Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘எனக்கு எதிராக சதி நடந்தது’; சுமந்திரன், சிறிதரன் மீது மாவை குற்றச்சாட்டு; சுமந்திரன் ஆதரவாளர்கள் போர்க்கொடி: தமிழ் அரசு கட்சி கூட்டத்தில் களேபரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதி கிளை கூட்டம் பெரும் களேபரத்தின் மத்தியில் நடந்து முடிந்துள்ளது. கூட்டத்தில் மாவை சேனாதிராசாவின் ஆதரவாளர்களிற்கும், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரனின் அணியினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு, பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

காங்கேசன்துறையிலுள்ள கட்சி அலுவலகத்தில், காங்கேசன்துறை தொகுதி கிளை கூட்டம் நேற்று (27) மாலை இடம்பெற்றது.

இதில் உரையாற்றிய மாவை சேனாதிராசா பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தினார்.

கட்சிக்குள்ளேயே தனக்கு எதிராக உறுப்பினர்கள் சதி செய்தார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவித்தார்.

அத்துடன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் குழுவினர் தொடர்பாக காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். சுமந்திரன், சிறிதரன் மீது பல்வேறு கட்டத்தில் பலர் முறைப்பாடுகளை கையளித்திருந்தனர். ஆனால், கட்சி தலைவராக நான் பொறுப்புடன் செயற்பட்டேன். தேர்தல் காலத்தில் யார் மீதும் நடவடிக்கையெடுக்க முடியாது. அது கட்சியை பாதுகாக்கும். கட்சி தலைவராக எப்படி செயற்படுவதென எனக்கு தெரியும்.

இப்பொழுது சிலர், தாம் முறையிட்டும் நடவடிக்கையெடுக்கவில்லையென்கிறார்கள். ஒவ்வொருவரும் கட்சி தலைவர்கள் போல செயற்படுகிறார்கள்.

தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் சுமந்திரன் அவசரமாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி கட்சி தலைவரும், செயலாளரும் மோசமாக தோல்வியடைந்து விட்டார்கள், தலைமை மாற்றம் தேவையென கூறினார். மறுநாள் சிறிதரன் கிளிநொச்சியில் தான் கட்சி தலைமையை ஏற்க தயார் என தெரிவித்தார். இந்த இரண்டும் சாதாரண சம்பவங்கள் அல்ல. திட்டமிட்ட சம்பவங்கள்.

தேர்தலில் என்னை தோற்கடிக்க எங்கள் கட்சிக்குள்ளேயே சதி முயற்சி நடந்தது. இந்த பகுதியிலிருந்தே பலர் துணை போனார்கள்.

தேசியப்பட்டியல் விவகாரத்திலும் நடந்தது தெளிவான ஒரு சதி முயற்சியென குறிப்பிட்டார்.

அத்துடன், கட்சியின் இப்போதைய சறுக்கல் நிலைமையையும், உறுப்பினர்களின் தான் தோன்றித்தனமாக நடவடிக்கையையும் கட்டுப்படுத்தி, விரைவில் கட்சியை சீரமைப்பேன் என்றார்.

பின்னர் கட்சியின் தேர்தல் சறுக்கல் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது, வலி வடக்கில் தவிசாளர் உள்ளிட்ட 5 பேர் சுமந்திரன், சிறிதரன் தரப்புடன் இணைந்து செயற்பட்டதை பலரும் சுட்டிக்காட்டினர். (தேர்தல் காலத்திலேயே இது குறித்து செய்திகள் வெளியாகியிருந்தன)

தவிசாளர் சோ.சுகிர்தன், விஜயராஜ், தங்கராசா, ஹரிகரன், தையிட்டி மயூரன் உள்ளிட்டவர்கள் மாவை சேனாதிராசாவிற்கு எதிராக செயற்பட்டதை சுட்டிக்காட்டினார் வலி வடக்கின் பிரதி தவிசாளர். விஜயராஜ் என்பவர் தம்மிடம், “வேணுமென்றால் மாவைக்கு நீங்கள் கழுவிவிடுங்கள்“ என குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டினர்.

