Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆற்றல் மிகு தமிழ்த் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் வாழ்வும் காலமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு கற்பனை வளம்? கிறிஸ்ரோபர் நோலன் இதைப் பார்த்தால், வெள்ளை வானில் வந்து பெருமாளைக் கடத்திக் கொண்டு போய் வைத்தே தன் மிச்சப் படங்களை எடுத்து விடுவார்! 

  • Replies 119
  • Views 9.7k
  • Created
  • Last Reply
On 9/9/2020 at 00:00, பெருமாள் said:

1981ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் பழித்துரைத்து பேசினார். அமிர்தலிங்கம் மரியாதையை பேணிய வண்ணமே அவருடன் முரண்பட்டு எம்.ஜி.ஆரின் பெரும்பாலான வாதங்களை மறுதலித்தார்.

 

On 9/9/2020 at 14:51, பெருமாள் said:

நல்லத்தான் ஜெயராஜ் ஜிங்சாக் அடிக்கிறார் . 

நாங்க கேள்விப்பட்ட கதையே வேறு  இங்கு தலைகீழா மாற்றி எழுதுகிறார் .

நீங்கள் என்ன கேள்வி பட்டீர்களோ தெரியாது. ஆனால் நடந்த சில விடயங்கள் தெரியும். 1981 தமிழாராய்ச்சி மகாநாட்டில் எம்.ஜி.ஆர் மேடையில் இருக்கும் போது மகாநாட்டில் உரையாற்ற இலங்கை கம்பன் கழக தலைவர் ஜெயராஜ்க்கு வாய்ப்பு கிடைத்தது.  அப்போது இளைஞராக இருந்த ஜெயராஜ் உரையாற்றும் போது ஈழப்பிரச்சனையில் தமிழக அரசாங்கம் பாராமுகமாக இருப்பதான குற்றச்சாட்டுகளை அடுக்க அது எம். ஜி.ஆரின் கோபத்தை கிளறிவிட்டது. அடுத்து பேசிய எம்.ஜி.ஆர் ஈழ தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களா? அவர்களில் எத்ததனை ஜாதி பிரச்சனை உள்ளது. மலயக தமிழரை ஈழத்தமிழர் மதிப்பதில்லையே போன்ற சில குற்றச்சாட்டுகளை அடுக்க அதை இலங்கையில் உள்ள அன்று ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் ஏடான தினபதி ஊதி பெருப்பித்து  தமது புனைவுகளுடன் ஈழத்திமிழர்கள் மீது எம்.ஜி.ஆர் சாடல் என்று செய்தி வெளியிட்டது. 

 இந்த செய்திகளால் அன்று வண்ணை ஆனந்தன் தலைமையில் எம்.ஜி.ஆரின் கொடும்பாவிகளை எரிக்கும் பரவலான சம்பவங்கள் இடம் பெற்றது. அன்று தமிழக பத்திரிகைகளிலும் சிறிய அளவில் இந்த செய்திகள் வெளிவர தொடகியது. வண்ணை ஆனந்தன் ஆனந்தன் தலைமையில் இளைஞர்கள் எம். ஜி. ஆருக்கு எதிராக கொம்பு சீவப்பட அது பெரியளவு போராட்டமாக வெடிக்க முதல் தமிழகத்தில் இருந்து திரும்பிய அமிர்தலிங்கம் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் உரையில் ஈழத்தமிழர்களை பற்றி தவறாக பேசவில்லை என்று அறிக்கைவிட அது வீரகேசரி பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வெளிவந்த‍பின்னர. எம்.ஜி.ஆருக்கு எதிரான கொடும்பாவி போராட்டங்கள் அனைத்தும் அடங்கி போயின. எம்.ஜி.ஆருக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் ஏற்படவிருந்த பாரிய முரண்பாடு தவிர்க்கப்ட்டது. அமிர் எம்.ஜி. ஆருடன் வாதாடினார் என்பதெல்லாம் டி.பி.எஸ் இன் கற்பனை என்று நினைக்கிறேன். 

இந்த செய்தியை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் அன்று தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த தமிழ் தேசியவாதி வண்ணை ஆனந்தன் அறிவு பூர்வமாக செயற்படாமல் உணர்வு பூர்வமான செயற்பட்டு அன்று தமிழக முதல்வராக பாரிய செல்வாக்குடன் இருந்த எம்.ஜி. ஆரை தமிழர் போராட்டத்திற்கு எதிராக திருப்ப இருந்த சம்பவம் தவிர்கபட்டது. பின்னர் தலைவர் பிரபாகரனை முழுமையாக எம்.ஜி. ஆர் ஆதரித்து பாரியளவில் பண உதவியும் செய்தார் என்று புலிகளாலேயே பாராட்டபட்டது. இந்திய உள்ளூர் கட்சி அரசியலுக்குள்  தலையிடாமல் விலகி  நடுநிலை காப்பது எதிர்காலத்தில் எமக்கு சாதகமாக அமையும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.  

