் கையொப்பம் மட்டும் தமிழில்? ஏனென்றால் அப்போது அரசகரும மொழியாக தமிழ் இருந்தது. இது எல்லாமே பல வரலாற்று நூல்களில் ஏலவே இருக்கிறது.

ஒரு காலத்தில் தென்னித்தியா எங்கினும் அரச மொழியாக தமிழ் இருந்தது.

இங்கிலாந்து அரசவையில் கூட குறிப்பிட்ட காலம் வரை பிரென்ஞ் மொழியே இருந்தது.

வாங்க தல... என்ன இந்த பக்கம். சும்மா பார்த்து போகலாம் எண்டு வந்திருப்பியல் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

வாங்க தல... என்ன இந்த பக்கம். சும்மா பார்த்து போகலாம் எண்டு வந்திருப்பியல் என்ன? 

முதல்லயே வந்திருக்கோணும் நாதத்தார்.

அங்கால மருதர் மினகெடுத்திப் போட்டார்🤣

5 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ எங்களுக்கு அது இது எது தேவையில்லை.
ஊரிலை என்ன பிரச்சனையை எப்பிடி தீர்க்கலாம் எண்டு சொல்லுங்கோ பாப்பம்.

உது தெரிஞ்சா நான் ஏணன்னை இதுக்க மினக்கெடுறன் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, goshan_che said:

முதல்லயே வந்திருக்கோணும் நாதத்தார்.

அங்கால மருதர் மினகெடுத்திப் போட்டார்🤣

உது தெரிஞ்சா நான் ஏணன்னை இதுக்க மினக்கெடுறன் 😂

பிறகு என்ன கோதரிக்கு இல்லாத பொல்லாத வரலாறுகளையெல்லாம் இழுத்து ரீல் ரீலாய் விடுறியள்? 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

பிறகு என்ன கோதரிக்கு இல்லாத பொல்லாத வரலாறுகளையெல்லாம் இழுத்து ரீல் ரீலாய் விடுறியள்? 😁

உதுக்கு விடை தெரிஞ்சாலும் நான் இதுக்க மினகெடமாட்டன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

வாசகர் மதிப்பினை நாம் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் சார்பான திரியின் மதிப்பினை பார்த்தால் போதும் தல.

நாயக்கர் பத்தி பேசினால், குவோரா தளத்தின் ரேட்டிங் பத்தி பேசி நேரத்தினை விரயம் செய்யாமல், போய் உங்கள் பதவி உயர்வுக்கு தயார் செய்யுங்கள்.

மெய்மா பேகம் பத்தின விக்கிப்பீடியா திரியை பாருங்கோ. பதவி உயரலாம்.

ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தேன். அடுத்தவர்களுக்கு மதிப்பு கொடுக்காவிடில் வரவேண்டாம் என்று. திண்னையில் உங்கள் எழுத்தினை பார்த்த பிறகு, நீங்கள் உண்மையிலேயே படித்தவர் தானே என சந்தேகம் வந்தது.

கண்ணியம் என்பது கல்வியால் வருவது.

கற்றபின் நிற்க அதுக்கு தக என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்? 

கூர்ப்பு பற்றி விக்கிப்பீடியாவில் இருக்கிறது. நானும் அடித்து ஒட்டி, படித்தவன் மாதிரி பீலா.விடலாம். அவனவன் வேலையே இல்லாமல் வீடுகளில் நிக்கிறான். பதவி உயர்வாம் என்று பீலா வேற.

பீலா விட்டு போட்டு, இங்கவே சுத்தினா, நம்புற மாதிரியா இருக்குது?

இதைப் பார்க்க கோபம் வரவில்லை, பரிதாபம் தான் வந்தது, கோவிட்டால் எல்லாரும் வேலை போய் இருக்கின்றனர் என்ற உங்கள் generalized புரிதலே உங்கள் ட்ரேட் மார்க்! அதை நீங்க தொடர்ந்து பேண வேணும்! 


ஆரம்பத்திலேயே சொன்னேன், எனக்கு நாயக்கர் வீடியோவில் எல்லாம் நாட்டமில்லை. கூர்ப்பு பற்றிய உங்கள் கருத்து தவறு என்றேன். விக்கிபீடியா பார்த்து சொன்னதில்லை! 25 வருடங்களாக நான் கற்று ஆய்வு செய்யும் உயிரியல் அறிவினால் சொன்னது! இந்த உயிரியல் அறிவு உங்களிடம் இலையென்று சொன்னால் அது தவறல்ல, ஏனெனில் நீங்கள் உயிரியலாளர் அல்ல! ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டீர்கள், பிறகு என் கூர்ப்பு விளக்கத்தையே சந்தேகம் கொண்டீர்கள்! ஏன்? எனக்கு விடை தெரியாது!

