Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

இந்த கொரனாவுக்கு எதிர்ப்பாற்றல் வளர்த்தல் என்று நீங்கள் சொல்வது  நோய்க்கான எதிர்ப்புச் சக்தியா?

கொரனாவைரசுக்கு herd immunity எனும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் காட்டவில்லை. எட்டுப் பேருக்கு  தொற்று வந்தால், அதில் ஒருவருக்குத் தான் நோயில் இருந்து காக்கும் வலிமை கொண்ட பிறபொருளெதிரிகள் (antibodies)  உருவாகும் என்று சீனாவில் நடந்த ஆய்வில் கண்டறிந்தார்கள். தடுப்பூசி வேறாகச் செயல்படுவதால் அது பாதுகாப்பை வழங்கும்! ஆனால், கொரனா பரவ அனுமதித்தால் எதிர்ப்பாற்றல் பரவும் என்பது மிகவும் தவறான தகவல், மக்கள் இதை நம்பினால் தொற்றுகளும் மரணங்களும் அதிகரிக்கும்! 

அவதானமாக எதையும் செய்வதே இப்போதைக்கு ஒரே வழி.

தவிரவும் இதுவரை சிலருக்கு தொற்று மீளவும் வந்துள்ளது.

நான் வாசித்து அறிந்தவரையில் பொதுவாக பெரிய விளைவை தரும் சார்ஸ், சின்னம்மை போன்ற தொற்றுக்கள் - 2 வருடமாவது antibodies உடலில் இருக்குமாம். ஆனால் சாதாரண தடிமலை தொடர்ந்து வரும் antibodies ஓரிரு மாதங்களில் அழிந்து விடுமாம். 

ஆனால் இந்த வைரஸ் பாரிய தாக்கத்தை தருவதாக இருந்தாலும் - பலருக்கு நோய் வந்த 2 கிழமையின் பின்னும் antibodies நெகட்டிவ் வருகிறதாம்.

ஆகவே herd immunity சாத்தியமாக தெரியவில்லை.

தடுப்பூசியினால் வரும் பாதுகாப்பும் 6 மாதம் - 1 வருடம்தான் என கதைக்கிறார்கள்.

ஆனால் தடுப்பூசி ஏற்றினால் பக்க விளைவு மரணம் இல்லை என்பதால் - அனைவருக்கும் ஒரே காலத்தில் தடுபூசி ஏற்றி ஒவ்வொரு நாடாக பாதிப்பை குறைக்க முடியும் என நினைக்கிறேன்.

இதுவரை மனி குலம் சந்தித்த தொற்றில் இருந்து இந்த வகையில் இது மாறுபாடானது.

ஆகவேதான் இதில் “மனிதரின் கைகள்” இருக்க கூடும் என நான் சந்தேகிக்கிறேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

பள்ளிகளை திறப்பது அனாவசியமற்ற வேலை இப்பபோதைய சூழலில் 
இது பொருளாதாரத்துக்கு எந்த பலனையும் கொடுக்க போவதில்லை .. வளர்ச்சி அடைந்த நாடுகள் 
ஒன்லைன் வடிவத்துக்கு மாறி இருக்கலாம். 

இப்போதும் அரசுகள் சரியான பரிந்துரைகளை கடைபிடிக்கிறார்கள் இல்லை 
மூன்று கிழமைகள் முழுதான பூட்டு பூட்டினால் இதை தடுக்க முடியும் 
மக்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். 

திறந்து பூட்டி திறந்து பூட்டி சிலுக்கு ஸ்மிதா பாடல்காட்ச்சிபோல் 
மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . 

பொருளாதாரத்திற்கும் பாடசாலை திறப்பிற்கும் நேரடியான சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கோவிட் 19 தொடர்பான அச்சத்தை களைய இந்த உத்தியை மேற்கொண்டிருக்கலாம். அச்ச உணர்வு மிகையாகி செல்லும்போது அன்றாட வாழ்வு பாதிப்படைகிறது. அங்குதான் பொருளாதாரம் பயணிக்கிறது. கனடாவைப் பொருத்தவரை காலநிலை என்பது மிகச்சோதனையானது. தற்சமயம் ப்ளூ எனப்படும் காய்ச்சல் பரவும் நேரம். ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் ஆரம்பிக்கும்போதும், முடியும்போதும் இந்தத் தாக்கத்தால் அநேகர் பாதிக்கப்படுவார்கள். அதற்கு தடுப்பூசி போடுவதும் செப்ரெம்பர் கடைசி, ஒக்டோபரில் இங்கு நடைமுறையாகும் விடயம். தற்போது தடுப்பூசி பற்றி எத்தகவலும் இல்லை. அத்தோடு இங்கு குடும்ப வைத்தியர்கள் எல்லோரும் தமது அலுவலகங்களைப் பூட்டி வைத்துக்கொண்டு தொலைபேசி வாயிலாகவே உரையாடுகிறார்கள். வைத்தியத் தேவைக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. சாதாரண வழமையான வருத்தங்களுக்கும் காட்ட முடியாத சூழல். ஆனால் பல் வைத்தியர்கள் அலுவலகங்களைத் திறந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.(காரணம் பற்சிகிச்சைக்கு நோயாளிகளே பணம் செலுத்த வேண்டும்) குடும்ப வைத்தியர்கள் அப்படியல்ல அரசாங்கமே அவர்களுக்கான சம்பளத்தைக் கொடுக்கிறது) குடும்ப வைத்தியர்களிடம் போக முடியாதவர்கள் நேரடியாக அவசரச் சிகிச்சைப்பகுதிக்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டு 4,5 நாட்கள் அப்பிரிவில் மறிக்கப்பட்டு கோவிட் 19 இருக்கிறதா என்று சோதனை செய்தே திருப்பி அனுப்பப் படுகிறார்கள். அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தை சந்தர்ப்பம் கிடைத்ததால் நிறையவே சுத்துமாத்து செய்து பிழைப்பவர்கள் இங்கு ஏராளம். ஏன் என்னுடைய பதிவு செய்யப்பட்;ட தொழிலைக் காட்டி 40 ஆயிரம் டொலர்களை எடுக்க வழி சொல்லித்தந்தவர்களும் உண்டு. உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களுக்கு சேரவேண்டியதை பலரும் தவறான வழியில் உபயோகிப்பதால் எதிர்வரும் காலத்தில் ஒட்டு மொத்தமாக எல்லோருமே பாதிக்கப்படப்போகின்றோம். இவை இப்படியே இருக்கட்டும்.

இயல்பு வாழ்க்கைக்கு மக்களைத் திருப்பினாலே அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அடிப்படையில் மாணவர்கள் பாடசாலைகளை இயங்க வைப்பதன் மூலம் மற்றவர்களையும் பணிகளுக்கு வரும்படி நிர்ப்பந்திக்கலாம். உரிய வைத்திய காரணி உள்ளவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் பணியாற்றலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும் அல்லவா ,)

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

இந்த கொரனாவுக்கு எதிர்ப்பாற்றல் வளர்த்தல் என்று நீங்கள் சொல்வது  நோய்க்கான எதிர்ப்புச் சக்தியா?