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, tulpen said:

 

நீங்கள் என்ன கேள்வி பட்டீர்களோ தெரியாது. ஆனால் நடந்த சில விடயங்கள் தெரியும். 1981 தமிழாராய்ச்சி மகாநாட்டில் எம்.ஜி.ஆர் மேடையில் இருக்கும் போது மகாநாட்டில் உரையாற்ற இலங்கை கம்பன் கழக தலைவர் ஜெயராஜ்க்கு வாய்ப்பு கிடைத்தது.  அப்போது இளைஞராக இருந்த ஜெயராஜ் உரையாற்றும் போது ஈழப்பிரச்சனையில் தமிழக அரசாங்கம் பாராமுகமாக இருப்பதான குற்றச்சாட்டுகளை அடுக்க அது எம். ஜி.ஆரின் கோபத்தை கிளறிவிட்டது. அடுத்து பேசிய எம்.ஜி.ஆர் ஈழ தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களா? அவர்களில் எத்ததனை ஜாதி பிரச்சனை உள்ளது. மலயக தமிழரை ஈழத்தமிழர் மதிப்பதில்லையே போன்ற சில குற்றச்சாட்டுகளை அடுக்க அதை இலங்கையில் உள்ள அன்று ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் ஏடான தினபதி ஊதி பெருப்பித்து  தமது புனைவுகளுடன் ஈழத்திமிழர்கள் மீது எம்.ஜி.ஆர் சாடல் என்று செய்தி வெளியிட்டது. 

 இந்த செய்திகளால் அன்று வண்ணை ஆனந்தன் தலைமையில் எம்.ஜி.ஆரின் கொடும்பாவிகளை எரிக்கும் பரவலான சம்பவங்கள் இடம் பெற்றது. அன்று தமிழக பத்திரிகைகளிலும் சிறிய அளவில் இந்த செய்திகள் வெளிவர தொடகியது. வண்ணை ஆனந்தன் ஆனந்தன் தலைமையில் இளைஞர்கள் எம். ஜி. ஆருக்கு எதிராக கொம்பு சீவப்பட அது பெரியளவு போராட்டமாக வெடிக்க முதல் தமிழகத்தில் இருந்து திரும்பிய அமிர்தலிங்கம் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் உரையில் ஈழத்தமிழர்களை பற்றி தவறாக பேசவில்லை என்று அறிக்கைவிட அது வீரகேசரி பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வெளிவந்த‍பின்னர. எம்.ஜி.ஆருக்கு எதிரான கொடும்பாவி போராட்டங்கள் அனைத்தும் அடங்கி போயின. எம்.ஜி.ஆருக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் ஏற்படவிருந்த பாரிய முரண்பாடு தவிர்க்கப்ட்டது. அமிர் எம்.ஜி. ஆருடன் வாதாடினார் என்பதெல்லாம் டி.பி.எஸ் இன் கற்பனை என்று நினைக்கிறேன். 

இந்த செய்தியை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் அன்று தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த தமிழ் தேசியவாதி வண்ணை ஆனந்தன் அறிவு பூர்வமாக செயற்படாமல் உணர்வு பூர்வமான செயற்பட்டு அன்று தமிழக முதல்வராக பாரிய செல்வாக்குடன் இருந்த எம்.ஜி. ஆரை தமிழர் போராட்டத்திற்கு எதிராக திருப்ப இருந்த சம்பவம் தவிர்கபட்டது. பின்னர் தலைவர் பிரபாகரனை முழுமையாக எம்.ஜி. ஆர் ஆதரித்து பாரியளவில் பண உதவியும் செய்தார் என்று புலிகளாலேயே பாராட்டபட்டது. இந்திய உள்ளூர் கட்சி அரசியலுக்குள்  தலையிடாமல் விலகி  நடுநிலை காப்பது எதிர்காலத்தில் எமக்கு சாதகமாக அமையும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.  

காலத்திற்கேற்ற தகவல்! வரலாறு மீள நடக்காமல் இருக்கவே பேச்சு வாங்கி கொண்டாவது எழுத வேண்டியிருக்கிறது! 

15 minutes ago, Justin said:

காலத்திற்கேற்ற தகவல்! வரலாறு மீள நடக்காமல் இருக்கவே பேச்சு வாங்கி கொண்டாவது எழுத வேண்டியிருக்கிறது! 

