Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசா அண்ணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On ‎15‎-‎09‎-‎2020 at 13:07, ரஞ்சித் said:

 

1992 அல்லது 1993 ஆக இருக்கும். நான் கொழும்பில் இருந்து எனது உயர்தர பரீட்சைகளுக்காகப் படித்துக்கொண்டிருந்த காலம். வெள்ளவத்தையில் பிரேம்நாத் மாஸ்ட்டரின்ர இன்டர் மொட் ஸ்டடி சென்டரில், புறாக்கூடு போன்ற அறையில் நெருக்கமாக அமர்ந்து, அவர் சொல்லித்தரும் கணக்கினை ஒரு வரி மீதமில்லாமல் கொப்பியில் பதிந்துகொண்டு, பரீட்சைக்குக் காத்திருந்த காலம். 

தன்னிடம் படிக்கும் அனைத்து மாணவர்களையும் செல்லப்பெயர் ( பட்டப்பெயர்தான்) கொண்டுதான் பிரேம்நாத் மாஸ்ட்டர் அழைப்பார். அவர் ஒரு வகுப்பில் எங்கள் பெயரை அழைத்து ஒரு கேள்வி கேட்டார் எண்டால், அது எமக்கு ஆத்மதிருப்தி. வகுப்பில் முன்னால் இருந்த சரக்குகளுக்கெல்லாம் எங்கள் பெயர் தெரிந்துவிடும் என்கிற சந்தோஷம், "விலாசம்", இப்படி ஏதோ ஒன்று. 

அந்த வகுப்பில்த்தான் எனது உற்ற நண்பனை நான் சந்தித்தேன். மாநிறம், அழகன், மலையாள நடிகர்கள் போன்ற முக வசீகரமும், ஆண்மையான குரலும் கொண்டவன். வகுப்பிற்க்கு வரும்போது, செல்லும்போது அவனுடன் பேசுவேன். பழகுவதற்கு இனிமையானவன் என்பதால், அவனைச் சுற்றி எப்போதுமே ஒரு நண்பர் கூட்டம் இருக்கும். என்னிலும் ஒரு வயது கூடியவன், இரண்டாவது தடவையாக பரீட்சைக்குத் தயாராவதற்கு எங்களுடன் வகுப்பிற்கு வந்துகொண்டிருந்தான். 

வெள்ளவத்தை ஹம்ப்ட்டன் லேனில், முன்னாள் ராணுவ அதிகாரியொருவரின் வீட்டில் அவர் வாடகைக்குக் கொடுப்பதற்குக் கட்டியிருந்த "லயன்களில்" நானும் அடைக்கலமாகியிருந்தேன். என்னைத்தவிர அங்கே குடியிருந்தவர்கள் எல்லாருமே ஒன்றில் கொழும்பில் வேலைபார்த்துவந்தர்கள் அல்லது வெளிநாடு போகும் கனவில் உறவுகள் அனுப்பும் பணத்தில் வெள்ளவத்தைத் தெருக்களில் பகலெல்லாம் சுற்றிவிட்டு, இரவுகளில் தூங்குவதற்கு மட்டுமே லயன்களுக்கும் திரும்பும் வடக்குக் கிழக்குத் தமிழர்கள். அவர்களில் படித்துக்கொண்டிருந்தது நான் மட்டும்தான். இடைக்கிடையே ஏதாவது ஒரு லயன் அறையில் "படம்" ஓடும். என்னையும் ஒருநாள் அதற்கு அறிமுகப்படுத்தினார்கள். அட கடவுளே, இதையெல்லாம் கூடவா கூடியிருந்து கூட்டமாகப் பார்ப்பார்கள் என்று வியந்துகொண்டே அவ்வப்போது நான் சென்று அமர்ந்துகொள்வேன். பாடசாலை, வகுப்புக்கள் என்று நாள்முழுதும் அலைந்து திரியும் எனக்கு, தனி லயனில் தனிமை வாட்டும். சிலவேளை முகட்டைப் பார்த்துக்கொண்டே தூங்குவேன். சீமேந்துத்தரை, வெற்றுப்பாய், உறையிலாத தலையணை, நானும் கவலைப்பட்டதில்லை, எவருமே கேட்டதில்லை. 