கொரனாவைரசுக்கு herd immunity எனும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் காட்டவில்லை. எட்டுப் பேருக்கு  தொற்று வந்தால், அதில் ஒருவருக்குத் தான் நோயில் இருந்து காக்கும் வலிமை கொண்ட பிறபொருளெதிரிகள் (antibodies)  உருவாகும் என்று சீனாவில் நடந்த ஆய்வில் கண்டறிந்தார்கள். தடுப்பூசி வேறாகச் செயல்படுவதால் அது பாதுகாப்பை வழங்கும்! ஆனால், கொரனா பரவ அனுமதித்தால் எதிர்ப்பாற்றல் பரவும் என்பது மிகவும் தவறான தகவல், மக்கள் இதை நம்பினால் தொற்றுகளும் மரணங்களும் அதிகரிக்கும்! 

அவதானமாக எதையும் செய்வதே இப்போதைக்கு ஒரே வழி.

யஸ்ரின்

எதிர்ப்பு சக்தி உருவாகாது என்று விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோயிற்காக நீண்ட கால செயற்பாடின்மை மனபிறழ்வுகளை உருவாக்குகிறதே. இதுவரை இங்கு கோடைகாலம் இருந்ததால் வெளியே நடமாட்டம் குறைந்திருந்தாலும் வீட்டின் பின்புறம் அல்லது பல்கனி என்று வெளிக்காற்றைச் சுவாசித்தோம் இனி அத்தனையும் முடக்கப்பட்டு கூடுகளுக்குள்  சிறைப்படுத்தப்பட்ட பறவைகள்போல வாழ வேண்டிய கட்டாயம். இப்போதே பல முதியவர்களுக்கு மன அழுத்தம் இனிவரும் காலங்களில் இளைய சமூகமும் இந்த மன அழுத்தத்திற்கு உள்வாங்கப்படப்போகிறது. கோவிட் 19 வெளியே தெரியும் நோயாக இருக்க மன அழுத்தம் அதை விடக்கடினமாக எல்லோரையும் தாக்கப்போகிறது. ஒரு வேளை அத்தகைய சூழலைத் தவிர்க்க இத்தகைய விடயங்களை மேற்கொண்டிருப்பார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

தவிரவும் இதுவரை சிலருக்கு தொற்று மீளவும் வந்துள்ளது.

நான் வாசித்து அறிந்தவரையில் பொதுவாக பெரிய விளைவை தரும் சார்ஸ், சின்னம்மை போன்ற தொற்றுக்கள் - 2 வருடமாவது antibodies உடலில் இருக்குமாம். ஆனால் சாதாரண தடிமலை தொடர்ந்து வரும் antibodies ஓரிரு மாதங்களில் அழிந்து விடுமாம். 

ஆனால் இந்த வைரஸ் பாரிய தாக்கத்தை தருவதாக இருந்தாலும் - பலருக்கு நோய் வந்த 2 கிழமையின் பின்னும் antibodies நெகட்டிவ் வருகிறதாம்.

ஆகவே herd immunity சாத்தியமாக தெரியவில்லை.

தடுப்பூசியினால் வரும் பாதுகாப்பும் 6 மாதம் - 1 வருடம்தான் என கதைக்கிறார்கள்.

ஆனால் தடுப்பூசி ஏற்றினால் பக்க விளைவு மரணம் இல்லை என்பதால் - அனைவருக்கும் ஒரே காலத்தில் தடுபூசி ஏற்றி ஒவ்வொரு நாடாக பாதிப்பை குறைக்க முடியும் என நினைக்கிறேன்.

இதுவரை மனி குலம் சந்தித்த தொற்றில் இருந்து இந்த வகையில் இது மாறுபாடானது.

ஆகவேதான் இதில் “மனிதரின் கைகள்” இருக்க கூடும் என நான் சந்தேகிக்கிறேன்.

 

 

சில விடயங்கள் உண்மை: தற்போதைய  வைரசுக்கு நோய்த்தீவிரத்தைப் பொறுத்தவரை நெருக்கமானதாக 2003 இல் வந்த சார்ஸ் வைரஸும், 2012 இல் வந்த மேர்ஸ் வைரசும் இருக்கின்றன. ஆனால், இரண்டிற்கும் உருவான நிர்ப்பீடன எதிர்ப்பு 2 வருடங்கள் வரை உடலில் தங்கியது. இதுவும், வேகமாகப் பரவாமையும் காரணமாக உயிரிழப்பு மிகக் குறைவு சார்சிலும் மேர்சிலும். 

உங்கள் மனிதனின் கண்டுபிடிப்பா கோவிட் என்ற சந்தேகத்திற்கு இப்போதைக்கு positive ஆன ஆதாரங்கள் இல்லை, சந்தேகங்களும் தகவல்களில் இருக்கும் இடைவெளிகளும் காரணமாக இப்போது என் முடிவு: இது இயற்கையாக விலங்கினத்தில் இருந்து மனிதனுக்கு பாய்ந்து விட்ட வைரசு என்பதே: 

1. இந்த வைரசை உடலுக்கு வெளியே திசுக்களில் வளர்த்தெடுப்பது கடினமாக இருக்கிறது. ஆபிரிக்க பச்சைக் குரங்கின் Vero6 என்ற திசுவில் மட்டுமே இது நன்கு வளர்கிறது. ஆனால், ஆபிரிக்க பச்சைக் குரங்கினத்தில் இந்த வைரசு இயற்கையாகக் காணப்படவில்லை.

2. மலாயன் பொங்கொலின் என்ற சீனாவுக்குள் அதிகம் கடத்தி வரப்படும் ஒரு விலங்கில் இந்த வைரசுக்கு மிக நெருக்கமான  அமைப்புடைய வைரசு இருப்பதாக க் கண்டறிந்துள்ளனர். வேறு விலங்குகளில் இதை விட நெருக்கமான கொரனா வைரசுகள் இல்லை.

3. இறுதிக் காரணம் மூலக்கூற்று அமைப்பு  சார்ந்தது, இதை விளக்க தமிழில் எனக்குக் கடினம், ஆயினும் முயல்கிறேன்: வைரசு ஒரு விலங்குகள்/மனிதரிடையே பல காலம் பரவி சுற்றித் திரியும் போது தன்னைக் காத்துக் கொள்ள சில மாச்சத்து மூலக் கூறுகளால் தன்னை மறைத்துக் கொள்ளும் (masking). இத்தகைய மாற்றம் பல வருடங்களாக ஒரு விலங்கினத்தில் வைரசு சுற்றித்திரிவதால் மட்டுமே ஏற்படக் கூடிய மாற்றம். இத்தகைய மாற்றம் இந்த நவீன கொரனாவைரசில் இருக்கிறது. உண்மையில் இந்த மாற்றம் தான் எங்கள் உடல் வைரசின் Achilles heel ஐ இனங்காண முடியாமல் தடுக்கிறது. இந்த glycosylation என்ற மாற்றத்தை செயற்கையாக ஆய்வு கூடத்தில் உருவாக்குவது  அசாத்தியம் என்றல்ல, ஆனால் மிகவும் சவாலான ஒரு வேலை.

