Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருப்பூரில் வேலை தேடிச்சென்ற பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்த இளைஞர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
சித்தரிப்புப்படம்

பட மூலாதாரம், Tinnakorn Jorruang

 
படக்குறிப்பு,

சித்தரிப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் வேலை தேடிச் சென்ற வடமாநிலப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக 3 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

என்ன நடந்தது?

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண், தனது கணவரோடு உடுமலைப்பேட்டையில் உள்ள பாக்குமட்டை தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அங்கு பணிபுரியும் ராஜேஷ் என்பவரிடம் வேறு வேலை வாங்கித் தருமாறு இவர் கேட்டுள்ளார்.

திங்கட்கிழமை அன்று அப்பெண்ணை பல்லடத்திற்கு வரவழைத்த ராஜேஷ், சில நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று வேலைக்காக சிபாரிசு செய்துள்ளார். இருந்தும், வேலை கிடைக்காததால் இருவரும் ராஜேஷின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு இயல்பாக பழகியுள்ளனர்.

பின்னர், வீட்டிற்கு செல்வதற்காக தன்னை பேருந்துநிலையத்தில் இறக்கிவிடுமாறு அப்பெண் கேட்டுள்ளார். அவரை, தனது தம்பியோடு இருசக்கர வாகனத்தில் ராஜேஷ் அனுப்பியுள்ளார்.

ராஜேஷின் தம்பி அவரை பேருந்துநிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் கணபதிபாளையத்தின் அருகே உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று, தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.

மேலும், அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.

வன்கொடுமை செய்யப்பட்ட வடமாநிலப் பெண் அடுத்தநாள் பல்லடம் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து, பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 'புகாரளித்த பெண்ணை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் மூவரை கைது செய்துள்ளோம். குற்றச்செயலில் ஈடுபட்ட மற்றவர்களை தேடி வருகிறோம், விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள்' என தெரிவித்தனர்.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 376 D, 384, 109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.https://www.bbc.com/tamil/india-54369493

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு நைஜீரியன் லா தான் சரி வரும்...

இது தமிழ்நாட்டில் நடந்த ஒரு  குற்றச்செயல். குற்றவாளிகள் தண்டிக்கப்படல் வேண்டும்.

இதே சம்பவம் தமிழ் பெண்ணிற்கு வேறு மாநிலத்தில் நடந்திருந்தால் வழமை போல் தமது இனவெறிப்பு பிரச்சாரத்திற்கு சில அரசியல்வாதிகள் பயன்படுத்தியிருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இது தமிழ்நாட்டில் நடந்த ஒரு  குற்றச்செயல். குற்றவாளிகள் தண்டிக்கப்படல் வேண்டும்.

இதே சம்பவம் தமிழ் பெண்ணிற்கு வேறு மாநிலத்தில் நடந்திருந்தால் வழமை போல் தமது இனவெறிப்பு பிரச்சாரத்திற்கு சில அரசியல்வாதிகள் பயன்படுத்தியிருப்பார்கள். 

உண்மை.

ஈழத்து நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் கண்டித்ததது போல் தமிழ்நாட்டு நாம் தமிழர்கள் கட்சியினரும் இந்த வன் கொடுமையை கண்டிக்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மிருகங்களை நலமெடுத்தால்தான் சரி, நல்ல ஆட்சி அமையனும் தமிழ் நாட்டில். எந்நேரமும் பெண்கள் பயமின்றி உலவும் காலம் வரும்

19 hours ago, tulpen said:

இது தமிழ்நாட்டில் நடந்த ஒரு  குற்றச்செயல். குற்றவாளிகள் தண்டிக்கப்படல் வேண்டும்.

இதே சம்பவம் தமிழ் பெண்ணிற்கு வேறு மாநிலத்தில் நடந்திருந்தால் வழமை போல் தமது இனவெறிப்பு பிரச்சாரத்திற்கு சில அரசியல்வாதிகள் பயன்படுத்தியிருப்பார்கள். 

 

16 hours ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை.

ஈழத்து நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் கண்டித்ததது போல் தமிழ்நாட்டு நாம் தமிழர்கள் கட்சியினரும் இந்த வன் கொடுமையை கண்டிக்க வேண்டும்.

 

உங்கள் இருவரின் கீழ்தரமான விமர்சனத்தை அரசியல் சாயம் பூச வேண்டாம்,

அண்மையில் உத்தராபிரேதேசத்தில் நடந்த  கெடு கெட்ட நிகழ்வை எத்தனை நாம் தமிழர் உறுப்பினர்கள் கண்டித்துள்ளார்கள் என பார்க்கவும். தேவையெனில் நிர்வாகத்திடம் கேட்டு சொல்லவும் இணைக்க பல இருக்கு

உங்களின் வெறுப்பு அரசியல் ஒரு பெண்ணின் அவலத்திலுமா? நீங்கள் எல்லாம் .. சொல்ல முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

உங்கள் இருவரின் கீழ்தரமான விமர்சனத்தை அரசியல் சாயம் பூச வேண்டாம்,

அண்மையில் உத்தராபிரேதேசத்தில் நடந்த  கெடு கெட்ட நிகழ்வை எத்தனை நாம் தமிழர் உறுப்பினர்கள் கண்டித்துள்ளார்கள் என பார்க்கவும். தேவையெனில் நிர்வாகத்திடம் கேட்டு சொல்லவும் இணைக்க பல இருக்கு

உங்களின் வெறுப்பு அரசியல் ஒரு பெண்ணின் அவலத்திலுமா? நீங்கள் எல்லாம் .. சொல்ல முடியவில்லை

சும்மா விடுங்கோ உடையார்! ரெண்டும் மாறிமாறி வெவ்வேற ID யில் வந்து கத்தீட்டு போகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 17:13, Nathamuni said:

இவர்களுக்கு நைஜீரியன் லா தான் சரி வரும்...

நாதமுனி... அதென்ன நைஜீரியன் லா?
பாதிக்கப் பட்ட பெண்ணையே... திருமணம் முடித்து வைத்து விடுவார்களா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.