இதன்போது, சுமந்திரன், சிறிதரன் தரப்பு உறுப்பினர்கள் 5 பேரும் களேபரத்தில் ஈடுபட்டனர். தாம் அப்படி கட்சி தலைவருக்கு எதிராக செயற்படவில்லையென அவர்கள் குறிப்பிட்டனர். அப்படி நிரூபித்தால் தவிசாளர் பதவியை துறக்க தயாராக இருப்பதாக சவால் விட்டார்.

இரு தரப்பிற்குமிடையி் தர்க்கம் உச்சமாகி, பிரதி தவிசாளருடன் அவர்கள் கடுமையாக முரண்பட்டனர். இதன்போது, கைகலப்பு உருவாகலாமென்ற நிலைமை உருவானது.

இதன்போது தலையிட்ட மாவை சேனாதிராசா, இத்துடன் இந்த விவகாரத்தை நிறுத்தலாம். இதற்குள் அணியாக பிளடைந்து மேலும் பிரச்சனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். இந்த பிரச்சனைகள் நாளை பத்திரிகைகளில் வந்து விடும் என கூறி, கூட்டத்தை முடித்து வைத்தார்.

https://www.pagetamil.com/142663/

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

கட்சியின் இப்போதைய சறுக்கல் நிலைமையையும், உறுப்பினர்களின் தான் தோன்றித்தனமாக நடவடிக்கையையும் கட்டுப்படுத்தி, விரைவில் கட்சியை சீரமைப்பேன் என்றார்.

மாவையாரே.... 
குதிரை, லாடத்தை விட்டு ஓடிய பின்... 
லாடத்தை, பூட்டும்.. வேலையை  நீங்கள் செய்கின்றீர்கள்.. என்பது,
உங்களுக்கு.. இன்னும்,  புரியவில்லையா?

நீங்கள்... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த காலத்தில்...
இதனை... முன்பே, கணிக்க முடியாமல் போனது.. உங்கள் பாரிய தவறு.
அதனை... விடுத்து, இப்போ.... வந்து புலம்புவதில்... எந்த, அர்த்தமும் இல்லை.

ஜெனிவாவில்... நடந்த,  போர்க் குற்ற விசாரணைகளின் போது...
நீங்களும், அவர்களுடன்... "கோட்டு, சூட்டு... "  போட்டு வந்த படங்களைப்  பார்த்தேன்.
அங்கு... ஒரு குரல், கொடுக்காமல்... 
இப்போ... பாழுங்  கிணற்றில், விழுந்து  இருந்து கொண்டு,   
குரல் கொடுப்பது... ஒருவருக்கும்,  கேட்கப் போவதில்லை.

மாவையின் .. அரசியல் வாழ்வு. முடிந்து விட்டது.
இது.. மற்ற, அரசியல் வாதிகளுக்கும்... ஒரு பாடம். 💥

  • கருத்துக்கள உறவுகள்

Pagetamil செய்திதானே.. 😏

குட்டையக் கலக்கி மீன் பிடிக்கப்பார்க்கிறார்கள், வளமை போலவே. 

 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

மாவையாரே.... 
குதிரை, லாடத்தை விட்டு ஓடிய பின்... 
லாடத்தை, பூட்டும்.. வேலையை  நீங்கள் செய்கின்றீர்கள்.. என்பது,
உங்களுக்கு.. இன்னும்,  புரியவில்லையா?

நீங்கள்... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த காலத்தில்...
இதனை... முன்பே, கணிக்க முடியாமல் போனது.. உங்கள் பாரிய தவறு.
அதனை... விடுத்து, இப்போ.... வந்து புலம்புவதில்... எந்த, அர்த்தமும் இல்லை.

ஜெனிவாவில்... நடந்த,  போர்க் குற்ற விசாரணைகளின் போது...
நீங்களும், அவர்களுடன்... "கோட்டு, சூட்டு... "  போட்டு வந்த படங்களைப்  பார்த்தேன்.
அங்கு... ஒரு குரல், கொடுக்காமல்... 
இப்போ... பாழுங்  கிணற்றில், விழுந்து  இருந்து கொண்டு,   
குரல் கொடுப்பது... ஒருவருக்கும்,  கேட்கப் போவதில்லை.