எனது லயன் வாழ்க்கை பற்றி ஒருநாள் எதேச்சையாக எனது நண்பனிடம் கூறினேன். என்னை ஆச்சரியமாகப் பார்த்த அவன், "ஏண்டா இவ்வளவுநாளும் சொல்லவில்லை?" என்று கேட்டான். "நீ, வா எங்கட வீட்டிற்கு, எனக்கும் படிக்கத் துணையில்லை, நாங்கள் பாஸ்ப்பேப்பர் செய்யலாம்" என்று ஒருநாள் சொல்லவும், மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொண்டேன்.

கொள்ளுப்பிட்டியில் காலிவீதியிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு வீதியில் அவனது வீடு. சிங்கப்பூர் பிஸிநெஸ்காரரான அவனது தந்தையின் பணச்செழிப்பில் வாங்கப்பட்ட அந்த வீட்டில், அவனும், அவனது பெற்றோர், இரு தங்கைகள் மற்றும் "பெரியம்மா" வும் வாழ்ந்துவந்தனர். இந்தப் பெரியம்மா பற்றியும் பேச வேண்டும். முதலில் அவரை எனது நண்பனின் தாயாரின் அக்காள் என்றுதான் எண்ணினேன். பிள்ளைகளுடனும், அவனது பெற்றோர்களுடனும் அவர் காட்டிய பாசமும் அக்கறையும் அலாதியானது. ஒருநாள் அவனிடமே கேட்டேன், "அவவுக்குக் குடும்பம் இல்லையோ, ஏன் அவ உங்களோட இருக்கிறா? என்று நான் கேட்டதற்கு, "அவதானடா எங்கட அப்பாவின்ர முதல்த் தாரம், அவவுக்குப் பிள்ளைகள் ஒண்டும் பிறக்கவில்லையெண்டதற்காக அப்பாவின்ர ஆக்கள் வாரிசு வேண்டும் எண்டு அம்மாவைக் கலியாணம் செய்துவைச்சவையள், அவ எங்களோடதான் இருக்கிறா" என்று சொன்னான். தன் கண்முன்னேயே தனது கணவர் இன்னொரு பெண்ணுடன், திருமணம் முடித்து, பிள்ளைகள் பெற்று வாழ்வதைப் பார்த்துக்கொண்டே அந்த வீட்டில் தானும் வாழ்ந்துவரும் அந்தப் பெரியம்மா மீது எனக்கு இனம்புரியாத இரக்கமும், மரியாதையும் ஏற்பட்டது. இதுவல்லவா தியாகம்?! ஆனால், அவரைத் தமது சொந்தத் தாய்போல அக்குடும்பம் பார்த்துக்கொண்ட விதம் இப்படியும் வித்தியாசமான மனிதர்கள் எம்முடன் வாழ்கிறார்கள் என்பதையும் எனக்கு உணர்த்தியது. 

நீங்கள் ஏ லெவல் மட்டுவில் படித்தேன் என்று முந்தி எழுதிய நினைவு:unsure: ...உங்களுக்கு நல்ல எழுத்தாற்றல் இருக்கின்றது ...தொடர்ந்தும் எழுதுங்கள் 

  • Replies 101
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் ஏ லெவல் மட்டுவில் படித்தேன் என்று முந்தி எழுதிய நினைவு:unsure: ...உங்களுக்கு நல்ல எழுத்தாற்றல் இருக்கின்றது ...தொடர்ந்தும் எழுதுங்கள் 

ஏ லெவல் படிக்கத் தொடங்கியது மிக்கேல் கல்லூரியில்த்தான். ஆனால், பிரேமதாசாவுக்கும் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை முறிந்தபின்னர், 1990 இல் ஜூன் மாதம் கொழும்பிற்கு வந்துவிட்டேன். மிக்கேல் கல்லூரிக்கு அருகில், வெபர் ஸ்டேடியத்திற்குப் போகும் வழியில் ரத்திணசிங்கம் மாஸ்ட்டரிடம் சிறிதுகாலம் டபிள் மத்ஸ் இற்குப் போய்க்கொண்டிருந்தேன். அதிகாலை நேர வகுப்பு, அமைதியும், காலை புலரும் வண்ணமும் அலாதியாய் இருக்கும். 