இதுவே இப்போதைக்கு என் முடிவின் காரணங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

சில விடயங்கள் உண்மை: தற்போதைய  வைரசுக்கு நோய்த்தீவிரத்தைப் பொறுத்தவரை நெருக்கமானதாக 2003 இல் வந்த சார்ஸ் வைரஸும், 2012 இல் வந்த மேர்ஸ் வைரசும் இருக்கின்றன. ஆனால், இரண்டிற்கும் உருவான நிர்ப்பீடன எதிர்ப்பு 2 வருடங்கள் வரை உடலில் தங்கியது. இதுவும், வேகமாகப் பரவாமையும் காரணமாக உயிரிழப்பு மிகக் குறைவு சார்சிலும் மேர்சிலும். 

உங்கள் மனிதனின் கண்டுபிடிப்பா கோவிட் என்ற சந்தேகத்திற்கு இப்போதைக்கு positive ஆன ஆதாரங்கள் இல்லை, சந்தேகங்களும் தகவல்களில் இருக்கும் இடைவெளிகளும் காரணமாக இப்போது என் முடிவு: இது இயற்கையாக விலங்கினத்தில் இருந்து மனிதனுக்கு பாய்ந்து விட்ட வைரசு என்பதே: 

1. இந்த வைரசை உடலுக்கு வெளியே திசுக்களில் வளர்த்தெடுப்பது கடினமாக இருக்கிறது. ஆபிரிக்க பச்சைக் குரங்கின் Vero6 என்ற திசுவில் மட்டுமே இது நன்கு வளர்கிறது. ஆனால், ஆபிரிக்க பச்சைக் குரங்கினத்தில் இந்த வைரசு இயற்கையாகக் காணப்படவில்லை.

2. மலாயன் பொங்கொலின் என்ற சீனாவுக்குள் அதிகம் கடத்தி வரப்படும் ஒரு விலங்கில் இந்த வைரசுக்கு மிக நெருக்கமான  அமைப்புடைய வைரசு இருப்பதாக க் கண்டறிந்துள்ளனர். வேறு விலங்குகளில் இதை விட நெருக்கமான கொரனா வைரசுகள் இல்லை.

3. இறுதிக் காரணம் மூலக்கூற்று அமைப்பு  சார்ந்தது, இதை விளக்க தமிழில் எனக்குக் கடினம், ஆயினும் முயல்கிறேன்: வைரசு ஒரு விலங்குகள்/மனிதரிடையே பல காலம் பரவி சுற்றித் திரியும் போது தன்னைக் காத்துக் கொள்ள சில மாச்சத்து மூலக் கூறுகளால் தன்னை மறைத்துக் கொள்ளும் (masking). இத்தகைய மாற்றம் பல வருடங்களாக ஒரு விலங்கினத்தில் வைரசு சுற்றித்திரிவதால் மட்டுமே ஏற்படக் கூடிய மாற்றம். இத்தகைய மாற்றம் இந்த நவீன கொரனாவைரசில் இருக்கிறது. உண்மையில் இந்த மாற்றம் தான் எங்கள் உடல் வைரசின் Achilles heel ஐ இனங்காண முடியாமல் தடுக்கிறது. இந்த glycosylation என்ற மாற்றத்தை செயற்கையாக ஆய்வு கூடத்தில் உருவாக்குவது  அசாத்தியம் என்றல்ல, ஆனால் மிகவும் சவாலான ஒரு வேலை.

இதுவே இப்போதைக்கு என் முடிவின் காரணங்கள்.

தெளிவான விளக்கத்துக்கு  நன்றி.


உங்கள் மூன்று காரணங்களும் அதன் படி உங்கள் முடிவும்  புரிந்து கொள்ள முடிகிறது.
தவிரவும் நான் தான் மனிதர் உருவாக்கியது என்ற எடுகோளை வைக்கிறேன் ஆகவே நான்தன இதை ஐயம் திரிபற நிறுவ வேண்டும்.

ஆனால் இந்த கோணத்தில் சிந்தித்து  பார்திர்களா?

எடுகோள்

இதுவரை நாம்  அறியாத ஒரு உயிரியல் கல உருவாக்க முறையை சீனா அறிந்து விட்டது. அதனால் 

1. நம்மால் மனித உடலுக்கு வெளியே உருவாக்க முடியாததை அவர்கள் இலகுவாக உருவாக்குகிறர்கள் 
2. இந்த வைரசு labல் உருவாக்கியதால்தான் வேறு விலங்கில் இது இல்லை 
3. ஏனையை இயற்கையான வைரசுகள்  போலன்றி இந்த வைரஸின் அஷிலிசின் குதியை கண்டு பிடிக்க கடினமாக இருப்பதும் - இது மனிதர்களால் டிசைன் பண்ண பட்டதால்தான்.

எனது கருத்தின் "விழுந்த பக்கத்தில் குறி சுடும்" தன்மை எனக்கு  புரிகிறது 😀


மேலும் என் முழு தியறியுமே எனது நிறுவ படாத எடுகோளிலேயே தங்கி உள்ளது.

ஆனால் குறைந்த பட்ஷம்  ஒரு healthy scepticismற்கு  இடமிருப்பதாகவே படுகிறது. or may be my imagination is running riot🤪.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

யஸ்ரின்

எதிர்ப்பு சக்தி உருவாகாது என்று விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோயிற்காக நீண்ட கால செயற்பாடின்மை மனபிறழ்வுகளை உருவாக்குகிறதே. இதுவரை இங்கு கோடைகாலம் இருந்ததால் வெளியே நடமாட்டம் குறைந்திருந்தாலும் வீட்டின் பின்புறம் அல்லது பல்கனி என்று வெளிக்காற்றைச் சுவாசித்தோம் இனி அத்தனையும் முடக்கப்பட்டு கூடுகளுக்குள்  சிறைப்படுத்தப்பட்ட பறவைகள்போல வாழ வேண்டிய கட்டாயம். இப்போதே பல முதியவர்களுக்கு மன அழுத்தம் இனிவரும் காலங்களில் இளைய சமூகமும் இந்த மன அழுத்தத்திற்கு உள்வாங்கப்படப்போகிறது. கோவிட் 19 வெளியே தெரியும் நோயாக இருக்க மன அழுத்தம் அதை விடக்கடினமாக எல்லோரையும் தாக்கப்போகிறது. ஒரு வேளை அத்தகைய சூழலைத் தவிர்க்க இத்தகைய விடயங்களை மேற்கொண்டிருப்பார்களோ?