உண்மை. ஆனால் அன்றைய தீவிர தமிழ் தேசியவாதி வண்ணை ஆனந்தனின் அறியாமையை விட மோசமான நிலையில் இன்றய தமிழ் தேசியம் பேசுபவர்கள் இன்று உள்ளார்கள்.  இலங்கையை முழு சிங்கள நாடு ஆக்கிவிட்டு தான் இவர்கள் ஓய்வெடுப்பார்கள்.  இவர்களிடம் திட்டு வாங்கி எனக்கு என்ன ஆகப்போகிறது. நான் ஜாலியா ரசிப்பேன். நல்லா திட்டி விட்டு திட்டியவர்களே  Pressure  Tablet  எடுக்கட்டும். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

 

நீங்கள் என்ன கேள்வி பட்டீர்களோ தெரியாது. ஆனால் நடந்த சில விடயங்கள் தெரியும். 1981 தமிழாராய்ச்சி மகாநாட்டில் எம்.ஜி.ஆர் மேடையில் இருக்கும் போது மகாநாட்டில் உரையாற்ற இலங்கை கம்பன் கழக தலைவர் ஜெயராஜ்க்கு வாய்ப்பு கிடைத்தது.  அப்போது இளைஞராக இருந்த ஜெயராஜ் உரையாற்றும் போது ஈழப்பிரச்சனையில் தமிழக அரசாங்கம் பாராமுகமாக இருப்பதான குற்றச்சாட்டுகளை அடுக்க அது எம். ஜி.ஆரின் கோபத்தை கிளறிவிட்டது. அடுத்து பேசிய எம்.ஜி.ஆர் ஈழ தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களா? அவர்களில் எத்ததனை ஜாதி பிரச்சனை உள்ளது. மலயக தமிழரை ஈழத்தமிழர் மதிப்பதில்லையே போன்ற சில குற்றச்சாட்டுகளை அடுக்க அதை இலங்கையில் உள்ள அன்று ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் ஏடான தினபதி ஊதி பெருப்பித்து  தமது புனைவுகளுடன் ஈழத்திமிழர்கள் மீது எம்.ஜி.ஆர் சாடல் என்று செய்தி வெளியிட்டது. 

 இந்த செய்திகளால் அன்று வண்ணை ஆனந்தன் தலைமையில் எம்.ஜி.ஆரின் கொடும்பாவிகளை எரிக்கும் பரவலான சம்பவங்கள் இடம் பெற்றது. அன்று தமிழக பத்திரிகைகளிலும் சிறிய அளவில் இந்த செய்திகள் வெளிவர தொடகியது. வண்ணை ஆனந்தன் ஆனந்தன் தலைமையில் இளைஞர்கள் எம். ஜி. ஆருக்கு எதிராக கொம்பு சீவப்பட அது பெரியளவு போராட்டமாக வெடிக்க முதல் தமிழகத்தில் இருந்து திரும்பிய அமிர்தலிங்கம் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் உரையில் ஈழத்தமிழர்களை பற்றி தவறாக பேசவில்லை என்று அறிக்கைவிட அது வீரகேசரி பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வெளிவந்த‍பின்னர. எம்.ஜி.ஆருக்கு எதிரான கொடும்பாவி போராட்டங்கள் அனைத்தும் அடங்கி போயின. எம்.ஜி.ஆருக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் ஏற்படவிருந்த பாரிய முரண்பாடு தவிர்க்கப்ட்டது. அமிர் எம்.ஜி. ஆருடன் வாதாடினார் என்பதெல்லாம் டி.பி.எஸ் இன் கற்பனை என்று நினைக்கிறேன். 

இந்த செய்தியை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் அன்று தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த தமிழ் தேசியவாதி வண்ணை ஆனந்தன் அறிவு பூர்வமாக செயற்படாமல் உணர்வு பூர்வமான செயற்பட்டு அன்று தமிழக முதல்வராக பாரிய செல்வாக்குடன் இருந்த எம்.ஜி. ஆரை தமிழர் போராட்டத்திற்கு எதிராக திருப்ப இருந்த சம்பவம் தவிர்கபட்டது. பின்னர் தலைவர் பிரபாகரனை முழுமையாக எம்.ஜி. ஆர் ஆதரித்து பாரியளவில் பண உதவியும் செய்தார் என்று புலிகளாலேயே பாராட்டபட்டது. இந்திய உள்ளூர் கட்சி அரசியலுக்குள்  தலையிடாமல் விலகி  நடுநிலை காப்பது எதிர்காலத்தில் எமக்கு சாதகமாக அமையும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.  

