Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு?

றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு?

 

பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் இதுவரை காலமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ மாளிகைகளில் வசித்து வந்தனர். முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்தில் விஜேராமா மாளிகையிலும், தற்போதைய பிரதமர் என்ற வகையில் அலரி மாளிகையிலும் மஹிந்த ராஜபக்ச, அவரது மக்களின் திருமண சம்பந்திகள் குடும்பம் என எல்லோரும் ஒரு கூட்டுக்குடும்பமாக, இரண்டு மாளிகைகளிலும் வாழ்ந்து வந்தனர்.

இருப்பினும், சமீபத்தில், மஹிந்த குடும்பம் அலரி மாளிகையை விட்டு, விஜேராமா மாளிகைக்கு குடிபெயர்ந்திருந்தது. ஆனால் அவரது மூன்றாவது மகன் றோஹித, மனைவி, மனைவியின் பெற்றோரின் குடும்பம் ஆகியோர் விஜேராமாவுக்கு குடிபெயராமல், இன்னும் அலரி மாளிகையிலேதான் வசித்து வருகிறார்கள். தற்போது அவர்களையும் அலரி மாளிகையை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உததரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

நாட்டின் பிரதமர் அலரி மாளிகையில் வசிக்காமலிருக்கும்போது அதில் இன்னுமொரு குடும்பம் வசிப்பது உகந்தது அல்லவென ஜனாதிபதி கருதுவதாக அறியப்படுகிறது.

நாட்டின் அதிபர் என்ற ரீதியில் ஜனாதிபதி ராஜபக்சவே அலரி மாளிகையில் வசிப்பதற்கு உரிமை பெற்றவர். ஆனால் அவர் மிரிஹனவிலிருக்கும் தனது பிரத்தியேக இல்லத்தில் வசித்து வருகிறார்.

ஜனாதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து றோஹித ராஜபக்ச பெட்டகனே டூவா தெருவிலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்றுவிட்டதாக அறியப்படுகிறது

https://marumoli.com/றோஹித-ராஜபக்சவை-அலரி-மாள/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:
றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு?

றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு?

ஜனாதிபதியின்... இந்த உத்தரவால், 
ராஜபக்சவுக்குள்..  குடும்பச்  சண்டை ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக...
யாழ்.கள,  அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதியின்... இந்த உத்தரவால், 
ராஜபக்சவுக்குள்..  குடும்பச்  சண்டை ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக...
யாழ்.கள,  அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சிறி யண்ணை 
இப்படி சப்பென்று முடித்தால் எப்படி ..?எங்கடை ஆய்வு (அவியல்) இந்த பிரச்சினை மூலம் கிடைக்கப்போகும்  தனி தமிழீழம் வரையல்லவா நீளப்போகிறது  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதியின்... இந்த உத்தரவால், 
ராஜபக்சவுக்குள்..  குடும்பச்  சண்டை ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக...
யாழ்.கள,  அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். :grin:

இலவு காத்த கிளி தெரியுமா😂 தமிழ்சிறி 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதியின்... இந்த உத்தரவால், 
ராஜபக்சவுக்குள்..  குடும்பச்  சண்டை ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக...
யாழ்.கள,  அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். :grin:

அது எப்போதோ ஆரம்பமாகி 20 ஆவது சட்டத்திருத்தத்தில் சூடுபிடித்திருக்கிறது. கோத்தாவின் வியத்மகா கோத்தாவுக்கு அசுரபலத்தை கொடுக்க கொண்டுவந்த இந்த சட்டதிருத்தத்தை எதிர்க்க சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் கத்தொலிக்க கார்டினல் வரை இவ்வளவு துணிச்சல் பெற்றதற்கு பின்னணியில் இந்த சட்டதிருத்தத்தால் பலமிளக்க இருக்கும் மகிந்த ராஜபக்ச இருப்பது யாழ் களத்துக்கு புரியவில்லையே?😒 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இலவு காத்த கிளி தெரியுமா😂 தமிழ்சிறி 

 

அண்ணனுக்கும் தம்பிக்கும் கருத்து வேறுபாடு ஏற்கனவே உள்ளது. விடயம் புதியதல்ல. ஆனால் குடும்பம் என்று வரும்போது அவர்கள் ஒற்றுமையாக உள்ளார்கள். அதிலும் பிள்ளைகள் மிகவும் அன்னியோன்னியமாய் உள்ளனர். 👍

 

இரதிக்கு சட்டென்று கோபம் மூக்கு நுனியில் வந்துவிட்டதே. காரணம் எதுவோ 🤔🤔

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஈழம் கிடைக்காதோ..

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎-‎10‎-‎2020 at 20:47, Kapithan said:

அண்ணனுக்கும் தம்பிக்கும் கருத்து வேறுபாடு ஏற்கனவே உள்ளது. விடயம் புதியதல்ல. ஆனால் குடும்பம் என்று வரும்போது அவர்கள் ஒற்றுமையாக உள்ளார்கள். அதிலும் பிள்ளைகள் மிகவும் அன்னியோன்னியமாய் உள்ளனர். 👍

 

இரதிக்கு சட்டென்று கோபம் மூக்கு நுனியில் வந்துவிட்டதே. காரணம் எதுவோ 🤔🤔

 

கோபம் ஒன்றும் இல்லை ...எப்ப இந்த தமிழாக்கள் திருந்த போயினம் என்ற ஆதங்கம் தான் ...என்னைப் பொறுத்த வரைக்கும் மகிந்தா ,கோத்தா சகோதரர்களை பிரிக்க முடியாது ...மகிந்தா இறந்தால் அதற்கு பிறகு இலகுவாய் இருக்கும் 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.