 

1 hour ago, வல்வை சகாறா said:

பொருளாதாரத்திற்கும் பாடசாலை திறப்பிற்கும் நேரடியான சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கோவிட் 19 தொடர்பான அச்சத்தை களைய இந்த உத்தியை மேற்கொண்டிருக்கலாம். அச்ச உணர்வு மிகையாகி செல்லும்போது அன்றாட வாழ்வு பாதிப்படைகிறது. அங்குதான் பொருளாதாரம் பயணிக்கிறது. கனடாவைப் பொருத்தவரை காலநிலை என்பது மிகச்சோதனையானது. தற்சமயம் ப்ளூ எனப்படும் காய்ச்சல் பரவும் நேரம். ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் ஆரம்பிக்கும்போதும், முடியும்போதும் இந்தத் தாக்கத்தால் அநேகர் பாதிக்கப்படுவார்கள். அதற்கு தடுப்பூசி போடுவதும் செப்ரெம்பர் கடைசி, ஒக்டோபரில் இங்கு நடைமுறையாகும் விடயம். தற்போது தடுப்பூசி பற்றி எத்தகவலும் இல்லை. அத்தோடு இங்கு குடும்ப வைத்தியர்கள் எல்லோரும் தமது அலுவலகங்களைப் பூட்டி வைத்துக்கொண்டு தொலைபேசி வாயிலாகவே உரையாடுகிறார்கள். வைத்தியத் தேவைக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. சாதாரண வழமையான வருத்தங்களுக்கும் காட்ட முடியாத சூழல். ஆனால் பல் வைத்தியர்கள் அலுவலகங்களைத் திறந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.(காரணம் பற்சிகிச்சைக்கு நோயாளிகளே பணம் செலுத்த வேண்டும்) குடும்ப வைத்தியர்கள் அப்படியல்ல அரசாங்கமே அவர்களுக்கான சம்பளத்தைக் கொடுக்கிறது) குடும்ப வைத்தியர்களிடம் போக முடியாதவர்கள் நேரடியாக அவசரச் சிகிச்சைப்பகுதிக்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டு 4,5 நாட்கள் அப்பிரிவில் மறிக்கப்பட்டு கோவிட் 19 இருக்கிறதா என்று சோதனை செய்தே திருப்பி அனுப்பப் படுகிறார்கள். அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தை சந்தர்ப்பம் கிடைத்ததால் நிறையவே சுத்துமாத்து செய்து பிழைப்பவர்கள் இங்கு ஏராளம். ஏன் என்னுடைய பதிவு செய்யப்பட்;ட தொழிலைக் காட்டி 40 ஆயிரம் டொலர்களை எடுக்க வழி சொல்லித்தந்தவர்களும் உண்டு. உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களுக்கு சேரவேண்டியதை பலரும் தவறான வழியில் உபயோகிப்பதால் எதிர்வரும் காலத்தில் ஒட்டு மொத்தமாக எல்லோருமே பாதிக்கப்படப்போகின்றோம். இவை இப்படியே இருக்கட்டும்.

இயல்பு வாழ்க்கைக்கு மக்களைத் திருப்பினாலே அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அடிப்படையில் மாணவர்கள் பாடசாலைகளை இயங்க வைப்பதன் மூலம் மற்றவர்களையும் பணிகளுக்கு வரும்படி நிர்ப்பந்திக்கலாம். உரிய வைத்திய காரணி உள்ளவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் பணியாற்றலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும் அல்லவா ,)

அக்கா,

உங்கே எப்படியோ தெரியாது ஆனால் இங்கே 16 வயதுக்கு கீழே உள்ள பிள்ளைகளை தனியே வீட்டில் விட முடியாது, சட்டபடி. ஆகவே பள்ளியை மூடினால்- ஒரு பெற்றாராவது வேலை செய்ய முடியாது (வீட்டில் இருந்தும்) ஆகவே இது பொருளாதாரத்தை பாதிக்கும்.

உங்கள் மன அழுத்தம் சம்பந்தமான கேள்வி நியாயமானதே. பல cancer screening உம் தள்ளி போகிறது.

இவற்றுகெல்லாம் ஒரே தீர்வு நாடுகள் தம்மை தாமே தனிமை படுத்துவதே.

Goods and services ஐ மட்டும் முன்பு போல பரிமாறியபடி, மனித பிரயாணங்களை  தடுப்பதே ஒரே வழி.

ஈயு, அமெரிக்கா, கனடாவில் உள் நாட்டில் இருக்கும் குழப்ப நிலை, இலங்கை, தைவான், நியுசிலாந்து, சிங்கபூரில் இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

பிகு: பிள்ளைகளை பார்த்தபடி வீட்டில் இருந்த வேலை செய்ய ஒரு தடையும் இல்லை, ஆனால் பலர் முடியாது என சொல்லுவீனம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

இதில் எனக்கு மாற்று கருத்து உண்டு 
உலக சுகாதார சேவை சீனாவுக்கு வெளியில் கொரோனா வர போகிறது என்றவுடன் 
எல்லா நாட்டுக்கும் 10 வீத பொருளாதார நஷ்ட்டத்தை ஏற்றுக்கொண்டு எல்ல்லாவ்ற்றையும் மூடி 
இதை முதலில் சீனாவில் வைத்தே கட்டுப்படுத்த ஆலோசனை கூறியது. 

ஆனால் 10 வீத பொருளாதார வீழ்ச்சிக்கு யாரும் ஒத்துக்கொள்ளவில்லை 
ஆனால்  இன்று அண்ணளவாக 35 வீதம் பொருளாதார வீழ்ச்சியும் பல ஆயிரக்கணக்கான 
மரணத்துக்கும் பல திறமையான மருத்துவர்கள் உட்பட முகம் கொடுத்து இருக்கிறார்கள்.

பள்ளிகளை திறப்பது அனாவசியமற்ற வேலை இப்பபோதைய சூழலில் 
இது பொருளாதாரத்துக்கு எந்த பலனையும் கொடுக்க போவதில்லை .. வளர்ச்சி அடைந்த நாடுகள் 
ஒன்லைன் வடிவத்துக்கு மாறி இருக்கலாம். 

இப்போதும் அரசுகள் சரியான பரிந்துரைகளை கடைபிடிக்கிறார்கள் இல்லை 
மூன்று கிழமைகள் முழுதான பூட்டு பூட்டினால் இதை தடுக்க முடியும் 
மக்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். 

திறந்து பூட்டி திறந்து பூட்டி சிலுக்கு ஸ்மிதா பாடல்காட்ச்சிபோல் 
மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . 

வழமையாக நான் ஏதாச்சும் எழுதினால் அது ஏதோ மட்டமான.ஒரு கருத்தாகவே கணிப்பிடப்படுவது வழமை..னக்கு எதிராக யாராச்சும் எழுதினால் பச்சை குத்த பத்துப் பேர் இருப்பார்கள்.அந்தவகையில் நான் என்ன சொல்ல வாறேன் என்பதையாவது புரிந்துள்ளீர்கள் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

மொக்குச் சனங்கள், அதை வென்ற மொக்கு அரசாங்கம்.