ஜெயராஜ் பேசினார் என்பது க்றித்து உறுதிப்படுத்த முடியுமா ? 

அவர் மிக மிக இளவௌஅதுக்குரியவர், அத்தருணத்தில், என்பது என் நினைவு. 

7 minutes ago, Kapithan said:

ஜெயராஜ் பேசினார் என்பது க்றித்து உறுதிப்படுத்த முடியுமா ? 

அவர் மிக மிக இளவௌஅதுக்குரியவர், அத்தருணத்தில், என்பது என் நினைவு. 

1981 ம் ஆண்டு அவர் இளவயதினர் தான். ஆனால் அதற்கு முன்பே மிக வாணி விழாக்களில் பட்டிமன்றங்களை நடத்தும் சிறந்த தமிழ் இலக்கிய ஆர்வலராக இருந்த அவர்  இலங்கை கம்பன் கழகத்தை ஸ்தாபித்து கம்பன் விழாவை விமர்சையாக நல்லை ஆதீனத்தில் நடத்தியவர்.  அவர் மதுரை மகாநாட்டில்  பேசினார் என்பதை என்னால்  100 வீதம் உறுதியாக கூற முடியும். 1981 ம் ஆண்டு பத்திரிகை செய்திகள் இருந்தால் என்னால் உறுதிப்படுத்தலாம். இல்லை என்றால் ஜெயராஜ் இலங்கையில் தான் இருக்கிறார் அவரிடம் கேட்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

ஜெயராஜ் பேசினார் என்பது க்றித்து உறுதிப்படுத்த முடியுமா ? 

அவர் மிக மிக இளவௌஅதுக்குரியவர், அத்தருணத்தில், என்பது என் நினைவு.

15-16 வயதில அந்தப் பெரிய மேடையில் பேசியிருப்பார்.?

4 minutes ago, ஈழப்பிரியன் said:

15-16 வயதில அந்தப் பெரிய மேடையில் பேசியிருப்பார்.?

அவருக்கு அப்போது 15-16 வயது என்று எப்படி சொல்கின்றீர்கள் ஈழப்பிரியன்? 

  • கருத்துக்கள உறவுகள்

24 அக்டோபர் 1957(அகவை 62)
செட்டிக்குளம், இலங்கை

மன்னிக்கவும் இலக்கு கொஞ்சம் பிழைத்துவிட்டது.
அதனாலேயே கேள்விக்குறியும் போட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயராஜ் கம்பன் கழகம் ஆரம்பித்த 1981 இல் அவருக்கு 24 வயது. ஜெயராஜின் சீடப்பிள்ளையான என் பேராதனைப் பல்கலை நண்பன் சிறீ பிரசாந்தன் (இப்போது ஜெயவர்தனபுர பேராசிரியர்) கம்பன் கழக மேடைகளில் பேச ஆரம்பித்த போது அவனுக்கு வயது 18. இருவரது நாவன்மையும் தமிழறிவும் தெரிந்தோருக்கு இவையெல்லாம் நம்பக் கடினமான விடயங்கள் அல்ல! 

நூலகம் இணையத்தில் அந்த தமிழாராய்ச்சி மாநாட்டு இதழ் இருக்கிறதா என்று தேடிப் பாருங்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்

3 முக்கிய போராளிகளை பலிகொடுத்து இந்த ஹிந்திய கூலியை படுகொலை செய்ய வேண்டிய தேவை இருந்திருக்க வாய்ப்புக்குறைவு.

சிங்களமே போராளிகளையும் போட்டு.. ஹிந்தியக் கூலிகளாக விருந்த.. இவர்களையும் போட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.

எதுஎப்படியோ.. அமிர்தலிங்கம் வகையறாக்கள்.. இருந்திருந்தால்.. தமிழ் மக்கள் பல முள்ளிவாய்க்கால்களை சந்திக்க நேரிட்டிருக்கும். ஏனெனில்.. ஹிந்திய வல்லாதிக்க இராணுவத்தின் தமிழினப் படுகொலைகளையே நியாயப்படுத்தியவர்கள் தான் இவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நெடுக்ஸ் ஒரு விசயத்தை மறந்திட்டு பேசுறீங்கள் என்று நினைக்கிறேன். அதிலை சிவசிதம்பரம் காயத்துடன் தப்பினார்.

ஒண்டண்ணே சும்மா கற்பனை எகிறுது இத்தனை வருசத்துக்கு பிறகும்.