குவோரா: நம்பிக்கையற்ற தளம். அதில் சொன்ன ஹப்லோரைப் R1a சிங்களவரில் 25% இருக்கிறது என நம்பிக்கையான விஞ்ஞான பேப்பரில் வரவில்லையென்றேன். பின்னர் நீங்கள் தந்த விக்கிபீடியாவில்  monograph ஆக இருந்த உசாத்துணை 84 இல் அந்த தகவல் "சிறிலங்காவில் 23% பேரில் ஹப்லோரைப் R1a" இருப்பதாக குறிப்பிட்டது. கவனியுங்கள்: "சிங்களவரில் அல்ல, சிறிலங்காவில்" இதனால் தான் உங்கள் சிங்களவர் வட இந்திய உயர் குடியினரோடு தொடர்புற்றனர் எனச் சொன்ன குவோரா திரிபு என்றேன்! இது தவறானால் நீங்கள் தான் திரிபு அல்ல என்று நிரூபிக்க வேண்டும். 

அதை செய்தீர்களா? இல்லை. வழமை போல விட்ட ஒரு சிறு தவறை, "ஓ நான் சரியாகக் கவனிக்கவில்லை!" என்று திருத்திக் கொள்வதை விட்டு, இப்ப சுட்டிக் காடியவரை தனிப் பட தாக்குதலில் வந்து நிற்கிறது.  இது உங்களுக்கு ஆரோக்கியமாக இருந்தால் , உங்கள் ஈகோவை முட்டுக் கொடுக்க அவசியாமாக இருந்தால்  இது போல நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்! 

ஆனால், சரியான தகவல்களைத் தரும் உங்கள் இயலுமை, அது தவறாக இருக்கும் போது அதில் இருந்து திருத்தி முன்னகரும் உங்கள் இயலுமை, இவை இப்போது வாசிக்கும் எல்லாருக்கும் தெரியும்!

என் வேலை முடிந்தது! நலமோடிருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Justin said:

இதைப் பார்க்க கோபம் வரவில்லை, பரிதாபம் தான் வந்தது, கோவிட்டால் எல்லாரும் வேலை போய் இருக்கின்றனர் என்ற உங்கள் generalized புரிதலே உங்கள் ட்ரேட் மார்க்! அதை நீங்க தொடர்ந்து பேண வேணும்! 

நீங்கள் பரிதாபப்படுவதற்கு நீங்கள் உயர்ந்த இடதிலுமில்லை மற்றவர்கள் தழ்ந்த இடதிலுமில்லை😡

 ஒருவரை ஒருவர் சமமாக மதிக்க தெரிந்த ஒருவருக்கு இப்படியெரு எண்ணம் வராது

பானையில் இருப்பதுதான் அகைப்பையில் வரும்... எங்குசென்றாலும் எப்படி படித்தாலும் இந்த மேட்டுக்குடி புத்தி மாறாது 

  • கருத்துக்கள உறவுகள்

 

நாதர்,

ஒரு 'கருத்து' குறித்து தீர்க்கமான முடிவுக்கு வருவதில், இது தான் சரி, இது பிழை என்று முடிவெடுப்பதில் நன்மைகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 
இது தான் இது, இது தான் சரி, இது தான் பிழை என்ற முடிவுக்குள் வந்துவிட்டால் அடுத்த படியாக தெரிந்து கொள்வதற்கான தேவையோ அல்லது அதற்கான சந்தர்ப்பம் கூட இல்லாமல் செய்து விடுகிறோம். 


நாலு பேரின் நக்கல் வரிகளாலும் நையாண்டி பேச்சினாலும் தமிழ் தேசியம், தமிழரின் தொன்மை ஒருபோதும் மறையப்போவதில்லை. இதுவும் கடந்து போகும் என்ற நினைப்போடு உங்கள் சிந்தனையை செம்மையாய் வைத்திருங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Sasi_varnam said:

 

நாதர்,

ஒரு 'கருத்து' குறித்து தீர்க்கமான முடிவுக்கு வருவதில், இது தான் சரி, இது பிழை என்று முடிவெடுப்பதில் நன்மைகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 
இது தான் இது, இது தான் சரி, இது தான் பிழை என்ற முடிவுக்குள் வந்துவிட்டால் அடுத்த படியாக தெரிந்து கொள்வதற்கான தேவையோ அல்லது அதற்கான சந்தர்ப்பம் கூட இல்லாமல் செய்து விடுகிறோம். 


நாலு பேரின் நக்கல் வரிகளாலும் நையாண்டி பேச்சினாலும் தமிழ் தேசியம், தமிழரின் தொன்மை ஒருபோதும் மறையப்போவதில்லை. இதுவும் கடந்து போகும் என்ற நினைப்போடு உங்கள் சிந்தனையை செம்மையாய் வைத்திருங்கள். 

நன்றி, எனது சிந்தனை தெளிவாக  உள்ளது.

சிக்கல் வரலாறில் இல்லை. நோக்கத்தில்

மட்டம் தட்டி, ஓவ் பண்ண கிளறி எடுத்தது தான், நாயக்கர் விடயம்.

கடந்து போவோம் என்றால் சில போலிகளும் வருகின்றனர். அவர்கள் பதிவுகளை நீக்கமறுப்பவர்கள், எனது பதில் பதிவை மட்டும் நீக்குவதேனோ?

அதையுமல்லவா நீக்கவேண்டும்.

பார்ப்போம்!

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.