Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்களிற்கு எதிராக உரையாற்றும் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு தடை விதிக்கவேண்டும்- பேட்டியில் சரத் வீரசேகர கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களிற்கு எதிராக உரையாற்றும் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு தடை விதிக்கவேண்டும்- பேட்டியில் சரத் வீரசேகர கருத்து

 

சிங்களவர்களிற்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும் எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
சண்டே ஒப்சேவரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

sarath_weerasekara-300x182.jpg

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளின் தலைவர்களின் பின்னால் சென்று ஜெனீவாவில் உள்நாட்டு விவகாரங்களை விவாதிப்பதற்கு பதில் ஏன் அவர்கள் அரசாங்கத்துடன் தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை விவாதிக்க கூடாது என்ற கேள்விக்கு
அது தவறு,அவர்கள் நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டிற்காக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். இலங்கையில் சமஸ்டியை அறிமுகப்படுத்துவது குறித்து அவர்கள் வேறு நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என்றால் அது அவர்கள் மேற்கொண்ட சத்திய பிரமாணத்திற்கு முற்றிலும் விரோதமானது என அமைச்சர்வீரசேகர தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தவறிழைத்துவிட்டார் என நான் கருதுகின்றேன்,அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபமுள்ளவராகயிருந்துள்ளார் என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டவேளை நாஜி அரசியல் கட்சி முற்றாக முற்றாக அழிக்கப்பட்டது,போல்பொட் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரர் கெமரூஜ் கட்சி காணாமல்போய்விட்டது.
சதாம் ஹ_சைன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது பாத்கட்சி அழிக்கப்பட்டது, ஹொஸ்னி முபாராக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அவரது தேசிய ஜனநாயக கட்சி தடைசெய்யப்பட்டது எனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Sarath-Weerasekara-1-1024x682-1-300x200.
அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த மகிந்த ராஜபக்சவின் தவறு அது,அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபம் கொண்டிருந்தார்,அவர் அவர்களை மன்னித்தார்,தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சாதகமாக பயன்படுத்துகின்றது,என அவர் தெரிவித்துள்ளார்
கடந்தகாலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம்; செய்தார்கள்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்தவர்கள் உட்பட எங்கள் படையினரை கொலை செய்த பண்டிதரின் வீட்டிற்கு சென்று சுமந்திரன் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கின்றார் அவருக்கு புகழாரம் சூட்டுகின்றார் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தனது பாதுகாப்பிற்கு அளிக்கபபட்ட விசேட அதிரடிப்படையினரை தனது வீட்டின் வெளியே வைத்துக்கொண்டே எங்கள் பாதுகாப்பு படையினரின் கொலையாளிக்கு அஞ்சலி செலுத்தும் தைரியம் சுமந்திரனுக்கு உள்ளது எனவும் பேட்டியில் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குறித்து பேசுகின்றார் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
சிங்களவர்களிற்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும் எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

 

 

https://thinakkural.lk/article/95657

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வது போல செய்தால் பாராளுமன்றத்தில் தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரையும் விடாமல் வீட்டுக்கு அனுப்ப வேண்டிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, karu said:

அவர் சொல்வது போல செய்தால் பாராளுமன்றத்தில் தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரையும் விடாமல் வீட்டுக்கு அனுப்ப வேண்டிவரும்.

நோ நோ நோ எப்படி இப்படி சொல்வீர்கள்.
ஒருவர் தள்ளுபடியாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, karu said:

அவர் சொல்வது போல செய்தால் பாராளுமன்றத்தில் தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரையும் விடாமல் வீட்டுக்கு அனுப்ப வேண்டிவரும்.

இல்லை. ஒரு எம்பியைதானும் அனுப்ப வேண்டியதில்லை. ஏனென்றால் 48 இல் இருந்து எமது போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. நிறுவன மயப்பட்ட சிங்கள பெளத்த பேரினவாததுக்கு மட்டுமே எதிரானது.

எந்த எம்பியும் சிங்கள மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிபடுத்தவில்லை.

தமது மக்களின் உரிமைக்காவே குரல் கொடுத்தனர்.

மிக தந்திரமாக தமிழர் உரிமயை கோரல் = சிங்கள மக்களை வெறுத்தல் என நிறுவ முயல்கிறார் வீரசேகர.

இதற்கான எதிர்வினையை கஜனோ, சாணக்கியனோ விரைவில் ஆற்றுவார்கள் என நம்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, உடையார் said:

சிங்களவர்களிற்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும் எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

அவர்களை தடை செய்தால், சிங்களவரை உசுப்பிவிடும் உங்கள் முட்டாள்த்தனமான பேச்சுக்களை யார் கேட்பது? சுற்றியுள்ள சுவரையும், முகட்டையும் பார்த்துதான் குரைக்கவேண்டும். உம்மை வைச்சு ஆட்டுபவரும் அலுப்படைந்து உம்மை விரட்டிவிடுவார். பாத்துப் பேசும் பதவிக்கு பங்கம் வராமல். 

5 hours ago, goshan_che said:

இல்லை. ஒரு எம்பியைதானும் அனுப்ப வேண்டியதில்லை. ஏனென்றால் 48 இல் இருந்து எமது போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. நிறுவன மயப்பட்ட சிங்கள பெளத்த பேரினவாததுக்கு மட்டுமே எதிரானது.

எந்த எம்பியும் சிங்கள மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிபடுத்தவில்லை.

தமது மக்களின் உரிமைக்காவே குரல் கொடுத்தனர்.

மிக தந்திரமாக தமிழர் உரிமயை கோரல் = சிங்கள மக்களை வெறுத்தல் என நிறுவ முயல்கிறார் வீரசேகர.

இதற்கான எதிர்வினையை கஜனோ, சாணக்கியனோ விரைவில் ஆற்றுவார்கள் என நம்பலாம்.

அதாவது உண்மை , நியாயத்தை பேசுபவர்களை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றவேண்டுமென்று சொல்லுகிறார். ஏன் என்றால் உண்மை பேசும்போது ரத்தம் கொதிக்குதாம். பாவம் மனுஷனுக்கு ரத்த கொதிப்பு வந்து ஏதும் நடக்கவிடடாள் சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சுடத்தான் செய்யும். அதற்கு எவ்வளவு சக்தி உண்டென்று சிங்களவன் அதை பக்கத்தில் வைத்திருப்பதற்கு பயந்து  துடிப்பதிலிருந்தே  தெரிகிறது அதன் தாக்கம் என்ன செய்யும் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

"ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டவேளை நாஜி அரசியல் கட்சி முற்றாக முற்றாக அழிக்கப்பட்டது,போல்பொட் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரர் கெமரூஜ் கட்சி காணாமல்போய்விட்டது.
சதாம் ஹ_சைன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது பாத்கட்சி அழிக்கப்பட்டது, ஹொஸ்னி முபாராக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அவரது தேசிய ஜனநாயக கட்சி தடைசெய்யப்பட்டது எனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்."

"ஜனாதிபதியாகயிருந்த மகிந்த ராஜபக்சவின் தவறு அது,அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபம் கொண்டிருந்தார்,அவர் அவர்களை மன்னித்தார்,தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சாதகமாக பயன்படுத்துகின்றது,"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.