 

https://www.thaarakam.com/news/141840

நேரமிருந்தால் படியுங்கள் பேசுவோம்.

 

Edited by முதல்வன்

7 minutes ago, முதல்வன் said:

அண்ணே நெடுக்ஸ் ஒரு விசயத்தை மறந்திட்டு பேசுறீங்கள் என்று நினைக்கிறேன். அதிலை சிவசிதம்பரம் காயத்துடன் தப்பினார்.

 

https://www.thaarakam.com/news/141840

நேரமிருந்தால் படியுங்கள் பேசுவோம்.

நன்றி முதல்வன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2020 at 21:24, Justin said:

என்ன ஒரு கற்பனை வளம்? கிறிஸ்ரோபர் நோலன் இதைப் பார்த்தால், வெள்ளை வானில் வந்து பெருமாளைக் கடத்திக் கொண்டு போய் வைத்தே தன் மிச்சப் படங்களை எடுத்து விடுவார்! 

இதைவிட கேவலமாய் நோலனை யாரும் விமரிசித்தது கிடையாது உங்கள் எண்ணமும் மனதும் சராசரி மணித சிந்தனையை ஒட்டியது அவரின் படைப்புக்கள் கூடுதலானவை மனித  சிந்தனையின் கால மயக்கம் எதோ ஒரு வகையில் வந்து நிக்கும் மற்றயவர்கள் அந்த தியரியை தூக்க யோசிக்கும் விடயம் .

இன்று பொய்யானவை நாளை உண்மையாகலாம்  இன்று உண்மை என்று நம்பிக்கொண்டு இருப்பது நாளை இல்லாமல் போகலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

இதைவிட கேவலமாய் நோலனை யாரும் விமரிசித்தது கிடையாது உங்கள் எண்ணமும் மனதும் சராசரி மணித சிந்தனையை ஒட்டியது அவரின் படைப்புக்கள் கூடுதலானவை மனித  சிந்தனையின் கால மயக்கம் எதோ ஒரு வகையில் வந்து நிக்கும் மற்றயவர்கள் அந்த தியரியை தூக்க யோசிக்கும் விடயம் .

இன்று பொய்யானவை நாளை உண்மையாகலாம்  இன்று உண்மை என்று நம்பிக்கொண்டு இருப்பது நாளை இல்லாமல் போகலாம் .

சராசரி மனித சிந்தனை உடையவர்கள் தான் பெரும்பாலான மனிதர்கள்! அதனால் தான் உங்களுடைய அடிப்படையே இல்லாத கற்பனையைப் பார்த்து பலருக்கு அதிர்ச்சியும் சிலருக்கு சிரிப்பும் வந்தது! 

இது வரை இருக்கும் எல்லோருக்கும் கிடைக்கும் படி இருக்கும் தகவல்களின் படி அமிரைக் கொலை செய்தது யார், தலதா மாளிகையைத் தாக்கியது யார்? இது சராசரி மனித யோசனை. 

இன்னுமொரு நூறு வருடத்தில் இந்த யோசனையை மாற்றும் வேலை தான் உங்கள் போன்றவர்களின் கற்பனைப் பதிவுகள்! ஏற்கனவே "ராஜீவைக் கொன்றது புலிகள் அல்ல என்று நிரூபணமாகி விட்டதாக" ஒரு கள உறுப்பினர் எழுதினார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nedukkalapoovan said:

3 முக்கிய போராளிகளை பலிகொடுத்து இந்த ஹிந்திய கூலியை படுகொலை செய்ய வேண்டிய தேவை இருந்திருக்க வாய்ப்புக்குறைவு.

சிங்களமே போராளிகளையும் போட்டு.. ஹிந்தியக் கூலிகளாக விருந்த.. இவர்களையும் போட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.

வேறுவிதமாக யோசிக்க முடியவில்லை நம்மவர்களால்  இதை சொல்லத்தான் பல குழப்பம் இந்த விடயத்தை விட்டு தாண்டி போவது இப்போதைக்கு நல்லது .

4 minutes ago, Justin said:

சிலருக்கு சிரிப்பும் வந்தது! 

பயித்தியம்களும்  அப்படி செய்வதுண்டு 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

வேறுவிதமாக யோசிக்க முடியவில்லை நம்மவர்களால்  இதை சொல்லத்தான் பல குழப்பம் இந்த விடயத்தை விட்டு தாண்டி போவது இப்போதைக்கு நல்லது .