மாவையின் .. அரசியல் வாழ்வு. முடிந்து விட்டது.
இது.. மற்ற, அரசியல் வாதிகளுக்கும்... ஒரு பாடம். 💥

அந்தாள் தமிழ் மொழியிலேயே பாராளுமனறத்தில பேசினதா சரித்திரமே இல்லை.

ஜெனீவா வந்து பேசு எண்டால்?

சனம் நல்ல முடிவு தான் எடுத்திருக்கு. பாராளுமன்றம் போன மலிவா சாப்பிட்டு, குறட்டை விட்டு போட்டு வராமல், அங்க  கதைக்கவேணும் எண்டதை விக்கியரும், கஜேனும் இவர்களுக்கு சொல்லி தர போகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

மாவையாரே.... 
குதிரை, லாடத்தை விட்டு ஓடிய பின்... 
லாடத்தை, பூட்டும்.. வேலையை  நீங்கள் செய்கின்றீர்கள்.. என்பது,
உங்களுக்கு.. இன்னும்,  புரியவில்லையா?

நசுக்கிடாமல் இருந்து மகனை கொண்டு வந்து செருகுவம் என்று இருந்தவருக்கு தேர்தல் முடிவுகள் தலைகரணமானதும் பிபி எகிறிப் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

Pagetamil செய்திதானே.. 😏

குட்டையக் கலக்கி மீன் பிடிக்கப்பார்க்கிறார்கள், வளமை போலவே. 

ஏன், ஐயா... Pagetamil  செய்தி என்று, இளக்கமாக சொல்கிறீர்கள் 
உண்மையில்... எனக்குப் புரியவில்லை ⁉️  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

நசுக்கிடாமல் இருந்து மகனை கொண்டு வந்து செருகுவம் என்று இருந்தவருக்கு தேர்தல் முடிவுகள் தலைகரணமானதும் பிபி எகிறிப் போச்சு.

"மூஞ்சூறு... தான் போற,  வழியை... பார்க்காமல், 
விளக்குமாத்தையும்... காவிக் கொண்டு,  போக வெளிக்கிட்டால்,"

இப்பிடி... மாவையைப் போல், உள்ளூரில் இருந்து... புலம்ப வேண்டியது தான்.  

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

ஏன், ஐயா... Pagetamil  செய்தி என்று, இளக்கமாக சொல்கிறீர்கள் 
உண்மையில்... எனக்குப் புரியவில்லை ⁉️  

Pagetamil எப்பவுமே நிதானமாக நடுநிலமையோடு நடந்துகொண்டது இல்லை. தனக்கு விரும்பியவாறு பக்கச் சார்பான விடயங்களையும், சிண்டு முடியும் வேலையையும்தான் செய்துவருகிறது. அதனால் அதன் செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே ☹️

நம்பகத்தன்மைக்கும் செய்தியை திரிவுபடுத்தாது அப்படியே தருவதற்கும் TAMIL NET மிகச் சிறந்த உதாரணம். 👍

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

Pagetamil எப்பவுமே நிதானமாக நடுநிலமையோடு நடந்துகொண்டது இல்லை. தனக்கு விரும்பியவாறு பக்கச் சார்பான விடயங்களையும், சிண்டு முடியும் வேலையையும்தான் செய்துவருகிறது. அதனால் அதன் செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே ☹️

நம்பகத்தன்மைக்கும் செய்தியை திரிவுபடுத்தாது அப்படியே தருவதற்கும் TAMIL NET மிகச் சிறந்த உதாரணம். 👍

கபிதன்...  நீங்களும், நானும்... வாசகர்  மட்டுமே...
இங்கு இணைக்கப் படும் செய்திகளுக்கு,  
அந்த செய்தி நிறுவனமே... பொறுப்புக் கூற வேண்டும்.

