Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்துடன் பேச முடியாமைக்கான காரணத்தை தெரிவித்தார் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்துடன் பேச முடியாமைக்கான காரணத்தை தெரிவித்தார் டக்ளஸ்

அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கதைப்பதற்கு எனக்கு போதிய அளவு ஆணையினை தாருங்கள் என கேட்டிருந்தேன் அவர்கள் எனக்கு நான் கேட்ட அளவு ஆணையினை தரவில்லை ஆணையினை தந்திருந்தால் நான் அதனை செய்திருப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர்களுடனான  சந்திப்பு ஒன்று இன்று (07.11.2020) கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பனை தென்னை கூட்டுறவார்கள் பனை தென்னை கூட்டுறவாளர்களின் தேவைகள் கேட்டு அறியப்பட்டது.

அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ஊடகவியலாளர்கள் பொது ஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நீதியமைச்சருக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதன்போதே  மேற்கொண்டவாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி பலர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அனைத்தும் கோரிக்கைகள் ஆகவே உள்ளன, அந்தக் கோரிக்கைகளில் உண்மைத்தன்மையை ஆராய்ந்து  அரசாங்கம் நீதியான  தீர்வினை வழங்கும் என்று குறிப்பிட்டார்.

இதன் பொழுது ஊடகவியாளர் அரசியல்வாதிகளின் விடுதலை குறித்து நீங்கள் அழுத்தங்கள் கொடுத்து உள்ளீர்கள் என வினாவிய போது,

 நான் கோரிக்கைகளை முன் வைத்துள்ளேன் இருப்பினும் நான் தேர்தல் காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அதாவது இவ்வாறான அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கதைப்பதற்கு எனக்கு போதிய அளவு ஆணையினை தாருங்கள் என கேட்டிருந்தேன் அவர்கள் எனக்கு நான் கேட்ட அளவு ஆணையினை தரவில்லை ஆணையினை தந்திருந்தால் நான் அதனை செய்திருப்பேன் என்றார்.
 

https://www.virakesari.lk/article/93858

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை சந்தடி சாக்கில் ஓநாய் ஒன்று ஆடு வேஷம் போடுது .

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையென்றால் கிழிச்சிடுவார்???

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களுக்கு மிக மோசமாக அம்னீசியா இருக்கென்று தெரிந்த படியால் தான் இந்த பிணந்தின்னி ஓநாய் எல்லாம் அரசியல் செய்ய முடிகிறது.

இவர் 11 எம்பிக்களை யாழ் மாவட்டத்தில் வெறும் 20 ஆயிரம் வாக்குகளோடு வைத்திருந்த காலத்தில் காட்டியும் போட்டுக் கொன்ற பிடித்த பிள்ளைகள் தான் இப்பவும் அரசியல் கைதியாக இருக்கினம்.

இவர் வடக்கில் பிடிச்சுக் கொடுக்க மகேஸ்வரி மேடம்.. தெற்கில் எடுத்துவிடுறதா காசு பறிக்க.. இவர்கள் போட்ட நாடகங்களை எல்லாம் மறந்து இப்ப நம்மவர்களும்.. நம்மவர் செய்தி ஊடகங்களும்.. இந்த ஓநாய்களுக்கு அரிதாரம் பேசுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

ஒரு போதும்.. ஓநாய் திருந்தி.. வீட்டு நாய் ஆகாது.!

  • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, கிருபன் said:

"இவ்வாறான அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கதைப்பதற்கு எனக்கு போதிய அளவு ஆணையினை தாருங்கள் என கேட்டிருந்தேன் அவர்கள் எனக்கு நான் கேட்ட அளவு ஆணையினை தரவில்லை ஆணையினை தந்திருந்தால் நான் அதனை செய்திருப்பேன் " என்றார்

IMG-20201107-230248.jpg

மலைய நான் தூக்க மட்டேன் என்டு எங்கும் நான் கதைக்கவே இல்ல .. முதல்ல அந்த மலைய தூக்கி என் கையில வையுங்கொடா ..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கதைப்பதற்கு எனக்கு போதிய அளவு ஆணையினை தாருங்கள் என கேட்டிருந்தேன் அவர்கள் எனக்கு நான் கேட்ட அளவு ஆணையினை தரவில்லை ஆணையினை தந்திருந்தால் நான் அதனை செய்திருப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார்.

 

12 hours ago, கிருபன் said:

ஊடகவியலாளர்கள் பொது ஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நீதியமைச்சருக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

'ஆடத் தெரியாதவள் அரங்கு பிழை என்றாளாம்.' நிஞாயத்தை கதைக்க ஆணை தேவையில்லை. மனித நேயமுள்ள, பொறுப்புள்ள  யாரும் கதைக்கலாம். ஆணை கேட்பவன் அடக்கியாளவே விரும்புவான். மீண்டும் ஆட்சியேறி இருக்கும் இளையோரையும் கதற கதற கொலை செய்யவே கொடுக்கும் ஆணையை பயன்படுத்துவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானைப்போன்று ஒரு அதிரடி  அரசியல்வாதி இலங்கையிலும் வரவேண்டும்.
அப்படியென்றால் தான்  எமது சோத்து அரசியல்வாதிகள் விழிப்படைவார்கள். தமிழ்நாட்டைப்போல்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.