உங்களின் ஆதரவிற்கு நன்றி !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2020 at 22:49, முதல்வன் said:

மானிப்பாய் பிரபா எங்கே என்று தெரியவில்லை. 

புஸ்பா - கல்ப்பனா கனடாவில் என்று நினைக்கிறேன்.

மானிப்பாய் பிரபா இபோது லண்டனில் இருக்கிறார். ஆளே மாறிப்போயிட்டார் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோவன், சாமி மாதிரி, திருநீரும், பொட்டும்தான் குறை. அவரைப்பற்றியும் முன்னர் ஒருதடவை இங்கு எழுதினேன். இப்போதும்கூட அடிக்கடி பலகலைக் கழக குறூப்பில் பேசுவோம். 

புஷ்ப்பாவும் கல்ப்பனாவும் டொரொன்டோவில். நன்றாகவே இருக்கிறார்கள். மொரட்டுவை 93 எனும் நண்பர் வட்டத்தை ஆரம்பித்து, ஒவ்வொருவராய்த் தேடிப்பிடித்து இன்று அனைவரையும் ஒன்றிணைத்தது புஷ்ப்பாதான். சில வாரங்களுக்கு முன்னர்கூட சூமில் அனைவரும் கலந்துகொண்டு அரட்டை அடித்தோம்.


 

On 17/9/2020 at 22:49, முதல்வன் said:

இந்திரலிங்கமாக கூட இருக்கலாம். 🤣🤣🤣

நாடக மன்னன் லீலாவாகவும் இருக்கலாம் 🤣🤣🤣

மத்ஸ் டிபாட்மன்ட் இந்திரலிங்கத்தைச் சொல்லுறியளோ? நீங்கள் அவராக இருக்கமாட்டியள், எங்கட ரகசியமெல்லாம் தெரிஞ்சிருக்கு உங்களுக்கு ?!

லீலாவாக இருக்கவும் வாய்ப்பில்லை. லீலாவுக்கு யாழ்க்களம் பற்றித் தெரிந்திருக்குமோ தெரியாது. ஆள் செய்திச்சேவைக்கு வீடியோ எடுக்கிறதில பிஸியெண்டு கேள்வி.

உங்களைக் கெதியாப் பிடிச்சுடுவன் எண்டு நினைக்கிறன், பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

மானிப்பாய் பிரபா இபோது லண்டனில் இருக்கிறார். ஆளே மாறிப்போயிட்டார் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோவன், சாமி மாதிரி, திருநீரும், பொட்டும்தான் குறை. அவரைப்பற்றியும் முன்னர் ஒருதடவை இங்கு எழுதினேன். இப்போதும்கூட அடிக்கடி பலகலைக் கழக குறூப்பில் பேசுவோம். 

 

நவலி பிரபா -  New Hostel கஜே😂; தண்ணியில் மிதந்தவன், நல்ல பெடியன் 

புஷ்பா - கனடாவில் Real Estate

நிமலன் - இங்குதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நவலி பிரபா -  New Hostel கஜே😂; தண்ணியில் மிதந்தவன், நல்ல பெடியன் 

இப்ப எல்லாம் விட்டாச்சு, தண்ணி, சிகரெட் எண்டு எதுவுமேயில்லை. ஆளே மாறீட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

உங்களைக் கெதியாப் பிடிச்சுடுவன் எண்டு நினைக்கிறன், பாப்பம்.