மன்னிக்க வேண்டும் பெருமாள்! இதை நீங்கள் தான்டிப் போகத் தான் வேண்டும்! காரணம் மற்றவர்களுக்கு வேறு விதமாக யோசிக்க இயலாமை அல்ல! உங்களுக்கு குதிரைக்குப் பின்னால் தான் வண்டிலைப் பூட்ட வேண்டுமென்ற புரிதல் இல்லாமை தான் காரணம்! எனவே கற்பனைகளை விட்டு விடுங்கள் அல்லது வேறு பயனுள்ள வழியில் பயன் படுத்துங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

சராசரி மனித சிந்தனை உடையவர்கள் தான் பெரும்பாலான மனிதர்கள்! அதனால் தான் உங்களுடைய அடிப்படையே இல்லாத கற்பனையைப் பார்த்து பலருக்கு அதிர்ச்சியும்

உங்களுக்கு அதிர்ச்சி ஆக இருக்கலாம் ஏனென்றால் வைத்தியர் என்றால் ஐன்ஸ்டினுக்கு நிகரான அறிவு உள்ளதென்று நம்மவர்கள் நினைப்பது உண்டு அதுவே காலப்போக்கில் அவர்களும்  நினைப்பது வீட்டுக்கு மாத்திரம் அல்ல இனத்துக்கும் கேடு என்று விளங்கி கொள்ள முடிகிறது .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

வேறுவிதமாக யோசிக்க முடியவில்லை நம்மவர்களால்  இதை சொல்லத்தான் பல குழப்பம் இந்த விடயத்தை விட்டு தாண்டி போவது இப்போதைக்கு நல்லது .

பயித்தியம்களும்  அப்படி செய்வதுண்டு 

சும்மா சிரிப்பது பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம்! பகிடிக்குச் சிரிப்பது சாதாரண இயல்பல்லவா? 

இரு தசாப்தங்களாக எவருக்குமே தெரியாத ஒரு "தோற்றம்" ஒருவருக்கு மட்டுமே தெரிவதை நீங்க எப்படி அழைக்கிறீர்கள்? ☺️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

சும்மா சிரிப்பது பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம்! பகிடிக்குச் சிரிப்பது சாதாரண இயல்பல்லவா? 

இரு தசாப்தங்களாக எவருக்குமே தெரியாத ஒரு "தோற்றம்" ஒருவருக்கு மட்டுமே தெரிவதை நீங்க எப்படி அழைக்கிறீர்கள்? 

உங்கள் நேரத்தை வீணாக்க விரும்ப வில்லை என் கருத்துக்கள் இன்று பிழையானவையாக இருக்கட்டும் காலம் உண்மையாக்கும்  இத்துடன் டொட் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு அதிர்ச்சி ஆக இருக்கலாம் ஏனென்றால் வைத்தியர் என்றால் ஐன்ஸ்டினுக்கு நிகரான அறிவு உள்ளதென்று நம்மவர்கள் நினைப்பது உண்டு அதுவே காலப்போக்கில் அவர்களும்  நினைப்பது வீட்டுக்கு மாத்திரம் அல்ல இனத்துக்கும் கேடு என்று விளங்கி கொள்ள முடிகிறது .

இனத்திற்காக மூளையைக் கழட்டி வைத்து விட்டு கருத்தெழுத இயலாது! (எந்த வைத்தியரை ஐன்ஸ்ரினுடன் ஒப்பிடுகிறீர்கள்?, அப்படி யாரும் இங்கேயும் இல்லை, உலகிலும் இல்லை!)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

அண்ணே நெடுக்ஸ் ஒரு விசயத்தை மறந்திட்டு பேசுறீங்கள் என்று நினைக்கிறேன். அதிலை சிவசிதம்பரம் காயத்துடன் தப்பினார்.

ஒண்டண்ணே சும்மா கற்பனை எகிறுது இத்தனை வருசத்துக்கு பிறகும்.

https://www.thaarakam.com/news/141840

நேரமிருந்தால் படியுங்கள் பேசுவோம்.

 

டி பி எஸ் ஜெயராஜ் மாதிரி ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக எழுதுவாங்கள். அவனவன் தனக்கு எது ஆதாயம் தேவை என்பதைப் பொறுத்து எழுத்தின் போக்கை திசையை மாற்றுவான்.  இதை எல்லாம் மிணக்கட்டு வாசிக்கிறது வீண் வேலை.

நீங்க சொன்ன சிவசிதம்பரம்.. கடைசிக் காலத்தில்.. சுடலை ஞானம் பிறந்து புலிகளையும் புலிகளின் பாதையையும் நியாயப்படுத்தியதை மறக்கக் கூடாது. இறுதியில் அவருக்கு வன்னியில் புகழ் மரியாதையும் செலுத்தப்பட்டது. 