அதனை... விடுத்து,  வாய் புளித்ததோ.. மாங்காய் புளித்ததோ...என்று... 
நாம், இருவரும் கதைத்து... ஒரு  முடிவு எடுக்க முடியாது. :)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நசுக்கிடாமல் இருந்து மகனை கொண்டு வந்து செருகுவம் என்று இருந்தவருக்கு தேர்தல் முடிவுகள் தலைகரணமானதும் பிபி எகிறிப் போச்சு.

தங்கள் வாரிசுகளை கொண்டுவந்து,  இன்னொரு எழுபது வருங்களுக்கு தமிழ்த்தலை முறை தலை நிமிரக்கூடாது என்று சிங்கள, தமிழ்  தலைமைகள் கூடி ஆலோசனை பண்ணியிருப்பானுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, satan said:

தங்கள் வாரிசுகளை கொண்டுவந்து,  இன்னொரு எழுபது வருங்களுக்கு தமிழ்த்தலை முறை தலை நிமிரக்கூடாது என்று சிங்கள, தமிழ்  தலைமைகள் கூடி ஆலோசனை பண்ணியிருப்பானுகள்.

தான் உழைத்தா காணுமோ
பிள்ளைகளும் உழைக்கத் தானே வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்...  நீங்களும், நானும்... வாசகர்  மட்டுமே...
இங்கு இணைக்கப் படும் செய்திகளுக்கு,  
அந்த செய்தி நிறுவனமே... பொறுப்புக் கூற வேண்டும்.

அதனை... விடுத்து,  வாய் புளித்ததோ.. மாங்காய் புளித்ததோ...என்று... 
நாம், இருவரும் கதைத்து... ஒரு  முடிவு எடுக்க முடியாது. :)

இணையத்தளங்களின் நன்மதிப்பை தீர்மானம் செய்வது வாசகர்கள்தான். செய்திகளின், ஆக்கங்களின் உள்ளடக்கமே அந்த நம்பகத்தன்மையை ஏற்படுத்துவன. 

Tamil Net ஐ உதாரணத்திற்கு கூறியதற்குக் காரண்ம், உலகிலுள்ள முக்கியமான அரசுகளின் நிறுவனங்கள், புலனாய்வு அமைப்புக்கள், தூதரகங்கள் எல்லாமே இலங்கைத் தமிழரின் நிலை அறிய தினமும் பார்க்கின்ற ஒரே ஒரு தளம் இது மட்டுமே. . இதைவிட  வேறு எந்த ஒரு தளமும் இலங்கையில் இல்லை. 

சிறிய உதாரணம் மட்டுமேம் 👍

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

தான் உழைத்தா காணுமோ
பிள்ளைகளும் உழைக்கத் தானே வேணும்.

இவ்வளவு வருடங்களாக குவித்தது இவருக்கு மட்டுமா? தலையை சுத்துது.... 

மாவை ஆரம்ப காலங்களில் இளைஞர் பேரவையில் இருந்த போது தனது ஆளுமையையும்  அரசியல் அறிவையும் வளர்த்து கொள்ளாமல் உணர்ச்சி அரசியலை மட்டுமே முன்னெடுத்து காலத்தை கடத்தினார். அதனாலேயே கட்சி தலைவர் பதவி கிடைத்தும் ஆளுமையின்மையால் மற்றவர்களில் தங்கிநிற்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தார்,  என்ன தான் தமிழ் தேசியத்தில் பற்று இருந்தாலும் தனது தனிப்பட்ட திறமை, ஆற்றல், முறைசார்கல்வி ஆகியவற்றை மேற்கொண்டால் தான் தான் கொண்ட கொள்கையை கூட திறம்பட செய்யலாம், இல்லையென்றால் மற்றவர்களில் தங்கி தான் கொண்ட கொள்கையில் கூட தடுமாற்றம் ஏற்படும். அதற்கு மாவை சிறந்த உதாரணம். 