இவங்கள் எப்படி உலகை வென்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. 🤣

ஓவர் டு யூ பாஞ்ச், சிறி, கு சா அண்ணைமார் 🤣

எல்லாம் ஒகே, தல ... 

மொக்கு அரசு... உலகத்தை எப்படி கட்டி ஆண்டார்கள் எண்டு தெரியவில்லை எண்ட கடைசி வரிகள் தான் நொட் ஒகே, ஐசே...

முதலில.... உந்த இலவச, ஆனால் நல்ல மருத்துவ கவனிப்பால், கிழடு கட்டயல் எல்லாம் 80 தாண்டி கனகாலம்.... இப்ப 90 தாண்டி... 100 போடுதுகள்.

இவையளுக்கு பராமரிப்புக்கு கொடுக்கிறதுக்கு, வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே.

எண்ட சிநேகிதனின் அம்மா.... வந்து சில வருசம் தான்... மூத்த மகனிண்ட வீடு பெரிசு.... மருமகளோட ஏன் இருப்பான் எண்டு.... .. உங்க ஒரு வரியும் கொடுக்கவில்லை..... ஆனால்.... கவுன்சில் வீடு.. கிழமை கொடுப்பனவு..... ஆள் சும்மா ராணி அம்மாவுக்கு பாஷன் சொல்லிக் கொடுப்பா போலை.

அங்க.... இடுப்பில் கட்டிய பழைய சேலை.... இங்க டவுசர்.... டாப்... பண்ணி பாருங்கோவன்... லேடீஸ் பார்ட்டி, பாட்டுப்போட்டி... அவயலுக்கில நாடகம்.... டோட்டல் பிரீடோம்.. சிங்கள அரசாங்கம் உதில எதைத்தான் செய்ய காசு வைச்சிருக்கு?

இன்னோருத்தர் வந்து கொஞ்ச வருசத்திலை அறளை பெயர்ந்து.... கேர் ஹோமிலை.... கவுன்சில் கவனிக்குது.... கவுன்சிலுக்கு வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே. அவருக்கு கிழமைக்கு £1,500... செலவு.... என்னாலை.... உது கொடுக்க வக்கில்லை எண்டு சொல்லிப்போட்டார் ஸ்பொன்சரிலை கூப்பிட மகன்.

NHS க்கு இவையளை பராமரிப்பதே பெரிய செலவு. தனி வீட்டில போரிங்... பொழுது போகுதில்லை எண்டு, குத்துது, குடையுது எண்டு ஆஸ்பத்திரிக்கு போய், கட்டிலிலை இருந்து, ஓசி சாப்பாடையும் அடிச்சுக்கொண்டு இருக்கிற ஆட்களை கேள்விப்பட்டிருக்கிறியளே.

ஆஸ்பத்திரி செலவை, bed occupancy days வைத்துதான் கணிப்பார்கள். இவர்கள் WBO (waste bed occupiers) என்பார்கள், ஆஸ்பத்திரி கணக்காளர்கள்.  

உந்த கொரோனவால.... அநேகமா, (நான் வாசித்தது சரி எண்டால்) 10,000 முதல், 23,000 வரை இந்த கிழடு கட்டயல் போயிருக்கினமாம்.

கண கவுன்சில் அதிகாரிகள், பட்ஜெட் நிமிருது எண்டு நிம்மதியா இருக்கினம்.... முக்கியமா எங்கண்ட கவுன்சில் பைனான்சில் தலைமை கணக்கு வேலை செய்யும் நம்ம அக்காவிடம், மெய்யே எண்டு கேட்க, மூடிய உதட்டில், சுட்டி விரலை வைத்து, 'சூ' என்று சிரித்தார். 🤫

இப்ப சொல்லுங்கோ இவர்கள் உலகத்தை எப்படி ஆண்டார்கள் என்று விளங்குதோ, இல்லையோ எண்டு..

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

எல்லாம் ஒகே, தல ... 

மொக்கு அரசு... உலகத்தை எப்படி கட்டி ஆண்டார்கள் எண்டு தெரியவில்லை எண்ட கடைசி வரிகள் தான் நொட் ஒகே, ஐசே...

முதலில.... உந்த இலவச, ஆனால் நல்ல மருத்துவ கவனிப்பால், கிழடு கட்டயல் எல்லாம் 80 தாண்டி கனகாலம்.... இப்ப 90 தாண்டி... 100 போடுதுகள்.

இவையளுக்கு பராமரிப்புக்கு கொடுக்கிறதுக்கு, வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே.

எண்ட சிநேகிதனின் அம்மா.... வந்து சில வருசம் தான்... மூத்த மகனிண்ட வீடு பெரிசு.... மருமகளோட ஏன் இருப்பான் எண்டு.... .. உங்க ஒரு வரியும் கொடுக்கவில்லை..... ஆனால்.... கவுன்சில் வீடு.. கிழமை கொடுப்பனவு..... ஆள் சும்மா ராணி அம்மாவுக்கு பாஷன் சொல்லிக் கொடுப்பா போலை.

அங்க.... இடுப்பில் கட்டிய பழைய சேலை.... இங்க டவுசர்.... டாப்... பண்ணி பாருங்கோவன்... லேடீஸ் பார்ட்டி, பாட்டுப்போட்டி... அவயலுக்கில நாடகம்.... டோட்டல் பிரீடோம்.. சிங்கள அரசாங்கம் உதில எதைத்தான் செய்ய காசு வைச்சிருக்கு?

இன்னோருத்தர் வந்து கொஞ்ச வருசத்திலை அறளை பெயர்ந்து.... கேர் ஹோமிலை.... கவுன்சில் கவனிக்குது.... கவுன்சிலுக்கு வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே. அவருக்கு கிழமைக்கு £1,500... செலவு.... என்னாலை.... உது கொடுக்க வக்கில்லை எண்டு சொல்லிப்போட்டார் ஸ்பொன்சரிலை கூப்பிட மகன்.

NHS க்கு இவையளை பராமரிப்பதே பெரிய செலவு. தனி வீட்டில போரிங்... பொழுது போகுதில்லை எண்டு, குத்துது, குடையுது எண்டு ஆஸ்பத்திரிக்கு போய், கட்டிலிலை இருந்து, ஓசி சாப்பாடையும் அடிச்சுக்கொண்டு இருக்கிற ஆட்களை கேள்விப்பட்டிருக்கிறியளே.

ஆஸ்பத்திரி செலவை, bed occupancy days வைத்துதான் கணிப்பார்கள். இவர்கள் WBO (waste bed occupiers) என்பார்கள், ஆஸ்பத்திரி கணக்காளர்கள்.  

உந்த கொரோனவால.... அநேகமா, (நான் வாசித்தது சரி எண்டால்) 10,000 முதல், 23,000 வரை இந்த கிழடு கட்டயல் போயிருக்கினமாம்.