பிரேமதாச செய்த சதிச் செயல்கள் உட்பட எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால்.. போராளிகள் சிக்கவைக்கப்பட்டு.. பழி புலிகள் மீது திட்டமிட்டுப் போடப்பட்டிருக்கலாம். 

இதேதான் அமைச்சர் மகேஸ்வரன் விடயத்திலும் நடந்தது. இன்று வரை அதை யார் செய்தார் என்பது கேள்விக்குறி...??!

ஆனால் அமிர்தலிங்கம் படுகொலையில் மட்டும் புலிகள் மீது பழிசுமத்தப்பட்ட வேகம் சந்தேகத்தை இன்னும் வலுவடையச் செய்துள்ளது.

அதே காலப் பகுதியில் பல தமிழர்கள்.. கொழும்பு பிரபல்ய வர்த்தகர்கள் உட்பட பலர் தென்னிலங்கையில் கொல்லப்பட்டமை.. என்று பல விடயங்கள் நடந்தேறின. பலிபாவம்.. புலிகள் மீதும் ஜே வி பி மீதும் போடப்பட்டது. ஆனால் பல படுகொலைகளை நடத்தியது சிங்கள அரச கூலிகள். 

குமார் பொன்னம்பலம் படுகொலையின் மர்மம் கூட இன்னும் முடிவாகவில்லை. இப்படி எத்தனையோ..

புலிகள் நேரடியாக தலையிட்டு செய்த படுகொலைகளை விட புலிகளின் பெயரால் மற்றவர்கள் உளவு அமைப்புக்கள் அரச கூலிகள் செய்த படுகொலைகளே அதிகம். அதை பற்றி யாரும் எழுதுவதில்லை. ஏனெனில்.. அவை பேசப்படுவது சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு ஆபத்தில் முடியும்.. ஆதாயத்தில் முடியாது. 

அப்படி இருக்க.. இந்த டி பி எஸ் எதுக்கு அமிர்தலிங்கத்தின் படுகொலையில் தான் ஏதோ நேரடிச் சாட்சியம் போல் புலிகள் மீது குற்றம் சுமத்துகிறார். கனடாவில் பதுங்கி இருந்து கொண்டு எழுதினால்.. கேட்பார் யாருமில்லை என்ற துணிவாக இருக்கக் கூடும். அதற்காக.. இதுகளை நம்ப வேண்டும் என்ற அவசியம் மக்களுக்கு இல்லை.

எதுஎப்படியோ.. அமிர்தலிங்கம்.. தமிழ் மக்களுக்கு ஒன்றும் வெட்டிப்புடுங்கவில்லை. என்ன இன்னொரு கதிர்காமரோ.. சுமந்திரனோ.. சம்பந்தனோ.. வரிசையில் வந்திருப்பதை அமிர்தலிங்கத்தின் சாவு தவிர்த்திருக்கிறது... அது தமிழ் மக்களுக்கு ஆறுதலே. 

Edited by nedukkalapoovan

நெடுக்கு உங்கள் தனிப்பட்ட வாழ்வில் கூட இப்படி தொடர்ந்து பொய்களை கூற வேண்டிய அவசியம் உங்களுக்கு வந்திருக்காது. தேவையிலாமல் அரசியல் விசுவாசம் வைக்க போய்  மூட்டைக்கணக்கா தொடர்ந்து பொய்களை சொல்ல வேண்டிய பரிதாப நிலை உங்களுக்கு. உங்களுக்கு லைக் போடுவரின் மனச்சாட்சி கூட உங்களை பொய்களை நம்பாது. 

முதல்வன் இணைத்த இணைப்பு  எரிமைலையில் வந்த கட்டுரை. அது டிபிஎஸ் ஜெயராஜ் எழுதவில்லை என்பது உங்களுக்கு தெரியும். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, nedukkalapoovan said:

குமார் பொன்னம்பலம் படுகொலையின் மர்மம் கூட இன்னும் முடிவாகவில்லை. இப்படி எத்தனையோ..

புலிகள் நேரடியாக தலையிட்டு செய்த படுகொலைகளை விட புலிகளின் பெயரால் மற்றவர்கள் உளவு அமைப்புக்கள் அரச கூலிகள் செய்த படுகொலைகளே அதிகம். அதை பற்றி யாரும் எழுதுவதில்லை. ஏனெனில்.. அவை பேசப்படுவது சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு ஆபத்தில் முடியும்.. ஆதாயத்தில் முடியாது. 

