Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயலுக்குள் செல்ல முயன்ற விவசாயிகளை அடித்து துரத்திய பிக்கு.!.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வயலுக்குள் செல்ல முயன்ற விவசாயிகளை அடித்து துரத்திய பிக்கு.!

pikku.png

திருகோணமலை – குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய்க் கிராமத்தில் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் ஆயிரம் ஏக்கர் காணிக்குள் செல்ல கிழக்கு தொல் பொருள் செயலணி உறுப்பினரான பிக்கு ஒருவரால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஆத்திக்காடு, நீராவிக்கண்டல், பள்ளப்பாவங்கை, பட்டாணிபாதி, பாவலங் கண்டல், கந்தப்பன் வயல் ஆகிய வயல் காணிகள் புதை பொருள் சார்ந்த இடங்கள் என்பதாகக் கூறி இந்த முறை பெரும் போகச் செய்கைக்கு மேற்படி வயல்காரர் இனி இறங்கக்கூடாது.

அப்படி இறங்கினால் அனைவரையும் சிறையில் அடைப்பேன் என்று அரிசிமலைப் பிக்கு கூட்டம் போட்டு விவசாயிகளை மிரட்டியுள்ளார். மிரட்டிய பிக்கு ஜனாதிபதியால் நிறுவப்பட்ட கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் ஆவார்.

பிக்குவின் மிரட்டலால் அச்சமடைந்த வயல் சொந்தக்காரர்கள் தமது வயல்களுக்குச் செல்லாமல் உள்ளனர்.

விவசாயிகள் வயல் செய்வதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது என்பதை வலியுறுத்தும் ஒரு சந்திப்பு திருகோணமலை அரசாங்க அதிபர் அசங்க அபயவர்த்தனவுக்கும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அவரது செயலாளர் க.ச.குகதாசன் ஆகியோருக்கும் இடையே நேற்று நடைபெற்றது.

எதிர்வரும் புதன்கிழமை குச்சவெளிப் பிரதேச செயலாளர் பணிமனையில் அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டம் நடத்துவதாகவும் அதில் இச்சிக்கலுக்குத் தீர்வு காணப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

இதில் தீர்வுகாண முடியாது போனால் நீதிமன்றம் செல்வதற்கான ஆயத்தங்கள் சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சந்திப்பின் போது க.ச.குகதாசன் கூறினார்

https://vanakkamlondon.com/world/srilanka/2020/09/82880/

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலேயே.... ஶ்ரீலங்காவில் தான், கேடு கெட்ட “ரவுடி பிக்குகள்” இருக்கிறார்கள் என நினைகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

உலகத்திலேயே.... ஶ்ரீலங்காவில் தான், கேடு கெட்ட “ரவுடி பிக்குகள்” இருக்கிறார்கள் என நினைகின்றேன். 

கெடுகெட்ட தேசம், இலங்கைக்கு அழிவுதான் இவர்களால்😡

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விவசாயிகள் வயல் செய்வதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது என்பதை வலியுறுத்தும் ஒரு சந்திப்பு திருகோணமலை அரசாங்க அதிபர் அசங்க அபயவர்த்தனவுக்கும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அவரது செயலாளர் க.ச.குகதாசன் ஆகியோருக்கும் இடையே நேற்று நடைபெற்றது.

அங்கை சனம்  அவலத்துக்குள் கிடக்குது இங்கு இவர்கள் குச்சு பிடி நடனம் ஆடுகினம் அரை பிணத்தை ஆடசிக்கு கொண்டுவந்தவர்களின் தலையெழுத்து பிழை .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அங்கை சனம்  அவலத்துக்குள் கிடக்குது இங்கு இவர்கள் குச்சு பிடி நடனம் ஆடுகினம் அரை பிணத்தை ஆடசிக்கு கொண்டுவந்தவர்களின் தலையெழுத்து பிழை .

பிணம் புணரும் படையுடையான்! அரைப் பிணம் ஆனால் என்ன, முழுப்பிணம் ஆனால் என்ன...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

உலகத்திலேயே.... ஶ்ரீலங்காவில் தான், கேடு கெட்ட “ரவுடி பிக்குகள்” இருக்கிறார்கள் என நினைகின்றேன். 

என்ன சிறித்தம்பி விசயம் தெரியாமல் கதைக்கிறியள்.
சிறிலங்காவிலை ரவுடிகள் தான் பிக்குகளாய் இருக்கினம் எண்டு  தெரியாதோ..😂

  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாறு அணை தடுக்கப்பட்ட போது.. இவங்கள் தான் உடனடியாக போரைத் தொடங்கு என்று முழங்கினது. புலிகள் இறுதிவரை.. தமது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.. மாறாக யுத்தத்தை எதிர்கொண்டார்கள்.. காரணம்.. இந்த மொட்டைகளின் வெருட்டுக்கு பயந்து ஓடினால்.... துரத்தி துரத்தி குட்டுவாங்கள் என்பது புலிகள் அறிந்ததே. என்ன தமிழர்கள் இன்னும் அதனை புரிந்து கொள்ளவில்லை முழுமையாக. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

உலகத்திலேயே.... ஶ்ரீலங்காவில் தான், கேடு கெட்ட “ரவுடி பிக்குகள்” இருக்கிறார்கள் என நினைகின்றேன். 

merlin_70519846_50675e65-929f-4a9c-9253-2289782bf445-articleLarge.jpg?quality=75&auto=webp&disable=upscale

 

இல்லை, இன்னொரு நாட்டிலும் இருக்கிறார்கள். பர்மிய நாட்டின் அதிதீவிர பெளத்த மதகுருவான அஷின் விராடு என்னும் பிக்கு ரொஹிங்கியா முஸ்லீம்களைக் கொல்லவேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்து வருபவன். பர்மிய ராணுவத்தின் பல அதிகாரிகளாஇ தனது நண்பர்களாகக் கொண்ட இவன் ரொஹிங்கியா முஸ்லீம்களின் படுகொலைகளுடனும், சொத்தழிப்புக்களுடனும் நேரடித் தொடர்புடையவன். இலங்கையின் சிங்கள பிக்குகளின் செயற்பாடுகளை தனது முன்மாதிரியாகக் கொண்டு இவன் செயற்படுகிறான். 

Mahindavādaya, Mahinda-Vadaya And Wirathu-Āgamanaya - Colombo Telegraph

 

ஞனசார மற்றும் விராட்டு - கொலைகார பெளத்த துறவிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.