கண கவுன்சில் அதிகாரிகள், பட்ஜெட் நிமிருது எண்டு நிம்மதியா இருக்கினம்.... முக்கியமா எங்கண்ட கவுன்சில் பைனான்சில் தலைமை கணக்கு வேலை செய்யும் நம்ம அக்காவிடம், மெய்யே எண்டு கேட்க, மூடிய உதட்டில், சுட்டி விரலை வைத்து, 'சூ' என்று சிரித்தார். 🤫

இப்ப சொல்லுங்கோ இவர்கள் உலகத்தை எப்படி ஆண்டார்கள் என்று விளங்குதோ, இல்லையோ எண்டு..

உண்மைதான்...நானும் இந்த கோணத்தில் சிந்தித்தேன். 

ஆனால் மொக்கு அரசு (state) இல்லை. மொக்கு அரசாங்கம் (govt.) - ஏனென்றால் இதனால் வரும் savings பயன் தர நாள் எடுக்கும். ஆனால் பொருளாதாரத்தில் விழும் அடி - கையோட கம்மாரிசு. 

அத்தோட பிரெக்சிற் விழைவு வேற. இனி கெண்ட் போகவே லொறிகாரார் பெமிற் எடுக்கொணுமாம்.

10 மணிக்கு பப் பூட்டல். இதர கட்டுப்பாடுகள் சகலதையும் போர்டரை பூட்டி இருந்தா தவிர்திருக்கலாம்.

இந்த கடுப்பெல்லாம் இந்த அரசாங்கத்தின் மீதுதான் திரும்பும்.

அடுத்த தேர்தலுக்கு பிறகு வரும் அரசாங்கம் உந்த savings ஐ அறுவடை செய்யும்.

மக்களும் மொக்குகள்தான் - கொலிடே போய், தொற்று வந்து பொருளாதாரம் படுத்தால், இவர்களுக்கும்தான் வேலை போகும், வீட்டு விலை குறையும். ஆனால் instant gratification தான் முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உண்மைதான்...நானும் இந்த கோணத்தில் சிந்தித்தேன். 

ஆனால் மொக்கு அரசு (state) இல்லை. மொக்கு அரசாங்கம் (govt.) - ஏனென்றால் இதனால் வரும் savings பயன் தர நாள் எடுக்கும். ஆனால் பொருளாதாரத்தில் விழும் அடி - கையோட கம்மாரிசு. 

அத்தோட பிரெக்சிற் விழைவு வேற. இனி கெண்ட் போகவே லொறிகாரார் பெமிற் எடுக்கொணுமாம்.

10 மணிக்கு பப் பூட்டல். இதர கட்டுப்பாடுகள் சகலதையும் போர்டரை பூட்டி இருந்தா தவிர்திருக்கலாம்.

இந்த கடுப்பெல்லாம் இந்த அரசாங்கத்தின் மீதுதான் திரும்பும்.

அடுத்த தேர்தலுக்கு பிறகு வரும் அரசாங்கம் உந்த savings ஐ அறுவடை செய்யும்.

மக்களும் மொக்குகள்தான் - கொலிடே போய், தொற்று வந்து பொருளாதாரம் படுத்தால், இவர்களுக்கும்தான் வேலை போகும், வீட்டு விலை குறையும். ஆனால் instant gratification தான் முக்கியம்.

பொரீஸரோ, ரிசியோ பொக்கட்டாலையே போடப்போகினம்.....

வரி வரிசையாக ஏறப்போகுது.....

வற் வரி இப்ப இருபது இனி இருபத்தைந்து ஆகலாம்.

கோப்பரேற் வரி,

தனிநபர் வருமானவரி,

சொத்துவரி,

எரிபொருள் வரி,

வீட்டு காஸ் வரி இப்ப ஜந்து.....இனி பத்தாகலாம்

ஆவன வரி - சராசரியா ஜந்து வீதம் கூடலாம்

ஆவன பெறுமதி உயர்வு வரி கூடலாம்

சிகரட், தண்ணி வரி கூடலாம்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

பொரீஸரோ, ரிசியோ பொக்கட்டாலையே போடப்போகினம்.....

வரி வரிசையாக ஏறப்போகுது.....

வற் வரி இப்ப இருபது இனி இருபத்தைந்து ஆகலாம்.

கோப்பரேற் வரி,

தனிநபர் வருமானவரி,

சொத்துவரி,

எரிபொருள் வரி,

வீட்டு காஸ் வரி இப்ப ஜந்து.....இனி பத்தாகலாம்

ஆவன வரி - சராசரியா ஜந்து வீதம் கூடலாம்

ஆவன பெறுமதி உயர்வு வரி கூடலாம்

சிகரட், தண்ணி வரி கூடலாம்

😩😡🤦‍♂️

வெளிகிடடி விசுவமடுவுக்கு 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்

கோசானும் நாதமும் கதைக்கிறதைப் பார்த்தால் இருவரும் முதுமையடையாத மாக்கண்டேயர் ஜீன் ஏதும் வைச்சிருப்பீனம் போல கிடக்கு!😎
(அல்லது பழையகால வைக்கிங்குகள் செய்தது போல, முதுமை வந்ததும் மலையில இருந்து குதித்து நேராக "ஒடின்" கடவுளிடம் போற பிளானோ தெரியேல்ல!)

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

கோசானும் நாதமும் கதைக்கிறதைப் பார்த்தால் இருவரும் முதுமையடையாத மாக்கண்டேயர் ஜீன் ஏதும் வைச்சிருப்பீனம் போல கிடக்கு!😎
(அல்லது பழையகால வைக்கிங்குகள் செய்தது போல, முதுமை வந்ததும் மலையில இருந்து குதித்து நேராக "ஒடின்" கடவுளிடம் போற பிளானோ தெரியேல்ல!)

நாங்கள் பிரிட்டிஸ்காரர் கண்டியளே.....

நாங்கள் எங்களுக்கு பிடுங்குப்பட்டாலும்..... நீஙகள், கனடாக்காரர், ஆஸ்திரேலியாக்காகரர், சீறீலங்கன்ஸ், இந்தியன்ஸ் எழுதிப்பதியிறத..... ஒண்டரைக் கணணால தான் வாசிக்க தொடங்குவம்.....

என்ன இருந்தாலும்..... எங்கண்ட பழைய கொலணியலில இருக்கிற ஆக்கள் எண்டு ஒரு..... பார்வையெண்டு சொல்லுங்கோவன். 😜
 

சும்மா பகிடிக்கு 😁...உங்கள் கருத்தை ரசித்தேன். நாம சும்மா பம்பலா அப்பப்ப கதைக்கிறது தானே...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நாங்கள் பிரிட்டிஸ்காரர் கண்டியளே.....

நாங்கள் எங்களுக்கு பிடுங்குப்பட்டாலும்..... நீஙகள், கனடாக்காரர், ஆஸ்திரேலியாக்காகரர், சீறீலங்கன்ஸ், இந்தியன்ஸ் எழுதிப்பதியிறத..... ஒண்டரைக் கணணால தான் வாசிக்க தொடங்குவம்.....