அப்படி இருக்க.. இந்த டி பி எஸ் எதுக்கு அமிர்தலிங்கத்தின் படுகொலையில் தான் ஏதோ நேரடிச் சாட்சியம் போல் புலிகள் மீது குற்றம் சுமத்துகிறார். கனடாவில் பதுங்கி இருந்து கொண்டு எழுதினால்.. கேட்பார் யாருமில்லை என்ற துணிவாக இருக்கக் கூடும். அதற்காக.. இதுகளை நம்ப வேண்டும் என்ற அவசியம் மக்களுக்கு இல்லை.

எதுஎப்படியோ.. அமிர்தலிங்கம்.. தமிழ் மக்களுக்கு ஒன்றும் வெட்டிப்புடுங்கவில்லை. என்ன இன்னொரு கதிர்காமரோ.. சுமந்திரனோ.. சம்பந்தனோ.. வரிசையில் வந்திருப்பதை அமிர்தலிங்கத்தின் சாவு தவிர்த்திருக்கிறது... அது தமிழ் மக்களுக்கு ஆறுதலே. 

தகவல்களுடன் கூடிய அருமையான கருத்து நெடுக்கர். 👍🏽

உங்களைப்போன்றவர்கள் கொஞ்சம் ஒதுங்குவதால் தான் 2009 க்கு பின் முளைத்த காளான்களின் நாற்றம் தாங்க முடியவில்லை. 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நெடுக்கு உங்கள் தனிப்பட்ட வாழ்வில் கூட இப்படி தொடர்ந்து பொய்களை கூற வேண்டிய அவசியம் உங்களுக்கு வந்திருக்காது. தேவையிலாமல் அரசியல் விசுவாசம் வைக்க போய்  மூட்டைக்க்ணக்கா தொடர்ந்து பொய்களை சொல்ல வேண்டிய பரிதாப நிலை உங்களுக்கு. உங்களுக்கு லைக் போடுவரின் மனச்சாட்சி கூட உங்களை பொய்களை நம்பாது. 

உங்களுக்கு பொய் என்பது எனக்கு மெய். ஏனெனில்.. அமிர்தலிங்கம் சொன்ன ரப்பர் செல் அடித்து எங்கள் சொந்தங்கள் கூட இறந்து போயிருக்கிறார்கள். அவை ரப்பர் செல் அல்ல.. உண்மையான செல்கள்.  அமிர்தலிங்கம் கொழும்பில் இருந்து கொண்டு ஹிந்திய தூதரகம் சொல்வதை எல்லாம் அறிக்கையாக விட்டுக்கொண்டிருந்தது மகா தவறு.  மக்களின் வலியை உணராதவன் மக்களுக்கு தலைவானாக என்ன ஒரு தொண்டனாகக் கூட இருக்கத் தகுதியற்றவனாகிறான்.

எவர் போட்டிருந்தாலும்.. ஹிந்தியப் படைகளின் தமிழினப் படுகொலைகளை நியாயப்படுத்திய அமிர்தலிங்கத்தின் செயல் நிச்சயம் மனச்சாட்சி உள்ள மனிதர்களின் முன் எப்போதும் அவரின் உண்மை முகத்தை எடுத்தியம்பும்.

உங்களுக்கு ஈபி புளொட் ஈபிடிபி ஆக்கள் போல் மக்களின் வலி சர்வசாதாரணம்.. எஜமானர்களின் காலடி சுகமே சொர்க்கம் என்றிருந்தால்.. அதுக்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது உங்கள் பழக்க தோசம்.

மேலும்.. அமிர்தலிங்கத்தின் சாவில் மர்மம் உள்ளது. அதில் டி பி எஸ் ஜெ போன்றோர் இன்றும் குளிர்காய்கின்றனர் அவ்வளவே.

அமிர்தலிங்கம் கிடக்கட்டும்.. 

மகேஸ்வரன்...

குமார் பொன்னம்பலம்..

ரவிராஜ்

தராகி

அற்புதன்

சந்திரநேரு

பரராஜசிங்கம்

கனகரட்னம்..

நடேசன்..

விமலராஜன்..

இப்படி என்னற்ற தமிழ் தேசிய அரசியல்வாதிகளும்.. பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்ட போது.. ஏன்.. டி பி எஸ் ஜெயராஜ் என்றவர்.. அமிர்தலிங்கம்.. நீலந்திருச்செல்வம்.. கதிர்காமருக்கு மட்டும் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்..??! நீங்களும் தான் ஏன் அவர்களுக்கு காட்டாத அனுதாபத்தை உங்கள் அன்பு அண்ணன் அமிர்தலிங்கம் மீது காட்டுகிறீர்கள்..???????!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.