கேர்ணல் கிட்டு அவர்கள் தாயகம் புறப்பட முன்னர் சிறிது காலம் சுவிற்சர்லாந்தில் தங்கி இருந்தார். அவர் இங்குள்ள தமிழ் அமைப்புகளின் கூட்டங்கள், கருத்தரங்குகள் எல்லாவற்றிலும் இந்த கருத்தை அடிக்கடி தெரிவிப்பார். இங்குள்ள இளவயது பணியாளர்களுக்கும் இதே அறிவுரையையே கூறினார். நீங்கள் இயக்கத்திற்கு வேலை செய்வதை விட ஏதாவது ஒரு துறையில் படித்து பட்டம் பெறுங்கள். அதுவே எதிர்கால தமிழீழத்திற்கு தேவை .

ஐரோப்பவில் தான் தங்கி இருந்த காலம் இங்கு தனது ஏற்பட்ட அனுபவங்கள்  தனக்குள்  பாரிய  மாற்றத்தையும்  புதிய சிந்தனைகளையும்  உத்வேகத்தையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் போராட்ட ஆரம்ப காலத்தில் தான் சிந்தித்த முறைக்கும் தற்போது சிந்திக்கும் முறைக்கும் (தற்போது என்பது 1991/92 காலப்பகுதி) பாரிய மாற்றம் உள்ளதாகவும்  தாயகம் திரும்பும் போது  இயக்க கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை தலைவருடன் சேர்ந்து செய்ய உள்ளதாகவும் கூறி சென்றவர்.  அவர் பாதுகாப்பாக ஊர் போய் சேர்ந்திருந்தால் சில வேளை நிலைமை வேறாக இருந்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

மாவை ஆரம்ப காலங்களில் இளைஞர் பேரவையில் இருந்த போது தனது ஆளுமையையும்  அரசியல் அறிவையும் வளர்த்து கொள்ளாமல் உணர்ச்சி அரசியலை மட்டுமே முன்னெடுத்து காலத்தை கடத்தினார். அதனாலேயே கட்சி தலைவர் பதவி கிடைத்தும் ஆளுமையின்மையால் மற்றவர்களில் தங்கிநிற்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தார்,  என்ன தான் தமிழ் தேசியத்தில் பற்று இருந்தாலும் தனது தனிப்பட்ட திறமை, ஆற்றல், முறைசார்கல்வி ஆகியவற்றை மேற்கொண்டால் தான் தான் கொண்ட கொள்கையை கூட திறம்பட செய்யலாம், இல்லையென்றால் மற்றவர்களில் தங்கி தான் கொண்ட கொள்கையில் கூட தடுமாற்றம் ஏற்படும். அதற்கு மாவை சிறந்த உதாரணம். 

கேர்ணல் கிட்டு அவர்கள் தாயகம் புறப்பட முன்னர் சிறிது காலம் சுவிற்சர்லாந்தில் தங்கி இருந்தார். அவர் இங்குள்ள தமிழ் அமைப்புகளின் கூட்டங்கள், கருத்தரங்குகள் எல்லாவற்றிலும் இந்த கருத்தை அடிக்கடி தெரிவிப்பார். இங்குள்ள இளவயது பணியாளர்களுக்கும் இதே அறிவுரையையே கூறினார். நீங்கள் இயக்கத்திற்கு வேலை செய்வதை விட ஏதாவது ஒரு துறையில் படித்து பட்டம் பெறுங்கள். அதுவே எதிர்கால தமிழீழத்திற்கு தேவை .

ஐரோப்பவில் தான் தங்கி இருந்த காலம் இங்கு தனது ஏற்பட்ட அனுபவங்கள்  தனக்குள்  பாரிய  மாற்றத்தையும்  புதிய சிந்தனைகளையும்  உத்வேகத்தையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் போராட்ட ஆரம்ப காலத்தில் தான் சிந்தித்த முறைக்கும் தற்போது சிந்திக்கும் முறைக்கும் (தற்போது என்பது 1991/92 காலப்பகுதி) பாரிய மாற்றம் உள்ளதாகவும்  தாயகம் திரும்பும் போது  இயக்க கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை தலைவருடன் சேர்ந்து செய்ய உள்ளதாகவும் கூறி சென்றவர்.  அவர் பாதுகாப்பாக ஊர் போய் சேர்ந்திருந்தால் சில வேளை நிலைமை வேறாக இருந்திருக்கலாம்

நானும் இப்படி நினைப்பதுண்டு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.