என்ன இருந்தாலும்..... எங்கண்ட பழைய கொலணியலில இருக்கிற ஆக்கள் எண்டு ஒரு..... பார்வையெண்டு சொல்லுங்கோவன். 😜

சீரியசாக சொல்லவில்லை, ஆனால் என் அபிப்பிராயம்: circle of life

நாங்கள் சொந்தக் காலில் நிற்க ஆரம்பிக்கும் வரை அரசு மற்றவர்களிடம் வரி வாங்கி எங்களுக்கு படிப்பும், மருத்துவமும் தருகிறது. நாம் உழைக்கும் போது அடுத்த சந்ததிக்கும் முன்னர் எங்களுக்கு வரி கட்டிய முந்தைய தலைமுறைக்கும் வசதிகள் கொடுக்கிறது. பிறகு நாங்கள் வயதாகி உழைக்க இயலாமல் போகும் போது எங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கட்டும் வரி எங்களுக்கு செலவிடப் படும்! இது welfare நாடுகளின் சிறப்பான திட்டம் என நினைக்கிறேன். இதில் துஷ்பிரயோகம் இருக்கும், நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல. கனடா தன் சமூக நலன் திட்டங்களை வரையறை செய்தது போல செய்தால் புதிய குடியேறிகள் துஷ்பிரயோகம் செய்வதைக் குறைக்கலாம். 

எனவே, வாழ்க்கை என்ற கணக்கு லெட்ஜரில் வரவும் செலவும் சமன் செய்யும் என்று தான் நான் கருதுகிறேன்!  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

சீரியசாக சொல்லவில்லை, ஆனால் என் அபிப்பிராயம்: circle of life

நாங்கள் சொந்தக் காலில் நிற்க ஆரம்பிக்கும் வரை அரசு மற்றவர்களிடம் வரி வாங்கி எங்களுக்கு படிப்பும், மருத்துவமும் தருகிறது. நாம் உழைக்கும் போது அடுத்த சந்ததிக்கும் முன்னர் எங்களுக்கு வரி கட்டிய முந்தைய தலைமுறைக்கும் வசதிகள் கொடுக்கிறது. பிறகு நாங்கள் வயதாகி உழைக்க இயலாமல் போகும் போது எங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கட்டும் வரி எங்களுக்கு செலவிடப் படும்! இது welfare நாடுகளின் சிறப்பான திட்டம் என நினைக்கிறேன். இதில் துஷ்பிரயோகம் இருக்கும், நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல. கனடா தன் சமூக நலன் திட்டங்களை வரையறை செய்தது போல செய்தால் புதிய குடியேறிகள் துஷ்பிரயோகம் செய்வதைக் குறைக்கலாம். 

எனவே, வாழ்க்கை என்ற கணக்கு லெட்ஜரில் வரவும் செலவும் சமன் செய்யும் என்று தான் நான் கருதுகிறேன்!  

நீங்கள் சொல்வதில் எவ்வித பிழையும் இல்லை..... நமக்கும் வயதாகும் போது கொடுத்தது (வரி) காத்து நிக்கும்.

இதுவே ஊருக்கு திரும்பி போக விரும்புபவர்களை தயங்க வைக்கிறது.

இந்தியாவில்.... பணம் இல்லாவிடில் பாடை தான். பாடகர் பாலா குடும்பமே திணறிவிட்டது.

இங்கே, மருத்துவ அநுமதி நேர்முகத்தேர்வில், இலவச மருத்துவத்தால் வந்த பிரச்சணைகளில் ஒன்றாக நீண்டகாலம் வாழும் வயதானவர்கள் குறித்து சொல்லி, அது குறித்து விளக்கம் கேட்பார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

எல்லாம் ஒகே, தல ... 

மொக்கு அரசு... உலகத்தை எப்படி கட்டி ஆண்டார்கள் எண்டு தெரியவில்லை எண்ட கடைசி வரிகள் தான் நொட் ஒகே, ஐசே...

முதலில.... உந்த இலவச, ஆனால் நல்ல மருத்துவ கவனிப்பால், கிழடு கட்டயல் எல்லாம் 80 தாண்டி கனகாலம்.... இப்ப 90 தாண்டி... 100 போடுதுகள்.

இவையளுக்கு பராமரிப்புக்கு கொடுக்கிறதுக்கு, வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே.

எண்ட சிநேகிதனின் அம்மா.... வந்து சில வருசம் தான்... மூத்த மகனிண்ட வீடு பெரிசு.... மருமகளோட ஏன் இருப்பான் எண்டு.... .. உங்க ஒரு வரியும் கொடுக்கவில்லை..... ஆனால்.... கவுன்சில் வீடு.. கிழமை கொடுப்பனவு..... ஆள் சும்மா ராணி அம்மாவுக்கு பாஷன் சொல்லிக் கொடுப்பா போலை.

அங்க.... இடுப்பில் கட்டிய பழைய சேலை.... இங்க டவுசர்.... டாப்... பண்ணி பாருங்கோவன்... லேடீஸ் பார்ட்டி, பாட்டுப்போட்டி... அவயலுக்கில நாடகம்.... டோட்டல் பிரீடோம்.. சிங்கள அரசாங்கம் உதில எதைத்தான் செய்ய காசு வைச்சிருக்கு?

இன்னோருத்தர் வந்து கொஞ்ச வருசத்திலை அறளை பெயர்ந்து.... கேர் ஹோமிலை.... கவுன்சில் கவனிக்குது.... கவுன்சிலுக்கு வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே. அவருக்கு கிழமைக்கு £1,500... செலவு.... என்னாலை.... உது கொடுக்க வக்கில்லை எண்டு சொல்லிப்போட்டார் ஸ்பொன்சரிலை கூப்பிட மகன்.

NHS க்கு இவையளை பராமரிப்பதே பெரிய செலவு. தனி வீட்டில போரிங்... பொழுது போகுதில்லை எண்டு, குத்துது, குடையுது எண்டு ஆஸ்பத்திரிக்கு போய், கட்டிலிலை இருந்து, ஓசி சாப்பாடையும் அடிச்சுக்கொண்டு இருக்கிற ஆட்களை கேள்விப்பட்டிருக்கிறியளே.

ஆஸ்பத்திரி செலவை, bed occupancy days வைத்துதான் கணிப்பார்கள். இவர்கள் WBO (waste bed occupiers) என்பார்கள், ஆஸ்பத்திரி கணக்காளர்கள்.  

உந்த கொரோனவால.... அநேகமா, (நான் வாசித்தது சரி எண்டால்) 10,000 முதல், 23,000 வரை இந்த கிழடு கட்டயல் போயிருக்கினமாம்.

கண கவுன்சில் அதிகாரிகள், பட்ஜெட் நிமிருது எண்டு நிம்மதியா இருக்கினம்.... முக்கியமா எங்கண்ட கவுன்சில் பைனான்சில் தலைமை கணக்கு வேலை செய்யும் நம்ம அக்காவிடம், மெய்யே எண்டு கேட்க, மூடிய உதட்டில், சுட்டி விரலை வைத்து, 'சூ' என்று சிரித்தார். 🤫

இப்ப சொல்லுங்கோ இவர்கள் உலகத்தை எப்படி ஆண்டார்கள் என்று விளங்குதோ, இல்லையோ எண்டு..