பார்ப்பம் பார்ப்பம். ரா.. ரா (சந்திரமுகி பாட்டுத்தான் ஞாபகம் வருது) 🤣🤣🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

பார்ப்பம் பார்ப்பம். ரா.. ரா (சந்திரமுகி பாட்டுத்தான் ஞாபகம் வருது) 🤣🤣🤣

ஏதாவதொரு க்ளூ கிடைக்குமோ? 

  • கருத்துக்கள உறவுகள்

8 தரம் குண்டடிச்சு சுத்தி திரியும் அக்கரைப்பற்று கலீலை தெரியுமா. 

நானாகவும் இருப்பேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முதல்வன் said:

8 தரம் குண்டடிச்சு சுத்தி திரியும் அக்கரைப்பற்று கலீலை தெரியுமா. 

நானாகவும் இருப்பேன்.

அவர் வெக்டரிட்டப் படிக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

சீத்தாராம் .?? கடம்பன் .?? இன்னும் எத்தனை பேர் இருக்கினம் அண்ணை. வடமராட்சிகாரர் 🤣🤣🤣

 

28 minutes ago, ரஞ்சித் said:

ஏதாவதொரு க்ளூ கிடைக்குமோ? 

சொய்சாபுர பஸ்ராண்டில் சி.வி குணரத்ன தொழில்பயிற்சி அமைச்சர் ஆமிக்கு காசு சேர்க்கும் போது கரும்புலி தாக்குதல் நடந்து ஆமி கம்பஸுக்குள்ளே வந்து பிடிச்சுக்கொண்டு போன ஆட்களை எல்லாரையும் உங்களுக்குத்தெரியுமா அண்ணை 🤭🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முதல்வன் said:

சீத்தாராம் .?? கடம்பன் .?? இன்னும் எத்தனை பேர் இருக்கினம் அண்ணை. வடமராட்சிகாரர் 🤣🤣🤣

 

சொய்சாபுர பஸ்ராண்டில் சி.வி குணரத்ன தொழில்பயிற்சி அமைச்சர் ஆமிக்கு காசு சேர்க்கும் போது கரும்புலி தாக்குதல் நடந்து ஆமி கம்பஸுக்குள்ளே வந்து பிடிச்சுக்கொண்டு போன ஆட்களை எல்லாரையும் உங்களுக்குத்தெரியுமா அண்ணை 🤭🤔

ஓம். ஓரளவிற்குத் தெரியும். ஏனென்றால் நானும் பிடிபட்டனான். மொரட்டுவை பொலீஸ் ஸ்டேஷனில ரெண்டுநாள் வைச்சிருஞ்சு செய்துபோட்டுத்தான் விட்டவன்கள். நீங்களும் இருந்தனீங்களோ? 

6 minutes ago, முதல்வன் said:

சீத்தாராம் .?? கடம்பன் .?? இன்னும் எத்தனை பேர் இருக்கினம் அண்ணை. வடமராட்சிகாரர் 🤣🤣🤣

அட, அவங்களை வேற தெரியுமா??? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

அட, அவங்களை வேற தெரியுமா??? 

கடம்பன் இப்போ லைக்காவில் senior Switching Engineer, பாலா லைக்காவில் Data scientist. 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பட்ஜில 5 பேர். நான், புஷ்ப்பா, நவாலி பிரபா, லீலாகிருஷ்ணன், கோழி ரமேஷ். மற்றையவர்கள் எல்லோரும் ஜூனியர்ஸ் என்று நினைவு. 

Just now, முதல்வன் said:

கடம்பன் இப்போ லைக்காவில் senior Switching Engineer, பாலா லைக்காவில் Data scientist. 
 

அது தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

ஓம். ஓரளவிற்குத் தெரியும். ஏனென்றால் நானும் பிடிபட்டனான். மொரட்டுவை பொலீஸ் ஸ்டேஷனில ரெண்டுநாள் வைச்சிருஞ்சு செய்துபோட்டுத்தான் விட்டவன்கள். நீங்களும் இருந்தனீங்களோ? 

அதுக்குப்பிறகும் 4ஆம் மாடியில் வைச்சிருந்தவையை தெரியுமா .? 

சிங்களவன் ஒட்டின தமிழனே வெளியேறு என்ற banner இற்கு பதிலடியாக if Tamils out Bombs In என்று பணர் ஒட்டி சஸ்பண்ட் ஆனவையை தெரியுமா 

3 minutes ago, ரஞ்சித் said:

எங்கட பட்ஜில 5 பேர். நான், புஷ்ப்பா, நவாலி பிரபா, லீலாகிருஷ்ணன், கோழி ரமேஷ். மற்றையவர்கள் எல்லோரும் ஜூனியர்ஸ் என்று நினைவு. 

நீங்களே உங்களை காட்டித்தாறீங்கள் அண்ணை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

அதுக்குப்பிறகும் 4ஆம் மாடியில் வைச்சிருந்தவையை தெரியுமா .? 

சிங்களவன் ஒட்டின தமிழனே வெளியேறு என்ற banner இற்கு பதிலடியாக if Tamils out Bombs In என்று பணர் ஒட்டி சஸ்பண்ட் ஆனவையை தெரியுமா 

நீங்களே உங்களை காட்டித்தாறீங்கள் அண்ணை 

என்ர பெயரையே வெளிப்படையாப் போட்டிருக்கிறன், இதில இன்னும் காட்டித்தர என்னவிருக்கிறது?

4 ஆம் மாடிக்குப் போனவர்களில இரண்டு ஜூனியர்ஸைத் தெரியும், ஒருவர் அல்பேர்ட் மற்றையவரின் பெயர் சரியாக நினைவில் இல்லை.  விஷ்ணு??

4 minutes ago, முதல்வன் said:

சிங்களவன் ஒட்டின தமிழனே வெளியேறு என்ற banner இற்கு பதிலடியாக if Tamils out Bombs In என்று பணர் ஒட்டி சஸ்பண்ட் ஆனவையை தெரியுமா 

இது நான் கேள்விப்படாதது

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

4 ஆம் மாடிக்குப் போனவர்களில இரண்டு ஜூனியர்ஸைத் தெரியும், ஒருவர் அல்பேர்ட் மற்றையவரின் பெயர் சரியாக நினைவில் இல்லை.  விஷ்ணு??

விஸ்ணுவர்த்தன், சக்திவேல், அல்பேட்.

நீங்க கஜே அடிச்ச அறையிலே 304, கழுதை விளையாடின ஆட்களை எல்லாம் யோசிச்சு பாருங்கள். 🤣🤣🤣

 

உங்களில் மரியாதையும் மதிப்பும் கூடுது அண்ணை. ஆனால் இப்போதைக்கு நான் யாரென்பதை சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன் அண்ணை. 😢

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரஞ்சித் said:

எங்கட பட்ஜில 5 பேர். நான், புஷ்ப்பா, நவாலி பிரபா, லீலாகிருஷ்ணன்,

. மற்றையவர்கள் எல்லோரும் ஜூனியர்ஸ் என்று நினைவு. 

அது தெரியும்

 

1 hour ago, முதல்வன் said:

8 தரம் குண்டடிச்சு சுத்தி திரியும் அக்கரைப்பற்று கலீலை தெரியுமா. 

நானாகவும் இருப்பேன்.

கலீலை தெரியாது

லீலா செய்த வேலைகள் - இன்றுவரை மறக்க முடியாது, எல்லோரையும் நன்றாக தெரியும்

முதல்வன் - இன்னும் கண்டுபிடிக்கவில்லை 🤔

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

லீலா செய்த வேலைகள் - இன்றுவரை மறக்க முடியாது

லீலா கலை விழாவுக்கு சரஸ்வதி மண்டபத்திலே போட்ட மௌனநாடகம் ஞாபகம் இருக்கா உடையார் அண்ணே 🤣🤣🤣

 

15 minutes ago, உடையார் said:

முதல்வன் - இன்னும் கண்டுபிடிக்கவில்லை 🤔

கடைசி மட்டும் பிடிக்கமாட்டீங்கள். 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