வயோதிபர்களை பராமரிக்கும் வேலைவாய்ப்பு எத்தனை பேருக்கு வேலை கொடுக்கிறது 
அவர்கள் எவ்வளவு வரி கட்டுகிறார்கள்?

அவர்களுக்கான மருந்துகளை செய்யும் மெடிக்கல் கொம்பனிகள் எவ்வளவு வரி கட்டுகிறார்கள்.

இது எல்லாம் வெறுமனே எமது வரி பணத்தில் வாழுகிறார்கள் என்ற கணக்கில் மட்டுமே வராது.
இதுவே இவருடைய தாயார் இலங்கையில் இருந்து நோய்வாய் பட்டால் .... ஒரு கதைக்கு வைத்துக்கொள்ளுங்கள்  தயார் அங்கிருக்கும் அப்போலோவில் அட்மிட் ஆனால் 
இவர் ஒரு  10 ஆயிரம் பவுன்சை லண்டனுக்கு வெளியில் அனுப்பும்போது அது இங்கிலாந்தின் ஏற்றுமதி இறக்குமதி டெபிசிடில் நஷடம் கொள்கிறது.

அவர் ஆடம்பரமாக வாழுவதுதான் உங்களுக்கு லாபம் 
காரணம் அவர்க்கு கொடுக்கும் பணத்தை உள்நாட்டு பொருளாதாரம் வாழுவத்துக்கு 
உந்து சக்தியாக இருக்கிறார்.

மற்ற சாமி போக்கு இருப்பவர்கள் பணத்தை சேமித்து இலங்கைக்கு அனுப்பினால் 
அது உங்கள் முதலுக்கு கொஞ்சம் மோசமானதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்வதில் எவ்வித பிழையும் இல்லை..... நமக்கும் வயதாகும் போது கொடுத்தது (வரி) காத்து நிக்கும்.

இதுவே ஊருக்கு திரும்பி போக விரும்புபவர்களை தயங்க வைக்கிறது.

இந்தியாவில்.... பணம் இல்லாவிடில் பாடை தான். பாடகர் பாலா குடும்பமே திணறிவிட்டது.

இங்கே, மருத்துவ அநுமதி நேர்முகத்தேர்வில், இலவச மருத்துவத்தால் வந்த பிரச்சணைகளில் ஒன்றாக நீண்டகாலம் வாழும் வயதானவர்கள் குறித்து சொல்லி, அது குறித்து விளக்கம் கேட்பார்கள்.

 

Welfare நாடுகளில் இருப்பது போன்ற சமூக பாதுகாப்பு இல்லாத அமெரிக்காவில் வாழ்ந்தால் இந்த நலன் திட்டங்களின் அருமை நன்கு விளங்கும். ஸ்கண்டினேவிய நாடுகளையும், ஜேர்மனியையும் பார்த்தால் அவர்கள் பணத்தை விட மனித வளத்தை பெறுமதியானதாகப் பார்க்கிறார்கள், அதன் பலன்களை நீண்ட கால நோக்கில் அறுவடையும் செய்கிறார்கள். நல்ல சுகதேகியாக கவலைகள் இன்றி ஒருவன் 40 வருடம் உழைத்தால் அவன் கட்டும் வரிகளும் செய்யும் செலவுகளுமே (consumer spending) நாட்டிற்கு பெரிய இலாபம் தரும். இந்த சிம்பிள் கணக்கை புரிந்து கொள்ளாத நிலை தான் அமெரிக்கா பங்குச்சந்தை இலாபத்திலேயெ தன் அண்டர்வேரைக் கொழுவிக் காத்திருக்கும் நிலைக்குக் காரணம்! 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தனியாக வாழுவதால் 
ஹௌசிங் மார்க்கெட்டுக்கு (Housing Marketing) துணையாக இருக்கிறார் 

ரெண்டல் ப்ரோபெர்டியேசில் (Rental Properties) உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறார் 
நாங்கள்தான் அதை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் இப்போது மக்களை அவசியம் இல்லாமல் வெளியே திரிய வேண்டாம் என்கிறார்கள். கடைகளுக்கு கூட அவசியம் என்றால் மட்டுமே...
எதிர்வரும் பாடசாலை விடுமுறைகளுக்கு வெளியூர்/வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்கும் படி அறிவுறுத்துகின்றனர். அதேபோல் நத்தார் புதுவருட விடுமுறைகளையும் முடிந்தளவு வெளியிடங்களுக்கு செல்வதை  குறைக்கும் படியும் ஆலோசனை சொல்கிறார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் அண்ணா,

நானும் நாதம் போலதான் welfare state இன் முழு ஆதரவாளன். ஆனால் சுத்துமாத்தை செய்யும் போது கடுப்பாகும். அதுவும் இப்படி செய்தால் நாங்கள் வயசாகும் காலத்தில் எல்லாத்தையும் புடுங்கி விடுவார்கள் என்ற சுயநலமும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

அதிசயம் ஆனால் உண்மை. எனக்கும் மருதருக்கும் கருத்து ஒற்றுமை!!!🤣

சரியான தடுப்பூசி கிடைக்கும் வரை 10-15% பொருளாதாரத்தை பலியிட்டு, நியூசிலாந்து செய்ததை போல செய்திருந்தால் உள்ளூர் பொருளாதாரமாவது தப்பி இருக்கும்.

இப்போ 100% பொருளாதாரமும் ஆட்டம் காணுகிறது.

யூகேயில் யூலை மாதம் தொற்று குறைந்த கையோடு அரசே வெளிநாட்டு ஹொலிடேக்களை ஊக்குவிக்கும் விதத்தில் நடந்தது. 

மக்களும் செம்மறிகள் போல ஒரு வருடம் கொலிடே போகாட்டில் ஏதோ சாமி குற்றம் போல அள்ளுபட்டு ஸ்பெயின், பிரான்ஸ் எண்டு போனது.

போய் வந்த கோஸ்டி கொரோனாவோட வந்து நல்லா பரப்பி விட்டது.

மொக்குச் சனங்கள், அதை வென்ற மொக்கு அரசாங்கம்.

இவங்கள் எப்படி உலகை வென்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. 🤣

ஓவர் டு யூ பாஞ்ச், சிறி, கு சா அண்ணைமார் 🤣

உணவகங்களில் 50 வீத  கழிவு என்ற  நாடகமும் நடந்ததே??

சனம்  அள்ளுப்பட்டு  ஓடித்திரிஞ்சுதே???

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

உணவகங்களில் 50 வீத  கழிவு என்ற  நாடகமும் நடந்ததே??

சனம்  அள்ளுப்பட்டு  ஓடித்திரிஞ்சுதே???

ஓம். சில சனம் கலியாண வீட்டு சாப்பாட்டை கூட இந்த முறையில் முடித்து கொண்டார்கள் 🤦‍♂️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.