நீங்கள் ஏ லெவல் மட்டுவில் படித்தேன் என்று முந்தி எழுதிய நினைவு:unsure: ...உங்களுக்கு நல்ல எழுத்தாற்றல் இருக்கின்றது ...தொடர்ந்தும் எழுதுங்கள் 

ரதி, நானும் மட்டக்களப்பில் படித்திருக்கிறேன். சிறுவயதில். அரசடி பள்ளிக்கூடம்!!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முதல்வன் said:

லீலா கலை விழாவுக்கு சரஸ்வதி மண்டபத்திலே போட்ட மௌனநாடகம் ஞாபகம் இருக்கா உடையார் அண்ணே 🤣🤣🤣

 

இல்லாமலா 🤣😂 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

ரதி, நானும் மட்டக்களப்பில் படித்திருக்கிறேன். சிறுவயதில். அரசடி பள்ளிக்கூடம்!!

நானும் மாமாங்கம் பார் ரோட்டிலே கொஞ்சகாலத்தை கழிச்சிருகிறேன்.

HNB குவாடர்ஸில். 

அதெல்லாம் பொற்காலம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முதல்வன் said:

நானும் மாமாங்கம் பார் ரோட்டிலே கொஞ்சகாலத்தை கழிச்சிருகிறேன்.

HNB குவாடர்ஸில். 

அதெல்லாம் பொற்காலம்.

நாங்கள் ETA கட்டிடத்துக்கு முன்னால் வீட்டில் இருந்தோம். அப்பா RMP. விஜயா , ராஜேஸ்வரா , ரீகல் தியேட்டர்களின் படம்பார்த்தது இப்பவும் ஞாபகம் இருக்கு!!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Eppothum Thamizhan said:

ரதி, நானும் மட்டக்களப்பில் படித்திருக்கிறேன். சிறுவயதில். அரசடி பள்ளிக்கூடம்!!

ஓ ...யாழில் இருக்கும் நிறைய பேர் மட்டுவில் இருந்திருக்கிறார்கள் ...மகிழ்ச்சி 

40 minutes ago, ரதி said:

ஓ ...யாழில் இருக்கும் நிறைய பேர் மட்டுவில் இருந்திருக்கிறார்கள் ...மகிழ்ச்சி 

நான் ஒரு வயதில் இருந்து 5 வயது வரைக்கும் மட்டுவில் இருந்திருக்கின்றேன். கல்லடி உப்போடை எனும் பெயர் நினைவில் இருக்கின்றது. அங்கு தான்  வீடு. சீனியப்பு என்பவரின் கடையும் நினைவில் இருக்கின்றது. வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு சிறு வீதியால் சென்றால் ஆறும், அதன் அருகில் ஒரு முஸ்லிம் பெரியவரின் கல்லறையும் உள்ளது. 
மட்டுவில் ஏற்பட்ட சூறாவளியில் அரும் தப்பில் குடும்பம் தப்பியதாக அம்மா அடிக்கடி சொல்வார். என் அக்கா சிசிலியா கொன்வெண்டில் 2 ஆம் வகுப்பு வரைக்கும் படித்து இருக்கின்றார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

ஓ ...யாழில் இருக்கும் நிறைய பேர் மட்டுவில் இருந்திருக்கிறார்கள் ...மகிழ்ச்சி 

தங்கச்சி! நான் முதலே மட்டக்களப்பு எனக்கு அடிபட்ட ஊர் எண்டு சொல்லிப்போட்டன். 😎

ஆனைப்பந்தி பிள்ளையாருக்கு என்ரை பேரை சொல்லி கோசானிட்டை அர்ச்சனை செய்யச்சொன்னனான். இண்டு வரைக்கும் வீபூதி சந்தனமும் வரேல்லை பதிலும் வரேல்லை.என்ன மனிசரப்பா? நம்பினவன் நடுச்சந்தியிலைதான் போல கிடக்கு..😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.